பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்-6,7

இந்துத்துவ அரட்டல்-6
அரட்டல் (Terrorist) கொள்கை
பதினெட்டாம் நூற்றாண்டில் பிராமண நடுத்தர வகுப்பிடம் ‘இந்து’ எனும் ஓர்மையும் ‘இந்திய’ ஓர்மையும் தலையெடுத்தது. முதலில் வங்கத்திலும் அடுத்துப் பஞ்சாபிலும் அது தீவிர அரட்டல் வன்முறை வடிவத்தை எடுத்தமையால், அதன் காற்றைப் பிடுங்குவதற்கென்றே 1885ஆம் ஆண்டில் "இந்தியத் தேசியப் பேராயத்தை" (Indian National Congress) ஆலன்ஆக்டேவியன் இயூம் (Allan Octavian Hume 1829-1912) தோற்றுவித்தார்; பீறிட்டு எழுந்துவந்த இந்து-இந்தி(ய)த் தேசிய ஓர்மையையும், வங்கத்து இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் தோன்றிய கமுக்கமான கரவு கழகங்களையும் அம் மிதவிய அமைப்பைக்கொண்டு குடுவைக்குள் அடக்கப் பார்த்தார். ஆனால், அம் மிதவிய அமைப்பிற்குள்ளேதான் 'பால கங்காதர திலகர்' (1886-1920) எனும் சித்பாவன பிராமணர் மகாராட்டிரத்தில் தலையெடுத்தார். ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைத்து நன்மை பெற விழைந்த இன்னொரு சித்பாவன பிராமணரும் பேராயக் கட்சித் தலைவருமான 'கோபால கிருட்டின கோக்கலே'வை (1866-1915) எதிர்த்து அவர் களமாடினார்.
அரட்டல் வன்முறையைக்கொண்டுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற முடியுமெனும் எண்ணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துளிர்த்தது. அந்தக் காலத்தில் வங்காளத்தில் 'அக்ரா' (Akra) எனும் உடற்பயிற்சிக் களரிகள் பரவலாக விளங்கின. அக் களரிகளில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்களையெல்லாம் திரட்டிக் கிழக்கு வங்கத்திலிருந்த டாக்கா நகரத்தை மையமாகக்கொண்டு 'டாக்கா அனுசீலன் சமிதி'யும் கொல்கொத்தா நகரை நடுவமாகக்கொண்டு 'யுகாந்தர் குழு'வும் தோற்றுவிக்கப்பட்டன. இவ்விரு அரட்டல் வன்முறை (பயங்கரவாத) அமைப்புகளும் 1902ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.
வெடிகுண்டு தாக்குதல்களையும், அரசியல் படுகொலைகளையும் அரங்கேற்றுவது முதலான அரட்டல் (பயங்கரவாத) அரசியல் வழிநின்ற தீவிர இந்து தேசிய இயக்கமான அனுசீலன் இயக்கத்திற்கு அரவிந்த கோசும் அவரது தம்பியான பரீந்திரநாத் கோசும் (1880 -1959) தலைமை தாங்கினர். அரவிந்தரின் அனுசீலன் இயக்கம், காளி (சத்தி) வழிபாட்டை அடியொற்றியது. பக்கிம் சந்திர சாட்டர்ச்சியின் (1838-94) எழுத்துகளும் விவேகானந்தரின் (1863-1902) எழுத்துகளும் அந்த அரட்டல் இயக்கத்தின் மெய்யியல் அடிதளமாயின. 1881ஆம் ஆண்டில் பக்கிம் சந்திர சாட்டர்ச்சி இயற்றிய “வந்தே மாதரம்” எனும் பாடலில் “இந்தியத் தாயை”த் ‘துர்கை’ என்றும் ‘இலக்குமி’ என்றும் குறிப்பிடுவதைக்கொண்டு காளி வழிபாட்டைத் தழுவியே வங்கத்து அரட்டல் வன்முறை வளர்ந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
வங்கத்தில் தோன்றிய அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் மீமிகக் கமுக்கமாக இயங்கிவந்த கரவுக் கழகங்களாகும் (Secret Societies). இக் கரவுக் கழகங்களைச் சேர்ந்த பெரும்பாலோர் இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகள் உயர்கல்வி பெற்ற வங்காளப் பிராமணர்களாயிருந்தனர். இவர்கள் ஐரோப்பாவில் விளங்கிய ‘அரசுக் குலைப்பு’ (Anarchist) கொள்கையாலும், இத்தாலியத் தேசியராகிய 'மாசினி'யின் கொள்கையாலும் 'கக்குசோ ஒக்கக்கூரா' (Kakuzo Okakura) எனும் சப்பானியரின் 'அனைத்தாசிய' (Pan-Asianism) கொள்கையாலும் ஈர்க்கப்பட்டனர்.
1902ஆம் ஆண்டில் வங்கத்து அனுசீலன் சமிதியின்கீழ் மூன்று அமைப்புகள் இயங்கிவந்தன. 'சத்தீசு சந்திர பாசு', 'சரளாதேவி' ஆகியோரின்கீழ் இயங்கிவந்த இரு அமைப்புகள் போக, 'சதீந்திரநாத் பானர்ச்சி', 'அரவிந்த கோசு' ஆகியோரின் தலைமையில் மூன்றாவது அமைப்பு இருந்தது. 1905ஆம் ஆண்டில் பழைய வங்காளத்தை மேற்கு வங்கம் என்றும் கிழக்கு வங்கம் என்றும் ஆங்கிலேயர் அரசு இரண்டாகப் பிரித்தது. வங்காளப் பத்ரலோகுகளிடம் அது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், உடற்பயிற்சிக் களரிகளை ஏற்படுத்திய இந்து கரவுக் கழகங்கள், வங்க இளைஞர்களுக்குச் சிலம்பம், கத்தி முதலான கருவிகளை ஆளச் சொல்லிக்கொடுத்தன. கிழக்கு வங்காள அனுசீலன் சமிதியின் டாக்கா கிளை, 'புலின் பிகாரி தாசு'வின் (1877–1949) தலைமையின்கீழ் நல்லதோர் அரட்டல் வன்முறை இயக்கமாக வளர்ந்தது.
மாணிக்கதலா சதி வழக்குக்குப்பின் அனுசீலன் சமிதியின் தலைவராகிய 'பாகா சடின்' (Bhaga Jatin 1879-1915) வங்கம், பீகார், ஒடியா, உத்தர பைதிரம் ஆகிய இடங்களில் அதன் கிளைகளைத் தோற்றுவித்தார். கங்கை கழிமுகத்திலிருக்கும் சுந்தரவனத்தில் இந்து அரட்டலர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். இவர்களில் சிலர், அயல்நாடுகளிலிருந்து கமுக்கமாக இயங்கிவந்தனர். கொல்கொத்தாவின் வில்லியம் கோட்டையைப் பாசறையாகக் கொண்டிருந்த 'யாட்' படைப்பிரிவுடன் (Jat Regiment) பாகா சடின் கமுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். நரேந்திரநாத் எனும் அரட்டலரின் தலைமையில் அனுசீலன் சமிதி கொள்ளை, கொலை நடத்தித் தம் இயக்கத்திற்குப் பணம் திரட்டினார். பிரேன் தத்த குப்தா எனும் சடினின் கூட்டாளி, 'சம்சுல் ஆலம்' என்னும் வங்கக் காவல்துறை அதிகாரியைக் கொல்ல திட்டமிட்டதால், அவர்களின்மேல் 'ஔரா-சிவப்பூர் சதி வழக்கு' தொடுக்கப்பட்டது.
1907ஆம் ஆண்டுதொட்டுப் 'பரிந்திர குமார் கோசு' (Barindra Kumar Ghose 1880-1959) தலைமையிலமைந்த யுகாந்தர் குழு, உருசியப் புரட்சிக் குழுக்களின் பாங்கில் செயல்படத் தொடங்கியது. பிரிட்டிசாரின் ஆளுகைக்குட்பட்ட வங்கத்தில் இது போன்ற கரவுக் குழுக்கள் கமுக்கமாக இயங்கிவந்தன. இந்தக் குழுக்களெல்லாம் பெரும்பாலும் இந்துவிய அரட்டல் குழுக்களாகவே அமைந்தமையால், இசுலாமியர் அவற்றில் சேரவில்லை.
அனுசீலன் சமிதியின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் 'மேல்சாதி'யராக -- வங்கத்துப் பிராமணர்களாகவும் பத்ரலோகுகளாகவும் -- இருந்தனர். அவர்கள் பகவற்கீதையை உச்சிமேல் வைத்துப் போற்றினர். அத்துடன், அவர்கள் சத்தி (சக்தி) வழிபாட்டினராயிருந்தனர். காளியை ‘ஆதி சத்தி’யாக அவர்கள் வணங்கினர். இதனால், சுதேசி இயக்கத்தை “வணிகர்களின் இயக்கம்” என்று கூறி அவர்கள் நகையாடினர்.
அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் கரவுக் கழகத்தின் எண்ணவோட்டங்களை ஆற்றுப்படுத்தியவர் 'நிவேதிதா' எனும் பெயர் பூண்ட 'மார்கரெட் எலிசபெத் நோபில்' (1867-1911) எனும் அயர்லாந்து நாட்டவராவார். இவர் விவேகானந்தரின் மாணவியுமாவார்.
1911ஆம் ஆண்டில் அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு முதலான செயல்களில் ஈடுபட்டுவந்ததால், டேராடூனில் இந்தியக் காட்டுவளக் கழகத்தின் அதிகாரியாயிருந்த சர் ராசு பிகாரி போசுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த ‘புரட்சிக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்்’ என்று ஆங்கிலேயரின் அரசு கருதியது.
1905க்கும் 1910க்கும் இடையில் இந்திய மாணவர்கள் தங்குவதற்கான ஒரு விடுதியாக வடஇலண்டனில் 'சியாம்ச்சி கிருட்டின வர்மா' (Shyamji Krishna Varma 1857- 1930) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட 'இந்தியா இல்லம்' (India House), இந்து-இந்தி(ய)ப் புரட்சியாளர்களின் புகலிடமானது. வினாயக் தாமோதர் சாவர்க்கர், 'மேடம் பிக்காய்ச்சிக் காமா' (Madam Bhikaiji Cama 1861-1936) வீரேந்திரநாத் சட்டோபாத்தியா (Virendranath Chattopadhya 1880-1937), 'லாலா அர்தயால்' (Lala Hardayal 1884-1939), வரகனேரி வெங்கடேச சுப்பிரமணியம் ஐயர் (1881-1925), மண்டயம் பார்த்தசாரதி திருமால் ஆச்சாரியா (1887-1951), பாண்டுரங் மகாதேவ் பப்பட் (Pandurang Mahadev Bapat 1880- 1967) முதலானோர் இந்தியா இல்லத்திலிருந்து பணியாற்றினர்.
இந்திய அரட்டலர்களோடு கொண்டிருந்த மிக நெருக்கமான உறவால் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்குக் கரந்தடி (கெரில்லா) போர் முறையில் ஈடுபட வேண்டுமெனச் சாவர்க்கர் கருதினார். வெடிகுண்டு செய்வதைப் பற்றியும் கரந்தடிப் போர்முறையைப் பற்றியும் எழுதிச் சாவர்க்கர் அவற்றைக் கமுக்கமாக அச்சிட்டு வெளியிட்டார்.
சாவர்க்கரின் நெருங்கிய கூட்டாளியான 'மதன்லால் திங்கிரா' (Madan Lal Dhingra 1883-1909), 'சர் வில்லியம் அட் கர்சன் வைல்லி' (Sir William Hutt Curzon Wyllie) எனும் ஆங்கிலேயரை 1909ஆம் ஆண்டில் கொலை செய்தார். திங்கிராவை மிகப் பெரிய ஈகியாகவும் புரட்சியாளருமாகச் சாவர்க்கர் உருவகப்படுத்தினார்.
ஐரோப்பியர் பெற்றெடுத்த ‘ஆரியம்’ என்னும் அரசியல் அரிதாரத்தைப் பூசிக்கொண்ட நாடுதான் செருமனி நாடு. 'நாசிசம்' எனும் இனவெறிக் கொள்கை, அதனால் பிராமணியம் ஈன்ற இந்து தேசியத்துடன் மணவுறவு பூண்டது. எங்கு பார்த்தாலும் அரட்டல் வன்முறையில் ஈடுபட்டுவந்த இந்துக் கரவுக் குழுக்கள் ஒரு தனிப்படையே கட்டும் அளவுக்கு அடுத்த நகர்வுக்குச் சென்றன.
ஆரிய சமாசத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாபியரான அர் தயாள், சியாம் கிருட்டின வர்மா, சாவர்க்கர், பிக்காய்ச்சிக் காமா முதலானோரின் தொடர்பிலிருந்தார். இந்தியாவிலேயே “மிகப் பெரிய வன்முறைப் புரட்சிக்காரன்” என்றறியப்பட்ட ராசு பிகாரி போசுடனும் அவர் நெருங்கிய தொடர்பிலிருந்தார்.
பின்பு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அர் தயாள் சிங், கலிஃபோர்னியாவிலிருந்த பஞ்சாபியரைத் திரட்டிக் ‘கத்தர்’ கட்சியின் பெருந்தலைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1912ஆம் ஆண்டில் செருமானியின் பட்டத்து இளவரசர் கொல்கொத்தாவுக்கு வந்தபோது, நரேந்திர பட்டாச்சாரியாவும் பாகா சடினும் அவரைக் கண்டு பேசினர்; தங்களுக்கு வேண்டிய போர்க்கருவிகளையும் வெடிப்பொருள்களையும் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1914ஆம் ஆண்டில் ராசு பிகாரி போசுவும் மகாராட்டிரரான விஃழ்ணு கணேசு பிங்லேயும் (1888-1915) சீக்கியத் தீவிரர் சிலருடன் சேர்ந்து 1915ஆம் ஆண்டில் ஒரு படைக்கலகத்தைச் செய்விப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில்,அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் வங்கத்தில் அரட்டல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. வெள்ளையர் அரசும் கடிகாவல் படையும் ஏறத்தாழ நிலைகுலைந்தன. அப்படியிருந்தும், இந்து அரட்டலரின்1915ஆம் ஆண்டுப் படைக்கலகத் திட்டம் பொய்த்துப் போனது. இந்து அரட்டலர் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தளைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான், 1915 'இந்தியப் பாதுகாப்புச் சட்டம்' வந்தது. கொல்கொத்தாவிலிருந்து இயங்கிவந்த அனுசீலன் சமிதி ஆங்கிலேயர் அரசால் நசுக்கப்பட்டது. இதையடுத்து 'ரௌலட் சட்டங்கள்' வந்தன. இதனால், இந்து அரட்டல் வன்முறையாளர் பலர் பர்மா முதலான நாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். ரௌலட் சட்டங்களை எதிர்த்து 1919க்கும் 1922க்கும் இடையில் காந்தி அறப்போராட்டங்களை நடத்தினார்.
அனுசீலன் சமிதி எனும் இந்து அரட்டல் வன்முறை அமைப்பு 1920களில் வன்முறை வழியிலிருந்து விலகிப் பேராயக் கட்சியின் அறவழிப் போராட்டங்களில் பங்குபெற்றது. ஆயினும், அந்த அமைப்பைச் சேர்ந்த 'சச்சிந்திரநாத் சன்யால்' (1893-1942) மட்டும் அறவழியில் செல்லாது 1929ஆம் ஆண்டில் 'இந்திய இத்துத்தான் குடியரசுக் கழகம்' எனும் அமைப்பைத் தொடங்கினார். சுபாசு சந்திர போசு போன்றோர் அந்த இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாக ஆங்கிலேயர் அரசு கருதியது.
இந் நிலையில், பேராயக் கட்சியின் தலைவராருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசிடம் வன்முறை வழியைக் கைவிடுவதாகப் உறுதியளித்த அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும், 1920ஆம் ஆண்டிலும் 1922ஆம் ஆண்டிலும் மீண்டும் அதே அரட்டல் வன்முறைக்குத் திரும்பின. 'சூரியா சென்' (1894 -1934) என்பவரின் தலைமையில் இயங்கிய யுகாந்தர் குழு, அசாம்-வங்கத் தொடர் வண்டித் துறையின் சிட்டகாங் அலுவலகத்தைத் தாக்கிக் கொள்ளையிட்டது.
வங்கத்திலும் பஞ்சாபிலும் தோன்றிய அரட்டல் வன்முறையே இந்துத்துவத்தின் செயல்வடிவம்; அதுவே இந்துத்துவத்தின் பிறவிக்குணம் என்பதைத்தான் மேற்போந்த வரலாற்றுப் பாடங்கள் காட்டுகின்றன.
இந்துத்துவ அரட்டல்-7
‘இடதுசொறி’ இந்துத்துவம்
1920களில் வங்கத்தில் தோன்றிய 'இந்து அரட்டல் வன்முறை' அரசியலிலிருந்து முளைத்த கள்ளிகளே இந்தி(ய) ஒப்புரவு(சோசியலிச)க் கட்சிகளும்
இந்தி(ய)ப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை ‘இந்தியா’ எனும் பலபட்டறை அரசு அடக்கி ஒடுக்கி அழிக்க உதவும் ‘ஓர் இந்தியா’ எனும் இந்துத்துவக் கொள்கைக்கு இடங்கை கட்சிகளெல்லாம் கொடி பிடிப்பது அதை மெய்ப்பிக்கிறது.
1923ஆம் ஆண்டில் 'இந்துத்தான் குடியரசுக் கழகம்' (Hindustan Republican Association) வாரணாசியில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கழகம் கொலை கொள்ளைகளை நிகழ்த்திப் பணம் திரட்டியது. இவ் வமைப்பு 1928ஆம் ஆண்டில் 'இந்துத்தான் ஒப்புரவுக் குடியரசுக் கழகம்' (Hindustan Socialist Republican Association) எனப் பெயரை மாற்றிக்கொண்டது. பகத்சிங் இந்த அமைப்பில் உறுப்பினராயிருந்தார்.
1927ஆம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து பிரிந்து இந்தியா தனிநாடாக வேண்டுமென இந்தியத் தேசியப் பேராயம் (காங்கிரசு) முழங்கத் தொடங்கியது.
1930களில் சிட்டகாங் படைக்கிடங்கின்மேல் இந்து அரட்டலர் தொடுத்த தாக்குதலுக்குப்பின், இந்து அரட்டல் வன்முறை மேலோங்கியது. ஆயினும், 1934ஆம் ஆண்டளவில் வன்முறைத் தாக்குதல்கள் மெல்ல ஓய்ந்தன.
1930களில் புத்துயிர் பெற்ற அனுசீலன் சமிதி, 'காக்கோரி சதி திட்டம்', 'சிட்டகாங் படைகலக் கொட்டில் தாக்குதல்' முதலான அரட்டல் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. முதலாம் உலகப்போரின் போது அனுசீலன் சமிதி மேற்கொண்ட அரட்டல் வன்முறை தாக்குதல்களும், பஞ்சாபில் எழுந்த 'கத்தர்' (Ghadar)) படைக்கலகமும் 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டம் வருவதற்கான காரணங்களாயின. ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையால் அனுசீலன் சமிதியின் ஒரு பகுதியினர், காந்தியின் தலைமையிலமைந்த பேராயக் கட்சியிலும் அப் பேராயக் கட்சிக்குள்ளிருந்த சுபாசு சந்திர போசின் அணியிலும் சேரலாயினர். வேறு சிலர், பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தனர்.
மற்றொரு கரவுக் கழகமும் அரட்டல் வன்முறை அமைப்புமான யுகாந்தர் குழு, 1938ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் புரட்சிகர ஒப்புரவுக் கட்சியாகவும் (Revolutionarys Socialist Party) கிழக்கு வங்காளத்தில் 'தொழிலாளர் உழவர் ஒப்புரவுக் கட்சி'யாகவும் திரண்டனர்.
முந்தைய அனுசீலன் இயக்கத்தவர் பலர் 1930களில் இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் பேராயக் கட்சிக்குள்ளேயே 'பேராய ஒப்புரவுக் கட்சி' (Congress Socialist Party)) எனும் பிரிவாகத் தனித்து இயங்கலாயினர். அவர்களில் சிலர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டுப் 'புரட்சிகர ஒப்புரவுக் கட்சி' (RSP) என்னும் கட்சியைத் தோற்றுவித்தனர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுசீலன் சமிதியைச் சேர்ந்த 39 பேர்களால் 'பொதுவுடைமை ஒக்கல்' (Communist Consolidation) என்னும் அமைப்பு 1935ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னர் இந்தியப் பொதுவுடைமை கட்சியானது. அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் இயக்கத்திலிருந்து வந்து மார்க்சிய-இலெனினியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் பொதுவுடைமை உலகமைப்பு (Communist International) எனும் அமைப்பை ஐயத்தோடுதான் பார்த்தனர். பொதுவுடைமைக் கட்சியையும் உருசியாவை ஆண்ட இயோசிஃப் தாலினையும் (Joseph Stalin) குறைகூறிடினும், தாலின் எதிர்த்து நின்ற லியோன் டிராட்சுக்கியின் பக்கம் அவர்கள் சாயவே இல்லை.
