பக்கங்கள்

திருக்குறள்

சனி, மார்ச் 31, 2012


தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

(பண்டைய வரலாறு அல்ல 40 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு) (மீள் பதிவு ) கட்டுரை பெரிதாக இருப்பதால் பொறுமையாக படியுங்கள் தமிழர்களே !! முக்கியம் .

நாளை நிலத்தின் அடிப்படையில் தமிழர் நாட்டை பிரித்தால் தமிழர்களுக்கு கையளவு மண் கூட மிஞ்சாது .தமிழர் நிலம் திராவிடர்களால் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .

தமிழின வரலாற்றில் மிக கொடுமையான காலம் என்று கணித்தால், அது ஆங்கிலேயனிடம் நாம் விடுதலை பெற்ற நாளாகத் தான் இருக்கும். ஒவ்வொரு இனத்தவரும் பெற்ற விடுதலையை தங்கள் மண், இனம், மொழி காக்க பயன் படுத்தி கொண்டனர்.

தமிழர் நாட்டின் பிரிவினையின் போது மட்டும் தமிழர்களின் தலைவர்களாக தங்களை காட்டி கொண்ட திராவிடர்கள்,சதி செய்து அவரவர்கள் மாநிலத்திற்கு தேவையான தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து கொண்டனர். அதற்கு முதன்மையான காரணம் அவர்கள் தமிழர்களிடையே விதைத்த திராவிட உணர்வு,

தமிழர்கள் மட்டுமே, தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்த பூர்வீக நிலப் பகுதியை, திராவிடர்களுக்காக விட்டு கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலப்பகுதி 70,0000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்போதுள்ள தமிழர் நாட்டின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவு நிலத்தை நாம் விட்டு கொடுத்திருக்கிறோம் . காரணம் நம்மிடையே ஊறி திளைத்த திராவிட உணர்வு,திராவிடத் தலைவர்கள்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் மகராஷ்டிரா முதலிலும், அடுத்து குஜராத், வலுவாக (தெலுங்கானா) ஆந்திரா, கர்நாடகா, கேரளா என நமது அண்டை மாநிலங்கள அனைத்தும், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று போராடின .

ஆனால் தமிழர் நாட்டில் மட்டும் அது போன்ற போராட்டங்கள் நடை பெற வில்லை . காரணம் தமிழர்களின் தலைவர்களாக திராவிடர்கள் இருந்தனர் .இவர்கள் தமிழன் என்ற உணர்வை மழுக்கடித்து, திராவிடர் என்ற உணர்வை ஊட்டியிருந்ததாலும், திராவிட நாடு கோரிக்கை யாலும் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை .

தமிழர்கள் என்ற போர்வையில் திராவிட மக்கள் வளமையான ஆதிக்க சக்தியாக இருந்ததாலும், தங்கள் வளமையான வாழ்வை காப்பாற்றி கொள்ள , நாம் திராவிடர்கள், இந்தியர்கள் என்று கூறி தமிழர்களை போராட விடாமல் தடுத்தனர்.

தென் இந்தியாவில் காலம் காலமாக தமிழர் நிலப்பகுதியில் வாழ்ந்து வந்த மலையாளிகள்,கன்னடர்கள், தெலுங்கர்கள், அந்த நிலப்பகுதியை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடினர்.ஆனால் தமிழர்கள் எந்த வித போராட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்தனர் .இந்தியாவே போராடியது ஆனால் தமிழகம் அமைதியாக இருந்தது .

கேரளா

மொழி வாரி மாநில பிரிவினையில் தமிழர் பூர்வீக நிலப்பகுதியை அபகரித்து முதலில் வெற்றி பெற்றது மலையாளிகள். அகத்தீஸ்வரம், தோவானை ,நொய்யாற்று பகுதி,நெடுமங்காடு , இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி ,வண்டிப் பெரியாறு ,தேவிகுளம், பீர்மேடு குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற பகுதிகள் எல்லாம், இனம், மொழி, வரலாற்று இலக்கிய ரீதியாக தமிழர் நாட்டோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை மலையாளிகளின் திட்ட மிட்ட சூழ்ச்சியால் கேரளாவுடன் இணைந்தது. இது போதாதென்று, கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதி, நீலகிரி ,கூடலூர், ஊட்டி பகுதிகளையும் மலையாளிகள் கேட்டனர். அப்போது மொழி வாரி மாநிலத்தை பிரிக்க நடுவண் அரசால் அமைக்கப்பட்ட பசல் அலி குழுவின் தலைவர் மலையாளியான பணிக்கர் என்பவர் மலையாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் .

அதை வெளிப்படையாக தெரிய்ம்படியும் மா. போ. சி இடம் நடந்து கொண்டார். அவரிடம் கடுமையாக வாதிட்ட மா போ சி , மற்றும் அவருக்கு துணையாக ஜீவா,நேசமணி போன்ற ஒரு சில தமிழ் தலைவர்களின் போராட்டத்தால் மட்டுமே மேற்கண்ட பகுதிகள் தப்பின.

காமராசரிடம் தேவிகுளம் பீர்மேடு பற்றி கேட்ட போது ,குளமாவது மேடாவது என்று கூறினார். அதற்கு காரணம் தமிழர் என்பதைவிட அவருக்கு இருந்த இந்திய உணர்வும், இங்கிருந்த திராவிடத் தலைவர்களும் மட்டுமே காரணம். திருவனந்த புரத்தில் தமிழர் பகுதிகளை கேரளாவிற்கு அளிக்கும் உடன்படிக்கையின் கூட்டம் நடை பெற்றது. அதில் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த மலையாளியான வர்கீஸ் அவர்கள் எந்த வித வினாவும் எழுப்பாமல் தமிழர்களுக்கு எதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் .

தமிழ்க அரசின் செயலாளராக இருந்து நீங்கள் கையொப்பமிட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, விட்டு கொடுக்க வில்லை என்றால் மலையாள மக்கள் வருத்தப் படுவார்கள் என்று கூறினார் . ஆனால் அவர் கையோப்பமிட்டதற்கு காரணம், தான் ஒரு மலையாளி என்ற இனப்பற்றுதான் என்பது வெட்ட வெளிச்சமாக அன்றே தெரிந்தது .

அன்று 1500 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப் பகுதியை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் முல்லை பெரியாறு,பவானி ,சிறுவாணி ,கண்ணகி கோயில் உட்பட அணைத்து நீராதாரங்கள் நிலப்பரப்பும் தமிழர் நாட்டிற்கு உரியதாக இருக்கும்.

வஞ்சகம் .

மொழி வாரி மாநிலமாக கேரளா பிரிக்கப்படும் போது ,சிக்கலுக்கு உரிய நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியமல்ல. நிலம் யாருக்கு அதிகம் உரிமையாக (சொந்தமாக) உள்ளது என்பதை பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்ற முடிவை நடுவண் அரசு எடுத்தது . அன்று நடுவண் அரசில் ஆளுமை சக்தியாக இருந்தது இன்று போல அன்றும் மலையாளிகளே. அதன்படியே கேரள எல்லையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன .

ஆந்திரா

ஆந்திரா பிரிக்கப்படும் போது வடக்கே பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர்,சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையி ல் இருந்தனர் .ஆனால் நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். ஆனால் நடுவண் அரசு அப்போது அமைத்த படாஸ்கர் குழு, நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல வாழும் மக்களின் மொழி தான் முக்கிய கூறு என்று கூறி , தமிழர் பகுதிகள் அனைத்தையும் ஆந்திராவுடன் இணைக்க உத்திரவிட்டனர். அன்று ஆளுமையிலும் அதிகாரத்திலும் நடுவண் அரசில் வீற்றிருந்த திராவிட தலைவர்கள் இதற்கு உடந்தையாக இருந்து செயல் பட்டனர்.அப்பொழுது கூட நீதிக் கட்சியில் இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. இங்குள்ள தமிழர்களின் தலைவர்களாக இருந்த திராவிட தலைவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.

ஆந்திரா வின் ராயல் சீமா மாவட்டமே தமிழர்களின் நிலப்பகுதிதான். மொழிவாரி மாநிலம் பிரிவினையின் போது அது ஆந்திராவிற்கு போனது. சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்திற்குள் உள்ளடங்கிய ,திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வட பெண்ணை ஆறு, பொன்வானி ஆறு, இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆதிராவோடு போயின. நந்தி மலை இருந்திருதால் பாலாற்று சிக்கல் தமிழர் நாட்டிற்கு வந்திருக்காது .

வடபகுதியில் மங்கலக்கிழார் , மா போ சிவஞானம் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாக போராடினர் .ராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார் .அதனால் திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு போன்ற சில பகுதிகள் மட்டுமே தமிழர்கள் போராட்டத்தால் திரும்ப கிடைத்தன.நீதிக் கட்சியில் தமிழர்களின் தலைவர்களாக இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை .

1--4-1960 வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி 32,000 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது .சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 525 கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது . இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள் அன்று தமிழர்களுக்காக போராடவில்லை.தெலுங்கு தலைவர்கள் தமிழர் என்ற போர்வையில் கூட இருந்தே குழி பறித்தனர் .

கர்நாடகா

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால் குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந் தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. விடுதலை அடையும் முன்பு வரை கூர்க் மக்களும், கன்னடர்களும் பரம எதிரிகளா கவே இருந்தனர் . மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும் போது பண்பாடு, கலாசாரம் அடிப்படையில் கலந்து இருக்கும், தமிழர் நாட்டோடு இணைய விரும்புகிறோம் என்று கூறி ஆய்தம் ஏந்தி கூட போராடினர்.

அப்பொழுது இங்குள்ள தமிழக அரசியல வாதிகள் சிறிது தலை அசைதிருந்தாலும் குடகு நம்மோடு இணைத்திருக்கும். அப்படி இணைத்திருந்தால் காவேரி தமிழர் நாட்டிலேயே உருவாகி, தமிழர் நாட்டிலேயே கடலில் கலந்திருக்கும் நமக்கு காவேரி சிக்கலே வந்திருக்காது .

