பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, அக்டோபர் 28, 2016

வட்டிக்கடை வீரமணி !

வட்டிக்கடை வீரமணியின் வண்டவாளங்கள்!

திராவிட கபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது!

ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம். ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்!

இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை  வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம். முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்!

வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன. ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது!

மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது. வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்!

சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன. வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது!

இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்!

மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில்தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன. இந்த காலத்தில்தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்!

வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார். இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ்  மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன!

இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.
வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை!

இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்!

குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது  சுமத்தி விட்டு, ஈவெகி  சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை!

கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்''

-தோழர் கிரிஷ்ணா தமிழ்ப்புலி.

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

பால் நியூமன்

'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

seemanlong11.jpg
'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. 'நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி ஆனந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் பால் நியூமென் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இளைய தலைமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாறன் என்பவர்,
நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.
egalaivanmeeting1.jpg
ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. இத்தனை நாள் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று மேடைகளில் உணர்ச்சி பொங்க சீமான் பேசியது அனைத்தும் வெறும் வசனங்கள்தானா? இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பிரச்சனைகுரியவர்களைத் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் இதே கேள்விகளோடு அரங்கில் உங்களை சந்திக்க வேண்டியது வரும்' என எச்சரித்திருந்தனர்.

egalaivan.jpgஇதுதொடர்பாக, நூலின் ஆசிரியர் பா.ஏகலைவனிடம் பேசினோம். " பால் நியூமென் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஈழ மக்களுக்காகப் பேசி வருகிறார். விழாவில், சீமானையும், நியூமெனையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 'சீமானை அசிங்கப்படுத்துவோம்' என மிரட்டுகிறார்கள். காவல்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம். பால்நியூமெனின் கருத்துக்கு அவர்கள் மேடையில் எதிர்ப்பு தெரிவிக்கட்டும். அது ஜனநாய நடைமுறை. அதைவிடுத்து, 'கலாட்டா செய்து நடத்தவிட மாட்டோம்' என்பது சரியான அணுகுமுறை அல்ல.
இவ்வளவு பேசும் மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக ஈழ விவகாரத்தில் துரோகம் செய்த கட்சிகளுக்கு எதிராக எதாவது பிரசாரம் செய்தார்களா? நாம் தமிழர் கட்சி மீது மட்டும் பாய்வதில் உள்நோக்கம் இருக்கிறது. சீமானுக்கும் உங்களுக்குமான பிரச்னையை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பால் நீயூமென் ஏன் அவ்வாறு பேசுகிறார்? என்பதற்கான விளக்கம் இதே மேடையில் வெளிக்கொண்டு வரப்படும். இதற்கான ஏற்பாடு எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. அதைவிடுத்து நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகப்பூர்வ நடைமுறை கிடையாது" எனக் கொந்தளித்தார்.

'எந்தப் பிரச்னையும் இல்லாமல் புத்தக வெளியீட்டு விழா நடக்க வேண்டும்' என கடைசி நிமிட பதட்டத்தில் இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

