பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்!!!


தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்படத் தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்.  வேறு மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்களால் தமிழனுடைய உணர்வைப் புரிந்து கொள்ளுதல் கடினமான ஒன்று ஆகும்.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை.  தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்; ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது.  அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும்.  இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும்.  அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.  இதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

சாளுக்கிய அரசனான முதற்குலோத்துங்கச் சோழன் முதல், தமிழர்கள் தமிழரல்லாத அந்நியர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் ஆளப்பட்டமையால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன.  இதனை மீட்டுருவாக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.  இந்தத் தருணத்தையும் இழந்துவிட்டால் தமிழ் இனமும் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் முற்றாக அழியும் நிலை வந்து விடும்.  அந்நிலையைத் தடுத்து நிறுத்தி ஆக வேண்டும்.

தாய்த்தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாக இது விளங்க இயலும்.  தாய்த் தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும்.  அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது.  அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக