பக்கங்கள்

திருக்குறள்

புதன், நவம்பர் 30, 2011


அதிகாரத்தில் மலையாளிகள் அவமானத்தில் தமிழர்கள்.


அதிகாரத்தில் மலையாளிகள் அவமானத்தில் தமிழர்கள்.



தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லியது ஒரு காலம் ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லி வாய்முடி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலமைக்கு தமிழர்கள் வந்துள்ளோம்.




டில்லியில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பயனடைவது இரண்டு குடும்பம் மட்டுமே ,அது கலைஞர் குடும்பம் மற்றொன்று ஜெயலலிதா&சசிகலா குடும்பம் மட்டும்தான்.ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் மறைமுகமாக அதிகாரப் பதிவிகளில் இந்த மலையாளத்துக்கார்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே போவது மட்டுமல்லாமல் அனைத்து நன்மைகளையும் தங்கள் மாநிலங்களுக்கு அள்ளிக் கொண்டு போகின்றனர்.


டில்லியின் அதிகார மையத்தில் கொசுக்களைப் போல பரவி உறிஞ்சி கொண்டிருக்கும் இந்த மல்லுக்களின் பட்டியலைதான் பாருங்களேன்! ! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!நம் மாநிலத்தலைவர்களோ நம்மிடத்தில் உறிஞ்சி சுவிஸ் பேங்கிற்கு எடுத்து செல்கிறாரகள்.

அதிகாரப்பதவிகளில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல்கள்

என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,



கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,



ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
,
சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,



ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,



ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,



பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,

சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.




‘‘

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.




மலையாளிகளின் முதல் எதிரி நம் தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்கும் கொடூரத்திற்கு முழு துணைபோனவர்கள் அவர்கள்தான்! வந்தாரை வாழ வைத்து அவர்களிடமே மண்டியிடும் ஒரு இனம்தான் தமிழ் இனம். இதை கண்டு வேதனைப்படுவதா அல்லது வெட்கப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை!!!!
நன்றி.அவர்கள் உண்மைகள்

