பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, நவம்பர் 18, 2016

தமிழ் நாடா? திராவிட நாடா?

தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.

1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.

(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)

கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.

"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.

திங்கள், நவம்பர் 07, 2016

பெரியார் யாருக்குப் பெரியார்?


January 11, 2011
 

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பிற்படுத்தப் பட்டோரின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை – அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.
dalit12தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட (?)  ஈ.வே.ராமசாமி நாயக்கர் தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா?
பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்  இடையே ஈ.வே.ரா. வகித்த பாத்திரம் எது?  என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.
ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு 25.4.1926)
ஈ.வே.ரா. கூறுகிறார் :-
தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்குச் செய்ததாகுமே ஒழிய, உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது……………. ” (குடியரசு 16-6-1929)
ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு 11.10.1931)
ஈ.வே.ரா. கூறுகிறார் :-
திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)
இவ்வாறு ஈவேரா தான் சூத்திரன் என்று சொல்லப்படுபவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியபோதும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல் சில தலித் எழுத்தாளர்களும் கூட ஈவேரா தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அந்த உந்துதலினாலேயே ஈவேரா பிற்படுத்தப்பட்டவர்களின் தீண்டாமை விலங்கை தகர்த்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே அதுவாகத்தான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட வேண்டும், அவர்களின் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குக் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்கின்ற கொடுமைகளை ஈவேரா எதிர்த்ததே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை.
ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
வேண்டும் என்று ஈவேரா  கூறுகிறார் :-
‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?
ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?
மேலும் ஈ.வே.ரா. கூறுகிறார் :-
ரொக்கச் சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அனேகமாய்ப் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்கார்களிடமும் லேவாதேவிக் காரர்களிடமுமே போய்ச் சேரக்கூடியதாக இருப்பதால்
(குடியரசு 4-1-1931)
என்று பெரியார் குறிப்பிடுகிறார். இங்கு பெரியார் பார்ப்பனரை மட்டும் பெயரில் குறிப்பிட்டு விட்டு மற்ற உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் என்று பொதுப்படையாகவே கூறிச்சென்று விடுகிறார். உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் யார்? பிற்படுத்தப்பட்டவர்கள்தானே!
பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை செய்யும்போது அதை கண்டிக்காமல் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஈவேரா.
ஈவேரா  கூறுகிறார் :-
‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் – பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை.” (குடியரசு 11-1-1931)
இதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறில்லை. இந்த காரணங்களைத்தானே பிராமணர்களும் தங்களுக்குச் சாதகமாக சொல்கிறார்கள்?  மத உணர்ச்சி, மத ஆதாரம், முன் ஜென்மத்தின் கர்மம், பூர்வபுண்ணியம், தலைவிதி என்றெல்லாம் சொல்லி தாழ்த்தப் பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடுகிறவர் என்று சொல்லப்படுகிற ஈவேராவின் தொண்டா?
‘‘பெரியார் பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதும் போக்கைக் குறித்த கண்டனவுரையில் பெரிதும் வெப்பம் இல்லை. சில நேரங்களில் பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனரைவிட மிகக் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டாலும், பார்ப்பனரல்லாதாரின் கொடுமைக்குக்கூட , பார்ப்பனர்களைக் குறை சொல்லும் போக்கு பெரியாரிடம் இருந்தது. பார்ப்பனக் கருத்தியலுக்குப் பெரிதும் ஆட்படாத வேளாளர் சாதியத்தை தூக்கிப்பிடித்ததற்கும், தீண்டாமை கொடுமைகள் தாண்டவமாடியதற்கும் வரலாறு சான்று பகர்கிறது’’ என்று கோ.கேசவன் குறிப்பிடுவதில் உண்மையும் உள்ளது.
ஈவேரா ஒவ்வொரு சமயத்திலும் தான் பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்பதை அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறார்.
ஈவேரா  கூறுகிறார் :-
ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால் – ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்’ என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா? (குடியரசு 28-7-1945)
அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லிவிட்டார். அடுத்து இதில் நமக்கு, நாமேயாகும், நம் விகிதப்படி என்ற வார்த்தையெல்லாம் யாரைக்குறிக்கின்றன? சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்களைத்தானே? அப்படியென்றால் ஈவேரா யாருக்குப் பாடுபட்டார்? யாருக்கு அவர் பெரியாராக இருந்தார் என்பது விளங்கவில்லையா?
ambedkar_periyar
ஈவேரா யாருக்காக பெரிதும் கவலைப்பட்டார், யாருக்காக பாடுபட்டார் என்பதையும் அவருடைய பேச்சுகளில், எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றிய எரிச்சல்களையும் பார்க்கலாம்.
ஈவேரா கூறுகிறார் : –
……காங்கிரசும் சுயராஜ்யமும் இராமராஜ்யமும், திராவிடர்கள் சூத்திரத்தன்மையில் இருந்து மனிதத் தன்மை பெறாமல் இழிநிலையில் – அடிமை நிலையில் இருப்பதற்கு ஏற்பட்டவைகளே தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் ஏற்பட்டதல்ல என்பதை நான் எங்கும் நிரூபிப்பேன். இல்லாவிட்டால், தேவைக்கு மேற்பட்ட யோக்கியதாம்சத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிடனுக்கு மாத்திரம் தகுதி, திறமை என்கின்ற முட்டுக்கட்டை ஏன்? முஸ்லீம்களுக்குத் தகுதி, திறமை வேண்டியதில்லை; வெள்ளையனுக்கு வேண்டியதில்லை; சட்டைக்காரர்களுக்கு வேண்டியதில்லை. ‘வேறு மதத்திற்குப் போய்விடுவேன்’ என்று மிரட்டுகிற ஆதித்திராவிடர்களுக்குத் தகுதி, திறமை என்பவை – ‘திராவிடனுக்கு இருக்க வேண்டும் என்றபடி’ வேண்டியதில்லை. ஆனால் திராவிடனுக்குப் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கே தகுதி, திறமை வேண்டும் என்று சுயராஜ்ய பார்ப்பனப் பிரதம மந்திரி சர்க்காரிலுள்ள திராவிடக் கல்வி மந்திரியைக் கொண்டே திட்டம் செய்வாரானால், மனுதர்மமும்  விபீஷணத்தன்மையும் எவ்வளவு பலாத்காரமாகக் கையாளப்படுகிறது என்று பாருங்கள்.
…….
……ஆதித்திராவிடர்களையும் முஸ்லீம்களையும் நடத்திய மாதிரி மிக மோசமாக இருந்து வந்தாலும், இப்போது அவர்களுக்குப் ‘பிரைஸ்’ அடித்துவிட்டது. முதல் பிரைஸ் இல்லையானாலும் நல்ல பிரைஸ். அவர்கள் நிலை உயர்த்தப்பட்டுவிட்டது. இனி அவர்களுக்குச் சரியானபடி விகிதாசாரமும் மேலுங்கூட- கண்டிப்பாகக் கிடைக்கும். அவர்களுக்கு சிபாரிசு, குறைகளைக் கேட்க வசதிகள் ஏற்பட்டு விட்டன.
…..
……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர் ‘நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல’ என்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்’ என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்’ என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கி’ என்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம் ‘நான் இந்துவல்ல’ என்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும் ‘இந்து அல்ல’ என்றுதான் – வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்.

……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.
 (நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமைகள் பற்றிய எரிச்சல்கள் ஈவேராவிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில உரிமைகள் புரட்சியாளர் அம்பேத்கரால் கிடைத்தது. ஆனால் சூத்திரர்களுக்கு கிடைக்கவில்லையாம். அந்த எரிச்சல்களை எப்படி கொட்டுகிறார் பாருங்கள்!
ஈவேரா கூறுகிறார் : –
இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)
மேலும் ஈவேரா கூறுகிறார் : –
‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’ (விடுதலை 22-9-1951)
‘‘ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள்.’’ என்ற ஈவேராவின் பேச்சு எரிச்சலைத்தானே காட்டுகிறது?
இந்த எரிச்சல் தாழ்த்தப்பட்டவர்களை நன்றியற்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு ஈவேராவின் குரல் ஒலித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தான்தோன்றித்தனமான பேச்சுக்களையும் தாழ்த்தப்பட்ட தலைவர்களால் போராடி பெறப்பட்ட உரிமைகளையும் கூட தன்னால்தான் பெறப்பட்டது என்ற அகங்காரப்பேச்சுகளையும் ஈவேரா ஒலித்திருக்கிறார்.
ஈவேரா கூறுகிறார் : –
‘‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதமாகிவிடுகிறது என்பதற்காக சர்க்காரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை 1950ல் எடுத்துவிட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சிகளின் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். படிப்பு, உத்தியோகம், சமுதாயம் ஆகிவற்றில் பின்தங்கியவர்களுக்குச் சலுகைகாட்டத் திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டத்தில் எழுதியிருக்கிறார்கள். அரசியல் திட்டத்தால் ஆதிதிராவிடருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிறதே ஒழிய, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறிக் கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்களால்) ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வளவோ செய்தோம். அப்படி இருந்தும் ‘பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால்தான் எங்களுக்குத் தொல்லை’- என்று ஆதித்திராவிடர்கள் கூறுகிறார்கள். இது நன்றியற்றப் பேச்சு. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிந்தது. அவர்கள் படிப்புத் துறையில் முன்னேற வழிகாட்டியவர்கள் நாங்களே. ஆதித்திராவிடர்களின் கோயில், தெரு நுழைவுக்கு முதல்முதல் போராடியவர்கள் நாங்கள்தாம். ஆதித்திராவிடர்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?’’ (விடுதலை 21-9-1956)
ஈவேரா சொல்கிற உரிமைகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகள். (பார்க்க – நீதிக்கட்சியின் மறுபக்கம், அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் – விரிவான வரலாறு, உணவில் ஒளிந்திருக்கும் சாதி) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் எந்தவிதமான போராட்டங்களையும் இதுவரை நடத்தியதில்லை. வைக்கம்போராட்டம்
காங்கிரசின் போராட்டம். காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி நடந்த போராட்டம். ஈவேரா அப்போராட்டத்தில் காங்கிரஸ்காரராகவே கலந்துகொண்டார். இதில் கூட ஒரு சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தெருக்களில் நடக்கின்ற, கோயில்களில் நுழைகின்ற போராட்டத்தை ஈவேரா தலைமையேற்று தமிழ்நாட்டில் நடத்தியதுண்டா? ஏன் நடத்தவில்லை?
அதுமட்டுமல்ல ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததே தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவினால்தான். அந்த நன்றியை மறந்துவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நன்றியற்றவர்கள் என்று கூறுகிறார் ஈவேரா.
ஆகவே ஈவேரா சொல்வதெல்லாம் பித்தலாட்டம், பிதற்றல், எரிச்சல் தவிர வேறொன்றுமில்லை.
மேலும் ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டுள்ளார் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈவேரா கூறுகிறார் : –
‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’
(விடுதலை 11.11.1957)
ஈவேரா கருத்துப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 இடம் கொடுத்தால்கூட அவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது. ஆனால் அதை பார்ப்பனர்கள் கருத்தாகவே கூறிவிட்டார். பார்ப்பனர்கள் எங்கே அப்படி சொன்னார்கள் என்று கேட்டால் பார்ப்பனர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள் என்று ஒருபோடு போடுவார்கள், வரலாறு – சரித்திரம் – அப்படித்தான் நமக்கு காட்டுகிறது என்றெல்லாம் கதைவிடுவார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டமக்களுக்கு வாங்கித்தந்த உரிமைகள் பற்றி ஈவேரா பலதடவை எரிச்சல்பட்டிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்காக வாதாடவில்லை என்று ஒருதடவையும், வாதாடினார் என்று ஒருதடவையும் மாறி மாறி ஈவேரா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புரட்சியாளர் அம்பேத்கர் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டமாதிரி ஈவேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஈவேரா கூறுகிறார் :-
‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னா?  உங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதி-திராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’ (17.1.68 கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38)
தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் கிடைத்ததை ஈ.வே.ரா எவ்வளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார் பாருங்கள். ஆகவே ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே தன் இயக்கத்தின் சார்பாக போராடியது இல்லை. அவர் போராடியது எல்லாம் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதிகளுக்குத்தான். ஆகவே பெரியார் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்குத்தான் பெரியாரே தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கு அல்ல. இதை தாழ்த்தப்பட்டவர்கள் உணரவேண்டும். ஈவேரா பின்னால் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர் என்ற பொய்ப்பிம்பத்தை அழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வரலாற்றுகளை நாம் படித்தறியும்போதுதான் இந்த மாதிரி ஆட்களின் பொய்ப்பிம்பத்தை உடைத்தெறிய முடியும். ஆகவே தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். உண்மை புரியும். நமது உரிமைகள் யாரால் பெறப்பட்டது என்பது. அதுவரை இந்தமாதிரியான பொய்ப்பிம்பத்தை வைத்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் திராவிட கூட்டம் வல்லூறுகளாய் காத்துக்கொண்டு இருக்கின்றன. 

வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?



ஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.
ங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.
தில் –
கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….
யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!
டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.
செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.
முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.
கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.
ங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.
தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.
குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.
ற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!
ரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!
ரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!
றந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!
றந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!
றந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!
வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.
தீர்ப்பு என்ன தெரியுமா?
முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!
ன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!
ரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!
44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.
தைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.
தற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.
ந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’
க, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.
ந்த வரலாற்றுக் களங்கம்…
நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…
மிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?
வேரா சொல்கிறார்:-
‘‘ந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’
மிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!
து எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
த்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?
ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?
வேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.
‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’
கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!
கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.
ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.
பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

தொடர்புள்ள பிற பதிவுகள் :

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11


72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்


1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2. 

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10


ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை


ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்) 

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9


பெட்டியும், சாவியும் எங்கே? – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

1944 – ஆம் ஆண்டில் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில், திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு ஒரு வலிமையான எதிர்ப்பு உருவாகி வளர்ந்து வந்தது.

“திராவிடர் கழக விவகாரங்களில் எவரையும் ஆலோசனை கலக்காமல் ஈ.வெ.ரா. சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்; கட்சியில் எவரையும் அவர் மதிப்பது இல்லை; கட்சியின் நிதி விவகாரங்கள், சொத்துக்கள் ஆகியவை பற்றி எவருக்கும் அவர் முறையாகத் தெரிவிப்பது இல்லை; கட்சியில் உள்ள எவரையும் தம் மனம் போன போக்கில் அலட்சியப்படுத்துகிறார்” என்று அண்ணாதுரை தரப்பினர் ஈ.வெ.ரா. மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்கள்.

திராவிடர் கழக உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தார்கள். சிலர் அண்ணாதுரையை ஆதரித்தார்கள்; சிலர் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்; வேறு சிலர் ஈ.வெ.ரா.வுக்கும் நல்லவர்களாய், அண்ணாதுரைக்கும் வேண்டியவர்களாய் ஒட்டுப் போடப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.ரா.வின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர். அவர் சித்த வைத்தியராக விளங்கியவர்; பெரும் செல்வந்தர்; தூய்மையான வைணவர். அவர் எப்போதும் துவாதச திருநாமம் மேனியில் துலங்கக் காட்சி தருவார் என்று ராஜாஜி ஒரு பொது நிகழ்ச்சியில் ஒருமுறை குறிப்பிட்டார். கிருஷ்ணசாமி நாயக்கருக்குச் சம்பத், செல்வன், மிராண்டா, செல்லா என்று நான்கு மக்கள். மூத்த புதல்வர் சம்பத் பொதுவாழ்வில் இளமைக்காலம் முதல் அண்ணாதுரையுடன் சேர்ந்து பணியாற்றினார். தம்முடன் பழகியவர்களில் சம்பத் ஒருவரை மட்டுமே அவன், இவன் என்று அண்ணாதுரை பொது மேடைகளிலும் அன்புடன் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்தது.


சம்பத்

திராவிடர் கழகத்தில், தனது சித்தப்பா ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு எதிராக, அண்ணாதுரையுடன் சம்பத் மிகவும் தீவிரமாக வேலை செய்தார். 
சம்பத் தகவல் 
“1949– ஆம் ஆண்டில்தான் திராவிடர் கழகத்திலிருந்து நாம் பிரிந்தோம். ஆனால், திராவிடர் கழகத்திற்குள் குமுறல் 1946– ஆம் ஆண்டு முதலே இருந்து வந்தது. திராவிடர் கழகம் ஒரு நல்ல அரசியல் கட்சியாக, ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்று அண்ணாதுரையும், நாங்களும் வருத்தப்பட்டோம்” என்று, 1961– ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்த பிறகு, அக்கட்சியின் துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய நீண்டதொரு உரையில் ஈ.வெ.கி.சம்பத் கூறினார்.

அந்த நீண்ட உரையில் திராவிடர் கழகம் சம்பந்தமான பல செய்திகளை சம்பத் குறிப்பிட்டார். அவற்றைச் சுருக்கமாக கீழே தருகிறேன்.

“1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிப்பது என்ற ஈ.வெ.ரா.வின் முடிவு தவறு என்ற எண்ணம், திராவிடர் கழகத்தின் பல இளைஞர்களின் உள்ளத்தில் இருந்தது. எனினும் அந்த எண்ணத்தை வெளியிட ஸ்தாபனத்தில் இடம் இல்லாமல் இருந்தது; வாய்ப்பு இல்லாமல் இருந்தது; கமிட்டிகள் கூடாத கமிட்டிகளாகவே இருந்து விட்டன.

“இந்த நிலையில்தான் தூத்துக்குடி (திராவிடர் கழக) மாகாண மாநாடு நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. உடனே தோழர் நெடுஞ்செழியன் தனது ‘மன்றம்’ இதழில், ‘இப்போது மாநாடு எதற்காகக் கூடுகிறது, கட்சியின் கமிட்டிகள் எல்லாம் செயலற்றுக் கிடக்கும்போது, மாநாட்டில் கூடுவதும் பேசுவதும் எதற்காக?’ என்றெல்லாம் எழுதினார்.