பால் நியூமன்

https://www.patrikai.com/seeman-was-booed-on-the-show/

பால்நியூமன் துரோகம்

30 ஆண்டுகாலமாக தமிழனின விடுதலைக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்த உத்தம வீரர்களான விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்திய  பால்நியூமன் 
இன்று சென்னையில் நூல் வெளியீடு விழாவில் கலந்து கொள்கிறார்.
பால்நியூமன் என்பவர் யார்?
நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் ஆவார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் இந்த இனப்படுகொலை சம்மந்தமான விசாரனை நடக்கும் பொழுது டப்ளிங் நீர்ப்பாயத்திலும் விசாரனை நடைபெற்றது போது. இந்த விசாரனை மிகவும் முக்கியமான விசாரனையாகவும் இருந்த நேரத்தில் அங்கு இந்த பால்நியூமன் விடுதலைப் புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களை பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும் அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும், அதையும் மீறி புலிகள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தாகவும் அவ்வாறு திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்ததாகவும் மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் ,விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை  கேடயமாக பயன்படுத்தியதாகவும் பதிவு செய்திருந்தார் என பலர் பதிவு செய்திருந்தனர். இச்செயல் புலிகள் எந்த மக்களுக்காக உயிரை கொடுத்து போராடினார்களோ அவர்களுக்கான நீதியை பெறவும், தமிழ்ஈழத்தை பெற்றுத்தரவும் உருவாக்கிய கட்சி என கூவிக்கொண்டு தமிழகத்தில் இனவெறியை தூண்டி ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் பதிவு செய்தது அவர்களின் கட்சி தலைமைக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இது சம்பந்தமான கேள்விகள் எழும் வேலையில் பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது.
இதில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கின்றோம் என்பவர்களும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
பால்நியூமனை... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?....
இல்லை தெரிந்தும் இவர்கள் கண்டுகொள்ளாமல் தங்களது அரசியலுக்கு 
விளம்பரம் தேடுகிறர்களா?# நன்றி வழக்கறிஞர்  ராசேந்திரன்


Read more: http://www.thaaitamil.com/2016/05/blog-post_19.html#ixzz4Mc0me7yr

பால் நியூமன்

http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E2%80%99-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