செவ்வாய், நவம்பர் 29, 2011

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!:பகுதி 2

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!:பகுதி 2


எதிர்கால வளமான இந்தியாவிற்கு மின்சாரம் அவசியமாகும். எனவே கூடங்குளம் திட்டம் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இதற்கு தேவைப்படும் தரமான யுரேனியம் எளிதில் கிடைக்கும் கனடாவைத் தவிர்த்து விட்டு,
அமெரிக்கா மூலம் பெறுவதே எப்போதும் சிறப்பானதாகும். தேவைப்படும் யுரேனியமும் ஒரே சமயத்தில் அமெரிக்கா கொடுக்காது. அவ்வப்போது நடைபெறும் திட்ட செயலாக்கத்தின்படி வழங்கப்படும். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு. ஆனால் நிர்வாக கட்டுப்பாடு எப்போதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கும்.
முன்பேர சந்தைக்கு அனுமதி (ஆன் லைன் வர்த்தகம்) கொடுத்தன் விளைவாக நாட்டில் உள்ள அடிப்படையான அத்தனை பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலைவாசி உச்சத்தில் போய்விட்டது. குறிப்பாக இந்த முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) கொடுத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 23 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.
இந்த நிறுவனங்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி போன்ற சந்தையிலும் அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த விளைபொருட்களிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் இந்த நிறுவனங்களின் செயல்பாடு 99 லட்சத்து 16 ஆயிரத்து 52 கோடி ரூபாய். ஏறக்குறைய 100 லட்சம் கோடியை அட்டகாசமாக கடந்துள்ளது. பாடுபட்டு உழைப்பவன் ஒரு பக்கம். ஆனால் ஏதோவொரு மூலையில் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நோகாமல் நோம்பி கொண்டாடுபவர்களை உருவாக்கி விட்டவரும் நம்முடைய பொருளாதாரப் புலியே.
ஆன் லைன் வர்த்தகத்தை அனுமதித்ததே போதே இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.
உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு இங்கே கொட்டாம்பட்டியில் விளையும் பயறுக்கு விலை நிர்ணயம் செய்யும் கொடுமை இந்த ஆன் லைன் யுக பேரத்தில் நடந்து கொண்டிருப்பதால் விளைவித்தவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வருடத்திலும் எந்த துறையில் பற்றாக்குறை வரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு பேரம் மூலம் விலையை நிர்ணயம் செய்யும் போது எல்லாமே தலைகீழாகப் போய்விடுகின்றது.
இந்த யுக பேரங்களுக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேர்களும் வெளிநாட்டு முதலீட்டார்களே. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள். எவருக்கோ லாபமாக கடல் கடக்கும் இந்த லாபங்கள் நாட்டில் விலைவாசியாக மாறி சாதாரண மனிதன் தலையில் வந்து விழுகின்றது.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரைக்கும் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுத் தொகை 2,550 கோடி டாலர். (1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) கடந்த 2010 ஆம் ஆண்டை விட 41 சதவிகிதம் அதிகம். ஆனாலும் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியை நிறுத்தமுடியவில்லை. காரணம் நவம்பர் 22 அன்று வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 52.30.
ஏனிந்த குளறுபடி?
இன்றைய சூழ்நிலையில் இந்தியா வைத்துள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 31,960 கோடி டாலர் (15 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்) நான் வளர்கிறேனே அம்மா என்பதாக நம் நாட்டின் கடன் தொகையும் மாதத்திற்கு மாதம் எகிறிக் கொண்டேயிருகிறது.
அமெரிக்காவில் ஓபாமா பதவியேற்றதும் வீட்டு வசதி கடனில் சிக்கிய வங்கிகள் பட்டபாடுகள் உலகம் முழுக்க எதிரொலித்தது. அமெரிக்க வங்கிகளுக்கான தர வரிசை குறியீட்டை மாற்றியதும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தும்மலும் சளியும் வந்த கதை நம் அணைவருக்கும் தெரிந்தது தானே. அதைப்போலவே இந்தியாவிலும் நடந்தது. ஆனால் எத்தனை பேர்களுக்கு தெரிந்திருக்கும்?.
இயல்பாகவே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் அணைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வங்கியில் போடப்படும் பணமும், கிடைக்கும் சொற்ப வட்டி என்றாலும் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மேல் உள்ள மோகம் குறைந்தபாடில்லை.
ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் அத்தனையும் வருடத்திற்கு வருடம் வராக்கடனாகவே போய்க் கொண்டிருக்கிறது. உலகளவில் இந்தியாவில் உள்ள வங்கியின் தரமென்பது 'எத்தகு இடர்பாடுகளையும் தாண்டி வரக்கூடியது' என்கிற நிலையில் சர்வதேச சமூகம் கணக்கில் வைத்திருந்தது.
2004 ஆம் ஆண்டு மூடிஸ் நிறுவனம் பி.ஏ.ஏ 3 என்ற தரக்குறியீட்டை வழங்கியது. ஆனால் வருடந்தோறும் வசூலிக்க முடியாத கடன்களின் அளவை வைத்து அண்மையில் இந்த குறியீட்டை ஒரு படி குறைத்து 'இடர்பாடு காண வாய்ப்புள்ளதாக' மாற்றியுள்ளது. சென்ற செப்டம்பர் வரைக்கும் வசூலிக்க முடியாத கடன் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தொகையென்பது 1.07 லட்சம் கோடி.
நம்முடைய தலைவர்கள் சொல்லும் மற்றொரு கருத்தையும் இப்போது எடுத்துக் கொள்வோம். உற்பத்தி அளவுக்கும் நம்முடைய தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் இரண்டு வகையில் இந்தியாவிற்கு நல்லது. ஒன்று இந்திய பண மதிப்பின் நிலை ஸ்திரமாக இருக்கும். அதே சமயம் இந்திய நுகர்வோர் சந்தையில் பணப்புழக்கம் இன்னும் அதிகமாகும். இதற்கு மேலாக தேவைப்படும் பொருட்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கே வந்து சேரும் என்பதே.
ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம். ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?
சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும்.
தொடக்கத்தில் 30 சதவிகிதம் வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு காற்றில் பறக்கும். காரணம் இங்குள்ள விலையை விட சீனப் பொருட்கள் குவியத் தொடங்கும். வேறென்ன வேண்டும்? சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பருத்தி விவசாயத்தை ஒழித்துக் கட்டியதைப் போலவே இப்போது சில்லறை வணிகத்தின் மூலம் இந்திய சமூக கட்டமைப்பை செல்லரிக்கப் போகின்றார்கள்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது எனக் காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலேயே குறியாக  இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி.
கிராமப்புறங்களும் விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். மாற்றுப் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி செயல்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் அதை யோசிக்கக்கூட நம் தலைவர்களுக்கு மனமில்லை. கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய நடுத்தரவர்ககத்தினைப் போலவே ஏறக்குறைய இந்தியாவும் இப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கிறது.
பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை, இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் கார்ப்ரேட் கணவான்களே. இது பணம் படைத்தவர்களுக்கான உலகம். உண்பது, குடிப்பது முதல் அணியும் உடைகள் வரைக்கும் எவரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
அதிலும் இந்திய அரசியல் என்பது அடிவருடிகளின் உலகமாக இருப்பதால் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற தகுதியை நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி (2,260 கோடி டாலர்) யும், இரண்டாவது இடத்தில் இரும்பு மனிதர் ( என்ன பட்டமடா சாமி?) லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) மூன்றாவது இடத்தில் அசீம் ப்ரேம்ஜி (1,300 கோடி டாலர்) பெற்றுள்ளனர்.
இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும். நம்முடைய நிதியமைச்சர் பிரணாப் இதைப் பற்றி தெளிவாகவே சொல்லியுள்ளார். “எந்த அரசாங்கமும் தொழில் அதிபர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் “ ஆனால் இவர்களைப் போன்ற இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் கணவான்கள் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் வாயே திறப்பதில்லை.
உலகில் தற்போதும் பெட்ரோல் முதலான பல பொருட்களுக்கு டாலர் அடிப்படையிலான வியாபாரமே நடந்து வருவதால், இந்தியா தன்னுடைய டாலர் கையிருப்பைக் குறைக்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் முதலான வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறும். இது இந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக சிதைக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையினை சீரமைக்காமல் இந்தச் சரிவிலிருந்து இந்தியா மீள்வது கடினம். நம்மை விட லஞ்சம் ஊழல் எண்ணிக்கையில் 86 நாட்கள் முன்ணணியில் இருக்கிறார்கள் என சர்வதேச நிறுவனம் ஒன்று கணக்கெடுத்துள்ளது. இந்தியா 87வது இடத்தில் உள்ளதாம். அந்தஅளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்க.
நடப்பு (2011 - 12) நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரைக்கும் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 3 லட்சம் கோடி. உங்களுக்கு, வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்க. அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வரப்போகிறார்களே?
நமக்கு கூட்டிப் பெருக்குற வேலை கூட கிடைக்காத என்ன? நம்முடைய பொருளாதார மேதைகளின் கூட்டல் கணக்கில் கடைசியாக நமக்கு கிடைக்கப் போவது இந்த பெருக்கிற வேலை தானே?. நாட்டின் ஆட்சித் தலைமைகளை, பணத்துக்காகவும், சாதிக்காகவும், பரம்பரை விசுவாசத்துக்காகவும், மட்டும் ஓட்டுப்போட்டுத் தெரிவு செய்யும் எமது மக்களுக்கு அது போதாதா..? நன்றி தமிழ் மீடியா

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!! 1


இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள் !


பா.ஜ.க போன்ற மதவாத கட்சி வேண்டாம். எங்களுக்கு காந்திஜி சொன்ன மிதவாதமாக இருக்கும் காங்கிரஸே போதுமானது என, பிடிவாதமாக இரண்டாவது முறையாகவும் காங்கிரஸை அரியணையில் அமர வைத்த
இந்தியர்களின் தலையில் இப்போது விழுந்து கொண்டிருப்பது அடியல்ல இடி!
பொருளாதார புலி மன்மோகன் சிங்கின் சமீப பரிசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவிகித முதலீடு. அதாவது சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது
சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் விவசாய அமைச்சருமான சரத்பவாரை ஒரு அறை தான் கொடுத்தார். ஆனால் மன்மோகன் சிங் 120 கோடி இந்தியர்களின் வயிற்றில் ஒரே அடியாக அடித்துள்ளார்.
மன்மோகன் சிங் பல விதங்களிலும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கிறார். எவருக்கும் புரிந்தபாடில்லை என்றுதான் சொல்லத் தோன்றகிறது..
“எங்கம்மா தெருவோர காய்கறி கடை வச்சு தான் என்னை படிக்க வச்சாங்க” இனி எந்த நடுத்தர வர்க்க மாணவனும் இப்படிச் சொல்ல முடியாது. காரணம்; இனிமேல் தெருவோர கடைகள் இருந்தால் தானே. மொத்தமாக ஊருக்கு ஒரு வால்மார்ட், கே மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விட்டாலே, எல்லோரும் பிழைக்க வழி பிறந்து விடாதா.. என்ன..?
ஏன் வேகாத வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும்?. இனி நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். எப்படி..?
வேலை தேடுபவர்களுக்கும், வைத்துள்ள பொருட்களை விற்க விவசாயிகளுக்கும் ஆத்மார்த்தமாக உதவி செய்ய இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் எதற்காகவும் அலைய வேண்டிய அவசியமிருக்காது. கருவேப்பிலையை கூட குளு குளு வசதி கடையில் போய் வாங்கி வரலாம்.
காரணம் நம் பொருளாதார மேதைகள், இந்த நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்று சொல்லி நம் அனைவர் வயிற்றிலும் பால் வார்த்து இருக்கிறார்கள். எப்படியான பெருந்தன்மை..? பன்னாட்டு நிறுவனங்கள உள்ளே வந்து விட்டால் நாட்டின் அந்நிய செலவாணி நிரம்பி வழியும்.
என்னவொன்றன்;  நாளுக்கு நாள் உள்ளூரில் பஞ்சம் பிழைக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் அவதி பட, களவாணிகளும் பெருகிக் கொண்டே தான் இருப்பார்கள். இதைத்தான் நமது பொருளாதார மேதைகள் இப்போது செய்துள்ளார்கள்.
இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 20 கோடி பேர்கள். இதன் மூலம் 25 லட்சம் கோடி பணம் புழங்குகின்றது. இவர்களில் அன்றாடங்காய்ச்சி முதல் அகாயசூரர்கள் வரைக்கும் உண்டு. தெருமுனையில் வண்டியில் வந்து விற்பவர் முதல் அண்ணாச்சி நடத்தும் மொத்த கொள்முதல் வரைக்கும் உண்டு.
இதில் தான் இப்போது காங்கிரஸ் அரசாங்கம் கை வைத்துள்ளது. கைக்கு ஓட்டுப் போட்டவர்கள் கண்ணீர் விட்டு கதற முடியாது. 2014 வரைக்கும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
இந்தியாவில் ஜனதா அரசாங்கம் இருந்த போது விரட்டியத்த பெப்ஸி கோக் நிறுவனங்களை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றவர்களும் நம் தலைவர்களே. ஆனால் இவர்கள் தான் இப்போது ஆளுக்கொரு பக்கமாய் நின்றுகொண்டு முதலைக் கண்ணீர் விடுகிறார்கள்.
இப்போதல்ல எப்போதுமே இந்தியாவில் ஒன்றல்ல? ஓராயிரம் பூதங்கள் உண்டு. ஆனால் மன்மோகன் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு பூதங்கள் அத்தனைக்கும் வலிமையான பலம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னால் பெயரளவில் பெப்ஸி,கோக் குளிர்பானங்கள் இருந்தது. ஆனால் இன்றோ இதுவொரு கௌரவம் சார்ந்த முக்கியத்துவப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மூன்று ரூபாய்க்கு கடையில் கிடைத்தது. அவ்வாறு விற்றால் கடைக்காரருக்கு 80 பைசா கிடைக்கும். ஆனால் இன்று அதன் விலை 12 ரூபாய்.