ஆர். எசு. எசு இயக்கத்தைத் தோற்றுவித்த கேசவ பலிராம் எக்டேவர், கொல்கொத்தாவில் மருத்துவம் படிக்கையில் வங்கத்தில் இயங்கி வந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திர போசும்கூட அனுசீலன் சமிதியில் உறுப்பினராயிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வங்கத்தில் மேலோங்கியிருந்த இந்து அரட்டல் வன்முறையாளர்களின் செயல்பாடுகளைக் காந்தி கடுமையாக எதிர்த்துவந்தார். 1931ஆம் ஆண்டு நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கெடுத்த காந்தி, அரட்டல் வன்முறைக்கு எதிராகப் பேசினார். தம்மொடு இணைந்து செயல்பட மறுத்தால், பிரிட்டிசு அரசு அரட்டல் வன்முறையாளரோடுதான் பேச வேண்டி வருமென மிரட்டிய காந்தி, பேராயக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒன்றே அரட்டல் வன்முறையை ஒழிக்க உதவுமென வெளிப்படையாகவே சொன்னார்.
ஆங்கிலேய அரசின் முன்னால் நிற்கையில் காந்திக்கு வாய்த்த தனி வலிமை எது தெரியுமா? அரட்டல் வன்முறையாளர்களை அவர் விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து நின்ற போக்கே அதுவாகும். இந்து அரட்டல் வன்முறைக்கும் இந்து மிதவியத்திற்கும் இடையிலான பங்காளிச் சண்டையின் வெளிப்பாடு அது.
பேராயக் கட்சியில் இருக்கும்போதே அனுசீலன் சமிதியின் கொள்கைகளைப் பரப்புவதில் அரவிந்தர் பெரும் முனைப்பு காட்டினார். (பிற்காலத்தில் யாதவ்பூர் பல்கலைக்கழகமாக வளர்ந்த) வங்க தேசியக் கல்லூரியின் முதல்வராக அரவிந்தர் பணியாற்றி வந்தபோது, அந்தக் கல்லூரியில் பயின்றவர்தாம் நரேந்திரநாத் பட்டாச்சாரியா என்னும் இயற்பெயர் கொண்ட எம். என். ராய் (1887 -1954) ஆவார். யுகாந்தர் குழு எனும் இந்து அரட்டல் குழுவிலிருந்த இவர்தாம் பொதுவுடைமை உலகமைப்பின் ( (Communist International)) உறுப்பினரானார்; பின்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுநர்களில் ஒருவரானார்.
இந்து அரட்டலியக் குழுவாயிருந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்த வேறு சிலர் ‘புரட்சிகர ஒப்புரவுக் கட்சி’ (RSP) எனும் கட்சியைத் தோற்றுவித்ததைப்பற்றி ஏற்கெனவே கண்டோம்.
'இல்லுமினாட்டிகள்'
இவர்களில் சிலர் உலகாளும் 'ஃபீரீ மேசன்' (Free Mason) எனும் தீயக் கரவுக்கழகத்தின் (Secret Society) உறுப்பினர்களாயிருந்தனர்.
பிரம சமாசத்தின் உறுப்பினராகவும் இரவீந்திரநாம் தாகூரின் உறவினராகவும் இருந்த ககனேந்திர தாகூர் (1867-1938) 'ஃபிரீ மேசன்' கழகத்தின் உறுப்பினராயிருந்தார்.
நரேந்திரநாத் தத்தா என்னும் இயற்பெயரில் 1884ஆம் ஆண்டில் விவேகானந்தர் (1863 -1902) 'ஃபிரீ மேசன்' அமைப்பின் உறுப்பினராகத் தீக்கைப் பெற்றார்.
1912ஆம் ஆண்டில் இந்தியப் பகராளுநராயிருந்த ஆர்டிஞ்சு கோமகனைக் (Viceroy Lord Hardinge) கொல்ல முயன்ற சர் ராசு பீகாரி போசும்கூட (Rash Bihari Bose 1886-1945) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திரபோசு தமது ஆசானாகக் கொண்டிருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசும் (1869-1925) 'ஃபிரீ மேசன்' இயக்கதின் உறுப்பினராயிருந்தார்.
1885ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் பேராயத்தின் (காங்கிரசின்) முதலாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய 'உமேசு சந்திர பானர்ச்சி' (Womesh Chunder Bonnerjee 1844-1906) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
பேராயக் கட்சித் தலைவரும், 1919-22 ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவரும், சுயராச்சியக் கட்சியைத் தோற்றுவித்தவருமான 'தேசபந்து சித்தரஞ்சன் தாசு'வும் (1869 –1925) கூடப் ஃபிரீ மேசன் உறுப்பினராவார்.
பிரம சமாசத்தின் உறுப்பினராயிருந்த கேசப் சந்திர சென்னும் (1838-84), 1899ஆம் ஆண்டில் பேராயக் கட்சிக்குத் தலைவராகவும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவுமிருந்த இரமேசு சந்திர தத்தும் (1848-1909) கூட 'ஃபிரீ மேசன்' உறுப்பினர்களாயிருந்தனர்.
1942ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் படையையும் (Indian National Army),1913ஆம் ஆண்டில் 'கத்தர்' (Ghadar) புரட்சி இயக்கத்தையும் கட்டியமைத்தவர்களில் ஒருவரான சர் ராசு பிகாரி கோசும் (1845– 1921) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராவார்.
ஆர். எசு. எசு. எனும் அரட்டல் வன்முறை இயக்கம் நடத்திவரும் இன்றைய மறைமுகக் காவியாட்சி, உலகளாவிய கொற்றுப்புரை(கார்ப்பொரேட்)களுடன் நகமும் சதையும்போலமைந்து இந்தியத் துணைக் கண்டத்தின் இயற்கை வளங்கள் அத்தனையையும் விற்றுக் காசாக்கி அதில் ஒரு பங்கை இந்தி(ய)க் கொற்றுப்புரைகளுக்குக் கொடுத்துவருவது கண்கூடான உண்மை. உலகச் சந்தையையும் பொருளியலையும் தம் கைக்குள் வைத்திருக்கும் யூத இல்லுமினாட்டிகளுக்கும் இந்துத்துவப் பரிவாரங்களுக்கும் இடையில் பிரிக்கவொண்ணாக் கொப்பூழ் உறவு உள்ளதை நாட்டு நடப்புகள் தெளிவுறக் காட்டுகின்றன.
தரங்கெட்ட சூழ்ச்சிகளேயன்றி தலையில் சரக்கேதும் இல்லாத ஆர். எசு. எசு.வுக்கும் பார‘தீய’ சனதா கட்சிக்கும் சொந்தமான பொருளியல் கொள்கை ஏதேனும் உண்டா? இல்லையே! பேராயக் கட்சி கொணர்ந்த தரகு முதலாளியப் பொருளியல் கொள்கைகளின் ஈயடிச்சான் படியாகத்தான் அவற்றின் இன்றைய பொருளியல் கொள்கைகள் உள்ளன. ‘பேராயக் கட்சி + மாடு’ என்று எங்கள் கொள்கையெனக் காவிக்கட்சியின் நடுவண் பொருளமைச்சரே திருவாய்மலர்ந்தார்!
மேற்போந்தவைதான் இந்துத்துவத்தின் கதைச் சுருக்கம்!-ஐயா குணா 

இந்துத்துவ அரட்டல்-5

இந்துத்துவ அரட்டல்-5
ஆர். எசு. எசு.
சாவர்க்கர் முன்வைத்த இந்துத்துவக் கொள்கையால் ஈர்க்கப் பட்ட மராத்திய தேசாந்த பிராமணரும் மருத்துவருமான 'கேசவ் பலி ராம் எக்டேவர்' (1889-1940) சாவர்க்கரைச் சந்தித்தப் பின்னர் 1925ஆம் ஆண்டில் 'தேசியத் தன்தொண்டு சங்கம்' (Rashtriya Swayamsevak Sangh/RSS)) எனும் ‘அரசியல் சாரா’ இந்துவெறி இயக்கத்தை உருவாக்கினார். இந்து தேசத்தையும் இந்துக் குமுகத்தையும் கட்டியெழுப்புவதே அதன் கொள்கையாகும்.
கேசவ் பலிராம் எக்டேவர் ஆர். எசு. எசு. இயக்கத்தைத் தோற்று வித்தப்பின், இந்து மகாசபை வலுவிழந்தது
ஆர். எசு. எசு.வும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறவில்லை. 1930ஆம் ஆண்டில் காந்தியின் தலைமையில் நடந்த 'காடு காப்பு' அறப்போராட்டத்தில் டாக்டர் எக்டேவர் கலந்துகொண்டது மட்டும் ஒரு விதிவிலக்கு.
இந்து மகாசபை ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்கத் துணியாமல், அதற்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்துப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்தி(ய)த் தனியுரிமைப் போராட்டதை எதிர்த்து வந்ததைப் போன்றே அதன் வழிவந்த ஆர். எசு. எசு. இயக்கமும் இந்தி(ய)த் தனியுரிமைப் போராட்டத்தை முழு மூச்சுடன் எதிர்த்தது; ஆங்கிலேயரின் வந்தேறி ஆட்சிக்கு அது தொடர்ந்து முட்டுக்கொடுத்தது.
1940ஆம் ஆண்டில் எம். எசு. கோல்வால்கர் ஆர். எசு. எசு. அமைப்பின் தலைவரானபின், அந்த அமைப்பு பிரிட்டிசாருக்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பிரிட்டிசுப் பேரரசி இந்தியாவுக்கு வருகை தந்தபோது, ஆர். எசு. எசு. அவருக்கு மிகச் சிறப்பான படையணிவகுப்பு நடத்திப் பெருமைப்படுத்தியது.
தனிப் பாக்கித்தான் வேண்டுமென்று முசுலிம் லீக் தீர்மானத்தை இயற்றியப் பிறகும், ‘இந்து தேசம்’ வேண்டுமென ஆர். எசு. எசு. கேட்டதே யன்றி, இந்திய விடுதலை இயக்கத்தில் அது பங்கெடுக்கவேயில்லை. பிரிட்டிசுப் பேரரசப் படைகளும் அதன் காவல்படைகளும் தவிர பிற யாரும் படை கட்டிச் சீருடை உடுத்திப் படையணிவகுப்புகளையும் படைப்பயிற்சிகளையும் செய்வதைப் பிரிட்டிசு அரசு தடைசெய்தபோது, ஆர். எசு. எசு. தன் படைத்துறையைக் கலைத்துவிட்டது.
ஆர். எசு. எசு., இந்திய விடுதலைப்போரில் பங்கெடுக்காதபோதும், அதன் உறுப்பினர்களில் ஓரிருவர் அதில் பங்கெடுக்கவே செய்தனர்.
தாய்க்கும் சேய்க்கும் ஒரு பிணக்கு இருந்தது. 1939ஆம் ஆண்டில் இந்து மகாசபை நடத்திய தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட கோல்வால்கர், அத் தேர்தலில் தோற்றார். அதுமுதல் இந்து மகாசபை நடத்திய எல்லாக் கூட்டங்களையும் கோல்வால்கர் புறக்கணித்தார்.
ஆர். எசு. எசு. இயக்கத்தைத் தோற்றுவித்த எக்டேவர், பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்காது, இந்தியத் தனியுரிமைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலகி நின்றார்.
26.01.1930ஆம் நாளை இந்தியத் தனியுரிமை நாளாக அறிவித்தபோது அந் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டாடிய ஆர். எசு. எசு., அதன் பின் அது போன்ற கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவேயில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இந்தி(ய)த் தேசியத்தைக் கோல்வால்கர் “பிற்போக்கான பார்வை” என்று வெளிப்படையாகவே சொன்னார். ஆர். எசு. எசு. இயக்கத்தின்மேல் ஆங்கிலேயர் தடை விதிக்கக் கூடாது என்பதில் கோல்வால்கர் கண்ணும் கருத்துமாயிருந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தை எந்தவொரு வடிவிலும் ஆர். எசு. எசு. ஆதரிக்கவில்லையெனப் பிரிட்டிசு அரசு நற்சான்று வழங்கியது. ஆர். எசு. எசு. இயக்கம் ஆங்கிலேயர் ஆட்சியின் சட்டம் ஒழுங்குக்கு எந்தவொரு கேடும் விளைவிக்கவில்லையென ஆங்கிலேய அரசின் உள்துறை அமைச்சகம் கருதியது.
1942 ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்திலும் ஆர். எசு. எசு. பங்கெடுக்கவில்லை. ஆங்கிலேய அரசுக்கு ஒவ்வாத யாதொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமெனத் திசம்பர் 1940இல் ஆர். எசு. எசு.க்குப் பிரிட்டிசு அரசு கட்டளையிட்டபோது,
“அரசின் எந்தவோர் ஆணையையும் கெடுக்க நினைக்கும் எண்ணம் ஆர். எசு. எசு.வுக்கு இல்லை”
என்று ஆர். எசு. எசு. தலைமை உறுதியளித்தது. அதேபோன்று, திசம்பர் 1946ஆம் ஆண்டு கப்பற்படைக் கலகத்தை ஆர். எசு. எசு. ஆதரிக்கவும் இல்லை; அதில் சேரவும் இல்லை.
இந்தி(ய) அரசமைப்பு மன்றம் 22.07.1047 அன்று மூவண்ணக் கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாயிருக்குமென்று முடிவெடுத்தபோது, ஆர். எசு. எசு. அதை மிகக் கடுமையாக எதிர்த்தது. “காவிக்கொடிக்குப் பின்னாலிருக்கும் புதிர்” எனும் தலைப்பில் அதை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியது; காவிக்கொடியே இந்தியாவின் கொடியாயிருக்க வேண்டுமென்றும் வழக்குரைத்தது.
“விதியின் வினைவலியால் ஆட்சிக்கு வந்தவர்கள், மூவண்ணக்கொடியை நம் கையில் கொடுத்ததால், இந்துக்கள் அதை மதிக்கவும் ஏற்கவும் செய்யார்.
"மூன்று என்பதே ஒரு தீமை; மூன்று வண்ணங்கள் கொண்ட கொடி நாட்டின்மீது மிகவும் கெட்ட உளத்தியல் தாக்கமாகவும் தீங்கு பயப்பதாகவும் இருக்கும் என்பது உறுதி”
என்று பக்வா துவாச் (Bhagwa Dhwaj)) எனும் ஆர். எசு. எசு. ஏடு எழுதியது.
"எண்ணங்களின் கொத்து" (Bunch of Thought) எனும் நூலில் மூவண்ணக் கொடியைத் தேசியக்கொடியாக வைத்ததை எதிர்த்து கோல்வால்கர் புலம்பித் தள்ளினார்.
மனுநூலைப்பற்றி இந்திய அரசுச்சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லையெனக் கூறிய ஆர். எசு. எசு., இந்திய அரசுச்சட்டத்தை ஏற்க மறுத்தது.
“பண்டைய பாரதத்தில் தோன்றிய நனி சிறந்த அரசமைப்பின் வளர்ச்சியைப்பற்றி இந்திய அரசுச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை..... மனுநூலில் கூறப்பட்டிருக்கும் மனுவின் சட்டங்கள் உலகின் பாராட்டுதலைப் பெற்றுள்ளன; அதற்குக் கீழ்ப்படிவதும் அதன்மீது கொண்ட உறுதிப்பாடும் இந்நாள்வரை தானாக அமைந்துள்ளன. ஆனால், நம்முடைய அரசுச்சட்ட வல்லுநர்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல”
என்று சொல்லி ஆர். எசு. எசு. அமைப்பின் 'ஆர்கனைசர்' (Organiser) அதன் 30.11.1949ஆம் நாளைய ஆசிரிய உரையில் புலம்பித் தீர்த்தது.
எல்லாச் சாதிகளும் சமமானவை எனும் இந்திய அரசுச்சட்டத்தின் நிலைப்பாட்டை ஆர். எசு. எசு. ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதையே,
“இந்துக்களுக்கு அறுதிநிலைச் சட்ட அதிகாரமாயிருந்தது மனுநூலேயன்றி, இந்திய அரசுச்சட்டம் அன்று”
என்று “மனுநூலே நம் நெஞ்சை ஆள்கிறது” (Manu Rules our Hearts) எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நடுவரான சங்கரசுப்பு ஐயர் 06.02.1950 அன்று ஆர். எசு. எசு. இயக்கத்தின் ‘ஆர்கனைசர்’ ஏட்டில் எழுதினார்.
ஆர். எசு. எசு.வின் அரசியல் முகப்பான பார’தீய’ சனதா கட்சியின் ஆட்சி தில்லியில் கொலுவேறியபின், பன்னாட்டினக் கொற்றுப்புரை (கார்ப்பொரேட்)களுக்கு ‘இந்தி’யாவையே ஏலம்கூறி விற்க துணிந்துவிட்டது. அதற்காக இந்தி(ய)த் தலைமையமைச்சர் நரேந்திர மோடி போகாத நாடில்லை; பேரம் பேசாத இடமில்லை.
1947ஆம் ஆண்டில் ‘இந்தியா’ என்னும் பலபட்டறை அரசு உருவானபோது, காவிக்கொடியைத் தவிர்த்து மூவண்ணக் கொடி ‘தேசியக்’ கொடியாக இருக்கலாகாதென வம்படியாக வழக்காடிய ஆர். எசு. எசு., இன்று அதே மூவண்ணக் கொடியைத் தாங்கள் போற்றிக் கும்பிடும் மாட்டுக்கு இணையாக வைத்துப் புனிதநீர் தெளித்து, அதனைக் கும்பிடாதோரை அடித்துத் துவைக்கிறது!
மனுநூலைத் தழுவிதான் இந்தி(ய) அரசுச்சட்டம் இயற்ற வேண்டுமென்று ஒருகால் அடம்பிடித்த ஆர். எசு. எசு., இந்துத்துவத்திற்குத் துணைபோன பீ. ஆர். அம்பேட்கர் தலைமையில் எழுதப்பட்ட 1950 இந்தி(ய) அரசுச்சட்டதிற்குக் குழிபறித்து, மெல்ல ஒழித்து, இந்துத்துவ அரசுச்சட்டத்தைக் கொணர மெல்லக் காய் நகர்த்தி வருகிறது; இந்தி(ய) அரசமைப்பையே புரட்டிப்போட தன்னாலான சூழ்ச்சிகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. ஆரியக் கூத்தாடிப்படி செருமனியில் முற்றாளுமை புரிந்த ஃபூரர் இட்லரின் கொடுங்கோன்மையை ஒத்த தூய ஆரியப் பிராமணராட்சிக்கு அஃது அடிகோலி வருகிறது.
சனாதனமே இந்தியத் தேசியம்
சாமி விவேகானந்தர், பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயா ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட முன்னாள் இந்திய ஆட்சிப்பணி (ICS) அதிகாரியும் பின்னாள் இந்து அரட்டல் தீவிரருமான 'அரவிந்தர்' எனப்பட்ட 'அரவிந்த கோசு' (1872 -1950), இந்தியாவுக்கு முழு அரசியல் விடுதலை வேண்டுமெனும் முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியவர்களில் ஒருவராவார்.
ஆங்கிலேயர் பண்பாட்டில் ஊறி வளர்ந்த அரவிந்தர், பின்னர் ஓர் இந்துவெறியரானானர். இந்தியத் தேசிய இயக்கத்தின் குறிக்கோள் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென வரையறுத்து 30.05.1909 அன்று மேற்கு வங்கத்தின் உத்தரப்பாறாவில் அரவிந்த கோசு ஆற்றிய உரையில்,
“[இந்தியத்] தேசியம் என்பது ஒரு திருமுறைக் கோட்பாடாகவோ மதமாகவோ நம்பிக்கையாகவோ இனியும் இல்லையெனச் சொல்வேன். என்னைப் பொறுத்த வரையில், சனாதனம்தான் [இந்தியத்] தேசியம் என்பேன். சனாதன தருமத்துடன் பிறந்த இந்து தேசம், அதனோடு ஒன்றி வளர்கிறது. சனாதன தருமம் வீழ்ச்சியுறும்போது, [இந்தியத்] தேசியமும் வீழ்ச்சியுறுகிறது. சனாதனம் அழிய நேர்ந்தால், அச் சனாதனத்தோடுதான் அஃது அழியும். சனாதன தருமமே [இந்தியத்] தேசியம் ஆகும்”
என்று ஐயம் திரிபறக் கூறினார்.
அரவிந்தர் கூறும் ‘சனாதன தருமம்’ எனபது நால்வரண நெறியே யன்றி வேறில்லை என்பதை இருக்குவேதம் பின்வருமாறு கூறுகிறது:
வைஸ்வாநராய ப்ருதுபாஜசே விப்போ ரத்னா விதந்த தருணேஷு காத்தவே
அக்னிர்ஹி தேவான்ருத்தோ துவஸ்யத்யத்தா தர்மாணி சனதான தூதுஷத்*
* vaisvanaraya prthupajase vipo ratna vidhanta dharunesu ghatave |
aghnirhi devanamrto duvasyatyatha dharmani sanata na dudusat || (Rig Veda 3.3.1-2.)
“சாகா வரம் பெற்ற அக்கினி தேவர்களுக்குப் பயன்படுவதால், சனாதன தருமம் என்றுமே மீறப்படுவதில்லை” என்பதே அவ்வரிகளுக்கான உண்மையான பொருள்.
ஆனால், மேற்போந்த இருக்குவேத வரிகளில் வருகிற ‘சனாதன தருமம்’ என்பதற்கு ‘நிலைமாறாத’ அல்லது ‘நிற்றியமான’ என்று இக்கால இந்துத்துவர்கள் திரித்துப் புரட்டிப் பொருள் கூறிவருகின்றனர்.
