இந்து
மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன.
அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து
இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த
பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த
வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த
சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி
அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம்
கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க
எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம்,
ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின்
பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால்
எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம்
மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும்,
ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.
இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று
பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின்
அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும்
அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று
பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற
உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல்
வக்கிரமும் அம்பலமாகிவிடும்.
பார்ப்பனச் சனாதனத் தர்மமாக
மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை
விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப்
பெற்றது. அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல
ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது. இந்நிலையில் காலடியில் தோன்றிய
ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி
வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள்
ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என
உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார். அதாவது குல, கண தெய்வங்கள்
எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன்
மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.
இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த
உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன. இங்கு
சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின
என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்தச் சிறுகடவுள்களைப்
புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில்
இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன.
அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது
இப்பகுதி. இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து
பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.
உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
''முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"31
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான
காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை
மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும்
கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.
இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
''செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143
தாய்த் தெய்வமான செல்வி, முருகன்,
சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம்
ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி
பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சியின்
ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம்
மூலம் ஆராய்வோம்.
இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின்
பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களைக்
கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய
வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது
மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட
காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து
கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள்
அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால்
இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன்
தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி
இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!
இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;.
இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த
இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60
ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;. மூன்று பெண்ணுக்கும் குழந்தை
பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான்.
இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும்
கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்;. இங்கு மூன்று
பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும்
பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம்
தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை,
இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின்
மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன்,
பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.
ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம்
செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச்
சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று
இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.
காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து
இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா
வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல்
வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின்
ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது. இன்று
பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல்
உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம்
போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில்
இன்றும் அதைப் போற்றுகின்றனர்.
சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண
வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக்
கோடிட்டுக் காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம்
8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை
அம்பலப்படுத்துகின்றது. இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த
நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு
வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை"33 என்று
தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் ''உன் (சீதை)
நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி
இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது.
சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ
போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா
விட்டிருப்பானா.."33 என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே
உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன்
என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;. இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை
நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். ''நானே தற்கொலை செய்து என்னை
மாய்த்துக் கொண்டிருப்பேனே."33 இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை
மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி
கட்டாயப்படுத்தினான்;. கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம்
பிடித்திருப்பதை இது காட்டுகின்றது. நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக
இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை
ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில்
சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத்
தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.
இன்று எதார்த்தத்தில் பெண் மீதான
சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல்
போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால்
அதை மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய
முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன்
சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின்
அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது
குற்றமே ஒழிய (''வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு
இராவணனுடன் தானாகவே சென்றாள்."34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக்
குற்றமல்ல.
வரலாற்றில் மத யுத்தங்கள் முதல்
ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும்,
கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக
வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன்
செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித்
தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி
சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும்,
இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.
இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை
வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில்
இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து
இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.
சீதையைக்
காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம்
42, 43 இல், முறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை
விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப்
பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே
செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை,
நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல
அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர். சர்கா 4,2 செய்யுள் 18.21
இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி,
மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின்
கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை
வெளிப்படுத்தினர்.
சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி
மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின்
ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக்
கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும்
பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச்
சிறுமைப்படுத்தியது.
ஆணாதிக்க இராமன் சீதையைக்
காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள்.
அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளுக்குப் பின்
இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12
வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க
மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச்
சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும்
சுட்டிக் காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள்
கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை
அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத்
தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாகக் காட்டப்படும்
ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து
ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று
இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக்
காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன
அர்த்தம் இருக்கின்றது.
வானரங்கள் என்று இராமாயணத்தில்
அழைக்கப்படுவோர் யார்? பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய
கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள்,
பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய
மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா,
வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக்
கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.
அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறைக் கட்டளையாகக் கூறி பெண்கள் மீது
நடத்திய கொடுமைகளே இன்று, இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான
கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில்
நடப்பதுதான் வேறுபாடு.
பாரதப் புராண இலக்கியத்தைப்
பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம்.
சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்தபோது, அவளுக்கும் அது
இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமணச்
சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததைப் பிரதிபலிக்கின்றது. இது இன்று
மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்தப் பரிமளகத்தி முதலில்
மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன்
என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;. இதற்குப்
பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக்
கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான்.
இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும்
அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன்
வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால்
அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப்
பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற
பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த
முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.
பாண்டுவும் இரண்டு பெண்டாட்டிகளாகக்
குந்தி, மாதிரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே
அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள். நம்பித்
தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள்.
காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது
அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட
முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன்
புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?!
பாண்டு வீசிய அம்பைக் கண்டு கோபம்
கொண்ட முனிவர் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியைத் தொட்டால் மண்டை
வெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள்
மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால்
கொள்ளி வைக்க பிள்ளையற்ற நிலையில், குந்தி எமதர்மனையும், வாயுபகவானையும்,
இந்திரனையும், புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும்
பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி ''மாதிரி, அசுவினி தேவதைகள்
மூலம் கருவுற்று நகுலன், சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும.;"11
யார் இந்த அசுவினிகள்?