3000 அடிக்கு மேலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்ட நம்முடைய நிலத்தடி நீரை எடுத்து ஜாலக்கு வித்தை சேர்த்து, நமக்கே இன்று  12 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குப் பிடித்தமான நடிகர்களும், விளையாட்டு வீரர்களும், பல இலட்சங்கள்   கைமாறிய பின், தங்கள் கைகளில் அவற்றினை  ஏந்தி, கண் சிமிட்டுகின்றார்கள். சொக்கிப் போகின்றோம் நாம். விளம்பரங்கள் செய்யும் மாயவித்தைகளால் மதிமயங்கி நாகரிக மனிதராக நாமும் வேடம் கட்டிக் கொள்கின்றோம்.
எல்லா வியாபாரிகளும் லாபத்தை நோக்கி தானே ஓடுவார்கள்?
இப்போது தமிழ்நாட்டில் தயாராகும் ஒரு சிமெண்ட் மூட்டை (50 கிலோ) யின் விலை ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. ஆனால் இதன் லாபத்தோடு கூடிய அடிப்படை விலையென்பது இதில் பாதிக்கு பாதி. கடந்த முறை திமுக அரசாங்கம் விலை குறைப்பை வலியுறுத்திய போதும் எவரும் குறைக்கத் தயாராய் இல்லை என்பது தான் இதில் மிகப் பெரிய ஆச்சரியம்.
இதே சிமெண்ட் விலை பக்கத்து மாநிலத்தில் வேறொரு விலை. அங்கிருந்து இங்கே கொண்டு வர முடியாத அளவுக்கு சிண்டிகேட் வைத்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்குமதி சிமெண்ட் என்பது இன்னமும் மலிவானது. யாருக்கு பாதிப்பு. கட்டிங் போவது அரசியல்வாதிகளுக்கு. விலை உயர்வால் கதறியழுவது திருவாளர் பொதுஜனமே.
இது சிமெண்ட் துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலுமே இது போன்று இந்திய தொழிலதிபர்கள் அவரவர்களுக்கு வசதிப்படி சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப் போகும் சிண்டிகேட் என்பது இவர்களின் டவுசர் கழன்று போய்விடும் அளவுக்கு இருப்பது தானே முறையாகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது. இந்திய தொழில் அதிபர்களுக்கே சவாலாக இருந்தால் சாதாரண பொதுஜனத்தின் பாடு?
பன்னாட்டு நிறுவனங்கள் அதிலும் சற்று வித்யாசனமானவர்கள். லாபத்தை போலவே லாபத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களையம் ஒழித்துக் கட்டுவது. இன்று தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த காளிமார்க், டொரினோ, போன்ற உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகள் ஏறக்குறைய இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பெப்ஸியும், கோக்குடன் இவர்கள் கொடுக்கும் குளிர்சாதன பெட்டி தானே நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியதோடு மற்றொரு காரியத்தையும் தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் தயாரிப்பான குளிர்பான பாட்டில்களையும் கைப்பற்றி உடைத்து நொறுக்கிக் கொண்டே வர இன்று பாட்டில் இல்லாத உள்ளூர் நிறுவனங்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இத்தனை நாளும் மறைமுகமாக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி முன் வாசல் வழியாகவே உள்ளே வரலாம் என்று மன்மோகன் சிங்கிள் மேன் ஆர்மியாக செயல்படுத்தி சாதித்திருக்கிறார்.
உலகத்தோடு ஒத்து வாழ் என்ற முதுமொழியை கடைபிடிப்பதில் மன் மோகன் சிங்கிற்கு முதல் தகுதியுண்டு. காரணம் இந்திய பிரச்சனைகளை தீர்ப்பதற்கே வருடத்தில் பாதி நாட்கள் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து கொண்டிருக்கிறார். இவர் மூளையில் உதித்த ஒவ்வொரு கொள்கைகளும் எந்த இந்தியனும் மறக்க கூடாத ஒன்றாகும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. 15 நாளைக்கு ஒரு முறை தங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக காங்கிரஸ் முதன் முறையாக பதவிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் பெட்ரோல் விலை நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.- நன்றி தமிழ் மீடியா.

