பக்கங்கள்

திருக்குறள்

புதன், டிசம்பர் 28, 2011

இவரெல்லாம் தமிழரல்லர்!!!!



கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்

செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்

ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்

கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்

எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்

மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்

துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்

நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்

தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்

மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கவிஞர் தாமரை //// கன்னடர்

பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

திருச்சி வேலுச்சாமி // தெலுங்கர்,

கிருஷ்ணசாமி // தெலுங்கர் , புதிய தமிழகம்

திருத்தம் : கவிஞர் அறிவுமதி தெலுங்கர் என தவறாக குறிக்கப்பட்டு விட்டது . அவர் வன்னியர் என்ற தமிழ் சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவுபடுத்த பட்டது .

தமிழ் சாதிகளை ஒன்றிணைத்து தமிழர்களாக அடையாளப் படுத்துவதே எங்களின் நோக்கம் .

நன்றி : திரு .அருண்குமார் .

நாம் தமிழர் கட்சி. கடலூர் மாவட்டம் .

திங்கள், டிசம்பர் 26, 2011

லோல்பால்....ஹசாரே குழு கோரிக்கை


30 வகை ஸ்வீட் - காரம் !


                                                       வாழ்க்கை இயந்திரத்தனமாகி விட்ட இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும்கூட, 'இன்னும் இருபது நாள்தான் இருக்கு... பதிமூணு நாள்தான் இருக்கு’ என்று 'கவுன்ட் டவுன்’ செய்து கொண்டு எதிர்நோக்கப்படும் பண்டிகை என்றால், அது தீபாவளிதான்!
அந்தப் பண்டிகையை இருகரம் நீட்டி வரவேற்கும் வகையில், நாவுக்கு  ருசியான 30 வகை ஸ்வீட் - காரத்துடன் உங்களுக்கு உதவ வருகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். அவர் அளித்துள்ள ரெசிபிகளை அழகுற அலங்கரித்து கண்ணுக்கும் விருந்தாக அமைத்துள்ளார் செஃப் ரஜினி.
தீப ஒளி திருநாளில் உங்கள் இல்லத்தில் இன்ப ஒளி வீச வாழ்த்துக்கள்!
 மைதா மில்க் பர்ஃபி
தேவையானவை: மைதா - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - மூன்றரை கப், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, காய்ந்ததும் (லேசாக புகை வரும்போது) மைதா மாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது பாத்திரத்தை கீழே இறக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால்... ஏடு போல் படிந்து இருக்கும். அந்த சமயம் அக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு, துண்டுகள் போடவும்.
 ஜவ்வரிசி - வெல்ல லட்டு
 
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி - திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு,ஜவ்வரிசியை மிதமான தீயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறியதும், மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.
இதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, மீதமுள்ள நெய்யில் முந்திரி - திராட்சையை வறுத்து அதில் சேர்த்துக் கலந்து, சிறிய சிறிய லட்டுகளாக பிடிக்கவும்.
 கலர்ஃபுல் காராபூந்தி
தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், ஃபுட் கலர் (சிவப்பு, பச்சை) - தேவையான அளவு, வேர்க்கடலை - அரை கப், முந்திரி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, மூன்று கிண்ணங்களில் பிரித்து வைக்கவும். ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். மூன்றாவது கிண்ணத்தில் கலர் எதுவும் சேர்க்கத் தேவைஇல்லை. பிறகு, ஒவ்வொரு கிண்ணத்திலிருக்கும் மாவையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பின்பு எண்ணெயை காய வைத்து, ஒவ்வொரு கலர் மாவையும் பூந்திக் கரண்டியில் பூந்திகளாக தேய்த்து பொரித்து எடுக்கவும். பூந்திகளை அகலமான தட்டில் கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.
 ரிப்பன் பக்கோடா
தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், நெய் - 2 (அ) 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 சோமாசி
தேவையானவை - மேல்மாவுக்கு: மைதா - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
பூரணத்துக்கு : பொட்டுக்கடலை - ஒரு கப், துருவிய கொப்பரை - கால் கப், பூரா சர்க்கரை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும். பூரா சர்க்கரை இல்லாவிட்டால் சாதாரண சர்க்கரையும் சேர்க்கலாம்) - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரிப் பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மேல்மாவுக்கு கொடுத்துள்வற்றை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பொட்டுக் கடலை, கசகசா இரண்டையும் தனித்தனியாக வறுத்து, துருவிய கொப்பரை சேர்த்து மிக்ஸியில் பவுடராக்கவும். இதனுடன் பூரா சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் தயார்.
பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது எடுத்து வாழை இலையில் மெல்லியதாக தட்டி, அதில் சிறிதளவு பூரணத்தை ஒரு பாதியில் வைத்து மறுபாதியால் மூடவும். இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு ஒட்டவும். பிறகு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேபோல எல்லாவற்றையும் செய்யவும்.
 சிரோட்டி
தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரைத்தூள் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: மைதா, அரிசி மாவு, நெய் மூன்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, சிறிய வடிவ பூரிபோல தேய்க்கவும். மூன்று மூன்று பூரிகளாக ஒன்றன் கீழ் ஒன்று வைத்து ஒட்டி, பின்புறமாக பாய்போல் சுருட்டவும். பிறகு, மூன்று துண்டுகளாக்கி ஒவ்வொன்றையும் கைகளால் வட்டமாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து, மேலே சர்க்கரைத்தூள், ஏலக்காய்தூள் தூவி பரிமாறவும்.
தேங்காய் போளி
தேவையானவை - மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. நெய் - சுட்டு எடுக்க தேவையான அளவு.
செய்முறை: மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பூரணத்துக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாகக் கிளறவும். மேல் மாவில் இருந்து சிறிது எடுத்து வாழை இலையில் வைத்து தட்டி, நடுவில் பூரணத்தை வைத்து மூடவும். மறுபடியும் மெல்லியதாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
 பக்கர்வாடி
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், சோள மாவு (அ) மைதா மாவு - அரை கப், புளித் தண்ணீர் - அரை கப், நெய் (அ) வனஸ்பதி - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: கொப்பரை துருவல் - ஒரு கப், வெள்ளை எள் - கால் கப், கசகசா - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு பட்டை - தலா ஒன்று (பொடித்துக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவு (அ) மைதா மாவு, கடலை மாவு, நெய் (அ) வனஸ்பதி மற்றும் உப்பை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்கவும். இதுதான் மேல் மாவு. கடாயை காய வைத்து கொப்பரைத் துருவல், கசகசா, எள் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பொடித்த ஏலக்காய் - கிராம்பு - பட்டைத் தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்  பூரணம் தயார்.
பிசைந்து வைத்திருக்கும் மேல் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும் அதன் மேல் புளித்  தண்ணீரை தெளித்து தடவவும். இப்போது தயாரித்து வைத்துள்ள பூரணத்திலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தியில் பரப்பவும். சப்பாத்தியை பாய் போல் சுருட்டி, சிறுசிறு துண்டுகளாக 'கட்’ செய்து, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 அரிசிப்பொரி - வெல்ல மிட்டாய்
தேவையானவை: அரிசிப்பொரி - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு - அரை கப், வறுத்த வேர்க்கடலை - முக்கால் கப், பொட்டுக்கடலை - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பொரி, பாதாம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை இந்த நான்கையும் மிக்ஸியில் பவுடராக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்க்கவும். பின்பு பொடித்த பவுடரை தூவவும். உடனே கெட்டியாகிவிடும். கீழே இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.
பயத்தமாவு ஈஸி பர்ஃபி
தேவையானவை: வறுத்து, அரைத்த பயத்தமாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒரு கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - திராட்சை - 2 டீஸ்பூன்.
செய்முறை: பயத்தமாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யை கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்து லேசாக புகைந்து வரும்போது... முந்திரி, திராட்சையை வறுத்து சூட்டுடன் மாவில் கொட்டவும். இதை நன்றாகக் கலந்து தட்டில் கொட்டி (கிண்ணத்தின் அடிப்பாகத்தால்) அழுத்தி விடவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து (ஃபீரிஸரில் வேண்டாம்) இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால், நன்றாக செட் ஆகி இருக்கும். இப்போது துண்டுகள் போடவும்.
 முறுக்கு
தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 2 கப், சமையல் சோடா, பெருங்காயத்தூள், சீரகம் (அ) வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன், நெய் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் உப்பு, நெய், சமையல் சோடாவை நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து, சீரகம், (அ) வெள்ளை எள் மற்றும் பெருங்காயத்தூளையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்து கொண்டுஇருக்கும் எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக எடுக்கவும்.
 ரைஸ் பெப்பர் ரிங்ஸ்
தேவையானவை: அரிசி மாவு - 2 கப் (அரிசியை களைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு காய வைத்து மாவாக அரைக்கவும்), மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - கால் கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்ணெயுடன் உப்பு சேர்த்துக் குழைக்கவும். அதனுடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். அதிலிருந்து சிறிய அளவு மாவு எடுத்து நீளமாக உருட்டி இரண்டு முனைகளையும் சேர்த்து ’ரிங்’ (வளையம்) போல் செய்யவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, செய்து வைத்துள்ள 'ரிங்’குகளை பொரித்து எடுக்கவும்.
ஃப்ரூட் அல்வா
தேவையானவை: பப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்த பழக்கூழ் - 2 கப், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பல் பவுடர் கால் கப், குளூக்கோஸ் பவுடர் - 3 டீஸ்பூன்,  ஃப்ரூட் எசன்ஸ் - அரை டீஸ்பூன், பாதம், முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், ஆரஞ்சு கலர் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரி துண்டுகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். நன்றாக கெட்டியானதும் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும்.
 கோதுமை அல்வா
தேவையானவை: சம்பா கோதுமை - ஒரு கப், சக்கரை - 3 கப், நெய் - ஒரு கப், கேசரி பவுடர் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை :  கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த தண்ணீரை சேர்த்து கோதுமையை விழுதாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அப்படியே தனியாக  அரை மணி நேரம் வைக்கவும். மேலே தண்ணீர் தெளிந்து இருக்கும். கீழே குழம்பாக பால் போன்று இருக்கும். மேலே தெளிந்த நீரை எடுத்து தனியே வைக்கவும். இந்த நீரில் தேவையான சர்க்கரையை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது விட்டு (சர்க்கரை மூழ்கும் வரை), அடுப்பில் வைத்து, இரட்டை கம்பி பதத்துக்கு வந்தவுடன் கோதுமைப் பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கிளறவும். உருக்கிய நெய்யையும் சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அதில் முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். நன்றாக திரண்டு கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமப்படுத்தி, ஆறியவுடன் துண்டு களாக்கவும்.
ஸ்டஃப்டு பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - இரண்டரை கப், சமையல் சோடா - ஒரு டீஸ்பூன், கெட்டியான தயிர் (சிறிது புளிப்பானது)  - ஒரு கரண்டி, வனஸ்பதி - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப்பிங்குக்கு: பேரீச்சை, திராட்சை, முந்திரி, பாதம் - தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சை, திராட்சை, முந்திரி, பாதம் எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் பூரணம். சர்க்கரையை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு திக்கு பாகு (ஒரு கம்பி பதம்) காய்ச்சவும்.
சமையல் சோடாவையும், வனஸ்பதியையும் குழைக்கவும். இதனுடன் மைதா, தயிர் சேர்த்து நன்றாக பிசிறிக் கொள்ளவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவாக பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். சிறிதளவு மாவை எடுத்து உள்ளங் கையில் வைத்து மெதுவாக உருட்டி சொப்பு போல் செய்து, நடுவில் சிறிதளவு பூரணத்தை வைத்து மூடி, கையினால் லேசாக உருட்டி வடைபோல் தட்டி, நடுவில் கட்டை விரலால் லேசாக அழுத்தி, எண்ணெயில் பொரிக்கவும். தயாராக இருக்கும் சர்க்கரைப் பாகில் நனைத்து எடுத்து வைக்கவும்.
 அதிரசம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப் (பாகு வெல்லம்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி ஊற வைத்து, களைந்து வடித்து, லேசாக ஈரத்துடன் இருக்கும்போது மாவாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை வடிகட்டியில் வடிகட்டி, திரும்பவும் அதே பாத்திரத்தில் போட்டு காய்ச்சவும். உருட்டும் பதத்துக்கு வந்தவுடன், பாகில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும். கூடவே  ஏலக்காய்த்தூளையும் சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இறுகி வந்ததும்,  மெல்லியதாக தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் சிவந்ததும் ஒரு கரண்டியால் எடுத்து, மற்றொரு கரண்டியை வைத்து அழுத்தி, எண்ணெய் வடிந்ததும் ஒரு தாம்பாளத்தில் அடுக்கவும்.
 பொட்டுக்கடலை ஓமப்பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓமத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். இந்த தண்ணீருடன் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் உப்பு, மிளகாய்த்தூள்  சேர்த்துப் பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கோவா - பேரீச்சை பர்ஃபி
தேவையானவை: கோவா (சர்க்கரை இல்லாதது) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - ஒரு கப் (சிறிதளவு பாலில் ஊற வைக்கவும்), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கோவாவில் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமாக தீயில் கிளறவும். கலவை இறுகும்போது நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பாத்திரத்தின் ஒரங்களில் கலவை ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி வைத்து
அடுப்பை அணைக்கவும். பிறகு, பாதி கலவையை எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். இப்போது அரைத்து வைத்த பேரீச்சம்பழ விழுதை சமமமாக பரவலாக தடவவும். மீதி உள்ள கோவா கலவையை அதன் மீது சரிசமமாக பரப்பி, சிறிது ஆறியதும் துண்டுகளாக்கவும்.
ரவை தட்டை
தேவையானவை : ரவை - ஒரு கப், மைதா - 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய், உப்பை நன்றாகக் குழைத்து... ஓமம், ரவை, மைதா சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். இந்த மாவை சிறிய சிறிய தட்டையாக தட்டி,  சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பயத்தம் முறுக்கு
தேவையானவை: அரிசி - 5 கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், வெண்ணெய் - அரை கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும் பயத்தம்பருப்பையும் (வறுக்க வேண்டாம்) ஒன்றாக சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். இதனுடன் வெண்ணெய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.  மாவை  ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து பொரித்தெடுக்கவும்.
நிப்பட்டுலு (ஆந்திரா தட்டை)
தேவையானவை: அரிசி மாவு - 2 கப், மைதா - கால் கப், கடலை மாவு அரை கப், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், சீரகம் (அ) எள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து தட்டைகளாக தட்டவும். சூடான எண்ணெயில் தட்டைகளை பொரித்து எடுக்கவும்.
 கடலை மாவு பர்ஃபி
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு - தலா  ஒன்றேகால் கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான கடாயில் நெய்யை ஊற்றி, கடலை மாவு, மைதா மாவு, சேர்த்துக் கலந்து, பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இரட்டை கம்பி பதம் வந்தவுடன் வறுத்து வைத்துள்ள மாவில் ஒரு கையால் பாகை ஊற்றிக்கொண்டே, நீண்ட காம்பு உள்ள கரண்டியால் கிளறவும் (பாகை ஊற்றும்போதே கெட்டியாகிவிடும். கவனமாக கிளறவும்). உடனடியாக நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.
 மிளகு துக்கடா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்,  நெய் (அ) வனஸ்பதி - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய் (அ) வனஸ்பதியுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து, கத்தியினால் குறுக்கு நெடுக்காக டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 பால் பவுடர் பர்ஃபி
தேவையானவை: பால் பவுடர் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - அரை கப்.
செய்முறை: அடுப்பில் நெய்யை ஊற்றி, காய்ந்ததும் பால் பவுடரை வறுத்து, நன்றாக ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் பொரித்த பால் பவுடரை சேர்த்துக் கிளறி, கெட்டியாக வந்தவுடன் தட்டில் கொட்டவும். ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.
 வாழைப்பழ அல்வா
தேவையானவை: வாழைப்பழம் - 3, நெய் - 3 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப்.
செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கவும்.  வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பாகு பதம் வரும்போது, வதங்கிக் கொண்டிருக்கும் வாழைப்பழ கலவையில் ஊற்றி, நுரை அடங்கும் வரை நன்றாகக் கிளறி, கெட்டியானவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியவுடன் பரிமாறவும்.
 தூத்பேடா
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப், சர்க்கரை பவுடர் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த பிஸ்தா - ஒரு டீஸ்பூன்.
செய்முறை : அடுப்பில் கோவாவை போட்டு, சர்க்கரை பவுடரை தூவி, கெட்டியாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கீழே இறக்கவும். சிறிது ஆறியவுடன் வட்டம், சதுரம், உருண்டை என விருப்பமான வடிவங்களில் செய்து பரிமாறவும்.
முந்திரி பால் ஸ்வீட்
தேவையானவை: முந்திரித் தூள்- அரை கப், பால், - ஒரு லிட்டர், சர்க்கரை - இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாலுடன் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலவை இறுகி கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். கீழே இறக்கி, முந்திரித் தூள் , நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி (அடுப்பில் வைக்க வேண்டாம்), கெட்டியாக வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக போடவும்.
 காரா சேவு
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், சமையல் சோடா - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் (ஒன்றிரண்டாக பொடித்தது) - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய்யையும், உப்பையும், சமையல் சோடாவுடன் சேர்த்துக் குழைக்கவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த மாவை காராசேவு தட்டில் தேய்த்து காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (கார சேவு தட்டு இல்லாதவர்கள் தேன்குழல் நாழியில் பிழிந்து சிறிய, சிறிய துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளலாம்).
மைதா - ரவா ஸ்வீட் பால்ஸ்
தேவையானவை : மைதா - ஒரு கப், எண்ணெய் - கால் கப், சமையல் சோடா - அரை டீஸ்பூன், ரவை - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இஞ்சி - பேரீச்சை லேகியம்
 தேவையானவை : துருவிய இஞ்சி - ஒரு கப், பேரீச்சை (விதை நீக்கியது) - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், வறுத்த சீரகம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை : பேரீச்சம்பழம், இஞ்சி, வறுத்த சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிது தண்ணீரில் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். வெல்லம் தளதளவென்று கொதிக் கும்போது அரைத்த விழுதைக் கொட்டி கிளறி, நெய் சேர்த்து மேலும் கிளறி கைகளில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