கன்னடர்கள் திட்டமிட்டு போராடியதால் பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்க வயல் பகுதிகள் பறி போயின.
ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டுமானால் மொழி தொடர்பும் நிலத் தொடர்பும் இருக்கவேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 விழுக்காடும் ,கன்னடம் பேசுவோர் 35 விழுக்காடும் இருந்தனர்.ஓசூர் வறண்ட பூமி என்பதால் ஆந்திரா தங்களுக்கு வேண்டாம் என்று கூறியது ,அதனால் ஓசூர் கர்நாடகா வோடு இணைந்திருக்க வேண்டும் .ஆனால் கர்நாடகா திட்டமிட்டு அதை தனக்கு வேண்டாம் என்று கூறி தமிழர் நாட்டோடு இணைத்து விட்டது.

பெங்களூரு யாருடன் இணைவது என்ற சிக்கல் வரும் போது, அங்கு தமிழர்களே அதிக அளவில் இருந்தனர் . ஓசூரில் கன்னடர்கள் அதிகம் இருந்தாலும் அதை நாங்களே தமிழர் நாட்டோடு இணைத்து விட்டோம். அதனால் பெங்களூருவில் தமிழ் பேசக்கொடிய மக்கள் அதிகம் இருந்தாலும், பெங்களூருவை கர்நாடகத்தோடு இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தது .

அன்று இங்கிருந்த அரசியல் தலைவர்கள் திராவிடராக இருந்ததாலும், திராவிட ஆதரவு மக்களிடையே வேரூன்றி இருந்ததாலும், தமிழர் தலைவர்களிடையே மண் சார்ந்த உணர்வு இல்லாத வாய் சவடால் அரசியல் வாதிகளாக இருந்ததாலும் , அவர்களுக்கு இருந்த இந்திய உணர்வும் ,திராவிட உணர்வும் எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காததற்கு முக்கிய காரணமாக இருந்தன .

இன்றைய தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள்.தமிழகம் அண்டை மாநிலங்களுடன் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70 ,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.அவையும் நம்மோடு இருந்திருந்தால், தமிழகம் கர்நாடகாவை விட இன்னும் பெரிய மாநிலமாகவும்,ஆந்திராவை விட சற்று சிறிய மாநிலமாகவும் இருந்திருக்கும் .ஆனால் நீர் ஆதாரத்தில் தென் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக இருந்திருக்கும் . தமிழகம் இழந்த நிலப்பரப்பு இப்போதுள்ள நிலப்பரப்பில் முக்கால் பங்கு ஆகும் .

திராவிடம் திராவிடம் என்று கூறும் தமிழர்களே திராவிட மக்களே !!!

தமிழகத்தில் வாழும் திராவிட மக்களே, அன்று தமிழர் நாட்டில் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்வு சிறிதளவு இருந்திருந்தால் கூட எங்களது நிலம், எங்களது மண் சார்ந்த பூர்வீக நிலம் எங்களோடு இணைந்திருக்க நீங்கள் போராடி இருக்க வேண்டும்.

எங்களிடம் திராவிடம் என்று கூறி, திராவிட மாயையில், திராவிட போதையில் தமிழர்களை சிக்க வைத்து, எங்கள் மண்ணை அபகரித்தது போதாது என்று, இன்று ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, தமிழர் நாட்டு தமிழர்களை பிசைகாரர்களாக்கி, அடிமையாகியக்கியது மட்டுமல்லாமல் எங்கள் தமிழீழ நாட்டையும், மக்களையும் அழித்து சுடுகாடாக்கி விட்டீர்கள் .

நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறி, நாள்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கும் திராவிடர்களால், எஞ்சி இருக்கும் தமிழர் நாட்டு நிலமும் ஆக்கிரமிக்கப்படுகிறது . இது போதாதென்று இந்தியர்கள் என்று கூறி கொண்டு வட இந்தியர்களால் தமிழர் நிலம் பறி போகிறது .

தமிழர்களே இனியும் நீ விழித்து கொள்ளது போனால், உன் உரிமைக்காக போராடாது போனால், நாளை இந்தியாவில் உள்ள அணைத்து இனத்தவர்க்கும் தனியே அவர்கள் இனத்திற்கென்று நாடு இருக்கும். ஆனால் தமிழனுக்கு மட்டும் நாடு இருக்காது .

இப்போதுள்ள தமிழர் நாடு ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, இங்கு வாழும் மலையாளி, கன்னடன், தெலுங்கன் ,வட இந்தியன் என்று ஐந்து துண்டுகளாக துண்டாட பட்டு . அதில் ஒரு துண்டே தமிழ் நாடாக இருக்கும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தேசிய இனமான உனக்கு உள்ளங்கை அளவு கூட நாடு இல்லாமல் ஏதிலியாக இப் பூமி பந்தில் இருப்பாய் என்பதை மறவாதே .

இன் நிலை வராமல் இருக்க "தமிழர் நாடு தமிழருக்கே " தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்ற முழக்கம் தமிழர்கள் இடத்தில எழுப்புவதோடு மட்டுமல்லாமல் , திராவிட கட்சிகளிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர் நாட்டை தமிழரே ஆள் வேண்டும் . —

கைப்பேசியிலிருந்து தங்கம் ,வெள்ளி !!

தூக்கி எறியும் மொபைல் போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம்!

வேண்டாத மொபைல்கள் என்று முடிவுகட்டி தூக்கிப்போடும் 10 கோடி மொபைல்களில் இருந்து 1,500 கிலோ தங்கம், 10 லட்சம் கிலோ கிராம் காப்பர், 30,000 கிலோ வெள்ளியை அள்ளி குவிக்கலாம் என்கிறது ஒரு புதிய ரிப்போர்ட்.

பொதுவாக பழைய மொபைல்களை கடைகளில் கொடுத்தால், இன்றைய நிலையில் அதன் மதிப்பு அதிகபட்சம் ரூ.500 அல்லது ரூ.1,000. உலக அளவில் 1 ஆண்டுக்கு 40 கோடி மொபைல்கள் குப்பைக்கு வருகின்றன. இதில் 10 கோடி மொபைல்களில் இருந்து மேல் கூறப்பட்டுள்ள அளவு தங்கம், வெள்ளி, காப்பர் போன்றவற்றை குவிக்கலாம் என்கிறது சீனா.
சீனாவில் தொழில் நுட்ப தயாரிப்புகளும் அதிகம், அதே சமயம் தொழில் சாதனங்களை பயன்படுத்துவோரது எண்ணிக்கையும் அதிகம்.

இப்படி இருக்கையில் தேவையில்லை என்று கருதப்படும் 10 கோடி பழைய மொபைல்களை பொக்கிஷமாக மாற்றவும் வழிவகை உண்டு போலிருக்கிறது. புதிய தொழில் நுட்பகளை கொடுக்கும் சீனா, மீண்டும்
அதே தொழில் நுட்பத்தை தங்க குவியலாகவும் மாற்றுகிறது.

அழகு கூந்தல் வேணுமா?

 

சினிமா நடிகைகள், விளம்பர மாடலிங் போன்றவர்களுக்கு மட்டும் கூந்தல் எப்படி பளபளப்பாக மின்னுகிறது என்பது புரியாத புதிர். சிலர் பணத்தை விரையம் செய்தும், மணிக்கணக்கில் செலவழித்தும், கூந்தலுக்கு உயிரோட்டமே இல்லை என்று குறைகூறுகின்றனர். இதற்கு காரணம் கூந்தலின் ஆரோக்கியம்தான். உங்களுக்கும் பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிக்கில்லாத கூந்தல்

கூந்தலை எப்படித்தான் பராமரித்தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன்பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவதற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங்கச் செய்யும்.

பளபளப்பான கூந்தல்

நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங்கள் முடியில் பூசி வைத்து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.

ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, 10நிமிடங்கள் கூந்தலில் தடவி ஊறவைக்கவும். பிறகு தலைமுடியைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.

தலைக்கு ஷாம்பு போடும்போது லைட்டாக உபயோகிக்கவும். நன்றாக நுரைபோக தண்ணீர்விட்டு அலசவேண்டும். இதில் முக்கியமானது ஷாம்பு போட்டு தலையை அலசும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மென்மையாக கையாளுங்கள்

தலைக்கு குளித்த பின்னர் ஈரமான கூந்தலை அடித்து உலர்த்தக்கூடாது. டவலால் கூந்தலை இறுக்கக்கட்டி தண்ணீரை உறிஞ்ச விடுங்கள். 5 நிமிடம் கழித்து மென்மையாக உலர்த்தவும். முக்கியமான அம்சம் முடி காயும் முன்பே விரல்களால் சிக்குகளை நீக்கவும்.

ஹேர் டிரையர் வேண்டாம்

கூந்தலை காயவைக்க அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிக்க வேண்டாம். ஒருவேளை உபயோகிக்க நேரும்பட்சத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும். ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக் கூடும்.

தலைக்கு மசாஜ் செய்யுங்கள்

உங்கள் தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால், முடியைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால்

தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாகவும்,ஆரோக்கியமாகவும் வளரும்.

உலகின் வித்தியாசமான கட்டிடங்கள்

 

மனிதர்கள் வாழ்வதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.

கட்டிடங்களை வடிவமைப்பவரைக் கட்டிடக் கலைஞர் என அழைப்பர். கட்டிடக்கலை ஒரு மிகப்பழைய துறை ஆகும்.

உண்மையில் மனிதன் தனக்கென்று குடிசைகளை அமைக்கத் தொடங்கிய காலத்திலே கட்டிடக்கலை உருவாகிவிட்டது எனலாம்.

கட்டிடங்கள் ஒரு நாட்டின் வரலாற்றை பறைசாற்றும் விதமாகவும், அந்நாட்டின் புகழ்பாடும் விதமாகவும் அமையும்.

இந்த கட்டிடக்கலைகள் தற்போதுள்ள நவீன உலகத்தில் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை படத்தில் காணலாம்.

அணுசக்தி தேவையா இல்லையா?