‘குணத்துக்கும் செயலுக்கும் இசைய [பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனும்] நால்வரணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன. அந் நால்வரணங்களை வகுத்தவன் நானேயாயினும், அழிவற்றோனான நான் அவற்றை ஆக்கவில்லை என்றுணர்’ எனும் பொருள் பட,
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தாரமவ்யயம்$
$ caturvarnyam maya srstam gunakarmavibhagasa?
tasya kartaram api mam viddhy akartaram avyayam (Bhagavad Gita 4.13.)
meaning “The fourfold caste was created by Me, by the differentiation of Guna and Karma. Though I am the author thereof, know Me to be the non-doer, and changeless.” (The Bhagavad Gita 4.13.) (Srimad-Bhagavad-Gita, 4.13; English translation and com-mentary by Swami Swarupananda, [1909], at sacred-texts.com)
என்று கண்ணனே கூறுவதாக கூறுவதாக பகவற்கீதையில் உள்ளது. நால்வரணங்களை வகுத்தவன் கண்ணனே என்பதே அதன் பொருளாகும். இந்தக் கூற்றை மகாபாரதம் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:
யே ச வேதவிதோ விப்ரா யே சாத்யாத்மவிதோ ஜனா:
தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்@
@ ye ca vedavido vipra ye cadhyatmavido janah
te vadanti mahatmana? krsnam dharmam sanatanam (Mahabharata Book 3, Chapter 86, Verse 22)
எனும் மகாபாரத வரிகள் ‘கண்ணனின் தருமம் சனாதனம்’ என்றுதான் குறிப்பிடுகின்றன. ‘கண்ணன் வகுத்த நெறி நால்வரண பாகுபாடே’ என்பதே அதன் பொருள்.
ஆனால், ‘சனாதனம்’ என்பதற்குத் ‘தொன்மையானது, நிற்றியமானது, தொன்று தொட்டு வந்த வாழ்க்கைநெறி’ என்றெல்லாம் இந்துத்துவக் கொள்கையினர் திரித்துப் புரட்டிப் பொருள் கூறிவருகின்றனர்; முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர்.
முன்னே சொன்ன அரவிந்தரின் 'உத்தரப்பாறா உரை'யின்படி, இந்தி(ய) அல்லது ‘இந்து’ தேசியம் என்பது நால்வரண பாகுபாட்டையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. இந்து மதம் வேறு, சனாதனம் வேறு என்று எவ்வளவுதான் திரித்தும் புரட்டியும் பொருள் கூறினாலும், இந்து மதம் என்பது சனாதனமாகிய நால்வரண பாகுபாடே என்பது உறுதி.
“அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப்பின் வேறு சமய நம்பிக்கை கொண்ட அயலார்கள் இந்தியாவின்மேல் அலையலையாகப் படையெடுத்தனர். வரணநெறி என்னும் உள்ளார்ந்த வலிமை இருந்தமையால்தான் பன்னூறு ஆண்டுக்காலத்தினூடே படையெடுப்புகள் பல நிகழ்ந்தபோதும், சனாதன தருமத்தைக் கட்டிக் காப்பாற்ற முடிந்தது”#
என்றும்,
“அது போன்ற நிலைத்த பெருமையைப் பெறுவதற்கு வேண்டிய தனித்தன்மை சனாதன தருமத்திற்கு வாய்த்தமைக்கு வரணநெறியே காரணமாயிருக்கலாம்”*
என்று 'இந்துபீடியா' கூறுவதும் அதை உறுதிப்படுத்துகிறது. இந்து தேசியமே இந்தியத் தேசியம் என்னும் கூற்றை அது மெய்ப்பிக்கிறது.
பார‘தீய’ சனதா கட்சி எனும் நொண்டியைத் தோள்மேல் சுமந்து நிற்கும் ஆர். எசு. எசு. எனும் குருடன், இந்தி(ய)த் தேசியம் என்பது சனாதன தருமமே என்னும் கூற்றை நெஞ்சில் புதைத்து வைத்துக்கொண்டுதான் ஆரியப் பிராமணியத்தை அரியணையில் ஏற்றுகின்ற உத்திகளில் ஈடுபட்டுள்ளது.-ஐயா குணா 

இந்துத்துவ அரட்டல்-3,4

இந்துத்துவ அரட்டல்-3
பிரம சமாசம்
பிரம சமாசம் 'பண்டிட் நபீன் சந்திர ராய்' என்பவரால் 1861ஆம் ஆண்டில் லாகூரில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது. 'பிரமவியம்' (Brahmoism) இந்துவியத்திலிருந்து வேறுபட்டதென 'ஏமேந்திரநாத் தாகூர்' (1844-84) என்னும் வங்காளி சொன்னார். அவருடைய கருத்தை அடியொற்றி வங்க மலர்ச்சிக் காலத்தில் கொல்கொத்தாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமே 'பிரம சமாசம்'. பிராமணியம் சீர்த்திருத்தப்பட வேண்டுமெனக் கருதிய 'ராசா ராம் மோகன் ராயும்' (1772-1833) 'தேபேந்திரநாத் தாகூரும்' (1817-1905) இணைந்து1828ஆம் ஆண்டில் பிரம சமாசத்தைத் தோற்றுவித்தனர்.
இவைதாம் அந்தப் பிரம சமாசத்தின் கொள்கைகள்:
1. எந்த வேதத்தையும் திருமறையென நம்பாமை;
2. விண்டுவின் புதிய தோற்றங்(அவதாரங்)களைப் பற்றிய கதைகளை நம்பாமை;
3. பல்தெய்வ வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் மறுத்தல்;
4. சாதிப் பாகுபாடுகளை எதிர்த்தல்;
5. கருமக் கோட்பாட்டையும் மறுபிறப்புக் கோட்பாட்டையும் நம்பாமை.
பிரமன் மட்டுமே தனிப்பெரும் மெய்ம்மை என்று சொல்லிய பிரம சமாசத்தினர், பிரமனை மட்டுமே வழிபட்டனர். ((https://en.wikipedia.org/wiki/Brahmo_Samaj))
1860ஆம் ஆண்டில் 'பிரம சமாசத்தின் நெறிமுறைகள்' (Brahmo Anusthan) எனும் நூலை வெளியிட்ட ஏமேந்திரநாத் தாகூர், ‘பிரமியம்’ வேறு, ‘இந்துவியம்’ வேறு என்று அந்த நூலில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
(காரல் மார்க்சு உள்ளிட்ட) ஐரோப்பியர்கள் இந்தியத் துணைகண்டத்திலுள்ள தேசிய இனங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அதில் வாழும் மக்களை ஒட்டுக்காக ‘இந்து’ எனும் பெயரால் அழைத்தனர்; இல்லாத ‘இந்து’ எனும் மதத்தைத் தோற்றுவித்தனர். அப்படியிருந்தும், இந்துவியத்தைப்பற்றிக் கவலைபடாது, பிராமணியத்தை மட்டுமே சீர்திருத்த முயன்ற வங்க மறுமலர்ச்சி இயக்கமே பிரம சமாசம்.
பிரம சமாசம் காலப்போக்கில் இரண்டுபட்டது. ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ (Anusthanic Brahmos) என்போரில் பெரும்பாலோர் சாதியத்தை ஏற்க மறுத்த 'குலின்' (Kulin) பிராமணர்களாயிருந்தனர். பிரமனை வழிபடுவதன்றி வேறு எந்த சமயத்தையும் அவர்கள் ஏற்கவில்லை.
ஆனால், பிராமணரல்லாக் காயசுத்தர், பைதியர் முதலானவர்கள் ‘நெறிவழிப்படா பிரமோக்கள்’ (Ananusthanic Brahmos) எனப்பட்டனர். கரும கோட்பாட்டிலும் நால்வரண நெறியிலும் மறுபிறப்புக் கோட்பாட்டிலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
1833ஆம் ஆண்டில் ராம் மோகன் ராய் இறந்த பிறகு, வங்கப் பிராமணர்களிடமிருந்து பிரம சமாசத்தைத் தெலுங்குப் பிராமணர்கள் கைப்பற்றினர். இவர்கள், பிரம சமாசத்தில் உருவ வழிபாட்டைப் புகுத்தினர்.
இளவரசர் துவாரகநாத் தாகூரின் மகனான 'தேபேந்திரநாத் தாகூர்', 1839ஆம் ஆண்டில் 'தத்துவரஞ்சினி சபை' என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். வங்க மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 'அக்சைய் குமார் தத்தா'வும் (1820 -86) 'ஈசுவர சந்திர வித்யாசாகரும்' (1820 -91) அவ்வமைப்பில் முதன்முதலில் உறுப்பினரானவர்களாவர்.
1843ஆம் ஆண்டில் தேபேந்திரநாத் தாகூர் இருபது பேருடன் இணைந்து ராம் மோகன் ராயின் கொள்கைகளை ஏற்றுப் பிரம சமாசத்தில் சேர்ந்தார்.
'மறைதிரு சார்லசு தாள்' (Rev. Charles Dall 1816-86) எனும் அமெரிக்கக் கிறித்துவ பாதிரியார், பிரம சமாசத்திற்குள் புகுந்து கிறித்துவத்தைப் பரப்ப முனைந்தபோது, தேபேந்திரநாத் தாகூர் 1857ஆம் ஆண்டில் அவரைப் பிரம சமாசத்திலிருந்து வெளியேற்றினார். சார்லசு தாள் அதனால் தம் கையாளான 'கேசப் சந்திர சென்' (1838-84) எனும் பிராமணரல்லாதவரைப் பிரம சமாசத்திற்குள் ஊடுருவச் செய்தார்.
கேசப் சந்திர சென்னின் கொள்கையில் கிறித்துவத்தின் தாக்கங்கள் இருந்தன. அத்துடன் அவர் ஆங்கிலேயர் ஆட்சிக்குச் சார்பாயிருந்தார். இதனால், பிரம சமாசத்திற்குள் குழப்பமும் பூசலும் மூண்டன; 'தத்துவபோதினி சபை'யின் முன்னாள் உறுப்பினர்கள் பிரம சமாசத்திலிருந்து விலகினர்.
வங்கத்தில் தோன்றிய பிரம சமாசம், ஐரோப்பியப் பண்பாட்டுக் கூறுகளைத் தம்வயமாக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தது. மேற்கத்தியச் சார்பினதாகவும் ஆங்கிலேயர்க்கு உகந்ததாகவுமே இருந்தது.
ஏமச்சந்திரநாத் தாகூர் தொடர்வண்டித்துறையில் அதிகாரியாயிருந்த பண்டிட் நபீன் சந்திர ராயுடன் சேர்ந்து 1861ஆம் ஆண்டில் பிரமவியத்தைப் பரப்பலானார். அதுமுதல், ராம் மோகன் ராயின் மூலக்கோட்பாடு 'ஆதிதருமம்' எனப்பட்டது.
தாங்கள்தாம் உண்மையான பிரம சமாசத்தவர் என்று அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் ஏமேந்திரநாத் தாகூர் வழக்கு தொடுத்தார். அவ் வழக்கில் அவர் தோற்றதால், பிரம சமாசத்தின் பெயரை ‘இந்திய பிரம சமாசம்’ என்று கேசப் சந்திர சென் பெயர் மாற்றினார்.