நன்றி அவள்விகடன்

புதன், டிசம்பர் 21, 2011

எம்.எல்.எக்கள் மின்னஞ்சல் முகவரிகள்...

ஒவ்வொரு தொகுதி எம்
எல் ஏக்கும் ஒரு ஈ
மெயில்
ஐடி கொடுக்கப்பட்டுள
்ளது. இனிமேல் உங்கள்
" நியாமான "
கோரிக்கைகளை நீங்கள்
அனுப்பலாம். பதில்
வருமா வராதான்னு எனக்கு தெரியாது,
என்னை கேட்டாள்
எல்லா எம் எல் ஏக்கும்
லேப் டாப்
கொடுக்கப்பட்டுள
்ளது அதனால்
கண்டிப்பாக பதில்
கிடைக்கும் என
நம்புவோம். 234
தொகுதி எம் எல்
ஏக்கு தனி தனியே கொடுக்கபட்டுள்ளது,
வழக்கம் போல
பகிரவும்...
1 Acharapakkam -
mlaacharapakkam@tn.gov.in
2 Alandur -
mlaalandur@tn.gov.in
3 Alangudi -
mlaalangudi@tn.gov.in
4 Alangulam -
mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram --
mlaambasamudram@tn.gov.in
6 Anaicut --
mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --
mlaandhiyur@tn.gov.in
8 Andimadam ---
mlaandimadam@tn.gov.in
9 Andipatti----
mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar---
mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----
mlaarakkonam@tn.gov.in
12 Arantangi--
mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi ---
mlaaravakurichi@tn.gov.in
14 Arcot ---
mlaarcot@tn.gov.in
15 Ariyalur --
mlaariyalur@tn.gov.in
16 Arni --
mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---
mlaaruppukottai@tn.gov.in
18 Athoor---
mlaathoor@tn.gov.in
19 Attur ---
mlaattur@tn.gov.in
20 Avanashi ---
mlaavanashi@tn.gov.in
21 Bargur ---
mlabargur@tn.gov.in
22 Bhavani---
mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---
mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----
mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----
mlabodinayakkanur@tn.gov.i
n
26 Chengalpattu-----
mlachengalpattu@tn.gov.in
27 Chengam---
mlachengam@tn.gov.in
28 Chepauk---
mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---
mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---
mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---
mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---
mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----
mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----
mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---
mlacolachel@tn.gov.in
36 Coonoor----
mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---
mlacuddalore@tn.gov.in
38 Cumbum---
mlacumbum@tn.gov.in
39 Dharapuram---
mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---
mladharmapuri@tn.gov.in
41 Dindigul---
mladindigul@tn.gov.in
42 Edapadi---
mlaedapadi@tn.gov.in
43 Egmore---
mlaegmore@tn.gov.in
44 Erode----
mlaerode@tn.gov.in
45 Gingee---
mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---
mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----
mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----
mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----
mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----
mlaharbour@tn.gov.in
51 Harur----
mlaharur@tn.gov.in
52 Hosur---
mlahosur@tn.gov.in
53 Ilayangudi---
mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---
mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---
mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---
mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----
mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---
mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----
mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---
mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----
mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----
mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----
mlakaraikudi@tn.gov.in
64 Karur----
mlakarur@tn.gov.in
65 Katpadi----
mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---
mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---
mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----
mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---
mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---
mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---
mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----
mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---
mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----
mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---
mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---
mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---
mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---
mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---
mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---
mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----
mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----
mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----
mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----
mlamangalore@tn.gov.in
85 Mannargudi----
mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----
mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----
mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---
mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---
mlamelur@tn.gov.in
90 Mettupalayam---
mlamettupalayam@tn.gov.in
91 Mettur---
mlamettur@tn.gov.in
92 Modakkurichi---
mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---
mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---
mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----
mlamugaiyur@tn.gov.in
96 Musiri---
mlamusiri@tn.gov.in
97 Mylapore---
mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----
mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---
mlanagercoil@tn.gov.in
100 Namakkal---
mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---
mlananguneri@tn.gov.in
102 Nannilam----
mlanannilam@tn.gov.in
103 Natham-----
mlanatham@tn.gov.in
104 Natrampalli----
mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----
mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---
mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---
mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---
mlaomalur@tn.gov.in
109 Orathanad---
mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---
mlaottapidaram@tn.gov.in
111
Padmanabhapuram----
mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---
mlapalacode@tn.gov.in
113 Palani----
mlapalani@tn.gov.in
114 Palayamkottai---
mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---
mlapalladam@tn.gov.in
116 Pallipattu---
mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---
mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---
mlapanruti@tn.gov.in
119 Papanasam---
mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---
mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----
mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----
mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----
mlapennagaram@tn.gov.in
124 Perambalur----
mlaperambalur@tn.gov.in
125 Perambur---
mlaperambur@tn.gov.in
126 Peranamallur---
mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---
mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---
mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---
mlapernambut@tn.gov.in
130 Perundurai---
mlaperundurai@tn.gov.in
131 Perur---
mlaperur@tn.gov.in
132 Pollachi---
mlapollachi@tn.gov.in
133 Polur---
mlapolur@tn.gov.in
134 Pongalur---
mlapongalur@tn.gov.in
135 Ponneri---
mlaponneri@tn.gov.in
136 Poompuhar---
mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----
mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----
mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----
mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---
mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---
mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---
mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---
mlaranipet@tn.gov.in
144 Rasipuram----
mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----
mlarishivandiyam@tn.gov.in
146
Dr.RadhakrishnanNagar----
mlarknagar@tn.gov.in
147 Royapuram---
mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---
mlasaidapet@tn.gov.in
149 Salem -I---
mlasalem1@tn.gov.in
150 Salem-II---
mlasalem2@tn.gov.in
151 Samayanallur---
mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---
mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---
mlasankarapuram@tn.gov.in
154 Sankari---
mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---
mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----
mlasattangulam@tn.gov.in
157 Sattur---
mlasattur@tn.gov.in
158 Sedapatti----
mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----
mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---
mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----
mlasholinghur@tn.gov.in
162 Singanallur---
mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----
mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----
mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---
mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---
mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---
mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---
mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---
mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---
mlatalavasal@tn.gov.in
171 Tambaram---
mlatambaram@tn.gov.in
172 Taramangalam---
mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----
mlatenkasi@tn.gov.in
174 Thalli---
mlathalli@tn.gov.in
175 Thandarambattu---
mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---
mlathanjavur@tn.gov.in
177 Theni---
mlatheni@tn.gov.in
178 Thirumangalam---
mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---
mlathirumayam@tn.gov.in
180
Thirupparankundram---
mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---
mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---
mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---
mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---
mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---
mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---
mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---
mlathottiam@tn.gov.in
188 Tindivanam---
mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---
mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----
mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----
mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---
mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----
mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---
mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----
mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----
mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----
mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----
mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---
mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----
mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---
mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----
mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----
mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----
mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---
mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---
mlatrichy2@tn.gov.in
207 Triplicane----
mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---
mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---
mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---
mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---
mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---
mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---
mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---
mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----
mlavalangiman@tn.gov.in
216 Valparai----
mlavalparai@tn.gov.in
217 Vandavasi----
mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----
mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----
mlavanur@tn.gov.in
220 Varahur-----
mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---
mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---
mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---
mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---
mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---
mlavellakoil@tn.gov.in
226 Vellore---
mlavellore@tn.gov.in
227 Vilathikulam---
mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---
mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---
mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---
mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----
mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---
mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---
mlayercaud@tn.gov.in
234 ThousandLights---
mlathousandlights@tn.gov.in
Reference By : http://
www.tn.gov.in/
telephone/email-

செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!