அணுசக்தி தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதென்பது ஈயைக் கொல்வதற்காக பீரங்கியைப் பயன்படுத்துவது போன்றது. பொதுவாக நீர்மின் நிலையங்களில் நீரின் வேகத்தைப் பயன்படுத்தி டர்பன் சுற்ற வைக்கப்படுகிறது. டர்பைன் சுற்றும்பொழுது
அதோடு பொறுத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அனல் மின்நிலையங்களில் நிலக்கரியைப் பயன்படுத்தி வெப்பம் உண்டாக்கப்படுகிறது. அந்த வெப்பம் நீரைச் சூடேற்றி நீராவியாக்குகிறது. பின்பு நீராவி டர்பனைச் சுற்றவைத்து அதோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களில் கிடைக்கும் யுரேனியத்தை அணுப்பிளவுக்கு உட்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை நீராவியாக்கி டர்பனைச் சுற்றவைத்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அடிப்படையில் பார்த்தோமெனில் நீரைச் சூடேற்றி நீராவியாக்கி, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் தொழில்நுட்பம்தான் அணுசக்தி, ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் நீரைச் சூடேற்றி மின்சாரம் தயாரிக்க அணுசக்தி தேவையில்லாத ஒன்று.
அணுசக்தி, மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் பயன் படுத்தப்படுகிறதா?
எந்த நாடாவது அணுசக்தியை மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னால் அது பொய். ஏனெனில் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு உலைகளில் கிடைக்கும் புளுடோனியத்தையும் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிப்பதுதான் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை.
அணுமின் நிலையங்களும், அணுசக்தியும் எவ்வாறு வளர்ச்சியடைந்தது?
அணுமின் நிலையங்கள் மற்றும் அணுசக்தியின் வரலாறு 1930களில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்போதுதான் முதன் முதலில் நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மெதுவாக வளர்ச்சியடைந்து 1942ல் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் சிக்காக்கோ பைல் 1 என்ற முதல் செயற்கை அணு உலை என்ரிக்கோ பெர்மி என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு அதே ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. 1954ல் முதன்முதலில் மக்களின் பயன்பாட்டிற்காக ரஷ்யாவில் ஆப்மிளிக் பவர் பிளான்ட் என்ற அணு உலை நிறுவப்பட்டது. 1956ல் வியாபார நோக்கத்திற்காக இங்கிலாந்தில் உள்ள கெய்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது. அனைத்து அணு உலைகளும் வெவ்வேறு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதால், இதுதான் முதல் அணு உலை என்று வரையறுத்துக் கூற முடியாது. அணு உலைகள் மற்றும் அணுசக்தி பிரபலமடைந்தது 1950களுக்குப் பிறகுதான்.
அணுசக்தியின் பயன்பாடுகள் என்ன?
மின்சாரம் தயாரிக்கவும், கப்பல் மற்றும், நீர்மூழ்கி கப்பல்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு நாட்டின் வலிமையைக் காட்டுவதற்காகவே அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் எத்தனை அணு உலைகள் இருக்கின்றன?
உலகம் முழுவதும் மொத்தம் 400க்கும் அதிகமான அணு உலைகள் இருக்கின்றன. அதில் அமெரிக்காவில் மட்டும் 108 அணு உலைகள் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 50 முதல் 60 அணு உலைகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றன.
எத்தனை வகையான அணு உலைகள் இருக்கின்றன?
அணு உலைகளை பலவிதங்களில் வகைப்படுத்தினாலும், தொழில்நுட்பம் சார்ந்து பிரிக்கப் படுகின்றன. வகைகள்தான் முக்கியமாகப் பிரிக்கப் படுகிறது. தொழில்நுட்பம் ரீதியாக அணு உலைகளை, பிரஷ்ரரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர், பாயில்டு வாட்டர் ரியாக்டர், வாட்டர் வேப்பர் எனர்ஜடிக் ரியாக்டர் அல்லது பிரஷ்சரைஸ்டு வாட்டர் ரியாக்டர் புரோட்டோ டைப் பாஸ்ட் பிரீடர் ரியாக்டர் என நான்கு வகைகள் இருக்கின்றன.
இந்தியாவில் எந்த வகையான அணு உலைகள் இருக்கின்றன?
இந்தியாவில் மொத்தம் 20 அணு உலைகள் இருக்கின்றன. அவற்றுள், கர்நாடகாவில் உள்ள கெய்காவில் 4 உலைகள், குஜராத்தில் உள்ள கக்ராபார் என்ற இடத்தில் 2 உலைகள், தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கத்தில் 2 உலைகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள நரேராவில் 2 உலைகள், ராஜஸ்தானில் உள்ள ரவாத்பாதாவில் 6 உலைகள் என மொத்தம் 16 உலைகள் பிரஸ்சரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை. மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள 4 உலைகள் பாயில்டு வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை. மேலும் ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாரா மற்றும் ரவத்பாத்தாவில், 2 உலைகள், குஜராத்தில் உள்ள கக்ராபாரில் 2 உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. இவை பிரஷ்சரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை ஆகும். இதுவும் போக கூடங்குளத்தில் 2 உலைகள் தயாராக உள்ளன. மேலும் 4 உலைகள் கூடங்குளத்தில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் மீது அமெரிக்கா ஏன் அணுகுண்டை வீசியது?
போர் நடக்கும்போது எதிரி நாட்டின் மீது குண்டு வீசித் தாக்குவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஜப்பான் கதையோ வேறு. ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசும்பொழுது கிட்டத்தட்ட ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜப்பான் மீது அணுகுண்டை வீசியது சரணடைய வைப்பதற்காக அல்ல. மாறாக அணுகுண்டினுடைய சக்தியைச் சோதித்துப் பார்ப்பதற்காக.
ஜெய்தாபூரில் நிறுவப்படுவதாக இருக்கும் அணு உலை எப்படிப்பட்டது?
ஜெய்தாபூரில் நிறுவப்பட இருக்கும் அணு உலை முன்னர் நிறுவப்பட்ட எல்லா அணு உலைகளில் இருந்து வேறுபட்டது. முன்னதாக ஐரோப்பியன் பவர் ரியாக்டர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் ஒரு பிராந்தியத்தைக் குறிப்பிடும் வகையில் இருப்பதால் பின்னர் என்ஹன்ஸ்டு பவர் ரியாக்டர் என்று மாற்றப்பட்டது. இது பிரான்ஸ் நாடுகளில் உருவாக்கப்பட்டது. இந்த அணு உலை, உலகத்தில் பின்லாந்து மற்றும் சைனா ஆகிய இரண்டு நாட்டில் மட்டும்தான் கட்டுமானத்தில் இருக்கிறது. தற்போது ஜெய்தாபூரில் அரிவா என்ற கம்பெனியால் கட்டப்படுவதாக இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இந்த அணு உலை எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. BWR, PHWR ஆகிய அணு உலைகள் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அனுபவம் நமக்கு இருக்கிறது. ஆனால், EPR அணு உலை எப்படி வெடிக்கும் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.
புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை BWR வகையைச் சார்ந்தது. பொதுவாக அணு உலையில் மையப் பகுதியில் அணுக்கரு பிளவு ஏற்பட்டு வெப்பம் அதிக அளவில் உருவாகும் அந்த வெப்பத்தைக் குளிர்விக்க மூன்றடுக்கு குளிர்சாதன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் அடுக்கிற்கு அணு உலையில் இருந்தே மின்சாரம் பெறப்பட்டு அணு உலை குளிர்விக்கப்படுகிறது. இரண்டாவது குளிர்சாதன அடுக்கு டீசல் மூலம் இயக்கப்படுகிறது. முதல் அடுக்கு வேலை செய்யாமல் போனால் இரண்டாவது அடுக்கு இயங்கி அணு உலையை குளிர்படுத்தும். ஒரு வேளை இந்த இரண்டு அடுக்கும் செயல்படாமல் போனால் பாட்டரியால் இயங்கும் மூன்றாம் அடுக்கு செயல்பட்டு அணு உலையைக் குளிர்விக்கும். பாட்டரியால் இயங்கும் மூன்றாம் அடுக்கு 2 மணி முதல் 4 மணி நேரம் மட்டுமே இயங்கக்கூடியது. சுனாமியின்போது மூன்றடுக்கு குளிர்சாதன ஏற்பாடு தகர்க்கப்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. அணு உலை வெடித்ததன் காரணமாக மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது. ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தாலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது.
புகுஷிமா சம்பவத்திற்குப் பின் இந்திய அரசு அணு உலைகளின் பாதுகாப்பிற்காக என்ன நடவடிக்கை எடுத் திருக்கிறது?
புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை BWR வகையைச் சார்ந்தது. BWR அணு உலை இந்தியாவில் உள்ள தாராபூரில் 1971 நிறுவப்பட்டது. மேலும் தாராபூரில் மட்டும்தான் BWR அணு உலை இருக்கிறது. புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்பு தாராபூரில் உள்ள அணு உலைப் பாதுகாப்பு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
அணு விபத்துக்களைச் சமாளிப்பதற்கான மேலாண்மை இந்தியாவில் எப்படி இருக்கிறது?
இந்தியாவில் அணு உலை விபத்துக்களை சமாளிப்பதற்கான மேலாண்மை கேள்விக்குரியதே. ஜப் பான் சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டபோது அந்நாட்டு பிரதமர் மக்களிடம் சென்று ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று சொன்னார். ஆனால், இந்தியாவில் போபால் விபத்து ஏற் பட்டபோது அப்போதைய முதல்வர் டெல்லி சென்றுவிட்டார். மேலும், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை ஒரு முறை நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை.
உலகத்தில் நடைபெற்ற முக்கியமான அணு விபத்துக்கள் எவை?
செர்னோபில் அணு உலை விபத்து, 3 மைல் தீவு விபத்து ஆகியவை முக்கியமான அணு விபத்துக்கள் ஆகும். ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுதான் பேரழிவை ஏற்படுத்தியது எனக் கூறலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அணுகுண்டா? அணு உலையா? என்பது பிரச்சனையல்ல. அணு வெடிப்பு ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஹிரோஷிமா, நாகசாகி. செர்னோபில் அணு உலை வெடிப்பு சற்று வித்தியாசமானது. ஏனெனில் இந்த அணு உலை வெடித்தபோது மூடப்பட்டு இயங்காமல் இருந்தது. செர்னோபில் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்னவெனில், அணு உலை மூடப்பட்டாலும் பல ஆயிரம் வருடங்களுக்கு நாம் அதைப் பாதுகாக்காவிட்டால் அது நமக்கு பேராபத்தைக் கொடுக்கும்.
அணு உலை விபத்து எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
அணு உலை விபத்து ஏற்படும்போது பல ஆயிரம் உயிர்கள் பலியாவதோடு அதன் பாதிப்பு நின்று விடுவதில்லை. மாறாக அணுக் கதிர்வீச்சு பல வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அணுக் கதிர்வீச்சின் பாதிப்பைப் புரிந்துகொள்ள அணுவின் ஆயுட்காலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். யுரேனியத்தின் அரை ஆயுட்காலம் 2 லட்சம் வருடம் ஆகும். அதாவது 2 லட்சம் வருடங்களுக்கு மேலாக யுரேனியம் கதிர்வீச்சை வெளியிடும். ஒரு வேளை கல்பாக்க அணு உலையை மூடினால் கூட இரண்டு லட்சம் வருடம் பாதுகாக்காவிடில் அது பேரழிவை ஏற்படுத்தும். மேலும், கதிர்வீச்சு பல ஆயிரம் மைல்களுக்கு இருக்கும் செர்னோபில் விபத்து ஏற்பட்டபோது கல்பாக்கத்தில் கதிர்வீச்சு பதிவு செய்யப்பட்டது.
 