“உடனே இதுகுறித்து நாடு பூராவிலும் உள்ள கழகத் தோழர்களிடையே சிறு சர்ச்சை எழுந்தது. மாநாட்டிற்கு வந்தால், நெடுஞ்செழியன் அடிக்கப்படுவார் என்று கூடப் பேசப்பட்டது. உடனே நாங்கள் எல்லோரும் திருச்சியில் தோழர் சாம்பு இல்லத்தில் கூடி, தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு செய்தோம்” என்று சம்பத் தெரிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாநாட்டில் சம்பத்தும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டிற்கு அண்ணாதுரை ஏன் வரவில்லை என்ற கேள்வி ஈ.வெ.ரா.விடம் கேட்கப்பட்டது. “இதுமாதிரி அவன் வரவில்லை, இவன் வரவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள். இது என்ன பாட்டுக் கச்சேரியா, சுப்புலெட்சுமி ஏன் வரவில்லை என்று கேட்பதற்கு?” என்று ஈ.வெ.ரா. சூடாகப் பதிலளித்தார்.

எனினும் தூத்துக்குடி மாநாட்டை அண்ணாதுரை பகிஷ்கரித்ததால் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளிக்க ஈ.வெ.ரா. விரும்பினார் என்று தோன்றுகிறது. அந்த மாநாடு முடிந்த பிறகு, “இவர்களுக்கு என்ன மனக்குறை, கேட்டு வாருங்கள்” என்று அண்ணாதுரையிடம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை தூது அனுப்பினார். திராவிடர் கழகத்தில் இருந்த நிலைமைகளையும், தங்களது மனக்குமுறல்களையும், அண்ணாதுரையின் சார்பில் சம்பத் அவரிடம் எடுத்துச் சொன்னார். 
பெட்டியும் சாவியும்

பிறகு ஈ.வெ.ரா. ஒரு சமரச ஏற்பாட்டைத் தெரிவித்தார். அதன்படி பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை வரவேற்புக் கமிட்டித் தலைவராகப் போட்டு, ஈரோட்டில் ஒரு தனி மாநாடு நடத்துவது என்றும், அந்த மாநாட்டில் மனக்குறைகள் நீக்கப்படும் என்றும் ஈ.வெ.ரா. தெரிவித்ததாக சம்பத் தமது உரையில் விவரித்தார்.

ஈரோடு மாநாடு அண்ணாதுரை தலைமையில் 1948 அக்டோபர் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தது. 1947 ஆகஸ்ட் 15 துக்க நாள் கருத்து, எதிர்க் கருத்து சர்ச்சைக்குப் பிறகு அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.வும் அந்த மாநாட்டில் ஒரே மேடையில் கலந்து கொண்டார்கள்.

“பெட்டிச் சாவியை அண்ணாதுரை கைகளில் கொடுத்துவிட்டேன்” என்று அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. அறிவித்தார். அதாவது கட்சியின் வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய நிதி, அண்ணாதுரையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று ஈ.வெ.ரா. பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு கழக உறுப்பினர்களை ஏமாற்றிய ஒரு நாடகம் என்று அடுத்த வாரமே அண்ணாதுரை அம்பலப்படுத்தினார்.

“பெட்டிச் சாவியைக் கொடுத்ததாக பெரியார் பேசியதால், பலர் திராவிடர் கழகத்திற்கு நான் தலைவன் ஆக்கப்பட்டு விட்டேனோ என்று சந்தேகப்படுகிறார்கள். எப்போதும் போல் தி.பொ.வேதாசலம்தான் நிர்வாகத் தலைவர். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை” என்று அண்ணாதுரை ‘திராவிட நாடு’ இதழில் விளக்கம் தந்தார்.

“சாவியைக் கொடுப்பதாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஐயா (ஈ.வெ.ரா.) சொன்னாரே தவிர, சாவியையும் தரவில்லை! பெட்டியையும் தரவில்லை! மாநாட்டில் மிச்சப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணத்தோடு, பெட்டியும் சாவியும் ஐயாவின் (ஈ.வெ.ரா.வின்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிபு வீட்டில்தான் இருந்தன” என்று இராம.அரங்கண்ணல் சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘திராவிடன்’ இதழில் (26.9.1956) எழுதி இந்த உண்மையை மீண்டும் பதிவு செய்தார். 
ஈ.வெ.ரா. பிரசாரம்

ஆக, “ஈரோடு மாநாடு முடிந்த பிறகும், திராவிடர் கழகத்தில் காரியங்கள் முன்போலவே நடைபெற்று வந்ததால், வெளியே மக்களிடையே அண்ணாதுரையும் ஈ.வெ.ரா.வும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பேசப்பட்டாலும், உள்ளே மனக்குமுறல் நீங்கிய பாடில்லை” என்று சம்பத் தமது உரையில் தெரிவித்தார்.

“அதன் பேரில், உள்ளே இருந்து கொண்டே அண்ணாதுரை ஒத்துழையாமை செய்யத் துவங்கினார். ‘திராவிட நாடு’ இதழில் கேள்வி–பதில் பகுதி ஒன்றைத் துவக்கினார். பல பத்திரிகை ஆசிரியர்கள் செய்வதைப் போலவே, இவரும் தானாகவே கேள்விகளை எழுதி, அதற்குப் பதில்களையும் எழுதினார். ‘நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி விட்டீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அதற்கு ‘விலகவில்லை, ஒதுங்கியிருக்கிறேன்’ என்று பதிலும் எழுதினார். இந்தப் போக்கு பிடிக்காதவராக ‘இவர்கள் எல்லோரும் துரோகிகள்’ என்ற திண்ணைப் பேச்சை பெரியார் முடுக்கி விட்டார்” என்று சம்பத் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

ஈரோடு மாநாட்டிற்குப் பிறகு, கரூர் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் மீது, கலவர வழக்கு ஒன்று வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்த ஈ.வெ.ரா. பணம் தர மறுத்து விட்டார். உடனே அண்ணாதுரையும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிதியை மிச்சப்படுத்தி, கரூர் கலவர வழக்குக்காக ஈ.வெ.ரா.விடம் கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் திராவிடர் கழகத்திற்குள் குமுறல் நீடித்து வந்தது. அண்ணாதுரையும், நெடுஞ்செழியன், சம்பத் முதலியவர்களும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பாரதி படிப்பகம் போன்ற பெயர்களில் உள்ள மன்றங்கள் சார்பில், பல ஊர்களில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார்கள்.