முல்லைபெரியாரு காணொளி

http://player.vimeo.com/video/18283950?autoplay=1  


http://player.vimeo.com/video/18283950?autoplay=1

திங்கள், நவம்பர் 28, 2011

தலைவரின் சிந்தனைகள்!!



எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.

சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

சதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.

தனது மனவுலக் ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

பூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.

எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.

விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.

சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது

இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.

பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.

ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.

மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.

எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்

இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.

இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.

கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.

திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.

அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.

இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.

நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.

விடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.


எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.

எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.

உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.

பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.

பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது


ஞாயிறு, நவம்பர் 27, 2011

ஈழத்தேசியக்கொடி


தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை

01. முன்னுரை
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.

நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

02. தேசியக்கொடியின் தன்மை
ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.


03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்
ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.

04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்
நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.

வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.

சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.

வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.

தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.

தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.

தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.

தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.

தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.

தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை
தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.

தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.

மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.

06. கொடிமீது கொண்ட பற்று
சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.

தேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.

07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.

08. நிறங்களும் குறிக்கோளும்

எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.

09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும்



பொதுக்கொடி 4‘ x 6‘

விடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.

உள்ளிடக்கொடி 3‘ x 5‘
அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.

எழுச்சிக்கொடி 2‘ x 3‘

பொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.

வீட்டுக்கொடி 2‘ x 3‘
தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.

அணிவகுப்புக்கொடி 2‘ x 3‘
அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.

10. கொடிக்கம்பமும் கயிறும்



கொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும்.

11. கொடிப்பீடம்


கொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும்.

12. கொடியேற்றும் முறை


தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.

13. கொடியின்பார்வை

கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.

14. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்
கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.

மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.

தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.

கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்.

15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்

(கொடிக்கம்பத்தின் முன்பக்கத் தோற்றம்)

தமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும்.

16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும்
எமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4‘ உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட 4‘ கூடுதலான உயரத்தில் இருக்கவேண்டும்.

16. 1. தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம்.


(கொடிக்கம்பத்தின் முன்பக்கத் தோற்றம்)

16. 2. தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம்.


16.3. தேசியக் கொடிக்குப்பின்னால் 16. (2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம்.


16.4. உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம்.



16. 5. தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும்.

தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிகளைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும்.


17. ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச்செல்லுதல்


ஊர்வலங்களில் தேசியக்கொடியை வேறு கொடிகளுடன் எடுத்துச் செல்கையில் ஊர்வலத்தின் முன்னால் வலப்புறத்தில் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது நடுவரிசையில் மற்றைய கொடிகளுக்கு முன்னால் எடுத்துச்செல்லவேண்டும். வேறு எந்தக் கொடியை ஏந்திச் செல்பவரும் எமது தேசியக்கொடியை முந்திச் செல்லக்கூடாது. தேசியக்கொடியை நெஞ்சுக்கு நேராகவோ வலத்தோளிலோ ஏந்திச் செல்லவேண்டும்.