இந் நிலையில்தான், ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ என்றும் ‘நெறிவழிப்படாத பிரமோக்கள்’ என்றும் பிரம சமாசத்தவர் இருவழியாயினர்.
'ஆதி தருமத்தவர்' என்றழைக்கப்பட்ட ‘நெறிவழிப்பட்ட பிரமோக்கள்’ இந்துக்கள் அல்லர் என்றும், ‘நெறிவழிப்படாப் பிரமோக்கள்’ மட்டுமே இந்துக்கள் என்றும் 1897ஆம் ஆண்டில் பஞ்சாபின் முதன்மை வழக்குமன்றம் கொடுத்த தீர்ப்பைப் 'பிரித்தானியாவின் அரசுமன்றம்' (Privy Council) 1901ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தியது.
காட்டியத் திருச்சவைக் கல்லூரியில் (Scottish Church College) படித்துவந்தபோது சாமி விவேகானந்தர் (1863-1902) பிரம சமாசத்தின் உறுப்பினராயிருந்தார். 1881ஆம் ஆண்டில் அவர் சாமி இராமக்கிருட்டினருடன் தொடர்புகொண்டு அவரது மாணாக்கரானார்.
1866ஆம் ஆண்டில் தம் மகளுக்குக் கேசப் சந்திர சென் குழந்தை மணம் செய்வித்ததார். இதனால், பிரம சமாசம் பிளவுற்றது.
இதனையடுத்து, 14 அகவை ஆன பிறகே பெண்களுக்கு மணம் முடிக்க வேண்டுமெனும் 1872ஆம் ஆண்டு 'தனித் திருமணச் சட்டம்' (Special Marriages Act) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் “நான் ஓர் இந்துவும் அல்லன், முசுலிமும் அல்லன், கிறித்துவனும் அல்லன்” என்னும் உறுதிமொழியைத் தந்த பின்னரே திருமணங்கள் செய்விக்கப்பட்டன.
1954 'இந்து திருமணச் சட்ட'மும் 1955 'இந்து திருமணச் சட்ட'மும் வரும்வரையில் 1872 திருமணச் சட்டமே வழக்காற்றில் இருந்தது.
ஆரிய சமாசம்
வேதங்கள் பொய்ப்பதில்லை எனும் கூற்றின் அடிப்படையில் 1875ஆம் ஆண்டில் 'தயானந்த சரசுவதி' (1824-83) என்னும் குசராத்தியர் 'ஆரிய சமாசம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
வேதியரான தயானந்தர் 1869க்கும் 1873க்கும் இடையில் வேதிய சமயத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். வங்கத்தில் தோன்றிய பிரம சமாசத்துடன் தொடர்பிலிருந்த தயானந்தர், அவ்வமைப்பினரிடமிருந்து மாறுபடவும் செய்தார்.
ஆரிய சமாசத்தின் கொள்கைகள் பின்வருவன:
1. 'ஆஉஇம்' (AUM) எனும் திருப்பெயர்கொண்ட எல்லாம் வல்ல ஆண்டவன் மட்டுமே ஒரேயோர் தெய்வமாவான்;
2. வேதங்கள் பொய்க்கா;
3. இராமாயணம், மகாபாரதம் முதலான நூல்களும் பிற இந்து சமயநூல்களும் வேதிய அறிவை வலுப்படுத்த உதவுகிற நூல்களேயன்றி வேறில்லை;
4. விவிலியம், குரான் முதலான சமயநூல்களைப் புறந்தள்ளல்;
5. உருவ வழிபாட்டை எதிர்த்தல்;
6. மாந்தர் எல்லாரும் சமமானவரே;
7. வேதங்கள் காட்டுவதைப்போல் பெண்களுக்கும் உரிய உரிமையைத் தருதல். (https://en.wikipedia.org/wiki/Arya_Samaj)
இந்துத்துவ அரட்டல்-4
இந்து மகாசபை
ஆரிய சமாசத்தவராயிருந்த 'லாலா லசபதி ராய்' (1865 -1928), லால் சந்து, சாதிலால் (Shadi Lal) ஆகியோரால் 1907ஆம் ஆண்டில் பஞ்சாபில் தோற்றுவிக்கப்பட்ட இந்து மகாசபையின் முதல் கூட்டம் அதே ஆண்டில் லாகூரில் நடந்தது. மதன்மோகன் மாளவியா (1861-1946) அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
1913ஆம் ஆண்டில் அனைந்திந்திய இந்து மகாசபையைத் தோற்றுவிக்க வேண்டுமெனப் பஞ்சாப் இந்து மகாசபை தீர்மானம் இயற்றியது. அதையடுத்து, 1915ஆம் ஆண்டில் அரிதுவாரம், லக்னோ, தில்லி ஆகிய இடங்களில் அதன் மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்துக்களை ஒன்றிணைக்கவும் குமுகச் சீர்திருத்தங்களைக் கொணரவும் விரும்பிய இந்து மகாசபை, ஆங்கிலேயருக்கு நம்பிக்கையுரியவராகக் காட்டிக்கொள்ள எண்ணியது. மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் காசிம்நகர் மகாராசவான 'மணிந்திர சந்திர நந்தி' (1860-1929) தலைமை தாங்கிய இந்து மகாசபையின் 'அரிதுவார் மாநாடு', ஆங்கிலேயர் ஆட்சிக்கு நம்பிக்கையுரியவராயிருப்பதெனும் தீர்மானத்தை இயற்றியது.
ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரியதாயிருக்க வேண்டுமெனும் இந்து மகாசபையின் நிலைப்பாட்டைச் சாமி சிரதானந்தர் (1856-1926) கடுமையாக எதிர்த்தார். இதனால், அதே மகாராசா மணிந்திர சந்திர நந்தியின் தலைமையில் 1921ஆம் ஆண்டில் கூடிய மாநாட்டில் “ஆங்கிலேயர்க்கு நம்பிக்கையுள்ளதாயிருக்க வேண்டும்” என்னும் இந்து மகாசபையின் பழைய நிலைப்பாடு திருத்தப்பட்டு, ‘தன்னாட்சியுடன் கூடிய ஒன்றிய இந்து தேசத்தைக் உருவாக்க வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. முசுலிம்களை மீண்டும் இந்துக்களாக்குவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாயிருந்தது.
‘இந்துத்துவம்’ எனும் சொல்லையும் கொள்கையையும் உருவாக்கியவர் 'வினாயக் தாமோதர் சாவர்க்கர்' (1883-1966) ஆவார்.
1920களில் அச் சாவர்க்கர் இரத்தினகிரி சிறையில் இருந்தபோது எழுதிய 'இந்துத்துவத்தின் உள்ளீடு' என்னும் நூல், பின்னர் 'இந்துத்துவம்: யார் இந்து?' என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்துப் பெற்றோர்களுக்குப் பிறந்து, ‘இந்தியா’ தன் தாய்நாடு என்று ஏற்றுக்கொண்டவர்தாம் ‘இந்து’ எனப்படுவார் என்று அந் நூலில் வரையறுக்கப்பட்டது. இந்து தேசம், வரணமுறை, சமற்கிருதம் ஆகியவையே இந்துத்துவத்தின் மூன்று உள்ளீடுகள் என்று அந் நூலில் சாவர்க்கர் விளக்கினார்.
இந்துத்துவம்தான் இந்து தேசத்தின் அடிப்படையெனச் சார்க்கர் வரையறுத்தார். புத்தம், அருகம் (சைனம்), சீக்கியம் ஆகிய மதங்கள் இந்துத்துவத்திற்குள் அடங்குவன வென்பதும், இசுலாம், கிறித்துவம், யூதம், சோராசுத்தனியம் ஆகியன இந்து மதத்திற்குள் அடங்கா வென்பதும் சாவர்க்கரின் கூற்றாயிருந்தது.
1920களின் பிற்பகுதியில் வினாயக் தாமோதர் சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவரானபின், முசுலிம்களின் துணைக்காக ஏங்கி நின்ற பேராயக் கட்சியின் போக்கை இந்து மகாசபை மிகக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது.
ஆங்கிலேயர் ஆட்சியின் நம்பிக்கைக்குரியதாயிருக்க வேண்டும் எனும் முந்தைய கொள்கையை இந்து மகாசபை மாற்றிக்கொண்டாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலை இயக்கத்தை அவ்வியக்கம் ஆதரிக்கவில்லை. 1930ஆம் ஆண்டில் மோகனதாசு கரம் சந்து காந்தி (1869 -1948) தொடங்கிய அறவழி ஒத்துழையாமை இயக்கத்தில் இந்து மகாசபை கலந்துகொள்ளவில்லை.
தனிப் பாக்கித்தான் நாட்டை உருவாக்க வேண்டுமெனச் சிந்து மாநிலச் சட்டமன்றம் 1943ஆம் ஆண்டில் தீர்மானம் இயற்றியது. அந்த மாநில ஆட்சியில் பங்கு பெற்றிருந்த இந்து மகாசபை அமைச்சர்கள் அந்த அரசின் பிரிவினைக் கோரிக்கையை மட்டுமே எதிர்த்தனரே யன்றி, அத் தீர்மானத்தை எதிர்த்துத் தத்தம் பதவியைத் துறக்கவில்லை.
அதேபோல், 1943ஆம் ஆண்டில் முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்த சர்தார் 'ஔரங்கசீப் கானின்' (1899-1965) தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இந்து மகாசபையும் பங்குபெற்றது. இந்து மகாசபையைச் சேர்ந்த 'மெஃகர் சந்து கண்ணா' (1897-1970) என்பவர் அந்த அமைச்சரவையில் பொருளமைச்சராயிருந்தார்.
காந்தியின் தலைமையில் பேராயக் கட்சி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தின்போது இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர், “பதவியை விடாது பற்றி நில்லுங்கள்!” (Stick to your post!) எனச் சொல்லித் தம் அமைப்பினர்க்கு மடல் விடுத்தார். “வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தில் சேராமல் ஒதுங்கி நின்று, நகராட்சிகள், உள்ளாட்சிகள், சட்டமன்றங்கள், பிரிட்டிசு படை முதலானவற்றில் பணிபுரிகிற இந்து மகாசபையினர் 'தத்தம் பதவிகளை விடாமல் அவற்றை உறுதியாகப் பற்றி நில்லுங்கள்!' என்று அம் மடலின் வழியாக அறைகூவல் விடுத்தார்.