யுரேனியம் இயற்கையாகக் கிடைக்கிறது. அப்படியெனில் இயற்கையாகவே யுரேனியம் கதிர்வீச்சை வெளியிடும் அல்லவா?
இது ஒரு தவறான புரிதல் ஆகும். ஏனெனில் இயற்கையாக இருக்கும் பொழுது யுரேனியம் கதிர்வீச்சை அதிகம் வெளியிடுவதில்லை. அவை இயற்கையில் பல்வேறு தாதுக்களுடன் இருக்கும்பொழுது அதன் கதிர்வீச்சு குறைந்து இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும்பொழுது கதிர்வீச்சு அதிகமாகும்.
அணுக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் என்ன?
அணுக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் இல்லை. அதிகபட்சம் மறுசுழற்சி செய்து கொள்ளலாம் அல்லது கடலுக்கடியில் புதைத்து வைக்கலாம்.
கதிர்வீச்சு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
கதிர்வீச்சு பல தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தும். குழந்தையின்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்.
அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் இந்திய வளர்ச்சிக்கு உதவுமா?
உதவாது. இந்த ஒப்பந்தத்தின்படி அணுவிபத்து ஏற்பட்டால், அணு உலையை நிறுவிய கம்பெனி வெறும் 2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது இன்னும் 35 வருடம் கழித்து விபத்து ஏற்பட்டால்கூட 2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது. இரண்டாவதாக இந்த ஒப்பந்தத்தினால் ஜெனரல் எலக்ட்ரிகல் போன்ற ஐரோப்பிய கம்பெனிகளுக்குதான் நன்மையே தவிர இந்தியாவிற்கு அல்ல.
அணுசக்தி, இந்தியாவிற்கு மின்சாரத் தேவையை எந்த அளவிற்கு பூர்த்தி செய்யும்?
அணுசக்தி இந்தியாவின் மின்சாரத்தை தேவையை மிகக் குறைந்த அளவே பூர்த்தி செய்யும். தற்போது இந்தியாவின் மின்சாரத் தேவை 175,000 மெகாவாட். இதில் 60&65 சதவிகிதத்தை நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் பெறப்படுகின்றது. 25% நீர் மற்றும் காற்று மூலம் பெறப்படுகின்றது. வெறும் 4780 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அணுசக்தி மூலம் பெறப்படுகின்றது. இந்தியா அடுத்த ஆண்டுகளில் 8 முதல் 10% வளர்ச்சியை மேற்கொண்டால், 2030ல் நம்முடைய தேவை 6,00,000 முதல் 8,00,000 மெகாவாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட 5,00,000 கோடி செலவழித்து நாம் 2030ல் பெறப்போகும் அளவு 60,000&80,000 வரை மட்டுமே அணு சக்தியைப் பயன்படுத்தி நம்முடைய மின் பகிர்மான இழப்பு 27%. இதனைக் குறைத்தாலே அணுசக்தி இல்லாமல் இருக்கலாம். மீண்டும் மீண்டும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய மறுசுழற்சி சக்தியைப் பயன்படுத்துவதுதான் நல்லது.
இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்யலாம்?
இந்தியாவில் 3000 தாலுக்காக்கள் இருக்கின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும். பரவலாக்கப்பட்டால் மின் இழப்பைக் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றது. இதனால் 30% மின்சார இழப்பு ஏற்படுகின்றது. அதே வேளையில் மின்சாரம் உற்பத்தி பரவலாக்கப்பட்டால் மின் இழப்பைக் குறைக்கலாம். அடுத்ததாக மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும். அதாவது சூரியசக்தி, பயோகேஸ். இந்த மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவும் குறைவு. இந்தியாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து ஜியோதெர்மல் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். ஒட்டுமொத்தமாக மாற்று எரிசக்திதான் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யுதே தவிர அணுசக்தி அல்ல.
உலகத்தில் எந்த நாட்டில் எல்லாம் மாற்று எரிசக்தி பயன்படுகிறது?
பெரும்பாலான நாடுகளில் மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிரீன்லாந்தில் 100% மாற்று எரிசக்தியால் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இறுதியாக  நினைப்பது?
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் மூலமே இயற்கையைப் பாதுகாக்க முடியும். இதைப் புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் இணைந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இயற்கை என்பது நாம் நம் முன்னோரிடம் இருந்து பெற்ற சொத்து அல்ல. நம் பேரக் குழந்தைகளிடம் இருந்து பெற்றுள்ள கடன். வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.-நன்றி தமிழ் உலகம்

சிதம்பர ரகசியம்..