18. ஊர்திகளில் தேசியக்கொடியைப் பறக்கவிடுதல்


ஊர்தியின் முன்புறத்தில் உறுதியாகப் பொருத்தப்பெற்ற கம்பத்திற் பறக்கவிடவேண்டும். ஊர்தியின் தொளைமூடியின் (டீழநெவ) மேல் இரண்டடி உயரத்திற் கம்பம் இருத்தல்வேண்டும்.



உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

19. மிசையத்தில் தேசியக்கொடியை வைத்தல்



அரசுத் தலைவர் மற்றும் முதன்மை மாந்தரின் மிசையங்களில் தேசியக்கொடியை வைக்கும்போது மிசையத்தின் வலப்புறத்தில் வைத்தல்வேண்டும். வேறு கொடிகளும் வைக்கப்படுமாயின் அவை இடப்புறத்தில் வைக்கப்படவேண்டும். தேசியக்கொடிக்கு முதன்மை வழங்கவேண்டும்.

20. ஈமப்பேழையின்மீது தேசியக்கொடியைப் போர்த்துதல்


மாவீரர், காவற்றுறை மாவீரர், தேசியத்துணைப்படை மாவீரர் மற்றும் தேசக் காப்புப்பணியில் ஈடுபடும் வீரர், நாட்டுப்பற்றாளர் ஆகியோரின் உடல் வைக்கப்பட்ட ஈமப்பேழையின்மீது தேசியக் கொடியைப் போர்த்தும் போது புலியின் தலைக்குமேலுள்ள பகுதி பேழையின் தலைப்பகுதியில் இருக்குமாறு போர்த்த வேண்டும். அவ்வாறு போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் போர்த்தப் பெற்றவரின் அரத்த உறவினரிடம் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு வழங்கலாம். இறந்தவரின் தாயகப்பற்றை மதிப்பதற்காக அவரின் ஈமப்பேழைமீது போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.

21. துயர நிகழ்வின போது கொடியேற்றுதல்


தேசியத் துயர நிகழ்வுகளின்போது கொடியேற்றுகையிற் கொடியைக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் அரைக் கம்பத்துக்கு இறக்கிக் கட்டவேண்டும். அரைக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கும்போது முதலிற் கொடிக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் இறக்கவேண்டும்.

தேசத் தலைவரின்முறைப்படியான அறிவுறுத்தலுக்கு இணங்கவே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடலாம். வேறெந்தவேளையிலும் அரைக்கம்பத்திற் பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை எத்தனை நாட்களுக்கு அரைக்கம்பத்திற் பறக்கவிடவேண்டுமென்பது தேசத்தலைவரின் அறிவுறுத்தலிற் குறிப்பிடப்படவேண்டும்.

கம்பத்தோடு நிலையாகப் பொருத்தப்பட்ட தேசியக் கொடியைத் தேசியத்துயர நிகழ்வுகளின்போது அரைக் கம்பத்திற்குக் கொண்டுவரமுடியாது. அவ்வேளையில் தேசியக் கொடிக் கம்பத்தில் 3‘ஒ2‘ அளவுள்ள கறுப்புக்கொடியை அரைக்கம்பத்திற் பொருத்திவிடலாம்.

22. கொடிகளைத் தொங்கவிடுதல்


உயரத்திற் கொடிகளைத் தொங்கவிடலாம். போக்குவரத்திலுள்ள எந்த ஊர்தியிலும் கொடி படாதவகையில் உயரமான கம்பங்களை இருமருங்கும் நிறுத்தி உறுதியான கயிற்றினை இணைத்துத் தொங்கவிடலாம். கொடி கட்டப்படும் கயிறு மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும். கொடிக்கயிறு அறுந்து கொடி கீழே விழுவது தேசத்துக்கு இழுக்காகும்.