அண்ணாதுரை ஓர் உல்லாச மனிதர் என்றும், சோம்பேறி என்றும் ஈ.வெ.ரா. மூலம் ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்தது. அண்ணாதுரை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று காட்டவும் ஈ.வெ.ரா. முயன்றார். இந்த முயற்சிகள் அனைத்தையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இராம.அரங்கண்ணல் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தினார்.

ஆதார நூல்கள்: 
கட்சிப் பிறந்தது - ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய உரை.
வெளியிட்டோர்: கண்ணதாசன் பதிப்பகம், 2/127, மவுண்ட்ரோடு, சென்னை - 6 (1961 ஜூலை)

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8


ஈ.வெ.ரா.வுக்கு அண்ணாதுரை கடும் கண்டனம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்காததும், சுதந்திரப் போராட்ட வீரர்களை நாக்கிலே நரம்பின்றி ஏசித் தூற்றியதும் மிகப் பெரிய தவறுகள் என்ற ஒரு சிறிய உறுத்தல், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு விடும் என்று தென்பட்ட காலகட்டத்தில், அண்ணாதுரைக்கு ஏற்பட்டது என்று தோன்றுகிறது.


விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தியாகங்கள் பல புரிந்தோரை, நிந்திப்பது தகாது என்று அவர் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்.

மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஒரு விழா, அண்ணாதுரையின் பெருமுயற்சியால் 28.7.1946 அன்று நடந்தது. பாரதிக்குத் தாசன், அதாவது பாரதியாரின்அடிமை என்று தமது புனைப் பெயரை வைத்துக் கொண்ட, கனக சுப்புரத்தினத்திற்கு விழா எடுப்பதைத் திராவிடர் கழகத்தினரில் கணிசமானவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பாரதிதாசனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்குப் பொற்கிழி அளிக்க முன்வந்த அண்ணாதுரை மீதும் அவர்களது கோபம் பாய்ந்தது.

ஆனால், அண்ணாதுரை அது குறித்துக் கவலைப்படாமல் விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். அவரது அன்றைய நெருங்கிய சகாக்களான சி.வி.எம்.அண்ணாமலை, சி.டி.டி.அரசு, க.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் முதலியவர்கள் விழாவுக்காகத் தீவிரமாகப் பணி ஆற்றினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை, ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் முதலியவர்கள் அந்த விழாவில் பேசினார்கள். அண்ணாதுரை பொற்கிழியைப் பாரதிதாசனிடம் அளித்தார்.

அந்த விழா கட்சி சார்பற்ற முறையில் நடந்தது. ஈ.வெ.ரா. அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்தார்.
ஈ.வெ.ரா. அறிக்கை 
திராவிடர் கழகத்தில் இருந்த இளைஞர்களில் பலர் ஈ.வெ.ரா வுக்கு எதிராக அண்ணாதுரையை ஆதரித்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வுக்கும், அண்ணாதுரைக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தது. ‘கட்சியில் ஈ.வெ.ரா., சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்’ என்று அண்ணாதுரை தரப்பினர் பிரசாரம் செய்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வின் பணிகள் முடிந்து விட்டன என்றும், இனிமேல் அவருக்கு ஓய்வு தந்து விடலாம் என்றும் 29.9.1946 ‘திராவிட நாடு’ இதழில் அண்ணாதுரை ஓரளவு மறைமுகமாகவும், ஓரளவு பகிரங்கமாகவும் எழுதினார். 

1947 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று இந்தியா சுதந்திர நாடாக மலரும் என்று அன்றைய ஆங்கிலேய அரசினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தபோது, திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. ஓர் அறிக்கையை வெளியிட்டார். 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வட ஆரியர்களின் ஆதிக்கம் உதயமாகும் நாள். அந்த நாள் திராவிடர்களுக்குத் துக்க நாள். எனவே, திராவிடர் கழகம் அந்த நாளைத் துக்க நாளாக அனுசரிக்கும்” என்று தெரிவித்த ஈ.வெ.ரா.வின் அறிக்கை ‘விடுதலை’ நாளிதழிலும், பிற இதழ்களிலும் பிரசுரமாயிற்று. 

அண்ணாதுரை கண்டனம் 
ஈ.வெ.ராவின் அறிக்கை வெளியானதும், அன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை கோபத்துடன் கொதித்தெழுந்தார். அவர் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் அறிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரையை 10.8.1947 தேதியிட்ட ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார். 

ஈ.வெ.ரா.வை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து அண்ணாதுரை எழுதிய முதலாவது அறிக்கை அது ஆகும். அதற்கு முன்பாக அவர் மறைமுகமாகச் சில கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார் என்ற போதிலும், ஈ.வெ.ரா.வுடன் நேரடியாக மோதுவதற்கு அவர் தயாராகி விட்டதை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக அந்தக் கண்டன அறிக்கை அமைந்தது. 

அண்ணாதுரையின் அந்த நீண்ட அறிக்கையின் சில முக்கியமான வாசகங்கள் கீழே தரப்படுகின்றன. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இந்திய சுதந்திர தினம். புதிய இந்திய சர்க்காரின் அமைப்பு நாள். ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பாகிஸ்தான் வெற்றி நாள். புதிய பாகிஸ்தான் சர்க்கார் அமைப்பு நாள். “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒழியும் நாள். உலகிலே பேசப்படும் நாள். வரலாற்றிலே இந்நாள் இடம் பெறுகிறது. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு நாள். புதிய சர்க்காரின் தொடக்க நாள். புதிய சர்க்கார் தத்தமது ஆட்சி வட்டாரங்களிலே நல்லாட்சி நடத்தியாக வேண்டுமென்று வலியுறுத்த, அதற்காகக் கிளர்ச்சி செய்ய, போராட, யாருக்கும் உரிமை உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அன்றைய தினம் நீங்குகிறது என்பது மக்களுக்குள்ள இந்த உரிமையை அதிகப்படுத்துகிறது. 