மாண்புமிகு சிவகங்கை சீமான் சிதம்பரம் அவர்கள் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் உண்மையான முகம் உலகிற்கு தெரிய ஆரம்பித்துள்ளது. தான் ஒரு பெரிய அறிவு ஜீவி, தனக்கு மீறிய திறமைசாலிகள்  உலகிலேயே யாரும் இல்லை என்ற மமதை கொண்டவர். காங்கிரஸ் காமெடியன்களில் ஒருவரான திக்விஜய்சிங் இவரைப் பற்றி கூறியது நாடறியும். யாரையும் மதிக்காத போக்கு கொண்டவர். ஏளனம் செய்து பேசுவதும், தனது அதிகாரத்தால் தனக்கு அடிபணியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எப்படியாவது அடிய பணிய வைப்பது அல்லது அவர்களை பழிவாங்குவது அவருடைய இயல்பான குணம். அதே சமயம் வெளி உலகிற்கு நல்லவர் போல வேஷம் போடுவதில் வல்லவர். பெரும்பாலும் இவர் தனது அமைச்சக பணிகளில் அதிக கவனம் கொள்வதை விட எதிர்கட்சிகளை குறிப்பாக தன்னை எதிர்ப்போரை எப்படி அழிப்பது என்பதில் அக்கறை கொண்டு செயல்படுவதில் வல்லவர். அது அன்னா ஹஸாரேவாக இருந்தாலும் சரி அல்லது ராம்தேவாக இருந்தாலும் சரி, அவர்களை எப்படி அடியபணிய வைப்பது என்பதில் தனது கிரிமினல் புத்தியை, யுக்தியாக பயன்படுத்துபவர். அன்னஹஸரேவையும், ராம்தேவையும் எப்படியெல்லாம் அவதூறுகளுக்கு உள்ளாக்கினார்கள் என்பதை நாடறியும். 
தற்போது  நாட்டில்   குண்டு வெடித்த வண்ணமிருக்கிறது.  காங்கிரஸ் அரசு இருக்கும் வரை தீவிரவாதிகளுக்கு கவலை இல்லை எனக் கூறும் அளவிற்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. காரணம்  தீவிரவாதிகளை   அச்சுறுத்த, தீவிரவாத  செயல்களுக்கு உள்ளூர்வாசிகள்   துணை  போகாதிருக்க   POTA, TADA  போனற சட்டங்கள்  இருந்தன.  நமது காங்கிரஸ் அரசு வாக்கு வங்கிக்காக அந்த சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது. தீவிரவாதிகள்  உள்ளூர்  வாசிகள்  துணை கொண்டு தீவிரவாத  செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். காங்கிர்சின் மத்திய அரசு பல குண்டு வெடிப்புக்கான காரணங்களை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றது. இந்த நிலையில் இந்த நாட்டின் விசுவாசிகளாக இருக்கும்  ஹிந்துக்களை  அடக்க  COMMUNAL VILONCE BILL  என்ற ஒரு சட்டத்தை கொண்டுவர காங்கிரஸ் முயலுகிறது. இந்த சட்டம் முழுக்க முழுக்க ஹிந்துக்களுக்கான எதிரான, சிறுபாண்மையினர் என்ன தவறு செய்தாலும், அந்த பாதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமே என்கிற அடிப்படையில் உள்ளது.  இதன்  மூலம்  ஹிந்துக்களை  ஒழித்துக்  கட்ட கிருத்துவர் சோனியாவின் முயற்சியால் திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. மேலும் சிதம்பரம் ஹிந்துக்களுக்கு எதிராக காவி தீவிரவாதம் என்ற புதிய சொற்றொடரை பயன் படுத்திவருகிறார். தீவிரவாதத்திற்கு மொழி, மதம், இனம் என்ற ஒரு அடையாளம் கிடையாது. அதுவும் சாத்வீகத்தை போதித்த ஹிந்து தர்மத்தின் அடையாளமான காவியை இழிவு படுத்தியுள்ளது அவருடைய உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது. யாரிடமும் இல்லாத குணம் இவரிடம் உண்டு. அதாவது அன்னா ஹஸாரே சொன்னது போல கிரிமினல் புத்தி உடையவர். மேலும் இவர் கிரிமினல் வழக்கறிஞரும் கூட. இயற்கையாகவே கிரிமினல் புத்தி கொண்ட இவருக்கு எதற்கெடுத்தாலும் பிரச்சனைகளை கிரிமினல் புத்தி கொண்டு அணுகுவதும், கிரிமினல் வழக்கறிஞர் பாணியில் பதில் கூறுவதும் இவரது வாடிக்கை. நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டால், நீயும் இப்படி செய்தாயே என்பது போன்ற பதிலகளைத்தான் இவரிடம் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்ல பல விசயங்களில் தனது பலவீனத்தை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவது இவருக்கு கைவந்த கலை. அது மட்டுமல்ல தனது எதிரிகளை எப்படி சரி கட்டுவது என்பதை இவரிடம் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரசை பாஜகா கடுமையாக எதிர்க்கிறது என்பது நாடறிந்த விசயம். அதற்க்காக நரேந்திர மோடி, மற்றும் கர்னாடக முதல்வர் ஆகியோர் மீது குற்றங்களை எப்படியாவது சுமத்த வேண்டும் என்று தனது சி பி ஐ போன்றவைகளை பயன் படுத்தி வருகிறது. 
ஆர் எஸ் எஸ் மீது குற்றம் சுமத்துவதின் மூலம் பாஜகாவை களங்கப் படுத்த முடியும் என்று நம்புகிறது. குண்டு வெடிப்பு வழக்குகளில் எப்படியாவது ஆர் எஸ் எஸ்ஸை சிக்க வைக்க பெருமளவில் திட்டமிடப்பட்டு முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆக தனக்கு எதிராக பேசக்கூடியவர்களை அடக்க வேண்டும் என்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதால்,தீ விரவாதிகளை அடக்குவதில் ஆர்வம் கொள்வதில்லை. எதிர்கட்சிகளை ஒழிக்க காட்டிவரும் ஆர்வத்தில் மூன்றில் ஒரு பங்கை தீவிரவாதிகளை ஒழிப்பதில் காட்டினால் தீவிர வாதிகளுக்கு மீண்டும் குண்டு வெடிக்க தைரியம் வருமா? 
அண்மையில் இவரைப்பற்றி பாரத நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அவர்கள் 2G ஊழலில் இவருக்கு பங்கு உள்ளது என்று பிரதமருக்கு எழுதியிருந்த கடிதம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2G ஊழலில் சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது என்று ஏற்கனவே பேசப்பட்டிருந்தாலும் அவ்வப்போது மறுக்கப்பட்டு வந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரமும் பலனடைந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரியான ராஜா என்பவர் நீரா ராடியாடவுன் தொலை பேசியில் பேசிய பேச்சு விவரம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது (17ஜூன்2011) ஆனால் அப்படி அவர் பேசியது தவறு என்றும் அதற்க்காக மன்னிப்பு கோருவதாகவும் ரிலையன்ஸ் நிறுவனமும், அந்த அதிகாரியும் பத்திரிக்கை செய்திகள் வந்து பரபரப்பு ஏற்படுத்திய சில நாட்களில் அறிவித்தனர். இதையடுத்து தான் குற்றவாளியில்லை என்று சிதம்பரம் பறை சாற்றிக் கொண்டார். ஆனால் அந்த அதிகாரி ராடியாவுடன் பேசியது உண்மை என நிரூபணமாகி விட்டது. மன்னிப்பு மட்டுமே கேட்டார்களே தவிர தான் அப்படி பேசவில்லையென்று ஒருபோதும் அந்த அதிகாரி கூறவில்லை. அப்படியென்றால் அந்தரங்கத்தில் உரையாடியது, அம்பலத்திற்கு வந்து, சிதம்பரத்தின் அதிகாரத்தால் அந்த அதிகாரியும், அந்த நிறுவனமும் மன்னிப்பு கேட்டிருப்பார்களே தவிர வேறொன்றும் கிடையாது. ஆனால் சி.பி.ஐ என்ன செய்து இருக்க வேண்டும்? இந்த உரையாடல் குறித்து விசாரித்து இருக்க வேண்டாமா? விசாரிக்காது. காரணம் சி.பி.ஐ(Congress bureo of investigation) காங்கிரஸ் பிரோ ஆஃப் இன்வ்வெஸ்டிகேஷன் ஆயிற்றே. அப்போது எதிர்கட்சிகள் எல்லாம் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரினர்? ஆனால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பா.ஜ.க ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும் எனக் கூறியிருந்தார்.
அதேபோன்று 2G விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் பா சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்றும், பிரதமருக்கும் இதில் பங்கு உண்டு என்றும்,அவருக்கும் இது குறித்து தெரியும் என்று நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா கூறியிருந்தார். இதையும் காங்கிரஸ் மறுத்து வந்தது.
2 ஜி விவகாரத்தில் அனைத்தும் பிரதமர் முன்னிலையில் நடந்ததாகவும், டிபி ரியாலிட்டியின் பங்குகளை மாற்ற அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே அனுமதி அளித்தார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா கூறியுள்ளதை மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா,
இன்றைய விசாரணையின்போது, “யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படிதான்.டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டுள்ளனர். (http://thatstamil.oneindia.in/news/2011/07/25/chidambaram-refutes-raja-says-he-didnt-approve-aid0136.html)
தன்னுடன் ஆட்சி செய்த அமைச்சரே பா.சிதம்பரம் மீதும்,பிரதமர் மீதும் நேரடியாக தொடர்பு இருப்பதாகக் கூறியும் காங்கிரஸ் மறுத்ததோடு சி பி ஐ யையும் விசாரிக்க விடாமல் சிதம்பரம் முடக்கிவிட்டார்.ஆனால் தற்போது மிக மூத்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் பா சிதம்பரத்தை நேரடியாக கை காட்டிவிட்டார்.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா
2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்கடிதம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார். இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது. ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான். இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார் (http://thatstamil.oneindia.in/news/2011/09/22/pranab-vs-chidambaram-2g-politics-within-upa-aid0090.html)
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆதாரம் கேட்டிருந்தார். இப்போது காங்கிரஸ் நிதி அமைச்சர் ஆதாரம் தந்திருக்கிறார். இப்போதும் பிரதமர் சிதம்பரத்திற்கு வக்காலது வாங்குகிறார்.காரணம் அமைச்சர் ராசா சொன்னது போல சிதம்பரத்திற்கும்,பிரதமருக்கும் அனைத்தும் தெரியும் என்றும், அவர்கள் அனுமதியோடுதான் இவைகள் நடைபெற்றன என்றும் கூறியிருந்தது தற்போது சிதம்பரத்தைக் காப்பாறுவதன் மூலம் பிரதமர் தன்னை காத்துக்கொள்ள முயலுகிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
சிதம்பரம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற விசயம் ஆதாரத்துடன் நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து அனைத்து விசயங்களும் நிதிஅமைச்சகத்திடம் உள்ளது. அதன் காரணமாகவே தனக்கு எதிராக நிதி அமைச்சர் பிரணாப் சதி செய்கிறாரா என்பதை உளவு பார்க்கவே சிதம்பரம் முயன்றுள்ளார்.
 
டில்லியில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகமான நார்த் பிளாக்கில், 16 இடங்களில் பசை தடவப்பட்டு, அவற்றில் மிகச் சிறிய கேமரா, மைக் உள்ளிட்டவற்றைப் பொருத்தி, உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அத்துடன், பிரணாப் முகர்ஜியின் மேஜைக்கு அடியில் மூன்று இடங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில பொருட்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், தரையில் சிறிய குழிகள் இருந்தன என்றும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உளவுத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “அலுவலகச் சுவர்கள் மற்றும் பிரணாப்பின் மேஜைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த பொருள், “சூயிங்கம்ஆக இருக்கலாம். இவற்றை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தடவியிருக்கலாம்என்றனர். இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: நிதி அமைச்சரின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது, மிகவும் கவலை தரும் விஷயம்.
சில நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருப்பதால், நிதியமைச்சர் வேண்டுமானால் இக்குற்றச்சாட்டை தள்ளி விடலாம். ஆனால், என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள நாடு விரும்புகிறது. பிரதமருக்கு, நிதியமைச்சர் எழுதிய கடிதத்தில், தன் அலுவலகம், தன் ஆலோசகர் ஓமிதா பால் அறை உள்ளிட்ட 16 இடங்களில் ஏதோ ஒரு பொருள் ஒட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது, “சூயிங்கம்ஆக இருக்கலாம் என்று உளவுத் துறையினர் கூறியுள்ளது தான் மிகப் பெரிய வேடிக்கை. குழந்தைத் தனமான வாதம் இது. இதை நாடு நம்ப வேண்டும் என்று உளவுத் துறை விரும்புகிறது. உளவுத் துறையின் விளக்கத்தைக் கேட்கும் மக்கள் சிரிப்பர். போகும் இடம் எல்லாம் ஒட்டிக் கொள்ளும் இதுபோன்ற “உளவு சூயிங்கம்எங்கு கிடைக்கிறது என்று கேட்பர். “சூயிங் கம்முக்கும், பசை போன்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரணாப் நிச்சயம் உணர்ந்திருப்பார். இவ்விவகாரத்தில் இரு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, தன் நிதியமைச்சரையே மத்திய அரசு வேவு பார்த்ததா என்பது. இரண்டாவது, தனியார் உளவு நிறுவனம் வேவு பார்த்ததா என்பது. இந்த இரண்டில் எது ஒன்று நடந்தது என்றாலும், அது கவலைக்குரிய பிரச்னையே. பிரணாப் முகர்ஜியின் கடிதத்தின் அடிப்படையில், அரசு மிகத் தீவிரமாக முழுமையாக இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும். அப்படி அரசு செய்யுமானால், அமைச்சர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மையில் இருப்பது தெரியவரும். அல்லது இதில் தனியார் உளவு நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வரும். இவ்விவகாரத்தை நான் “இந்தியாவின் வாட்டர்கேட்விவகாரம் என்றே குறிப்பிடுகிறேன். அமெரிக்காவில், “வாட்டர்கேட்ஊழல், எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடத்தப்பட்டது. அதில், அப்போதைய அமெரிக்க அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இங்கு, மத்திய அரசு தனது சொந்த நிதியமைச்சருக்கு எதிராக வேவு பார்த்துள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். (june 23,2011 http://www.dinamalar.com//News_Detail.asp?Id=262367&)
இது குறித்து சில மாதங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகம் ரகசியமாக நிதி அமைச்சகத்தை வேவு பார்த்தது என்று நிதி அமைச்சர் பிரணாப் பிரதமருக்கு கடிதம் எழுதியது அம்பலத்திற்கு வந்தது. ஆக சிதம்பரம் 2ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார். அதை மறைக்கவே திரை மறைவில் பல ரகசியங்களை அரங்கேற்றி வருகிறார் என்பது உண்மை.
இதில் ஒரு வேடிக்கையென்னவென்றால் சி.பி.ஐயும் காங்கிரசும் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று கூறுவதுதான். பா ஜா க நிதியமைச்சரை சி பி ஐ விசாரிக்கும் போது தனது அமைச்சரவை சகாக்களே புகார்கள் கூறும் போது அப்போதைய நிதிஅமைச்சர் சிதமபரத்தை ஏன் சி பி ஐ விசாரிக்கவில்லை?
அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும் சி பி ஐயும் சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஏன் சிதம்பரம் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா? மேலும் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில் புதிதாக யாரையும் சேர்க்க இயலாது என வாதிடுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பதையே காட்டுகிறது.
சிதமபரம் எந்த தப்பும் செய்யவில்லையென்றால் விசாரணக்கு ஒத்துக் கொள்வது தானே?  என்ன தயக்கம்?
ஒன்று நிச்சயம் சிதமபரத்திற்கு இறங்கு முகம் ஆரம்பமாகி விட்டது. அவர் செய்த சிதம்பர ரகசியங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. பாராளுமனறத்தேர்தலில் தோற்று, பின் வெற்றிபெற்றது உட்பட.