அன்று பசுலுல் அக் (A.K. Fazlul Haq 1873-1962)) தலைமையிலிருந்த கூட்டணி அரசு ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தை எவ்வாறெல்லாம் முறியடிக்க வேண்டும் என்று கூறி, வங்காளத்தில் இந்து மகாசபையின் தலைவராயிருந்த சியாம பிரசாத் முக்கர்ச்சி (1901 - 53) பிரிட்டிசு ஆளுநருக்கு பின்வருமாறு எழுதினார்:
“...... பிரிட்டிசாருக்கு என்றில்லாமல்-பிரிட்டிசார் பயன் பெறுவர் என்று எண்ணாமல்-(வங்காள) மாகாணத்தின் தன்னுரிமையையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த வேண்டுமெனின், இந்தியர்கள் பிரிட்டிசாரை நம்பித்தான் ஆக வேண்டும்.”
“அந்த [வெள்ளையனே வெளியேறு!] இயக்கம் பரந்துபட்ட மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிட்டுப் போர்க்காலத்தில் உள்நாட்டுக் குழப்பத்தைத் தோற்றுவிக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தவும் செய்கிறது”
என்றும்,
“அது போன்ற போராட்டத்தை எந்த அரசும் வன்முறையில் ஒடுக்கத்தான் செய்யும்”
என்றும் கூறுவதாகவே சியாம பிரசாத் முக்கர்ச்சியின் கூற்று இருந்ததென வரலாற்றாசிரியர் ஆர். சி. மசும்தார் கூறினார்.
1947க்கு முன்பும் பின்பும் இந்து மகாசபை ஒரு பெரிய அமைப்பாயிருக்கவில்லை.
இந்தியா-பாக்கித்தான் பிரிவினைக்கு 1947ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டதற்காகக் காந்தியைச் சுட்டுக்கொன்ற நாத்துராம் கோட்சே, அவரது கூட்டுச்சதியாளர்களான திகம்பர் கட்கே, கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஃழ்ணு கார்காரே, மதன்லால் பஃவா ஆகிய எல்லாருமே இந்து மகாசபையில் முனைப்புடன் செயற்பட்டு வந்தவர்கள்தாம்.
சீக்கியர்களும் அருகர்களும் (சைனரும்) புத்தர்களும்கூட இந்துக்களே என்பது இந்துத்துவாவின் நிலைப்பாடு. சமற்கிருதத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதும், இந்திக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதுமே அதன் நோக்கங்கள்.
காந்தியைப் போன்றே தீண்டாமை எதிர்த்த இந்து மகாசபை, நால்வரண (சனாதன) முறை இருக்கத்தான் வேண்டும் என்றது.
கீழ்ச் சாதியருக்குச் சலுகைகளையும் இடவொதுக்கீட்டையும் வழங்க கூடாது என்பதும் மனுநூலைக் கடைப்பிடித்தேயாக வேண்டும் என்பதும் இந்து மகாசபையின் கொள்கைகளாகும்.
பொதுவாகப் பிராமணர்களே அதன் உறுப்பினர்களாயிருந்தனர்.-ஐயா குணா 
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1495292857254820
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1495327303918042

இந்துத்துவ அரட்டல்

Gunaseelan Samuel
இந்துத்துவ அரட்டல்-1
திராவிடம் மெல்லக் கொல்லும் நஞ்சு என்பதைக் காலம் கடந்தாவது அறிந்துகொண்டோம். ஆனால், திராவிடத்துடன் கைகோத்துக்கொண்டு இயங்கும் ‘இந்தி’யம் தமிழரினத்தைப் பூண்டோடு ஒழுத்துக்கட்டுவது எனும் நோக்கில் வெறிகொண்டு திரிகிறது. செயலலிதாவின் இறப்பிற்குப்பின் அதன் வெறி உச்சிக்கு ஏறிவிட்டது.
பிராமணியம்+பணியா வணிகம்+கொற்றுப்புரைகள் (கார்ப்பொரேட்டுகள்) எனும் கலவையின் மொத்த வடிவமே ‘இந்தி’யம் அல்லது ‘பாரதீயம்’. உலகளாவிய இல்லுமினாட்டிகளின் கொற்றுப்புரைகளுடன் அந்தப் ‘பாரதீயம்’ கூட்டுச் சேர்ந்துள்ளது. ஏழை எளிய நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடுகிற அந்தக் கொற்றுப்புரைகளின் பொருளியல் வேட்டைக்குத் துணைபோவது என்பதே ‘பாரதீயத்’தின் பணி. இந்தப் ‘பாரதீயத்’தின் மறுபெயர்தான் இந்துத்துவம்.
இல்லாத பொல்லாத ‘இந்து’ எனும் அடையாளத்தையும் மதத்தையும் தோற்றுவித்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் ஏவிவிட்ட பேய்தான் ஆரியம். அதனால், பிராமணியம் புத்துயிர் பெற்றது. அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கென்றே ‘இந்துத்துவம்’ எனும் கொள்கை பிறப்பெடுத்தது. இதனால், இந்துத்துவம் எனும் பேய்க்கள்ளி எவ்வாறு முளைத்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
முன்னோடிகள்
‘இந்து’ எனும் சொல்லை ஒரு மதத்தைக் குறிக்கும் சொல்லாக முதன்முதலில் ஆண்டது 'செபாசுட்டியாவோ மான்ரிக்' (Friar Sebastiao Manrique) எனும் கிறித்துவப் பாதிரியேயாவார். 1649ஆம் ஆண்டில் அவர் அதைச் செய்தார். இசுலாமியர் அல்லாத மக்களைத் தனித்துப் பிரித்துக் காட்டுவதற்காகவே இசுலாமியரல்லாத எல்லாரும் ‘இந்து’ சதமயயத்தவர் என்னும் மதக் அடையாளத்தை முதன்முதலில் புகுத்தியவர் அவ் வெளிநாட்டுப் பாதிரியேயாவார். (http://en.wikipedia.org/wiki/Hindu)
சிந்து ஆற்றுக்கு அப்பாலிருக்கும் நிலப்பரப்பை ‘இந்து’ எனும் பாரசீக மொழிச் சொல்லால் குறிப்பிட்டனர். பாரசீக மொழியில் சகரம் ‘ஹ’கரமாக ஆகும் என்பதால், ‘சிந்து’ என்பது ‘இந்து’ (Hindu) என்றானது. முதலாம் டேரியசு பாரசீகத்தை ஆண்ட கி. மு. 6ஆம் நூற்றாண்டில்தான் ‘சிந்து’ எனும் புவியியல் பெயரைப் பாரசீகர்கள் ‘இந்து’ என்று ஒலிக்கத் தொடங்கினர். அரபு மொழியில் அதுவே ‘இந்து’ என்றானது. (http://en.wikipedia.org/wiki/Hindu) இந்து’ என்பது அப்போது ஓர் இடப்பெயராக மட்டுமேயிருந்தது.
'கீழையுலக ஆய்வாளர்கள்' (the Asiatic Soiety) என்று கூறிக்கொண்ட ஐரோப்பியர்கள் 18ஆம் நாற்றாண்டில் தோற்றுவித்த 'ஆசியக் கழகம்' (the Asiatic Soiety) என்னும் ஆய்வுக்கழகம், இந்தியத் துணைக்கண் டத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை யெல்லாம் புறக்கணித்துவிட்டு, அதில் வாழ்ந்துவரும் மக்களை மத அடிப்படையில் ‘இந்து’ என்றும் ‘இசுலாமியர்’ என்றும் செயற்கையாகப் பிரித்தனர். பின்னர், அதே ஐரோப்பியர்கள் புத்தர்களும் அருகர்களும் (சைனர்களும்) சீக்கியர்களும் தனித்தனிச் சமயத்தவராவரென அடையாளப்படுத்தி, அவர்களெல்லாம் ‘இந்து’ எனும் வகைப்பாட்டுக்குள் அடங்குவரென இட்டுக்கட்டிக் கூறினர்.
‘இந்து’ என்னும் அடையாளத்திற்குள் தமிழர்கள் வரவே மாட்டார்கள். ஏனெனில், தமிழர்களின் வழிபாடு, அடிப்படையில் குலதெய்வ வழிபாடாகும். மூதாதையர் வழிபாடே குலதெய்வ வழிபாடு. தமிழரில் மேட்டுக்குடியினரும் ஆண்டைகளும் அறிஞர்களும் தோற்றுவித்த ஆசீவகம், சிவனியம், விண்ணவம் (வைணவம்), பார்ப்பாரியம் முதலானவையும் முருக வழிபாடும் தமிழர்களிடம் தொன்றுதொட்டு வழிவழிவந்த குலதெய்வ வழிபாட்டைப் புறக்கணித்துவிட்டு அவர்களின்மேல் வலிந்து போர்த்தப்பட்டவை. ஏதோ ஒரு வகையில், தமிழ் அறிவர்கள் முன்மொழிந்த வான்மெய்யியல் பாடங்களை அடியொற்றி வந்த சமயங்கள் அவையாகும்.
‘இந்து’ என்னும் பெயரும் அடையாளமும் அரசியலும் வடக்கிலிருந்து வந்தவை; தமிழரின் குலதெய்வ வழிபாட்டு முறைக்குப் புறம்பானவை யென்பது இதனால் விளங்கும்
இந்துத்துவ அரட்டல்-2
வடக்கே தோன்றிய ‘இந்து’வெனும் ஒவ்வா அடையாளத்தைப் பழைய மதராசு மாகாணத்திற்குக் கொண்டுவந்தவர்கள் வடுகப் பிராமணர்களும் பணம்படைத்த சூத்திரர்களும் வடுக வணிகச் சாதியினருமேயாவர்.
1833ஆம் ஆண்டில் மதராசு மாகாணத்தில் 'சியார்ச் நார்ட்டன்' (George Norton) எனும் ஆங்கிலேயரின் தூண்டுதலால் கோமலேசுவரபுரம் சி. சீனிவாசப் பிள்ளை என்னும் செல்வந்தர், "இந்து இலக்கியக் கழகம்" (Hindu Literary Association) எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் வழியாக ‘இந்து’வெனும் அடையாளத்தை அரசியலாக்க முயன்றார். 1840ஆம் ஆண்டில் இந்து இலக்கியக் கழகம் செயலற்றுப்போனது. கிறித்துவச் சமயப் பரப்பலை எதிர்ப்பதற்கென்றே Native Interpreter என்னும் ஆங்கில ஏட்டை சீ. நாராயணசாமி நாயுடு அதே ஆண்டில் தொடங்கினார். கோமுட்டிச் செட்டியும் பெருவணிகருமான 'காசுலு லட்சுமணராசு செட்டி' (Gazulu Lakshminarasu Chetty 1806-68) 1844ஆம் ஆண்டில் அந்த ஏட்டை விலைக்கு வாங்கி Cresent என அதன் பெயரை மாற்றி, 'எட்வர்ட் ஆர்லீ' (Edward Harley) எனும் ஓய்வுபெற்ற ஆங்கிலக் கடற்படை அதிகாரியை ஆசிரியராகக் கொண்டு கிறித்துவச் சமயப் பரப்பலிலிருந்து ‘இந்து’ மதத்தைக் காக்க முனைந்தார்.