தினமும் ரூ.32 செலவு செய்ய முடிந்தவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் வறுமைக்கோட்டுக் கீழ் வர மட்டார்கள் என திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அளித்த அறிக்கையால் நாடு வெகுண்டெழுந்திருக்கிற இந்த நேரத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட, அதிநவீன, ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியின் கார் மாற்றப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவினாலும், ராஷ்டிர பதி பவனோ, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமோ இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது.
அப்படி என்ன தான் இந்த காரில் விசேஷம் என்று பார்ப்போம். ஜனாதிபதிக்காக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காரின் மாடல் எண்: மெர்சிடீஸ் பென்ஸ் S 600 L புல்மேன். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காரைப் போல, இந்தக் காரில் ஆங்காங்கே அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். புல்லட் புரூப் வசதி, சிறிய தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் சிற்சில வெடிபொருட்கள் எல்லாம் காரிலேயே பொருத்தப்பட்டுள்ளன. ஏதாவது பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் போது சமாளிக்கத்தான் இத்தனை வசதிகள் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல பிளாட் டயர் வசதி, தீயணைப்புக் கருவிகள் என இன்னும் பல வசதிகளும் இருக்கின்றனவாம்.
கடந்த ஜூன் மாதம் இந்தக் கார் வாங்கப்பட்டதாகவும், அதன் பின் தேவைக்கேற்ப நிபுணர் குழு பரிந்துரையின் படி பாதுகாப்பு உபகரணங்கள் ஃபிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பாதுகாப்பு மட்டுமல்ல சொகுசு அம்சங்களும் தாராளமாக புகுத்தப்பட்டுள்ளன இந்தக் காரில். 517 ஹார்ஸ் பவர் கொண்ட r 12 சிலிண்டர் பயோ டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு எத்தகைய அபாயகரமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மினி மீட்டிங் நடத்தும் அளவுக்கு ஸ்பேஸ் இருக்கிறதாம். வழக்கமாக எல்லா சொகுசு கார்களிலும் இருக்கும் டி.வி., தவிர அதிநவீன தொலைதொடர்பு சாதனங்களும் இருக்கிறதாம்.
கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் நடத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் எக்ஸ்போவில் தான் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காருக்குள் விஷ வாயுவை செலுத்தினால் கூட அதை சுத்திகரித்து நல்ல சுத்தமான காற்றை அளிக்கும் படிக்கு, ஏர் கண்டிஷனரும் பொருத்தப்பட்டுள்ளதாம். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 550 சிறப்பு உபகரணஙகள் காரில் பொறுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, சூப்பர் சோனிக் விமானத்தில் பயணித்த முதல் பெண் ஆகிய பல பெருமைகளுடன், சூப்பர்சோனிக் காரிலும் பயணப்பட இருக்கிறார் பிரதிபா பாட்டீல்.
இத்தகைய ஸ்பெஷல் கார் குறித்த செய்தி கசிந்ததில் இருந்து பல்வேறு தரப்பினர், 6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கார் அனாவசியமானது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிலிபிட் தொகுதி பா.ஜ., எம்.பி., வருண் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ” 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன கார் வாங்கப்பட்டுள்ளதாம், அதில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால், அது ஜனாதிபதிக்கா இல்லை பேட்மேனுக்கா என தெரியவில்லை” என கூறியுள்ளார்.

சனி, டிசம்பர் 17, 2011

தொலைக்காட்சி முகவரிகள்!!!

தமிழன் தொலைக்காட்சி
தொலைப்பேசி எண்:/Telephone Contact:
+91-44 -2479 5411, 2479 4803, 2479 7047
தொலை அச்சு/Fax:
+91-44 -2479 4802 
RAJ TELEVISION NETWORK LTD.
32, POES ROAD 2ND STREET,
TEYNAMPET,
CHENNAI - 600 018
PHONE : 044 24334149, 24334150, 24334151,
24351898, 24352926
FAX : 91-44-24341260
E-MAIL : rajtv@vsnl.com, administrator@rajtvnet.in
RAJ KANADA MUSIX CHANNEL
#16/1,K K M P,
MILLERS TANK BUND ROAD,
VASANTH NAGAR,
BANGLORE-560052
PH- 080-22343123
1416, ANSAL TOWERS,
14TH FLOOR, 38 NEHRU PLACE,
NEW DELHI - 110 019
PHONE : 099-32961356
FAX : 011-41606865
NO.11 HENDRE CASTLE
GOHLE ROAD (N), DADAR (W)
MUMBAI - 400 028
PHONE : 022-24440035, 24457533
FAX : 022-24440568

NO.28, ROAD NO.8, FILM NAGAR
JUBILEE HILLS
HYDERABAD - 500033
PHONE : 040-23556821, 23540387
FAX : 040-23556205
புதிய தலைமுறை டிவி
No.25A, N.P. Industrial Estate
Ekkaduthangal
Chennai – 600 032.
Phone: 044-45969500
Fax: 044-45969536

கலைஞர் தொலைக்காட்சி பிரைவேட்லிமிடெட்
தபால் பெட்டி எண் : 6415
சென்னை - 600 018

தொலைபேசி எண் : +91 - 44 - 24307777
/////தொலைநகல்எண் : +91 - 44 - 24335053
































Sun TV Network Corporate Office
  Murasoli Maran Towers
  73, MRC Nagar Main Road,
  MRC Nagar,
  Chennai - 600 028
  Tamil Nadu, India.
  Phone No: 044 - 44676767
  Fax: 044 - 40676161
Sun TV Network Regional Offices
Gemini TV
  8-2-502/1/AG,
  Road No:7,
  Banjara Hills,
  Hyderabad-34.
  Andrapradesh, India.
  Ph: 040-23358679/770/772
  Fax: 040-23358771
Udaya TV
  Maran Towers
  No.9, Brunton Road, Off M.G. Road
  Bangalore - 560 025
  Karnataka, India.
  Phone No: 080 – 25327272
  Fax: 080 – 25124202


Surya TV (Trivandrum)
  Lotus Gardens,
  TC 9/923, Panikkers Lane
  Sasthamangalam,
  Trivandrum - 695010.
  Kerala, India.
  Ph: 0471-2727744
  Fax: 0471-2727080
Surya TV (Cochin)
  2nd Floor, Heavenly Plaza
  Civil Station Road,
  Vazhakkala
  Cochin - 680021
  Kerala, India.
  Ph: 0484-4422333
  Fax: 0484-4422300
































  1. WIN TV
    Thiru Complex, 3rd Floor,
    44, Pantheon Road, Egmore,
    Chennai, INDIA - 600 008.
    Phone: 91-44-28584782/83,
    Fax: 91-44-28584780
    E-Mail: support@wintvindia.com




மெகா டிவி

24,6வது மெயின் ரோடு
கஸ்தூரிபா நகர்-அடையார்
சென்னை -600020
தொலைபேசி-91-44-24421888
                              91-44-24437777
தொலை நகல்-91-44-24421222
மின்னஞ்சல்:megatv@megatv.in























































செவ்வாய், டிசம்பர் 13, 2011

சரத்பவார்!!!

பளார் பவார்!

அண்மையில் ஆத்திரக்கார இளைஞன் ஒருவன் கையால் கன்னத்தில் பரிசு வாங்கிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், ஒரு சர்க்கரை மனிதர், இனிப்பானவர் என்பதால் அல்ல, இந்திய சர்க்கரைத் தொழிலை ஆட்டுவிக்கும் மராட்டிய மாநிலத்தின் பாராமதியை ஆட்டுவிப்பவர் என்பதால்.

பாராமதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கட்டேவாடி என்ற குக்கிராமத்தில் விவசாயிகள் அமைத்திருந்த கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து வந்த கோவிந்தராவ் பவாருக்கு 11 குழந்தைகள். அந்தப் பதினோரு பேரில் ஒருவர் சரத்சந்திர பவார். அவ்வளவு எளிய குடும்பத்தில் பிறந்த அவரை இன்று அந்தப் பகுதி மக்கள் முதலாளி (சாகேப்) என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவு செல்வம் கொழிக்கிறது.

1940ல் பிறந்த பவார் (டிசம்பர் 12), புனேயில் உள்ள கல்லூரியில் படித்தார். படிப்பில் சுமார்தான். ஆனால், அரசியலில் ஆர்வம் அதிகம். அவர் முதலில் களம் இறங்கியது 16 வயதில், கோவாவின் விடுதலைக்கு ஆதரவாக மராட்டியத்தில் நடந்த போராட்டங்களில்.

தமிழ்நாட்டில் காமராஜரைப்போல் மராட்டியத்தில் மூத்த தலைவராக விளங்கிய ஒய்.பி.சவான்தான் இவரது அரசியல் குரு. அவரது அரவணைப்பில் 27 வயதில் மகராஷ்டிராவின் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எமர்ஜென்சி காரணமாக இந்திரா காந்தி செல்வாக்கிழந்தபோது  காங்கிரசை உடைத்துக்கொண்டு வெளியேறி, பாஜகவின் முன்னோடியான ஜனசங்கத்துடன் சேர்ந்து கூட்டணி அமைத்து 1978ல் ஆட்சியைக் கைப்பற்றி, தனது 38வது வயதில் இந்தியாவின் பணக்கார மாநிலத்தின் முதல்வரானார். 1980ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செய்த காரியங்களில் ஒன்று, இவரது அரசை டிஸ்மிஸ் செய்தது.

அதையடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திரா ஏ.ஆர்.அந்துலேயை முதல்வராக்கி, சவானை ஓரம் கட்டினார். ஆனால் சற்றும் அசராத சவான், மாநிலக் காங்கிரசின் மாநிலத் தலைவராகி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வென்றார்.
மராட்டியத்தில் சிவசேனா தலையெடுக்க ஆரம்பித்தபோது அதன் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரசிற்கு இவர்தான் தேவைப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த இவரை ராஜீவ்காந்தி, மராட்டியத்தின் முதல்வராக ஆக்கினார்.

தில்லியிலும் மும்பையிலும் மாறி மாறிப் பதவி வகித்த சரத்பவார், சோனியா காங்கிரசிற்குத் தலைமையேற்றபோது, இந்தியாவில் பிறந்தவர்தான் காங்கிரசிற்குத் தலைமை ஏற்க வேண்டும் என போர்க்கொடி பிடித்து, காங்கிரசிலிருந்து வெளியேறி, அப்போதைய நாடாளுமன்றத் தலைவர் சங்மாவுடன் சேர்ந்து தேசியவாதக் காங்கிரசை ஆரம்பித்தார். ஆனால், விதி வலியது. இப்போது சோனியாவின் தலைமையை ஏற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தேசியவாதக் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது! காரணம், மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் அதற்கு ஆட்சியில் கிடைத்திருக்கும் பங்கு.

முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஏராளமான ஊழல் புகார்களைச் சந்தித்தவர். ஒன்றும் நிரூபணமாகவில்லை. இன்னும் சிலவற்றில் வழக்கு நடக்கிறது. ஊழல் இவர் ரத்தத்தில் ஊறியது என அன்னா ஹசாரே ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

பவாரின் இன்னொரு ஆர்வம் கிரிக்கெட். டால்மியாவுடன் போட்டியிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரானார். பின், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைமைப் பதவியும் வாய்த்தது.

சரத்பவாருக்கு ஒரே மகள் சுப்ரியா. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சகோதரி மகன் அஜீத் பவார், அரசியல் வாரிசாக உருவாகி வருகிறார். ஒரு சகோதரர் பிரதாப், ‘சகல்’ என்ற செல்வாக்கு மிக்க மராத்திய தினசரியை நடத்துகிறார்.

ஆரம்பத்தில் எளிய குடும்பம், பின் முதலாளி, பெரும் பதவிகள், ஊழல் குற்றசாட்டுக்கள், வாரிசு அரசியல், கைவசம் ஊடகம் என்ற எல்லாமும் இவர் காலத்தில் உருவான அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படுபவைதான். ஆனால், இவருக்குக் கிடைத்த பரிசுதான் பலருக்குக் கிடைக்கவில்லை (சுக்ராம் ஒரு விதிவிலக்கு).  

தற்கொலை 2010 வரை!!!!


பாபாஜிக்கு ரஜினி சீடர் ஆக முடியுமா?




ரஜினிஅதிரடி முடிவு-அதிர்ச்சியில் குடும்பம்
தமிழக அரசியல் இதழில் வந்த செய்த
" ரஜினியின் கடைசி படமாக எந்திரன் இருக்குமோ என்று ஐயம் வருகிறது. இந்தப்படத்துக்கு மட்டும் மூவாயிரம் பிரிண்டுகள் எடுக்கப்படுகிறதாம். ரிலீஸ் அன்று ரஜினி சென்னையில் இருப்பாராம். சில தினங்கள் அமெரிக்கா செல்வாராம். அங்கிருந்து திரும்பியதும் இமயமலைக்கு சென்று விடுவாராம். அங்கேயே ஒரு இடத்தை வாங்கி எளிமையான வீட்டையும் கட்டிவிட்டதாக தகவல்.அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார் என்று சொல்கிறார்கள்.

"என்ன காரணம்"?
"அதெல்லாம் தெரியவில்லை. மகள் திருமணம் செப்டம்பர் 3 ம் தேதி. அது ஒன்று தான் ரஜினி முன்னின்று நடத்த வேண்டியது. அது முடிந்ததும் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். மேலும் முதல் மகளுக்கு என்னென்ன சொத்துக்கள்,மனைவிக்கு இது, இரண்டாவது மகளுக்கு இது என்று பிரித்து விட்டாராம்.
சென்னைக்கு வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவாராம். ரஜினியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-------இது தான் அந்த செய்தி

அதாவது ரஜினி பாபாஜி பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். பாபா தனக்கு காட்சி தந்து தன்னை சீடராக்கி கொள்வார் என்பது ரஜினியின் நம்பிக்கையாக இருக்கலாம். அது நடக்குமா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

லெளகீக வாழ்க்கையில் பற்றுக் கொள்ளும் மனிதர்கள் யாரும் எந்த மகானுக்கும் சீடராக முடியாது என்பது இயற்கையின் நியதி.அதாவது ஆசையை துறந்த மனிதர்கள் தான் இந்த உலகத்தில் கண்ணுக்குள் புலப்படாமல் வாழ்வதாக கூறப்படும் மகான்களுக்கு சீடராக வரமுடியும்.

 

நம்ம ரஜினி....அய்யகோ..சென்னையில் பல கோடி மதிப்பில் சொத்து, கர்நாடாகவிலும் ஐதராபாத்திலும் பண்ணைவீடு தொழிற்சாலைகள் என்று மகாகோடீசுவரர்.

தெளிவாக எப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும்? அந்த சம்பாதியத்தை எப்படியெல்லாம் மனைவி மகள்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்கள் செழிப்பாக வளமாக வாழ வேண்டும் என்றெல்லாம் மிகத்துல்லியமாக திட்டம் போட்டு கொடுத்து விட்டு இவர் இமயமலைக்கு செல்வாராம்.

இவரை மகாஅவதார் பாபாவும், அவரது எந்த சுயநலமும் இல்லா சீடர்களும் "உங்களுக்காக தான் ரஜினி காத்திட்டிருந்தோம்" என்று வரவேற்பார்களாம். என்ன கொடுமை இது?

மனது முழுவதும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியும், அவர்கள் எந்த துன்பமும் படாமல் வாழவேண்டும் என்பதற்காக சொத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு செல்லும் இவரால் இமயமலைக்கு போய் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? தவம் செய்ய உட்கார்ந்தவுடன் இவரது எண்ணமெல்லாம் எங்கிருக்கும்?