தீதும் நன்றும் பிறர் தாரா வாரா….!//////தர்மபூபதி ஆறுமுகம்////

விழி பிதுங்கும் நமது பிரதமர் மன்மோகன்சிங்.!

தொடர்ந்து நிகழுகிற குண்டு வெடிப்புகள், தினந்தோறும் ஏறும் விலைவாசிகள், மணிக்கணக்கில் வெளியாகும் ஊழல்கள், இவைகள் தான் சோனியா காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசின் சாதனைகளாகும். இதுதவிர சீன ஊடுருவல், பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தல், மிகச்சிறிய நாடான இலங்கை போன்ற அண்டை நாடுகள் கூட நம்மை மதிக்காமல் எதிரிகளுடன் கைகோர்த்து செயல்படுதல் ஆகியவை இந்தியத் திருநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாகும். இவைகளையெல்லாம் தீர்க்கக் கூடிய வலுவில்லாத அரசாக  மன்மோகன்சிங்  அரசு உள்ளது.  

விழி பிதுங்கும் நமது பிரதமர் மன்மோகன்சிங்.! 

என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மன்மோகன்சிங்.  ஊழலை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு ஊழலுக்கு துணை பொய்க்கொண்டிருக்கிறார் மன்மோகன்சிங். 2G ஊழலாகட்டும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலாகட்டும், வோட்டுக்க்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசிய ஊழலாகட்டும், ஆதர்ஷ் ஊழலாகட்டும், இவைகள் அனைத்திலுமே பிரதமர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால், தன் கைவசமுள்ள CBI யை கைகட்டி, வாய்பொத்தி பேசாமல் உட்கார வைத்திருந்தார்கள். பிறகு உச்சநீதிமனற தலையீட்டின் பிறகே வழக்குகள் CBI யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2G போன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கிறது. CBI எந்த வழக்குகளையும் அதுவரை விசாரிக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தலைவர்கள் ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பதுதான். 

எதிர்கட்சிகளை சாடி என்ன பயன்? 

உண்மையான நிலை இப்படியிருக்க நமது மண்புமிகு பிரதமர் எதிர்கட்சிகள் தனது அரசை கவிழ்த்து தேர்தலை முன்கூட்டியே நடத்த சதி திட்டம் தீட்டுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனிதரை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. சுய உணர்வுள்ள மனிதராக மன்மோகன் சிங் இருக்கிறாரா? என்பதே யோசிக்கக் கூடிய ஒன்றாகும். இன்று பெரிதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் 2G ஊழல் ஏதோ எதிர்கட்சிகள் முன் வைத்த ஊழலல்ல. அதுமட்டுமல்ல அனைத்து ஊழல்களுமே அரசு (CAG) இயந்திரங்களால் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தப் பட்டவையாகும். அது மட்டுமல்ல மன்மோகன் அமைச்சரவை சகா ராஜா, தான் எடுத்த முடிவுகளெல்லாம் நிதி அமைச்சர், மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் ஊழலில் சிதம்பரத்திற்கு பங்கு உண்டு என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆக குற்றச்சாட்டுகளெல்லாம் ஆட்சியாளர்களிடமிருந்து வருகிறது. அப்படியிருக்க,  காங்கிரசின் மன்மோகன் சிங்கின் கையிலாகாத தனத்திற்கு, எதிர்கட்சிகளை சாடி என்ன பயன்? 

நம்பிக்கையில்லா தீர்மானம்! 

இப்படியிருக்க கடந்த 2008ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மாணத்தின் வாக்கெடுப்பு நடந்த போது, காங்கிரஸ் அரசு அமர்சிங் மூலமாக பா.ஜ.கா உறுப்பினர்களை விலை பேசியது Sting operation மூலம் பாஜகவினரால் அம்பலப்படுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் இது குறித்து விசாரிக்காமல் இருந்த CBI, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காங்கிரஸின் கைப்பாவையான CBI, காசு கொடுத்தவர்களை தண்டிக்காமல், அம்பலப்படுத்தியவர்களை சிறையில் தள்ளியுள்ளது. 
இதைவிட கேவலாமன செயல் வேறு ஏதும் இருக்க முடியாது. தொலைக்காட்சி பேட்டியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் மனு சிங்க்வி, நீதிமனற நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டது நிரூபணமாகியுள்ளது என்று பேசியுள்ளார்? எவ்வளவு அப்பட்டமான பொய்? மக்கள் மூடர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். 

ஊழல் செய்தவர்கள் வெளியே, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் உள்ளே! 

அன்றைய சூழ்நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். காங்கிரஸ் அரசு மீது எதிர்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கூட்டாளியான அமர்சிங் மூலம் பா.ஜ.க வினர் விலைப் பேசப் படுகிறார்கள். இது அறிந்த பாஜாகாவினர் Sting operation மூலம் அம்பலப்படுத்தி, அமர்சிங் கொடுத்த கோடிகளை பாராளுமனறத்தில் கொட்டப்படுகிறது. பின்னர் சபாநாயகர் இது குறித்து விசாரிக்க உத்தரவிடுகிறார். மூன்று ஆண்டுகள் ஆகியும் CBI விசாரிக்காததால், பொதுநல வழக்கு ஒன்றின் மூலம் உச்சநீதிமன்றம் CBI விசாரித்து எடுதத்த நடவடிக்கை குறித்த விபரம் கோருகிறது. பின்னர் CBI விசாரிக்கிறது. இதில் அமர்சிங், மற்றும் Sting operation மூலம் பாராளுமனறத்தில் ஊழலை அம்பலப்படுத்திய பாஜக உறுப்பினர்கள் இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறை அடைப்பைத்தான் நீதிமனற நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டது நிரூபணமாகியுள்ளது என்று பேசியுள்ளார். 
அதாவது இந்த செய்கையால் பலனடைந்தது காங்கிரஸ் கட்சியினர். பணம் கொடுத்தவர்களும் அவர்களே. ஆனால் ஊழல் செய்தவர்கள் வெளியே, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் உள்ளே. காங்கிரஸ் ஆட்சியில் நியாய தர்மங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? 

காங்கிரசாருக்கு சில கேள்விகள்? 

காங்கிரஸ் தனது அரசாங்கத்தைக் காக்க லஞ்சம் கொடுத்தது உண்மை என வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் பற்றி மவுனம் ஏன்?
WikiLeaks confirms ‘cash for vote’ scam of 2008
NEW DELHI - The WikiLeaks India cables have revealed some more shocking information. The latest one is on the purchase of votes by the Congress before the crucial vote of confidence in Lok Sabha in theyear 2008. 
Five days before the UPA government faced a crucial vote of confidence on the Indo-U.S.nuclear deal in 2008, Nachiketa Kapur, a political aide to Congress leader Satish Sharma showeda U.S. Embassy employee “two chests containing cash” he said was part of a bigger fund of Rs. 50 crore to Rs. 60 crore that the party had assembled to purchase the support of MPs. He also claimed the four MPs belonging to Ajit Singh’s Rashtriya Lok Dal had already been paid Rs. 10 crore each to ensure they voted the right way on the floor of the Lok Sabha. 
In a cable, dated July 17, 2008, sent to the State Department (162458: secret), accessed by The Hindu through WikiLeaks, U.S. Charge d’Affaires Steven White wrote about a visit the Embassy’s Political Counselor paid to Satish Sharma, who is described as “a Congress Party MP in the Rajya Sabha and a close associate of former Prime Minister Rajiv Gandhi considered to be a very close family friend of Sonia Gandhi.” 
Mr. Steven White reveals, “Sharma’s political aide Nachiketa Kapur mentioned to an Embassy staff member in an aside on July 16 that Ajit Singh’s RLD had been paid Rupees 10 crore (about $2.5 million) for each of their four MPs to support the government. Kapur mentioned that money was not an issue at all, but the crucial thing was to ensure that those who took the money would vote for the government.”
However, Ajit Singh who didn’t vote for the UPA during the trust vote has slammed the expose.
(http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/wikileaks-confirms-%E2%80%98cash-for-vote%E2%80%99-scam-of-2008?redirect=/web/guest/full%20story) 
அமர்சிங் காரில் கொண்டுவரப்பட்ட பணம் என உறுதி செய்துள்ள CBI அந்த பணம் எங்கிருந்து யாரால் கொடுக்கப்பட்டது என்பதை ஏன் கண்டு பிடிக்கவில்லை? 
பாஜாகவின் எதிரியான அமர்சிங் யாருடைய கூட்டாளி? 
பாஜாக எதிரியான அமர்சிங் எப்படி பாஜாகவோடு இணைந்து செயல் பட்டிருக்க முடியும்? 
வாதத்திற்கு பாஜக வினரே வேண்டுமென்றே தனது கட்சியினரை வைத்து இந்த நாடகத்தை நடத்தியிருந்தால் அதன் மூலம் எவ்வாறு காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியும். பாஜாக எப்படியிருந்தாலும் காங்கிரசை எதிர்த்துத் தானே வோட்டு போடும்? 
பாஜாக நாடகம் என்றால் காங்கிரஸ் ஏன் மூன்று ஆண்டுகள் இது குறித்து விசாரிக்கவில்லை? மவுனம் சாதித்தது ஏன்? 
உண்மையான குற்றவாளிகள் ஏன் காங்கிரசால் காப்பாற்றப் படுகிறார்கள்? 