சம்புவராயர் ஆட்சியை ஒழித்துத் தமிழ் மண்ணை விசயநகர வடுகப் பேரரசின்கீழ் அடிமைப்படுத்தியப் பின்னர், முதலாம் புக்கனின் இரண்டாவது மகனான 'குமார கம்பணன்' 1283ஆம் ஆண்டில் காஞ்சியிலிருந்து ஆளத் தொடங்கினான்; பின்னர், மதுரைச் சுல்தான்களின் ஆட்சியை ஒழிக்கப்போவதாகப் பொய்யுரைத்து, அம் மதுரைமீது படையயெடுத்தான்; பாண்டியநாட்டைக் கவர்ந்தான்.
அப் பாண்டியநாட்டை முசுலிம்களிடமிருந்து மீட்டுப் பாண்டியரிடமே திருப்பி ஒப்படைக்காமல், விசயநகர வடுகர்ப் பேரரசைத் தமிழகத்தில் மேலும் விரிவுப்படுத்தினான். குமார கம்பணனின் பட்டத்தரசியயான 'கங்காதேவி', 1333ஆம் ஆண்டில் "மதுரா விலாசம் அல்லது வீரகம்பணன் சரித்தம்" எனும் நூலைச் சமற்கிருதத்தில் இயற்றினாள். அந்த நூலில் ‘இந்து’ எனும் சொல் இல்லை; ‘தருமம்’ என்னும் சொல்தான் அதில் ஆளப்பட்டுள்ளது. மதுரை சுல்தான்களின் கொடுங்கோலாட்சியை ஒழித்த குமார கம்பணன், ‘தருமத்தின்’ ஆட்சியை மீட்டதாக மட்டுமே அந் நூல் சொல்கிறது. அந்தத் ‘தருமம்’, சனாதனத் தருமத்தையே குறிக்கும்.
சாதிக் கொடுமைகளிலிருந்து மீள ஏங்கிய ‘கீழ்ச்சாதித்’ தமிழர்கள் சிலர் தம் குலதெய்வ வழிபாட்டை உதறியெறிந்துவிட்டுக் கிறித்துவத்திற்கோ இசுலாத்திற்கோ மாறியதால், 19ஆம் நூற்றாண்டில் சாதிக்கட்டுக்கு ஆளாக்கப்பட்டனர். அவ்வாறு மதம் மாறியயோரிடம் சொத்து ஏதேனும் இருந்தால், அவை வலிய பறிக்கப்பட்டன. தத்தம் பெண்டு பிள்ளைகளையயும்கூட அவர்கள் இழக்க நேரிட்டது. இது போன்ற அவலத்தை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேய அரசு, கிறித்துவ விடையூழியர்கள் தந்த பெரும் அழுத்தங்களால், 1845 சனவரி மாதத்தில் 'லெக்சு லோசி' சட்டவரைவை (Lex Loci Draft Bill) முன்மொழிந்தது.
'லெக்சு லோசி' சட்டவரைவை எதிர்த்துக் காசுலு லட்சுமணராசு செட்டி கொதித்தெழுந்தார். ஆங்கிலேயராட்சி அவ் வரைவுச் சட்டத்தை வைத்து நால்வரண (சனாதன) தருமத்தையும் சாதிக் கட்டுமானத்தையும் குலைக்கப் பார்ப்பதாகச் சொல்லி 1845 ஏப்ரல் மாதம் 'மேல்சாதியர்' 200 பேரைக் கூட்டிச் சென்னையில் ஒரு கூட்டம் போட்டார். அவர் நடத்திய அக் கூட்டம்தான் ‘இந்து’ எனும் மத அடிப்படையில் பழைய மதராசு மாகாணத்தில் போடப்பட்ட முதல் அரசியல் கூட்டமாம். 1840ஆம் ஆண்டில் செத்துப்போன இந்து இலக்கியக் கழகத்தை 1846ஆம் ஆண்டில் அதே காசுலு லட்சுமணராசு செட்டி உயிர்ப்பிக்க முயன்றார்.
‘இந்து’ மத அரசியலை மதராசு மாகாணத்திற்குக் கொணர்ந்தவர்கள் வடுகர்களும் பிராமணர்களும் என்பது இதனால் தெள்ளென விளங்கும்.
1851ஆம் ஆண்டில் 'பிரிட்டிசு இந்தியக் கழகம்' (British Indian Association) என்னும் முதல் அரசியல் அமைப்பு வங்கத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கிளையை மதராசு மாகாணத்தில் நிறுவிய பெருமக்கள், அதோடு முரண்பட்டனர். அதிலிருந்து விலகிய காசுலு லட்சுமணராசு செட்டியும் கோமலேசுவரபுரம் சீனிவாசப் பிள்ளையும் சேர்ந்து 'மதராசு உள்நாட்டவர் கழகம்' (Madras Native Association) எனும் அமைப்பை 1852ஆம் ஆண்டில் தோற்றுவித்தனர். நால்வரண (சனாதன) தருமத்தையும் சாதி முறையையும் எதிர்த்து எந்தவொரு சீர்திருத்தத்தையும் கொண்டுவரக் கூடாது எனும் கடும் நிலைப்பாடு காசுலு லட்சுமணராசு செட்டியின் நிலைப்பாடாயிருந்தது. சாதிக் கொடுமைகளையும் மூடநம்பிக்கைகளையும் வறுமையையும் போக்குவதற்கு ஆங்கிலேயராட்சிக்கு உறுதுணையாயிருக்க வேண்டுமென்பது சீனிவாசப் பிள்ளையின் நேரெதிர் நிலைப்பாடாயிருந்தது. இதனால், காசுலு லட்சுமணராசு செட்டிக்கும் சீனிவாசப் பிள்ளைக்கும் இடையில் முரண்பாடு முற்றியது. சீனிவாசப் பிள்ளை மதராசு உள்நாட்டவர் கழகத்திலிருந்து விலகி, 'இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம்' (Hindu Progressive Improvement Society) என்னும் சீர்திருந்த அமைப்பைத் 1852ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். சீனிவாசப் பிள்ளை இறந்தபின் வெங்கடராயலு நாயுடு எனும் வடுகர் அந்த அமைப்பைக் கைப்பற்றிக் கொண்டார்.
மேற்போந்த அமைப்புகளிலெல்லாம் தெலுங்கர்களே பெரும்பான்மையராயிருந்தனர்.
விசயநகரத்து நாயக்கர்கள் கட்டிக்காத்த நால்வரண (சனாதன) நெறி, ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ்க் குலைந்து வருவதைக் கண்டு அரண்டு மிரண்டு அதனைக் கட்டிக்காக்க வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய மதராசு மகாசன சபைதான்1885ஆம் ஆண்டில் தோன்றிய 'இந்தியப் பேராயக் கட்சி'யின் முன்னோடியாகும். 'இந்து' ஏட்டைத் தொடங்கிய 'எம். வீரராகவாச்சாரியார்' (1857-1906), 'கணபதி தீட்சிதர் சுப்பிரமணி ஐயர்' (1855-1916), 'பனம்பாக்கம் அனந்தாச்சார்லு' (1843-1908) ஆகியோரால் 1884ஆம் ஆண்டில் மதராசு மகாசன சபை தோற்றுவிக்கப்பட்டது.
‘இந்து’ கொள்கையைத் தமிழ் மண்ணில் இறக்குமதி செய்வதில் தெலுங்கு வடுகர்களைவிட மராத்தி வடுகர்கள்தாம் கூடுதல் முனைப்பு காட்டினர். கிழக்கிந்திய குழும ஆட்சியை நிலைப்படுத்தி வலுவாக்குவதில் தேசாந்திர (தேசாசுத்த) பிராமணர்கள் என்னும் மராத்தி பிராமணர்களின் பங்கு மிகப் பெரிய பங்காகும். ஆங்கிலேயராட்சியில் இவர்கள்தாம் உள்நாட்டு அதிகார வகுப்பாயிருந்தனர். மதராசு மாகாணத்திலிருந்த இப் பிராமணர்களும் வடுகர்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு நல்ல பிள்ளைகளாய் அடங்கியொடுங்கி ஊழியம் செய்வதில் கண்ணும் கருத்துமாயிருந்து ஆட்சித்துறைகளை யெல்லாம் வளைத்துப் போட்டுக்கொண்டனர்.
இந்தச் சூழலில்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்குச் சார்பாயிருந்த மிதவியர்களால் இந்துவியத்தின் முன்னோடி அமைப்புகள் வங்கத்தில் தோன்றின.-ஆய்வறிஞர் ஐயா குணா 
https://www.facebook.com/gunaseelan.samuel.7?ref=br_rs  
https://www.facebook.com/gunaseelan.samuel.7/posts/1494825227301583

நடிகை ரோகினி நாயுடு (கவரா நாயுடு)

நடிகை ரோகினி(நடிகர் ரகுவரன் மனைவி,விவாகரத்து பெற்றவர்,ரகுவரன் உயிருடன் இல்லை இப்போ) இவர் மறுபடியும் முதல் பாகுபலி வரை பல படங்கள் நடித்துள்ளார் என்பதை அறிவோம்
இவர் ஆந்திராவில் அனகபெல்லேவில் பிறந்தவர்.இவரது தந்தை ராவு நாயுடு(கவரா நாயுடுவாம்) ,அம்மா சரசுவதி ..

இந்த நடிகை ,சமூக போராளியை எப்போ ரொம்ப பிடித்தது என்றால் விவசாயிகளுக்காக வருங்கால முதல்வர் விசால் ரெட்டியுடன் புரட்சி போராட்டம் செய்யும் போதிலிருந்தே.
ஆந்திர அரசு இனத்தின் குடிகளுக்கு மாநில அரசு விருது வழங்கியது போல ரோகினிக்கும் வழங்கியது
2009 ல் நம்ம சின்னமேளம் கருணாநிதியும் அவங்க இனத்துக்கு நாம் இனி சாகும் வரை ஆட்சிக்கு வரமுடியாது என்று எண்ணியோ என்னவோ கலைமாமணி விருதை ரோகினிக்கு வழங்கினார் .
2008 ல் திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதசுவரக்கலைஞர்கள் என இருவருக்கும் கலைமாமணி விருது வழங்கினார் அது தான் யாருன்னு தேடிகிட்டு இருக்கேன் . 
#கோமலவள்ளி,கட்டுமரம்? செத்த உடனே இங்கு முளைத்தவர்கள் யார் ,யார்னு பார்த்தா நம்ம ரோகினி கவரா நாயுடு,கௌதமி நாயுடு,பாக்கியராஜ் நாயுடு  போல பச்சைத்தமிழர்கள்,தமிழச்சிகள் தான் என்பது தெரியும் ..
பின் குறிப்பு : முத்துகிருஷ்ணன் ,நாகராசன்.கே எல்லாம் அம்மணி சாதியாம் சொல்லிவைப்போம் ..