“நாட்டு மக்கள், அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதும், மக்களின் பிறப்புரிமையுமாகிய சுயராஜ்யத்துக்காக, தாங்கள் சரி என்று கொண்ட திட்டங்களின்படி நடந்து, அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிறைவாசத்தை, தீவாந்தர சிட்சையை, தூக்கு மேடையைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொண்ட (விடுதலைப் போராட்ட) தியாகிகளுக்கு, வீரத்தை, தியாகத்தை, கொண்ட கொள்கைகளுக்காக கஷ்ட நஷ்டம் ஏற்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்கும் திராவிடர் கழகத்தாராகிய நாம், வீர வணக்கம் செலுத்த வேண்டும். 

தியாகம் புரிந்தோமா? 
“எனவே, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியின் முக்கியத்துவத்தை உணரவும், அந்நாள் நமது கழகம் என்ன விதமான போக்கு கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு நமது வேலை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்கியஸ்தர்களோ கூடி யோசித்திருக்க வேண்டும். 

“உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான சம்பவத்தை, நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது. அம்முறையில் ஏதும் செய்யப்படவில்லை. 

“அது நமக்குத் துக்க நாள் என்று நாம் கூறுகிறோம். சரியா? முறையா? ஒன்றுபடச் செய்யும் திட்டமா? காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்ப்பதே இவர்கள் வேலை என்று நம்மைப் பற்றிக் கூறப்படும் குற்றத்தை, நாமே வலியச் சென்று ஏற்றுக் கொள்ளும் செயல் அல்லவா இது? 

“நிர்வாகத் தலைவரின் (ஈ.வெ.ரா.வின்) அறிக்கை மறுநாளே வெளிவந்தது. அதிலே ஆகஸ்ட் 15 துக்க நாள் என்று குறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி (சுதந்திர நாள்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று ‘விடுதலை’ அறிவித்தது. இந்தப் போக்கு விளக்கம் தருவதாகவோ, நமது எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் முறையாகவோ தோன்றவில்லை. 

“ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக முறைப்படி, ஜனாப் ஜின்னா காட்டியே, வெற்றி பெற்றார். 

“அதுபோலவே, காங்கிரஸும், சுயராஜ்யக் கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை, ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும், விடுதலைப் போர் நடத்தியும் காட்டி விட்டது. 

“நாம் ஆரம்ப கட்டத்தில், திட்டத்தை விளக்குவதில், அதற்கு ஆதரவு திரட்டுவதில் இருக்கிறோம். கிளர்ச்சி இல்லை, போர் இல்லை. இன்னமும், நமது உடலிலே இதற்காக தியாகத் தழும்பு ஏற்படவில்லை. குமரன் இல்லை, சிதம்பரம் பிள்ளை இல்லை! 


தீராத பழிச்சொல் 

“நம்முடைய வீர இளைஞர்கள் மீது இதுநாள் வரையில் சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது. 

“அந்த பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும்போது நாம் துக்கம் கொண்டாடுவது, இந்தப் பழிச் சொல்லை, நாமாகவே நம் மீது சுமத்தும்படி, அவர்களை வற்புறுத்தி அழைப்பதாகும். 

“காங்கிரஸார் பழி சுமத்தியதுபோல, நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் அல்ல என்பதை விளக்க நமக்கு ஒரு நாள், கடைசி நாள், ஆகஸ்ட் 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொள்ள வேண்டும்?” 

– இவ்வாறு அண்ணாதுரை அழுத்தந்திருத்தமாகக் கேள்விகளை எழுப்பினார். 

அண்ணாதுரையின் அறிக்கையை ஈ.வெ.ரா. அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட்டு, விடுதலைத் திருநாளைத் துக்க நாளாக அனுசரித்தார்; அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொண்டார்! 

திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஒரு பெரிய நிகழ்ச்சி 1949– ஆம் ஆண்டில் அரங்கேறியது. 

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7


சி.சுப்பிரமணியம் தெரிவித்த உண்மை! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், கீழ்க்கண்ட அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிடர் நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரடி பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை, முதற் கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”

(‘நமது குறிக்கோள்’, ‘விடுதலை’ வெளியீடு – 1948; பக்.38)

திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணத்தின் வருங்கால ஆட்சி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமான ஒரு கோரிக்கையை, இந்தத் தீர்மானம் தெரிவித்ததைக் காண்கிறோம்.

1940 – ஆம் வருடத்தில் திருவாரூரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த மாநாட்டிலும், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், (பிரிட்டிஷ்) இந்திய மந்திரியின் நேர்ப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அதில் கோரப்பட்டது. 
ஆனால் சேலம் மாநாட்டில், “பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று கோரப்பட்டது. நேரடிப் பார்வையில் இருப்பது கூட போதாது என்று கருதி, பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பொருள், இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு வெளியேறிய பிறகும், சென்னை மாகாணத்தில் மட்டும் அது என்றென்றும் நீடித்திருக்கலாம் என்பதே ஆகும்.

இந்த தீர்மானம் ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினரின் அடிமைப் புத்தியைத் தெளிவாக அம்பலப்படுத்தியது.

திராவிடம் என்ற சொல்லின் பொருள் தெளிவாக இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருபுறம் ஐஸ்டிஸ் கட்சியினரை மிரட்டுவதற்கும், மற்றொருபுறம் தமிழகத்தைச் சேர்ந்த எளிய அப்பாவி மக்களைத் தனித் திராவிட நாடு என்ற கவர்ச்சிகரமான கோஷத்தின் மூலம் ஏமாற்றவும், இந்தத் தீர்மானத்தை ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினர் பயன்படுத்தினார்கள்.

யுத்த ஆதரவுப் பிரசாரம்

ரண்டாம் உலக யுத்தத்தின் போது திராவிடர் கழகத்தினர் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்தார்கள். ஈ.வெ.ரா.வின் தமிழ் தினசரிப் பத்திரிகையான ‘விடுதலை’, யுத்தப் பிரசாரத்திற்காகச் சென்னை மாகாண அரசுக்குக் குத்தகைக்குத் தரப்பட்டது.