கொடியைக் கயிற்றில் இணைக்கும்போது புலியின் தலைக்கு மேலேயுள்ள பகுதி கயிற்றுடன் இணைக்கப்படவேண்டும். புலியின் பார்வை வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது கொடிக்கு எதிரே நிற்பவரின் இடப்புறத்தைப் பார்த்தவாறு புலியின் பார்வை அமையவேண்டும். புலியின்பார்வை நிலத்தைப் பார்த்தவாறோ வானைப் பார்த்தவாறோ அமையக்கூடாது.

23. குறுக்குக் கம்பங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்

தமிழீழத் தேசியக் கொடியையும் வேறொரு தேசத்தின் தேசியக் கொடியையும் குறுக்குக் கம்பங்களிற் பறக்கவிடும்போது தமிழீழத் தேசியக்கொடி வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது பார்வையாளருக்கு இடப்புறமாக இருக்கவேண்டும். மேலும் தமிழீழத் தேசியக் கொடியின் கம்பம் முன்னாலும் மற்றக்கொடியின் கம்பம் பின்னாலும் இருக்கவேண்டும்.

24. கட்டடங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்


சாளர அடிக்கட்டை, முகப்புமாடம் ஆகியவற்றிற் கிடையாகவோ கோணவடிவிலோ கொடியைப் பறக்கவிடும்போது கொடி, கம்பத்தின் உச்சியில் இருக்கவேண்டும். கிடையாகப் பறக்கவிடும்போது புலியின்பார்வை வலப்புறமாக இருக்கக்கூடிய வகையிற் புலியின் தலைக்கு மேலுள்ள பகுதியே கம்பத்துடன் இணைக்கப்படவேண்டும். கோணவடிவிற் பறக்கவிடும்போது அணிவகுப்புக் கொடியை இணைப்பதுபோன்று அதாவது எழுச்சிக் கொடியைக் கம்பத்தில் இணைப்பது போன்று இணைக்கவேண்டும்.

25. மேடைகளில் தேசியக்கொடி

கூட்ட மேடைகளிற் பேச்சாளரின் தலைக்கு மேலாகப் பின்புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம். 9 அடி உயர நிறுத்தியிற் பொருத்தப்பெற்ற தேசியக்கொடியை மேடையின் வலப்புறத்திற் பேச்சாளருக்கு முன்னால் வைக்கலாம். ஏனைய கொடிகள் இடப்புறத்தில் வைக்கப்படலாம்.

26. தேசியக்கொடியை இறக்குதல்

தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.

27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு
தேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.

தேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா?

தேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா?

கொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா?

நிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

கொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா?

தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா?

கொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா?

என்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம்.

தேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.

28. தேசியக்கொடியை அகற்றுதல்

நீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.

பயன்படுத்தமுடியாத கொடிகளைச் சேர்த்தல்
பழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினூடாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.

பழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்
தலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.

இறுதிச் சடங்கு
அகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.

பகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.

இறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள்;வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-

இந்தக்; கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்"

உரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார்; வணக்கஞ் (ளுயடரவந) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.

எரியூட்டும் சடங்கு
ஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (ளுயடரவந) செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.

கொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப்புதைக்கப்பட்டவுடன் நிகழ்ச்சி முடிவடையும்...நன்றி ஈழவர் குரல்

தமிழீழ தேசியப்பறவை

தேசியப் பறவை செண்பகம்

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.

நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன.

இந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்துதாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது.

செண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன.

கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது.


மெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தினத்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறுமரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள் செம்பகத்தின் உணவுகள் ஆகும்.

பிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். செம்பகத்தின் வேட்கைக்காலம் பெப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis) -நன்றி இணையம்

தமிழீழ தேசிய விலங்கு

தேசிய விலங்கு சிறுத்தை


சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.

இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும்.

சிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு.

சிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் "சருகுபுலி" என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு.

சிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை.

உலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாhடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசிய மரம் வாகை

தமிழ்த்தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.


சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.

வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம்.


Leguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம்.

இது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை.


இது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.