"ஐயோ சொத்தை பிரித்துக் கொடுத்து வந்தோமே..இந்த சவுந்தர்யா ஏதாவது புதுக்கம்பெனி தொடங்குகிறோம் என்ற பெயரில் எதையாவது தொடங்கி கடனை வைத்து விடப்போகிறாளோ? கடன் காரர்கள் வந்து மொய்த்து கோர்ட், கேஸ் என்றாகி விட்டால் என்னவாகும்" என்றல்லவா மனம் நினைக்கும். எப்படி தவம் செய்ய முடியும்?

பாபா யாரை தனக்கு சீடராக விரும்புகிறார். இந்த உலக இன்பங்களை துறந்தவனையும்,லெளகீக வாழ்க்கையில் பற்று வைக்காதவனையும் தான். ஆனால் ரஜினிக்கு தனது சொத்தின் மேல் அளவு கடந்த பிரியம். அதை விட தனது வாரிசுகள் மேல் தீராத பிரியம். இப்படி பட்டவரால் எப்படி பாபாக்க சீடராக முடியும்.

யாரால் பாபாஜிக்கு சிறந்த சீடராக முடியும்? இதோ ஒரு குட்டிக்கதை இங்கே பார்வைக்கு!!!

இந்த கதையை படித்து விட்டு ரஜினிக்கு பாபா சொல்லப் போவது என்ன தெரியுமா?

"டேரா டண்டா உடாவே" இது பாபாஜி தனது சீடர்களுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உரையாடி விட்டு கிளம்பும் போது சொல்லும் வார்த்தை.அதாவது" நாம் கிளம்பலாம்" என்று பொருள். ஆனால் அந்த கூட்டத்தில் ரஜினி சேர்க்கப்பட மாட்டார்.

நித்யானந்தா ஒரு புத்தகம் படித்து தான் இவ்ளோ பக்தர்களை ஏமாற்ற முடிந்ததாக சொல்கிறார்கள்.அது பாபாஜியின் சீடரான யோகானந்த பரமகம்சர் எழுதியது. ஒரு யோகியின் சுய சரிதம் என்ற அந்த நூலில் இருந்து ஒரு குட்டி கதை....ரஜினிக்காக!!!



தலைவா.....எந்த குகைக்கு நீங்க போனாலும் உங்களுக்கு புண்ணியம் இல்லை.போஸ்லாம் வேணாம்
ரு சமயம் பாபாஜி நீடித்துயர்ந்த மலையில் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய புனிதமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வளவு உயரமான மலையை ஒரு மனிதன் மிகவும் சிரமத்துக்கு இடையே கடந்து அடைந்து விட்டான். அந்த மனிதன் ஒரு பாறையின் விளிம்பில் வந்து நின்றான்.

'ஐயா தாங்கள் தான் பாபாஜியாக இருக்க வேண்டும்'. அந்த மனிதனின் முகம் விண்டுரைைக்க முடியாத அளவு ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக்கணக்கில் இடைவிடாமல் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். தயை செய்து என்னை தங்கள் சீடனாக்கி கொள்ள மன்றாடுகிறேன்."மகாகுரு பாபாஜீ பதில் எதுவும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே உள்ள பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவை சுட்டிக்காட்டினான். 'நீங்கள் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டுதலை நான் பெறாவிடில் இனி வாழ்நது பயனில்லை.'
" அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியாது" பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
"அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத்தான பாறையை தாண்டி மலையிலிருந்து குதிதூது விட்டான். அதிர்ச்சியுற்ற பாபாஜி தனது சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலை உடனே கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
சீடர்களும் உருக்குலைந்து போன அந்த மனிதனின் உடலைக் கொண்டு வந்து பாபாஜயின் முன் கிடத்தினார்கள். குருதேவர் பாபாஜி தனது கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார்.ஆ!!அவன் தன் கண்களை திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.
" நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்" உயிர்க்கப்பிட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார்."நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய்.மரணம் உனனை மறுபடியும் தீண்டாது.

அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்" பிறகு அவர் வழக்கமாக குறிப்பிடும் வார்த்தைகளை கூறினார். 'டேரா டண்டா உடாவோ' அக்குழு முழுவதும் அம்மலையிருந்து மறைந்து விட்டது.
கதை புரிந்ததா திரு ரஜினிகாந்த் ஆகிய சிவாஜிராவ் அவர்களே!
ஆக.......
உங்களால் பாபாஜிக்கு சீடராகவே முடியாது

காரணம் 1.நீங்கள் லெளகீக குடும்ப வாழ்க்ைக்கு அடிமையான ஒரு மனிதர்.பகட்டுக்கும் ஆடம்பரத்துக்கும் அடிமை. உங்களை போன்றவர்களால் பாபாஜியை காணவே இந்த பிறவியிலும் எந்த பிறவியிலும் முடியாது.

காரணம் 2. ஒரு சகமனிதனை ஏமாற்றினலே அவனை நரகத்தில் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்களாம்.நீங்கள் பல கோடி இளைஞர்களை முட்டாள்களாக மாற்றி அறியாமையில் உழண்டு உங்கள் பின்னால் வந்த அவர்களுக்கு எந்த வாய்சும் கொடுக்கவில்லை. வாய்ப்பும் கொடுக்கவில்லை. ஆக உங்களுக்கு எண்ணெய் கொப்பரையா?குளமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
காரணம்......நீஙகள் பாபாஜி குகைக்கு போனதை கூட ஒரு தொலைக்காட்சி உங்கள் கு....பின்னாலேயே வந்து ஒளிபரப்பி தாராளமாக காசு பார்த்ததுடன் உங்களுக்கும் பெரிய ஞானி பட்டத்தை சூட்ட முனைந்தது.

இந்த "டிகால்டி" வேலைகள் பார்க்கும் நபர்களை எல்லாம் பாபாஜி சீடனாகவே ஏற்றுக் கொள்ளவே மாட்டார். பாறையிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குதித்தானே பாதாளத்தில் அவனை போன்றவர்கள் தான் பாபாஜிக்கு பிடித்தமானவர்கள்.ஆக..
ரஜினி அவர்களே...நீஙகள் எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டு இமயமலைக்கு போனாலும் உங்களால் பாபாஜியையோ அவரின் கால்கோடி சீடரைக்கூடி காணமுடியாது.உணரவும் முடியாது என்பதை விளக்கவே இந்த கதை.

பாபாஜி குழுவில் உங்களுக்கு இடம் இல்லை.
நீங்கள் இனி இமய மலைக்குக் எல்லாம் போய் புண்ணியம் இல்லை..இல்லவே இல்லை"டேரா டண்டா உடாவே"..இணைய தேடலில் இருந்து...





வியாழன், டிசம்பர் 08, 2011

இலவசத்தின் விலை இதுதான்!!!


கிடுகிடுவென்று ஏறிய பெட்ரோல் விலை கொஞ்சம் இறங்கியதாக வந்த செய்தி உண்மைதானா இல்லை, மனப் பிரமையா என்று கொஞ்சம் திகைப்போடு புன்னகைக்கலாமா, என அரைத் தயக்கத்தில் இருந்த மக்கள் தலையில் ‘மடேர்’ என வந்திறங்கியது தமிழக அரசின் அணுகுண்டு அறிவிப்பு.