“எங்களைப் பிரசாரத்திற்கு உயோகப்படுத்திக் கொள்ளுங்கள்; சுதந்திரத்திற்காகப் போராடும், சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசத் தலைவர்களை, நாக்கிலே நரம்பின்றி ஏச வேண்டுமா? நாங்கள் தயார். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள பிரிட்டனை உலகத்தின் ஜனநாயகக் காவலன் என்று புகழாரம் சூட்ட வேண்டுமா? அதற்கும் நாங்கள் தயார். எங்களுக்கு உரிய கூலியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் – என்ற கருத்துப்படும் வகையில் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் பிரிட்டனுக்கு ஆதரவாக யுத்தப் பிரசாரம் செய்தார்கள், திராவிடர் கழகத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும்.

சி.சுப்பிரமணியம் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பிறகு மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் அவர் சிறிது காலம் பொறுப்பு வகித்தார். 


சி.சுப்பிரமணியம்

‘என் வாழ்க்கை நினைவுகள்’ என்ற தலைப்பில் சுப்பிரமணியம் தமது சுய சரித்திரத்தை எழுதியிருக்கிறார். ‘திருப்புமுனை’ என்ற தலைப்புக் கொண்ட அந்த நூலின் முதல் தொகுதியில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது அண்ணாதுரை, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் பிரசாரகராக இருந்தார் என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது.

“பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிக்குத் திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளித்தது” என்றும், “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கும் யுத்த முயற்சிகளுக்கும் இந்திய மக்களின் ஒத்துழைப்பைத் திரட்டுவதற்காக அண்ணாதுரை ஒரு பிரசாரகராக நியமிக்கப்பட்டார்” என்றும் சி.சுப்பிரமணியம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுவில் கையெழுத்து

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விடும் என்றிருந்த தருவாயிலும், ஆங்கிலேய அரசினர் இந்தியாவிலிருந்து வெளியேறக் கூடாது என்ற நிலையைத் திராவிடர் கழகம் எடுத்ததையும் சி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இரண்டாது உலக யுத்தத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பற்றிப் பேச்சுக்கள் ஆரம்பித்தபோது, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறினால் ‘வடஇந்திய ஆரியர்கள்’ திராவிடர் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், எனவே பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறுவது விரும்பத்தக்கது இல்லை என்றும், ஒரு நிலையைத் திராவிடர் கழகம் எடுத்தது.

“கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவைப் பிரிட்டிஷ் அரசுக்குத் திராவிடர் கழகம் அனுப்பியது. ‘இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பிரிட்டிஷ் அரசு சிந்திக்கக் கூடாது. எனினும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்யுமானால், சென்னை மாகாணம் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விட்டு விடக்கூடாது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வரவேண்டும்’ என்று அந்த மனு வற்புறுத்தியது” என்றும் சி.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்த மனு விவகாரம் குறித்த ஒரு விவாதத்தின்போது, அண்ணாதுரையை அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேரடியாகவே கேட்டார்.
(அப்போது காமராஜ் முதலமைச்சர்; சுப்பிரமணியம் அமைச்சர்; அண்ணாதுரை சட்டப் பேரவையில் தி.மு.க. கட்சியின் தலைவர்.)

“தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து, காங்கிரஸ் பிரதிநிதி என்ற வகையில் நான் சந்தேகம் கொள்ளக் கூடாது என்று, ஒரு விவாத்தின்போது அண்ணாதுரை கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கோரி, பிரிட்டிஷ் அமைச்சரிடம் தரப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்போது நான் அண்ணாதுரையைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன்.

“இந்தப் பின்னணியில் தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து நாங்கள் சந்தேகப்படுவது நியாயமே. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் உங்களது தேச பக்தியை நீங்கள் (தி.மு.க.வினர்) நிலை நாட்டவில்லையென்றால், உங்களது கடந்த கால வரலாறு என்றும் நினைவில் இருக்கும் என்றும் நான் கூறினேன்” என்று சி.சுப்பிரமணியம் விளக்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

சட்டப் பேரவையில் நேருக்கு நேராக அண்ணாதுரையைப் பார்த்து, சி.சுப்பிரமணியம் கூறியவை இந்த வாசகங்கள்.

சென்னை மாகாணத்திற்கு மட்டும் சுதந்திரம் அளிக்காமல், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அதை என்றென்றும் அடிமைப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிய மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் அண்ணாதுரை என்ற உண்மையை, சட்டப் பேரவையில் அண்ணாதுரை எதிரில் வீற்றிருக்கச் சுப்பிரமணியம் தெளிவான சொற்களில் வெளியிட்டார்.

அண்ணாதுரை அதை மறுக்க இயலவில்லை. அதுதான் திராவிடக் கட்சிகளின் ‘வரலாறு.’

அநாகரிக ஏசல்கள் 
சேலம் மாநாடு முடிந்து, அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து, ஈ.வெ.ரா. தலைமையில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரு திராவிடக் கட்சி செயல்பட ஆரம்பித்ததும், ஜஸ்டிஸ் கட்சியினரும், திராவிடர் கழகத்தவரும் பரஸ்பரம் மிகவும் அநாகரிகமாக ஏசிக் கொண்டார்கள்.

“நேற்று வரையில் எங்களிடம் அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், இன்று திடீரென்று விசுவாசம் மாறி விட்டார்கள்” என்று ஜஸ்டிஸ் கட்சியினர் பிரசாரம் செய்தார்கள்.

“ஜஸ்டிஸ் கட்சி ஆடம்பர ஆசாமிகளின் கூடாரம்; அதில் தொண்டர்களே கிடையாது” என்று அண்ணாதுரை தரப்பினர் பதில் பிரசாரம் செய்தார்கள்.

1947 ஆகஸ்ட் 15– ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. உடனே ஈ.வெ.ரா. பலரையும் திடுக்கிட வைத்த ஓர் அறிக்கையை வெளியிட்டார்; அண்ணாதுரை கொதித்து எழுந்தார். ஈ.வெ.ரா.வின் அறிக்கையைக் கடுமையாகக் கண்டித்து, அவர் திராவிட நாடு இதழில் நீண்ட ஒரு கட்டுரையை எழுதினார். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்கள்: 

1. என் வாழ்க்கை நினைவுகள் - முதல் தொகுதி: திருப்புமுனை.
எழுதியவர் சி.சுப்பிரமணியம்.
வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை -98.
முதற்பதிப்பு ஜனவரி (1994)

2. விடுதலைப் போரில் தமிழகம் - இரண்டாவது தொகுதி.
ஆசிரியர். ம.பொ.சிவஞானம் - (1983). 

திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6


ஐஸ்டிஸ் கட்சி – ஈ.வெ.ரா. மோதல்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஸ்டிஸ் கட்சியினருடன் கடுமையாக மோதுவதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை தரப்பினர் முற்றிலும் தயாராகி விட்டனர் என்பதைச் சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக, அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானம் தெளிவாக்கியது.


“நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பெயரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டு விட்டோம்” என்ற பீடிகையுடன், அண்ணாதுரையின் தீர்மானம் தொடங்கியது.

அந்தத் தீர்மானத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

“இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

“இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூடச் சேர்த்துப் பேசுவதற்கு இல்லாததாக அலட்சியப் படுத்தப்பட்டது. 
“மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல் மந்திரியினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பல தடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட, கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டு இருக்கிறது.

“ஆகவே இப்படிப்பட்ட நிலைமை மாறி, நம் கட்சி நிலை மதிக்கப்படவும், குறிப்பிடவும், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு, நாணயமாகவும், தீவிரமாகவும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும், நல்ல வசதியும் சௌகரியமும் ஏற்படுவதற்கும் நம் கட்சிக்கு அடியில் கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமுமான காரியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

பதவிகளைக் கைவிடுக! 

“அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

“ஆ. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காரிலோ, மாகாண சர்க்காரிலோ, எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனடியாக ராஜினாமா செய்துவிட வேண்டியது.

“இ. தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில், சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் யாவரும், தங்கள் பதவிகளை உடனே ராஜினாமா செய்து விட வேண்டியது.

ஈ. சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் வேட்பாளர்களாக நிற்கக் கூடாது.“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும், தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டம் இல்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவர். 

“கட்சியின் வேலைத் திட்டத்திலும், போக்கிலும் புது முறுக்குத் தரும் நோக்கத்துடன் நான் மேற்கண்ட தீர்மானத்தைச் சேலம் மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.” 

பிறர் சிரிக்கும் நிலை 

மது தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும், அண்ணாதுரை எழுதித் தீர்மானத்துடன் அனுப்பியிருந்தார். 

“சர்க்காருக்கு ஒத்து ஊதும் கூட்டம் என்று சதா காலமும் விஷயம் அறியா மக்கள் ஒருபுறம் தூற்றுவதையும்; அடித்தாலும் அழத் தெரியாதவர்கள், மிக நல்லவர்கள் என்று ஆங்கில சர்க்கார் மற்றொரு புறம் தலையில் குட்டவும்; பட்டம் கிட்டுமா, பதவி கிட்டுமா என்று ஆரூடம் பார்ப்பதும்; துரைமார்களிடம் தூது போவதும் தவிர, ‘இதுகளுக்கு’ வேறு என்ன தெரியும் என்று காங்கிரஸார் பேசியும் வருவதைக் கேட்டுக் கேட்டு, உண்மையிலேயே கட்சியின் குறிக்கோளின்படி நடக்கக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உறுதி படைத்த வீரர்கள் ஒரு புறமும்; போர் கூடாது, கிளர்ச்சி ஆகாது, தீவிரம் கூடாது என்று கருதும் சீமான்கள் மற்றொரு புறமும் இருந்து கொண்டு, கட்சியை இப்பக்கம் இவரும், அப்பக்கம் அவரும் இழுக்க, இந்த வேடிக்கையைக் கண்டு பிறர் சிரிக்க இருக்கும் நிலைமையைக் கண்டு, நெஞ்சுவலி கொண்டு ஓர் இளைஞன் வெளியிடும் இருதய மொழியே என் தீர்மானம்” என்று அண்ணாதுரை தமது விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். “சர்க்காரின் அசட்டை (அலட்சியம்) சகிக்க முடியாததாகி விட்டதோடு, திராவிட இனத்தின் பண்பு எது என்பதை நாமே மறந்து விடும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு போய் விடுமோ என்று அஞ்ச வேண்டியபடி இருக்கிறது. இந்த நிலைமை மாறித்தான் தீர வேண்டும். இருபுறம் இழுக்கப்படும் தொல்லையிலே கட்சி சிக்கிச் சிதைவது நிற்க வேண்டும். பட்டமும் பதவியும் பெரிதா, உரிமைத் திடமும் விடுதலையும் பெரிதா என்பதற்கு ஒரு பதில் கிடைத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அண்ணாதுரை எழுதியிருந்தார். 

“இந்தத் தீர்மானத்துடன், இதையொட்டியும் வேறு பல தீர்மானங்களையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளுக்குப் பெரியாரின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே ஆங்காங்கு உள்ள திராவிடத் தோழர்கள் இந்த என் தீர்மானத்தைப் பற்றி கலந்து பேசி, இது மாநாட்டிலே நிறைவேற, நமது கட்சியின் போக்கு மாறி நாம் உய்ய வழி கிடைக்கும் வழி காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாதுரை நிறைவாகக் கூறி இருந்தார். 

கட்சியின் பெயர் மாற்றம் 
1944 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27– ஆம் தேதியன்று சேலம் நகரில், ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஈ.வெ.ரா. தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணாதுரையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. 


“இம்மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்படும் இக்கட்சிக்குள்ள தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ (திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது” என்று அறிவித்த மிக முக்கியமான ஒரு தீர்மானமும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பும் இருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் சிலர் வெளிநடப்புச் செய்தார்கள். மாநாடு முடிந்த பிறகு, அதில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகா என்றும், ஏனென்றால் அதில் கட்சியினர் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 

சேலம் மாநாட்டில் ஓர் அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கட்சிகளின் அடிமைப்புத்தி மிக மிக ஆழமானது என்பதைக் காட்டிய, அந்தத் தீர்மானம் பற்றிய விவரம் அடுத்த இதழில். 

(தொடரும்) 

ஆதார நூல்கள்: 
தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை
எழுதியவர் - கலைச்செல்வன். 
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953).