பால் நியூமன்

சிறப்பு நேர்காணல்- பேராசிரியர் பால் நியூமன்
“திராவிடர் அல்லாத தமிழ்க் கட்சிகளின் எழுச்சி நம்பிக்கை ஏற்படுத்துகிறது”
திரு.பால் நியூமன் அவர்கள் பெங்களுர் பல்கலைக்கழத்தின் மனித உரிமைகள் துறைப் பேராசிரியர் ஆவார். 2009 ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையை ஐ.நா அரங்கிற்கு எடுத்து செல்லும் பணியை மேற்கொண்டவர். 2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பாயம் ஈழ இனப்படுகொலை குறித்த விரிவானதோர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்; அடிப்படையில்தான்; மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கேட்டறிய மூன்று பேர் குழுவை ஐ.நா ஈழத்திற்கு அனுப்பியது. என்பது குறிப்பிடத்தக்கது. டப்ளின் தீர்ப்பாயத்தின் நான்கு பிரதிநிதிகளில் தமிழர்கள் சார்பில் இடம் பெற்றவர் பேராசிரியர் பால் நியூமன் அவர்கள். நேர்காணலின்போது அவர் உண்மைத்தமிழனிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
1.கேள்வி: இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை, போர் என்றால் மனிதர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்கிறவர்களின் கருத்தைப் பற்றி உங்களது கருத்து என்ன?
2009ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சகட்டத்தில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறிதும் மனித்தன்மை இல்லாமல் போரில் மக்கள் கொல்லப்படுவது இயல்பு என்று கூறியிருந்தார். இலங்கையில் நடந்தது ஓர் இனப்படுகொலைதான். இது இனப்படுகொலையில்லை என்று சொல்வது ஒரு மிகப்பெரிய குற்றம். ஓர் ஆய்வாளராக நான் 1995ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை பலமுறை தமிழ் ஈழம் சென்று அங்கு நடந்த இனப்படுகொலையை ஆய்வுரீதியில் ஆவணப்படுத்தி உலக அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் இன அழிப்பு நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளேன். தமிழ்நாட்டில் தமிழர்கள் மேற்கொண்ட பல போராட்டங்கள் மற்றும் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் இதே ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக மூன்று தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதில் முக்கியமானது இலங்கையில் நடந்த இனப்படுகொலைதான் என்பது. இலங்கை வரலாற்றில் 1948ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கட்டமைப்பு ரீதியில் இனப்படுகொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. செப்டம்பர் 2008லிருந்து மே 2009 வரை 1,46,679 தமிழர்களை இன்று வரை காணவில்லை 3,00,000க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறையைவிடக் கொடுமையான மாணிக்ஃபார்ம் முகாம்களில் மூன்று ஆண்டு காலம் உணவு, மருத்துவம், குடிநீர், கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல், ஹிட்லர் காலத்தில் யூதர்களை நாஜி முகாம்களில் வைத்திருந்தது போல ஈவு இரக்கம் இல்லாமல் வதைத்துக் கொடுமைப் படுத்தினர். 90,000 தமிழ்ப் பெண்கள் போர் விதவைகளாய் மாறியிருக்கிறார்கள். 40,000 சிறு குழந்தைகள் அநாதைகளாக நிற்கின்றனர். ஐ.நா சபையின் எண்ணிக்கைப்படி 1,00,000 தமிழர் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுடிருக்கின்றன. தமிழர்களுக்குச் சொந்தமான 7,000 சதுர கி.மீ நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு இலங்கை இராணுவமயமாக்கப்பட்டு இந்தப் பிரதேசம் ஒரு இராணுவ முகம் போல் மாற்றப்பட்டிருக்கிறது. சிங்கள குடியேற்ற திட்டம், புத்தமத பிரசாரம், இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2500 தமிழர் வழிபாட்டு மையங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதை இனப்படு கொலை இல்லை என்று கூறுபவர்கள் தமிழ் இன விரோதிகள் அல்லது மனிதத்தன்மை இழந்தவர்கள்.
2. ஈழப் பிரச்சனை நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை மிக முக்கிய பங்கு வகித்து, தமிழர் உணர்வை மதிக்காமல் இன படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க அரசுக்கு மிக பெரிய தோல்வியை ஏற்படுத்தி பாடம் கற்றுக் கொடுத்தது. இந்த 2016 தேர்தலில் திராவிட கட்சிகளாகட்டும், தேசிய கட்சிகளாகட்டும் ஈழப் பிரச்சனையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அக்கட்சிகளின் தலைவர்கள் பிறப்பால் தமிழர்கள் இல்லை. இந்நிலையில், ஈழப் பிரச்சனையை வாக்கு வங்கி அரசியலாக கையில் எடுக்காமல் உண்மையான அக்கறையோடு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தும் சில அரசியல் அமைப்புகள் இந்தத் தேர்தலில் களம் காணுகின்றன. ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்று சட்டசபையில் இடம் பெறும் வாய்ப்பு வாய்க்குமானால் ஈழப் பிரச்னை உலக அரங்கை இன்னும் பலமாக தட்டும் என்றே நான் கருதுகிறேன்.
3. தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட எப்படிப்பட்ட அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