தவிர்க்க முடியாத அன்றாடத் தேவைகளாகி விட்ட பால், போக்குவரத்து இவற்றுக்கான விலை/கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கும் வந்து விட்டன. அடுத்தாற்போல மின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ‘அதிகாரப்பூர்வமற்ற’ அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

நினைத்து நினைத்துப் பெய்யும் சென்னை மழையைப்போல, அவ்வப்போது ஏறும் பெட்ரோல் விலையோடு இந்த விலை உயர்வுகளையும் சேர்த்துப் பார்த்தால்  ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இதுவரை செலவழித்ததை விட அதிகமாகச் செலவழிக்க நேரிடும், அடித்தள மக்களின் வாழ்க்கை அதைவிட அபாயகரமான விளிம்பிற்குச் செல்கிறது. இதைச் சமாளிக்க அவர்கள் ஒன்று, தங்களது சேமிப்பைக் கைவிட வேண்டும் அல்லது பால் போன்ற ஊட்டச் சத்துக்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.  சென்னையில் வசிக்கும் ஆண்டனி  என்ற தினக்கூலி, "இதுவரைக்கும் பேருந்துக் கட்டணமா மாதம் ஐநூறு ரூபாய்தான் செலவு செய்துக்கிட்டு இருந்தோம். ஆனா, இப்ப அதுவே ஆயிரம் ரூபாய் ஆகிடுச்சி. எல்லா விலையையும் இருமடங்கு ஆக்கிட்டாங்க" எனப் பொருமுகிறார். வசந்தி என்ற குடும்பத்தலைவி (சென்னை), "முன்னாடி பால் விலை ஏறியபொழுது ஒரு லிட்டர் வாங்கிக்கிட்டு இருந்ததை அரை லிட்டரா வாங்கி சமாளிச்சி வந்தோம். இப்ப அரை லிட்டர் கூட வாங்க முடியாத விலை விக்குது. ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் ஏற்றி இருந்தால் கூட சமாளிச்சி இருப்போம். ஆனா,ஆறு ரூபாய் ஏத்துனதுதான் அதிர்ச்சியா இருக்கு" என்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் பின்னோக்கிச் சறுக்குகிறது.
மற்ற மாநிலங்களில் பால் விலை மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கேயும் நிலைமை நமக்கு நிகராக அல்லது நம்மை விட அதிகமாக இருக்கின்றன (காண்க: பெட்டிச் செய்தி).‘காலுக்குச் செருப்பில்லை எனக் கவலைப்படுகிறாயே, காலே இல்லாதவனை நினைத்துப் பார்’ எனத் தத்துவம் பேசுகிறவர்களுக்கு இது ஆறுதல் தரலாம்.  ஆனால், நடைமுறை வாழ்க்கை நிஜங்கள் நம்மைக் கிள்ளிக்கொண்டே இருக்கும்.  இந்த விலை உயர்வைத் தாண்டிக் கவலைப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

பெட்டிச் செய்தி


































முதல்வரே அதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆவின், மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், ‘மரணப்படுக்கையில்’ இருப்பதாக அவர் கூறுகிறார். "இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும் செயலிழந்து போய்விடும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படி நலிந்ததற்குக் காரணம் என்ன?

ஒரே வார்த்தையில் சொன்னால் அலட்சியம்! வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக அரசின் நிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக பொறுப்பற்ற முறையில் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ஓராண்டு நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணம் என்று சொல்லலாம். ஆனால், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வந்தால், அந்த நஷ்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு போனால் அதைப் பொறுப்பற்ற நிர்வாகம் எனச் சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

இதற்கு அடிப்படையாக இரண்டு மனோபாவங்கள் இருக்கின்றன. ஒன்று, பொதுத்துறை நிறுவனங்களுக்கு லாபம் முக்கியமல்ல, சேவைதான் முக்கியம் என்ற தத்துவம். இந்தத் தத்துவமே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை மக்கள் பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்கள். அவற்றில் லாபம் வந்தால், அவை மக்களுக்குக் கிடைக்கும் லாபம். அந்தப் பணம் ஏதோ ஒரு வடிவில் மக்களுக்குத் திரும்பி வரும். சில ஆண்டுகளுக்கு முன் எல்.ஐ.சி., குடிதண்ணீர்த்  திட்டங்களுக்கு நிதி உதவியதைப்போல. தனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஈட்ட வேண்டியதில்லை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் அந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைக்கொண்டு தங்களது செலவுகளை எதிர் கொள்ளும் அளவிற்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற நிலையிலாவது, காத்திரமாக இருக்க வேண்டுமல்லவா? அவை நஷ்டத்தை சந்திக்கின்றன அல்லது அந்தக் கடன்களை மக்கள் பணத்திலிருந்துதானே செலவிட நேரும்? அதாவது, அந்தச் சுமை மக்கள் மீதுதானே விழும்?

நாம் செலவிடுவது மக்கள் பணம் என்ற உணர்வு இல்லாமல், ‘ஊரான் வீட்டுப் பணம்’ என்ற நினைப்பில் ஊதாரித்தனமாக வாரி இறைப்பது மற்றொரு மனோபாவம்.

இந்த மனோபாவங்களில் சிக்குண்டதால்தான் நம் பொதுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் எதிர்கொள்கிறோம்.

மின் வாரியம்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2005-06ல் மின் வாரியத்தின் நஷ்டம் 4,911 கோடி ரூபாய். இந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி அதன் நஷ்டம் 40,659 கோடி. அதாவது, ஐந்தாண்டுகளில் நஷ்டம் சுமார் பத்து மடங்குகளாக அதிகரித்திருக்கிறது.  இந்த நஷ்டம் எப்படி சமாளிக்கப்பட்டது? கடன் வாங்கித்தான். 2005-2006ல் மின் வாரியம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனின் அளவு 9,300 கோடி. அதுவே இந்த ஆண்டு மார்ச்சில் 40,300 கோடி. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அது 53,000 கோடியைத் தாண்டிவிடும் என்கிறார் முதல்வர்.

தமிழக அரசு என்ற பெரிய அமைப்பின் கடனே ஒரு லட்சத்து ஆயிரம் கோடிதான். ஆனால், மின் வாரியம் என்ற ஒரு நிறுவனத்தின் கடன் மட்டும் 53 ஆயிரம் கோடி என்றால், அது எப்படி நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவேளை மின் சப்ளை என்பது லாபம் தராத தொழிலோ? தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் இதற்கான விடையைக் கண்டுபிடித்து விடலாம்.

"கடந்த திமுக ஆட்சியில் ஏழு தனியார் மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் அந்தத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 9 சதவிகிதம்தான் (1150 மெகாவாட்). ஆனால், மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 35 சதவிகிதம் அந்தத் தனியார் நிறுவனங்களுக்குப் போகிறது. உதாரணமாக, பிள்ளைப்பெருமாள்நல்லூரில் 335 மெகாவாட் திறன்கொண்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டிற்கு 18.54 ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. 335 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அந்நிறுவனத்தை நிர்மாணிக்க சுமார்  600 கோடி செலவாகி இருக்கும். ஆனால், அதைவிட பல மடங்கு லாபத்தை அந்நிறுவனம் சம்பாதித்துவிட்டது. எல்லா தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டன" என்கிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.விஜயன்.

தனியாருக்கு லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை அரசு நடத்தும்போது மட்டும் ஏன் நஷ்டம் வருகிறது? மேலே சொன்ன மனோபாவங்கள்தான் காரணம்.

இந்தச் சிக்கல் திடீரென ஒரு நாள் நள்ளிரவில் ஏற்பட்டதல்ல. தொடர்ந்து பல ஆண்டுகளாக மின் வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது என்பது அதன் அமைச்சர்கள்,அதிகாரிகள், ஏன் ஊழியர்களுக்குக் கூடத் தெரியும்.

"மின்வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசின் சார்பில் வெள்ளையறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், முந்தைய திமுக ஆட்சி விட்டுச்சென்ற கடன் தொகை 3,359 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவையுள்ளது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு, மின்வாரியத்தை கடனில் இருந்து மீட்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்ததாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், மின்வாரியத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மின்சார வாரியம் மரணப்படுக்கையில் தள்ளப்பட்டதற்கான காரணம் இதுதான்" என்கிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.விஜயன்.

சரி, மின்வாரியம் நஷ்டத்தைச் சந்திக்கிறது எனத் தெரிந்தும் அதைத் தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

அங்குதான் வருகிறது வாக்கு வங்கி அரசியல். மாதம் 600 யூனிட்களுக்குமேல் பயன்படுத்துவோருக்கு ஆகஸ்ட் 2010ல் 1 ரூபாய் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், அது தேர்தலைப் பாதிக்கும் எனப் பயந்து, அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டது. வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல, இலவசங்களை முன் நிறுத்தி நடத்தப்படும் அரசியலும் ஒரு காரணம்!

விவசாயிகளுக்கு அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. மின்சாரம் என்பது காற்றைப்போல இயற்கையே இலவசமாகக் கொடுக்கும் பொருள் அல்ல. ஏதோ ஒரு இடத்தில் அது உற்பத்தி செய்யப்படும் பொருள். எனவே, அதற்கு ஒரு செலவு இருக்கிறது. அதை யாராவது ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பது அரசின் முடிவு என்றால், அரசுதான் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தை, அதற்கான கட்டணத்தை மின்வாரியத்திற்கு செலுத்துவதில் மாநில அரசு காட்டுவது இல்லை. இலவச மின்சாரம் பெற்ற வகையில் இதுவரை சுமார் 5,600 கோடி ரூபாய் மின் வாரியத்திற்குத் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளது. மின் வாரியம் திவாலாகாமல் என்ன செய்யும்?



