இந்த ஊழல் வழக்குகள் எல்லாம் என்னவாகும்? 

2G உட்பட உச்ச நீதிமன்றம் கண்காணிக்கப்படும் அனைத்து வழக்குகளும் காங்கிரஸ் நலனுக்கு எதிரான ஒன்று. அந்த வழக்குகளை விசாரிக்க CBIக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், CBI காங்கிரசின் கைக்கூலி என்பதை மறந்துவிடலாகாது. அனைத்து வழக்குகளை விசாரித்து குற்றம் புரிந்தவர்கள் தப்பும் வைகையில் நிச்சயம் காங்கிரசார் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் படி CBI செயல்பாடுகள் இருக்கும்.  இவர்கள் விசாரனையை வைத்துத் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூற முடியுமே தவிர உச்சநீதிமன்றம் நேரடியாக எந்த விசாரனையும் செய்ய முடியாது. உதாரணத்திற்கு ராஜா வழக்க்றிஞர் அடித்த பல்டி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 
ராஜா வழக்க்றிஞர் அடித்த பல்டி 
புதுடில்லி: 2 ஜி., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் வக்கீல் இன்று அந்தர்பல்டி அடித்தார். நேற்று சிதம்பரத்தை சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். 24 மணி நேரத்தி்ல் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டாம் , விசாரிக்கும் பட்சத்தில் வழக்கு விசாரணை போக்கில் காலதாமதம் ஏற்படும் என தெரிவித்தார். எல்லாம் தெரிந்த சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் அதற்காக அவரை குற்றவாளியாக சித்தரிக்கவில்லை என ராஜா வக்கீல் சுசீல்குமார் ‌நேற்று கோர்ட்டில் கூறியிருந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது. சிதம்பரத்தை விசாரிக்கும் பட்சத்தில் சிறையில் இருக்கும் கைதிகளின் ஜாமின் தள்ளிப்போகும் என்ற காரணத்தினால் வக்கீல் இவ்வாறு பல்டி அடித்துள்ளார். சி.பி.ஐ.,யும் சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்று பட்டவர்த்தமாக கோர்ட்டில் தெரிவித்து விட்டது. (http://www.dinamalar.com//News_Detail.asp?Id=321421&) 
ஆக இப்படி தனது அதிகாரத்தின் மூலம் காங்கிரஸ் CBI யை ஆட்டிப்படைத்து, தனது ஆட்களை தப்பிக்க வைத்து விடும். உச்சநீதிமன்றத்தை நம்ப வைக்க இப்போது நடக்கும் அனைத்தும் நாடகங்களே! காங்கிரசில் உள்ள செல்வாக்கு வாய்ந்த தலைவர்கள் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால், நிச்சயமாக அவர்களை தப்புவிக்க சி பி ஐ உதவும். சத்தில்லாத வாதத்தை வைப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுவதோடு, தங்களது கூட்டணி தர்மப்படி ஊழல் கூட்டாளிகளையும் தப்புவிக்க இயலும். நடப்பது நாடகம். மறைமுக வாக்குறுதிகளினால் சிறையில் ஊழல் பேர்வழிகள் சிலகாலமே பொறுத்திருக்க வேண்டி இருக்கும்.  
நடப்பது நாடகம்……
நாட்டுமக்கள் சி.ஐ.பிஐயும் காங்கிரசையும் நம்புவார்களாக. நீதி கிடைக்கும் என்று!

வெள்ளி, மார்ச் 30, 2012

காசி ஆனந்தன் கவிதைகள்!!!

வான் முகிலே!

காசி ஆனந்தன்
இடிக்கின்றாய்.... வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?

கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?
சிரிக்கின்றாய்...மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?

ஓடிப்போ...!ஓடிப்போ...!
புதுக் கவிதை

வான்முகிலே....ஓவென்று
முழக்கமிட்டுப்
பாடிப்போ! அதிரட்டும்
மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

செருக்களம் வா!

காசி ஆனந்தன்
மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு

சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?

கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

குமுறி எழடா!

காசி ஆனந்தன்
உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்...
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?

மேடைத் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந் நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!

எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங் கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்!
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.

பாவலரே!

காசி ஆனந்தன்
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!

தோழரே!

காசி ஆனந்தன்
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

முரசொலி

காசி ஆனந்தன்
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்கு முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

தோழி

காசி ஆனந்தன்
நானோர் கனாக்கண்டேன் தோழி! - தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!

ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!

வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

புகழ்பாடு

காசி ஆனந்தன்
களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! - தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு! மானமே தமிழனுயிர் அங்கம்! - தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! - தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்
தமிழன் உடற்குருதி சூடு! - தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? - தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

போர் முரசு!

காசி ஆனந்தன்
தவளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு

கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்

சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! - வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் - புகழ்
பேண மறந்துவிட்டோம்! - இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!

தாயே!

காசி ஆனந்தன்
அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்

தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்
என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே
உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!
கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்
நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது
தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!
வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்....
வீரமேன் கொடுத்தாய் தேவி?
பாரம்மா.....முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்து

சேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே
பாரம்மா....மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை....வீதி
ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!
மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!
தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!
ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!
ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!

கடலே!

காசி ஆனந்தன்
ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்...
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

நறுக்குகள் - புரட்சி

காசி ஆனந்தன்
மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

நறுக்குகள் - மாடு

காசி ஆனந்தன்
ஆயிரம்
ஆண்டுகள்
வண்டி
இழுக்கிறது...
கொம்பை
மறந்த
மாடு.

நறுக்குகள் - ஏழ்மை

காசி ஆனந்தன்
சதை பிடித்து
விடுகிறாள்
அழகு
நிலையத்தில்
எலும்புக் கைகளால்.

நறுக்குகள் - குப்பைத் தொட்டி

காசி ஆனந்தன்
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -
குப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -
அலுவலகம்.

நறுக்குகள் - இலக்கியம்

காசி ஆனந்தன்
களத்தில்
நிற்கிறேன்...
என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.
தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?
வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

வியாழன், மார்ச் 29, 2012

காசி ஆனந்தன் கவிதைகள் !!

நிலாவே!

காசி ஆனந்தன்
நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!

வான் முகிலே!

காசி ஆனந்தன்
இடிக்கின்றாய்.... வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?

கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?
சிரிக்கின்றாய்...மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?

ஓடிப்போ...!ஓடிப்போ...!
புதுக் கவிதை

வான்முகிலே....ஓவென்று
முழக்கமிட்டுப்
பாடிப்போ! அதிரட்டும்
மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

செருக்களம் வா!

காசி ஆனந்தன்
மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு

சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?

கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

காதலியே!

காசி ஆனந்தன்
காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம்உன் செவ்வாய்கேதான்!

கலங்கரை

காசி ஆனந்தன்
முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை - நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?
அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!
ஓடு தூக்குதே! - இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே!
மாற்றார் தலைதனில் ஏற்றினாய்
கல்லை! வாட்டினாய்! - இன்று
மூட்டை சுமந்து நடக்கிறாய்!
தாழ்ந்து கிடக்கிறாய்!
ஆதியில் மாடம் அமைத்தவர்
வாழ்வு சமைத்தவர் - அட
வீதியில் காலம் கழிப்பதோ?
நால்வர் பழிப்பதோ?
"முல்லைக்குத் தேரை வழங்கினோம்"
என்று முழங்கினோம்! - இங்கே
பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!
தருவார் யாரடா?

நறுக்குகள் - விளம்பரம்

காசி ஆனந்தன்

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை..

தொலைக்காட்சியில்.

நறுக்குகள் - அறுவடை

காசி ஆனந்தன்
சுவரொட்டியை
தின்ற கழுதை
கொழுத்தது.
பார்த்த கழுதை
புழுத்தது.

நறுக்குகள் - மானம்

காசி ஆனந்தன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

நறுக்குகள் - மனிதன்

காசி ஆனந்தன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
"பசு பால் தரும்"
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.
இப்படியாக
மனிதன்...

குமுறல்

காசி ஆனந்தன்
செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?

குரல் நிறுத்திய குயில்

காசி ஆனந்தன்
கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை
கனலாய் வாழ்ந்த தமிழன்
எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்
எழுச்சிப் புலவன் வீரம்
பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்
பாயும் புயலாய் எம்மை
இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
போற்றப் பிறந்த களத்தின் பொருநன்
புன்மை உற்றிழந்த எம் வாழ்வை
மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்
மறந்திகழ் இனப்போர் மண்ணில்
ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்
ஆரியர் நெஞ்சில் கூர்வாள்
ஏற்றப் பிறந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
பீடு படைத்த புலவன் மதத்தைப்
பிளந்த சூறைக் காற்று
கேடு படைத்த மடமைக் குப்பைக்
கிடங்கை எரித்த நெருப்பு
நாடு படைத்த நல்லறி வாளன்
நஞ்சர் நெஞ்சை நொறுக்கி
ஏடு படைத்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
மனத்தை வளர்த்த மாந்தர் நேயன்
மண்ணில் நாளும் மண்டைக்
கனத்தை வளர்த்த வல்லாண் மையினர்
கழுத்தை முறித்தோன்! அடிமைத்
தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும்
தறித்த போர்வாள்! மாந்தர்
இனத்தை வளர்த்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

பிடி சாபம்!