கடந்த 5 ஆண்டு காலமாக தமிழகத்தை எந்த ஒரு தமிழ் கட்சியும் ஆளவில்லை. திராவிடம் என்ற பெயிரில் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் தமிழ் இனத்தை இலவசங்களுக்கு கையேந்தும் இனமாக மாற்றி அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் சிந்திக்கும் திறன் இழந்து அடிமை கோலம் கொண்டு ஆட்டு மந்தைகள்போல் அக்கட்சிகளின் பின் அணிவகுக்கும் நிலையில் உள்ளனர். தமிழன் மண், நீர், காற்று, கனிமவளம், கடல்வளம், மலைவளம் அனைத்தும் இத்திராவிடர் ஆட்சியில் சுரண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நடுவண் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகள், நியூட்ரினோ திட்டம், நெய்வேலி மின்சாரம், மீத்தேன் எரிவாயு திட்டம் என்று தமிழக வளங்களை உறிஞ்சி நம் மக்களின் வாழ்வாதாரங்களையும், அவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். அண்டை நாடுகளின் மீனவர் கைதுகளை இந்திய மீனவர் என்றும், தமிழக மீனவர் என்றுமே வேறுபடுத்தி மாற்றான் தாய் மனப்போக்கோடுதான் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டுமெனில் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆழும் நிலை வரவேண்டும். இந்த தேர்தலில் திராவிடர் அல்லாத தமிழக்; கட்சிகளின் எழுச்சி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த கட்சிகளின் வரவு தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து காக்கும் என்று நம்புகின்றேன்.
4. தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என தமிழக மக்களிடம் பரவலாக தற்போது கருத்து நிலவுகிறது. இக்கருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?
தமிழ்நாட்டில் ஒரு கொடுமையான உண்மை என்னவெனில், நான் முன்பே கூறியதுபோல தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக பச்சைத் தமிழன் ஆளவில்லை. இறையாண்மை பேசுகிற இந்த இந்திய தேசத்திலேயே மொழிவாரியாகத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற கர்நாடகாவிலும், கேரளாவிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த அந்த மக்களின் மொழி பேசுகின்றவர்தான் முதலமைச்சராக உள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் கேரளாவிலோ, மலையாளி ஒருவர் கர்நாடகாவிலோ முதலமைச்சராக அமர முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழகத்தையும் ஒரு தமிழரே ஆள வேண்டும் என்கிற கருத்து இன்று தமிழக மக்களால் பலமாக சிந்திக்கப்பட்டு வருகின்றது. சித்தாந்த ரீதியிலேயும் இக்கருத்து சரியே. ஆனால் வந்தோரை எல்லாம் வாழ வைத்த நாம் செய்த மிகப்பெரும் தவறு, அவர்களை ஆள வைத்ததும்தான். இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.
5. எப்படிப்பட்ட அரசு தமிழகத்தில் அமைந்தால் தமிழீழம் மலர்வதற்கு இலகுவாக இருக்கும்?
தம்முடைய அரசியல் லாபத்திற்கும் தம் குடும்பத்தாரின், சுற்றத்தாரின் பொருளாதார நன்மைக்கும் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் வியாபார நோக்குடன் வெறும் வாய் வார்த்தை ஜாலங்களால் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் திராவிட கட்சிகள் அனைத்தும் முற்றிலும் துடைத்து எரியப்பட்டு உடலாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் உழைக்கின்ற மாற்று அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு தமிழ் கட்சியாலேயே தமிழ் இனம் அமைவதற்கான சாத்திய கூறுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான் ஏழரை கோடி தமி;ழர்களின் சார்பாக தமிழ் அறிவுசார் சமூகம் உலக அரங்கில் தமிழீழம் மலர்வதற்கான காரணங்களை வலியுறுத்தி ஒரு வாக்கெடுப்பு கோருவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். ஈழம் கனவு நனவாகும்.
6. தமிழீழம் மலர்வதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்படிப்பட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்?
2009ல் ஈழப்போருக்குப் பின் 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஈழத்தில் தமிழர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எண்ணற்ற ஈழப் போராளிகளின் ஈகத்திற்கு இன்றுவரை பலனில்லை. அதனால் ஈழத்தின் தாய்த் தமிழ் உறவாகிய தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் அன்றும் இன்றும் ஈழப்பிரச்சனையை மையப்படுத்தியே உள்ளன. திராவிட கட்சிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிய்த்து எறியப்பட காலம் நமக்கு வழிகாட்டி இருக்கிறது. இதை மனதில் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஒன்று, உலக அரங்கில் இனவெறி சிங்கள அரசின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட நம் இன மக்களுக்கு நீதியையும், நஷ்ட ஈட்டையும், அரசியல் தீர்வையும் எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு, தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் செல்வாக்கு மிக்க அரசுகளிடமும், அரசியல்வாதிகளிடமும் தமிழீழத்திற்கான தேவையை புரிய வைத்து உலக அரங்கிலும் ஐ.நா மன்றத்திலும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நோக்கிய நகர்வுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த செயலாற்ற வேண்டும்.
மூன்று, இங்கு தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசியத்தை கட்டமைக்க உழைத்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு வேண்டிய ஆதரவையும், உதவியையும் தாராளமாக நல்க வேண்டும்.