ஆவின்

பத்தாண்டுகளுக்கு முன்பு லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக இருந்தது ஆவின். 2000ம் ஆண்டு அது 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. ஆனால், அதன் பின் அது படிப்படியாகச் சரிந்து, இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது. இப்போது மாதா மாதம் அரசிடம் 16 லட்ச ரூபாய் மானியம் பெறும் நிறுவனமாக அது இருக்கிறது.

‘ஆவின் நிறுவனம் நலிந்ததற்குக் காரணம், ஊழல்’ என்ற ஒரு கருத்தை அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் சொல்கிறார்கள். சத்தான பால் கிடைக்க வேண்டும் என்றால், மாடுகளுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பாலுக்கு அரை கிலோ அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 300 ரூபாயாக இருந்த கால்நடைத் தீவனத்தின் விலை தற்போது 575 ரூபாய். பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 65 சதவிகிதம் தீவனத்திற்காக செலவிட வேண்டியுள்ளது என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

இந்தத் தீவனப் பிரச்சினையைத் தீர்க்க, முன்பு ஆவின் நிறுவனமே கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்தது. சென்னை மாதவரம், மதுரை, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் தீவனம் உற்பத்தி செய்யப்பட்டது. தரமான மாட்டுத் தீவனமாக அது இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதை ஆவின் நிர்வாகம் மூடிவிட்டது. "ஆவின் நிறுவன அதிகாரிகளில் பலர், தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆவின் நிறுவனம் நலிவடைவதற்கு முக்கியக் காரணமே அதுதான். ஆவின் மாட்டுத் தீவனத்தை மூடியதற்கும் அதுதான் காரணம். ஆவின் நிர்வாகத்தில் ஊழலைக் களைந்து, நிர்வாகத்தை சீர்படுத்தினாலே லாபகரமான நிறுவனமாக ஆவினை மாற்ற முடியும்" என்கிறார், ஆவின் நிறுவன ஊழியர் ஒருவர்.

இதன் வீழ்ச்சிக்கு வாக்கு வங்கி அரசியலும் காரணம். "15.02.2011 கணக்குப்படி, ஆவின் நிறுவனம் 359 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தது. ஆவின் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி கடந்த பிப்ரவரியில் மாநில அளவில் போராட்டம்  நடத்தினோம். அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லிட்டருக்கு 2.46 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆவினுக்கு மேலும் 100 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படும் நிலையை உருவாக்கிவிட்டனர்" என்கிறார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முகமது அலி.

அப்போதே பால் விலையை கொஞ்சம் உயர்த்தி இருந்தால் மக்களுக்கு சுமை தெரிந்திருக்காது. ஆனால், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அப்போதைய திமுக அரசு பால் விலையை உயர்த்தவில்லை.













போக்குவரத்துக் கழகங்கள்

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமைக்கு தமிழக முதல்வர் கூறியுள்ளது போல, டீசல் விலை உயர்வும் முக்கியக் காரணம்.

"டீசல் உயர்வு போக்குவரத்துக் கழகங்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், இதுவரையில் 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்வு என்றாலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது" என்கிறார், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.பி.அன்பழகன் (தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 321 பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன).

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தபோதும் கூட மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த 10 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடைசியாக, 16.12.2001 அன்று பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

டீசல் விலை உயர்வு ஒரு காரணம்தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. தொலை நோக்கற்ற நிர்வாகமும் காரணம். உதாரணமாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில், பேருந்துகளுக்கு பாடி கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது உட்பட அனைத்துப் பணிகளையும் போக்குவரத்துக் கழகங்களே செய்தன. நாகர்கோவில், பொள்ளாச்சி, திருச்சி, சென்னை உட்படப் பல இடங்களில் அதற்கான பணிமனைகள் இயங்கின. பெயிண்ட் கூட சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. முழுக்க முழுக்கப் போக்குவரத்துக் கழகங்கள் சொந்தக்காலில் நின்றன. ஆனால், 1990க்குப் பிறகு இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுக்கப்பட்டது. இதனால், போக்குவரத்துக் கழகங்களின் பணம் பெருமளவில் விரயமாகியுள்ளது.

இதை தவிர இலவசங்களை முன்னிறுத்திய அரசியலும் வாக்கு வங்கி அரசியலும் காரணங்கள்.

12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மாநில அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. 27 லட்சத்து 52 ஆயிரத்து பள்ளி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். ஆனால், இத்திட்டத்தின் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கும் மாநில அரசு, அதற்கான பணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிப்பதில்லை. இந்த வகையில் 1989 முதல் சுமார் 1,500 கோடி ரூபாய் அரசு பாக்கி வைத்துள்ளது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு மாதச் சம்பளம் சராசரியாக  10 ஆயிரம். இதன் மூலம் கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி வீணாகிறது. ஓராண்டுக்கு 24 கோடி ரூபாய் விரயமாகிறது என்றும் சொல்லப்படுகிறது.


இலவசங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள் இலவசங்களாலும் விரயத்தினாலும் நிதி நெருக்கடியைச் சந்தித்து மரணப் படுக்கையில் இருக்கும் நேரத்தில் கூட அரசுப் பணத்தைத் தங்கள் விளம்பரத்திற்காகச் செலவழிப்பதில் கூச்சமோ, தயக்கமோ காட்டுவது கிடையாது.

உதாரணமாக, கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்குச் செலவிடப்பட்ட தொகை 311 கோடி ரூபாய். தமிழை வளர்ப்பதுதான் நோக்கம் என்றால், அறிஞர்கள் அரங்குக்குள் கட்டுரைகள் வாசித்து அவற்றை ஆழமாக விவாதிக்கும்படி மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், இதில் பத்தில் ஒரு பங்குச் செலவில் மாநாடு முடிந்திருக்கும். ஆனால், இந்த மாநாட்டின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

இன்னொரு உதாரணம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. இதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 4,000 கோடி ரூபாய். இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பங்கை ஆவினில் முதலீடு செய்திருந்தால், அதன் நஷ்டம் சரி செய்யப்பட்டு இன்று அது நிமிர்ந்து நிற்கும். இந்தப் பணத்தை போக்குவரத்துக் கழகத்திற்குச் செலவிட்டிருந்தால், அதற்கு ஏற்பட்ட 6,150 கோடி ரூபாய் இழப்பில் 75 சதவீதம் ஈடுகட்டப்பட்டிருக்கும்.

நிதி நெருக்கடி நிலவிய நேரத்திலும் ‘அகலக் கால்’ வைக்கவும் ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை மாத்திரம் 1,092 கோடி!
போட்டி அரசியல் நிலவுகிற தமிழகத்தில் இன்றைய ஆளும் கட்சியும் முந்தைய ஆளும் கட்சிக்குச் சற்றும் சளைக்கவில்லை.  இலவச அரிசிக்காக 4,500 கோடியும் விசிறி, மிக்சி, கிரைண்டருக்காக 1,250 கோடியும் ஒதுக்கியிருக்கிறது (முழுப்பட்டியலுக்குக் காண்க: பெட்டிச் செய்தி).

ஏழைகள் இருக்கிற வரைக்கும் இலவசங்கள் இருக்கும் என வசனம் பேசுவது எளிது. அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த இலவசங்கள் என அவற்றை நியாயப்படுத்தவும் கூடச் செய்யலாம். ஆனால், எதை இலவசமாகக் கொடுப்பது என்பதைக் குறித்து ஆள்கிறவர்களுக்குத் தெளிவு வேண்டும். கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம். மருத்துவ வசதிகளை இலவசமாகக் கொடுக்கலாம். அவை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதுகாலத்திற்குப் பின் உதவும். சுருக்கமாகச் சொன்னால் கல்வி, மருத்துவ வசதி இலவசங்கள் ஒரு வகையான முதலீடு. ஆனால்,வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியோ, மிக்சி, கிரைண்டரோ முதலீடு அல்ல, அவை லஞ்சம்.

உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. அந்தப்  பொருளைப் பெறுபவருக்குப் பதில், வேறு யாரோ கொடுக்கும்போது அதை இலவசம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் அந்த யாரோ வேறு யாரும் இல்லை, நாம்தான்!

நன்றி -புதிய தலைமுறை