காசி ஆனந்தன்
கன்னெஞ்சர் சிங்களத்தர்
கயவர் என் தமிழ்ஈழத்தை
அன்னை மண்ணைச் செந்தீயால்
அழித்தார் என்றெழுந்த சேதி
மின்னலாய்த் தாக்கிற்றம்மா...
விம்மிநின் றழுகின்றேன் யான்!
என்கண்ணில் நீரா? இல்லை!
இதுவும் தீ! இதுவும் தீயே!
யாழ்நகர் நல்லறங்கள்
யாவிலும் ஊறி மக்கள்
வாழ்நகர் தமிழர் வாழ்வில்
வற்றாத கல்வி மேன்மை
சூழ்நகர் கொடியர் தீயில்
துகள் சாம்பலாகி அந்தோ
பாழ்நகர் ஆன தென்றார்!
பதறுதே தமிழ் நெஞ்சம்!
வீடுகளெல்லாம் தீயால்
வீழ்த்தினார்! கடைகளெல்லாம்
கேடுற நெருப்பு வைத்தார்!
கீழ்மன வெறியர் எங்கள்
பீடுறு யாழ்மா நாட்டின்
பெரியநூல் நிலைய மீதும்
போடுசெந் தீயை என்றார்...!
பொன்னூல்கள் எரித்தார்! சென்றார்!
அம்மம்மா! என்ன சொல்வேன்?
அனலிலே கம்பன் மாண்டான்!
இம்மா நிலம் வணங்கும்
இனியவள் ளுவன் மடிந்தான்!
"உம்"மென எழுந்த தீயில்
உயர் தமிழ் இளங்கோ செத்தான்!
செம்மனப் புலவ ரெல்லாம்
செந்தீயில் வெந்தா ரம்மா!
கொடுந்தீயே! சிங்களத்தின்
கொடுந்தீயே! இது நீ கேளாய்!
நெடுங்காலம் நின்றன் கொட்டம்
நில்லா! இப்புலவன் உன்மேல்
இடுஞ்சாபம் இன்றே ஏற்பாய்!
இருந்துபார்! நீஇம் மண்ணில்
படும்பாடு நாளை பார்ப்பேன்...!
பார்த்தே நான் உலகு நீப்பேன்!

தம்பிகாள்!

காசி ஆனந்தன்
வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம்
வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்!
தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே!
தெய்வம் உண்டு நம்புங்கள்!
பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!
போர்க்களம் எமக்கென்ன புதிதோ?
குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!
கூத்தாடுவோம்! இது பொன்னாள்!
எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள்
இருட்சிறை ஆடுதல் இன்பம்!
வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து
வெல்லுதல் விடுதலை கண்டீர்!
சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்!
செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ?
வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்!
வைர நெஞ்சங்களோ வாழி!
ஆழமா கடலின் அலைகளே இருங்கள்!
அறம் காத்தல் நம்கடன் அன்றோ?
கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம்
குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்!
ஈழமா மண்ணில் எழில் விடுதலை நாள்
இருத்தாமல் நாம் மடிவோமா?
ஊழையும் வெல்லும் உளங்களே! இருங்கள்!
ஒருபெருஞ் செயல் செயப் பிறந்தோம்!
கொள்ளையாம் வீரம் கொந்தளித்தாடும்
குட்டுவன் தமிழ்க்குலச் சேய்காள்!
உள்ளம் மகிழ இசை ஓதுமின்கள்!
உவகையில் ஆடிக் களிப்பீர்!
பிள்ளைகளா பெற்றாள்? எமைப் பெற்றாள்
பெருமைகள் அல்லவா பெற்றாள்?
வெள்ளம் படைப்போம்! புயல்படைப்போம்! நாம்
விடுதலை படைப்போம்! இருங்கள்!
நெடும்போர் ஆடும் நிமிர்ந்த உயிர்களே!
நெருப்பினில் பூத்த நெஞ்சங்காள்!
கொடுங்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே!

குயிலுக்கு வாழ்வு கொடு

காசி ஆனந்தன்
இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?
நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?
உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?
உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!

தமிழ்க் கன்னி தோற்றம்

காசி ஆனந்தன்
எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்.... 

களம் புகுவாய்!

காசி ஆனந்தன்
மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!

இனமானப் புலி எங்கே?

காசி ஆனந்தன்
இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
"பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

எக்களிப்பு

காசி ஆனந்தன்
குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!

படை இளைப்பாறல்

காசி ஆனந்தன்
மலைமீது மாலைசாய்ந் தாற்போல்
மழை மேகம் இறங்கினாற் போல்
மலை நின்ற சோலைக் குள்ளே
மாவீரர் இருக்கை கொண்டார்!
மலை தாவி நடந்து வந்த
மயக்கத்தி லுறக்க மென்றோர்
மலையேறி விழுத லுற்றார்....
மரணம்போல் துயிலுங் கொண்டார்!

தானைதான் உறங்கி நிற்கும்...
தமிழ்வீரம் உறங்கிப் போமா?
மானத்தில் வளர்ந்த வீரர்
மலைத் தோளின் அழகு பார்த்தும்
வானையே ஒத்த மார்பின்
வடிவினைப் பார்த்து மங்கே
நானொரு மனிதன் மட்டும்
நனிதுயில் மறந்து நின்றேன்!

எழில்பூத்த மலர்ச்சோ லைக்குள்
இருளோடி மறையும் வண்ணம்
ஒளிபூத்த தென்ன வானில்
ஓவிய நிலவு தோன்றி
விழிபூத்த நிலையில் நானோ
வெறிபூத்த மனித னானேன்...
களிபூத்த நெஞ்சி னோடு
கால் போன போக்கில் போனேன்...

பொன்மழை பொழியும் வண்ணப்
புதுநிலா வானின் மேலே
என்னையும் இழுக்கும்... கால்கள்
இயலாமல் நிலத்தில் நிற்கும்!
மென்மலர் பூத்த பொய்கை
மேலெழுந் தாடும் வண்டின்
இன்னிசை நிலத்தின் மேல் நான்
இருப்பதே சரியென்றோதும்!

ஒப்பிலா அழகில் பூத்த
ஒளிக்காட்டில் கவிஞ னென்னை
இப்படிக் கொணர்ந்த நெஞ்சம்
இளமையில் தோய்ந்த நெஞ்சம்
அற்புதங் காட்டி வைக்க
அழைத்தது போலும்... ஆமாம்
செப்பவும் முடிய வில்லை
செந்தமிழ்க் கவிதை சொல்வேன்...

அழகடா அழகுக் கோலம்!
அவள் கோலம் அமுதின் கோலம்!
தழலிலே வெந்த கட்டித்
தங்கத்தின் புதிய கோலம்!
பழகவோ எதிரே வந்தாள்...
பைந்தமிழ்க் கன்னிப் பாவை?
நிழலிலே ஒதுங்கி நின்று
நெஞ்சத்தை அருகில் விட்டேன்...

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

காசி ஆனந்தன்
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

குழப்பம்

காசி ஆனந்தன்
கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!

விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?

உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?

மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?

கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?

என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!

பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!

ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!

ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?

செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!

கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.

கால முனிவன் கூற்று

காசி ஆனந்தன்
எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...

வீரம்

காசி ஆனந்தன்
அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!

போர்

காசி ஆனந்தன்
தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா?

தமிழச்சி!

காசி ஆனந்தன்
இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?

விடுதலைப் பொன்னாள்

காசி ஆனந்தன்
காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?

பெருமூச்சு

காசி ஆனந்தன்
வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?

வீரத்தாய்!

காசி ஆனந்தன்
தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!

காலையும் களமும்

காசி ஆனந்தன்
கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!

தமிழ்மேல் ஆணை!

காசி ஆனந்தன்
தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை!

எழுச்சி

காசி ஆனந்தன்
தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

பயணம்

காசி ஆனந்தன்
நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை!

பூத்தது விடுதலை!

காசி ஆனந்தன்
புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!

மடிந்து போ!

காசி ஆனந்தன்
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!

தமிழை கல்விமொழி ஆக்கு

காசி ஆனந்தன்
தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!

எத்தனை பெரிய மனம் உனக்கு?

காசி ஆனந்தன்
எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

தமிழர் விடுதலை!

காசி ஆனந்தன்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!

மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை!
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!

குப்பு றக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

வாருங்கள்!

காசி ஆனந்தன்
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்! முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

தமிழே! உயிரே!

காசி ஆனந்தன்
தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!
தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!
தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!
அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?
தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்
அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!
தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!
அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

களம் வருவோம்!

காசி ஆனந்தன்
போர் முரசோடு புறப்படடா! தம்பி!
புல்லர்கள் காதில் அறைந்து வைப்போம்!
பேரரசொன்று படைத்திடு வோமென்று பேட்டைக்குப்
பேட்டை முழங்கி வைப்போம்!

ஆளுக் கொருவன் தலைபறிப்போம்! தம்பி!
அணுவணுவாய் அவன் உடல் முறிப்போம்!
நாளுக்கு நாள் தமிழ் நாட்டை அழிப்பவன்
நாடகம் ஓய ஓர் நாள் குறிப்போம்!

மானம் விழுந்து துடிக்குதடா! தம்பி!
மறவன் கதைகள் விளைந்த மண்ணில்
ஈனம் விளைந்து கிடக்குதடா! இதை
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?

துள்ளி எழுந்து புறப்படடா! தம்பி!
தூய தமிழ்ப்படை ஒன்றமைப்போம்!
எள்ளி நகைக்கும் பகைவன் உடல்களை
எண்பது துண்டுகளாக்கி வைப்போம்!

மூவர் தமிழ்ப்படை அஞ்சுவதோ? தம்பி!
மூலையில் நம்மவர் துஞ்சுவதோ?
சாவை எதிர்த்து வலம்வருவோம்! தமிழ்ச்
சாதி பிழைக்கப் புறப்படடா!

தமிழர் படை!

காசி ஆனந்தன்
மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல
மானம் ஒன்றுதான் அடிப்படை!
வெறிகொள் தமிழர் புலிப்படை! - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை!

புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்!
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!

தமிழன் பண்பில் உருப்படி! - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி!
அமையும் தன்மை முதற்படி! - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு! - நீ
வேங்கை; மாற்றான் வெள்ளாடு!
சிறும் பாம்பை வென்றாடு! - கண்
சிவந்து நின்று போராடு!