அசுவினிகள் என்ற கடவுளின்; பிறப்பை
விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். ''சூரியனுக்குச் சப்ஜ்ஞாவில்
முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்குப் பிறகு
சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை
அமர்த்தி விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின்
வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (குதிரை) வடிவம் பூண்டு
அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகள் இணைந்தன அப்படிப் பிறந்த
புதல்வர்களே அசுவினி குமாரர்கள்."11
இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம்
ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததைத் தொடர்ந்து, அவளை ஐவரும்
தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத்
தணிக்க வேதவியாசன் ஆண்டுக்கு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான்.
ஐவரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பொதுமகளிர் என்பதால், அவளைத்
துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை
வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள்
பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, இப்படி கூறிய வரலாற்றைத் தாண்;டி எந்த
இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை, பாண்டவர்கள்
யுத்தம் மற்றும் மரபைத் தாண்டி, அநியாயமாகக் கிருஷ்ணனின் சதி உபதேசம் மூலம்
நடத்திய யுத்தத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு
புதிதாகக் கீதையில் இணைக்கப்பட்டதே.
இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால்
திரௌபதி உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது. பலர்
முன்னிலையில் உரிந்தபோது, முன்பு பொது விபச்சாரத்தில், பந்தயத்தில் வென்ற
உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த
நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் - ஆணின் தனிப்பட்ட பந்தயச்
சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில், உரிவதைப் பார்த்து நின்றனர். இங்கு
யாரும் நீதியைக் கோரவில்லை.
இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த
காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த
ஆணாதிக்கவாதி பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை
நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை,
முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது),
அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே
நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும்
சமூக முட்டாள்த்தனத்தைக் காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும்,
மோசடியும் கொண்ட இந்தப் பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை
ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும், ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை
மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.
பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.
''அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய
ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"35
- என்ற கூற்றின் அர்த்தம் ''கண்ணா,
அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத்
தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"35 என்று
கூறும்போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே
கவலைப்படுகின்றான், இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்க
முரண்பாடற்ற, அமைதியான, சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவைத்
தடுக்கவும், ஆணாதிக்கச் சிதைவைத் தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள்
மீதே, தனிமனித உரிமைகளைப் பேண முனைகின்றனர்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
''தானம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்
கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"35
- இதன் அர்த்தம் ''என்னைப் பகைக்கும்
கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான்
எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை
ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது.
கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்கப்
பார்ப்பனியத் திமிர்கள்தான். இந்தத் திமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;.
மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்கப் பண்ணுவேன்
என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்.
''ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி
மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"35
- இதன் அர்த்தம் ''குந்தியின் மகனே,
பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை எய்தாமலே
ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"35 என்று
அருச்சுனனுக்குக் கூறும்போதே, சாதியத்தைக் கட்டிக்காக்க பிறப்பை
அடிப்படையாகக் கொள்ள, ஆணாதிக்கத்தை ஆயுதமாகக் கையாள்வதைக் காணமுடிகின்றது.
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான
சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால்
இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும்,
வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று
ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில்
முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக்
கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார்.
இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும்
கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது
பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த
பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து
விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க
வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என
இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின்
பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது. தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10,
அத்22 இல்) ''கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள்,
தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம்
பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து
மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின்
மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன்
சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில்
இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின்
ஆணாதிக்க முகமாகும். உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், ஆணாதிக்க
அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம்
செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை
உருவாக்க முடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை
(இவள் ~பட்டமகிஷி| என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம்
எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம்,
கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின்
அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று
புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன்
பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச்
சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்கப் பாலியல் வன்முறைகளையும்,
கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே
ஆணாதிக்க மதமல்லவா. இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன்
சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை
திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக்
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத்
திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில்
நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின்
உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக
வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை
நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன். இதை இந்து தர்மம் எப்படி
நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
''புனிதர்கள், சாதுக்கள் - துறவு
மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில்
கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான
இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான
நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள்
அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான்
கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய
சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக்
காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.
பெண்களின் உறுப்புகளை வக்கரித்துக்
காட்டும் ஆணாதிக்கம், அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது.
கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும்.
இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து
செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தைப்
போற்றுவதே இந்து மதம்தான். இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன்
ஈடுபட்டான் எனப் பார்ப்போம். ''... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய
முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற
கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக்
கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான்.
அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத்
திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில்
18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது.
பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது...
பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை
எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு
கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால்
கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி
பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 பாலியல்
ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.
கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண்
புணர்ந்தால்) என்ற இன்றைய கோஷத்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான்
இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது
தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின்
கள்ளப்புருஷன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும்
இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை
மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால்
கூறுகின்றான்.
''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"35
இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ,
வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப்
பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"35
- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு,
தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த
கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல்
பூர்வமாக அல்ல.
''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"
- என்று கூறி நியாயப்படுத்தும்போது,
பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்கச் சேட்டைகள் வரைமுறையின்றி
அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது,
குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற
துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை
அங்கீகரிக்கின்றது.
இந்தக் கிருஷ்ணன் விரகத் தாபத்தைக்
கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது
காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக்
கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள்
தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய
பார்ப்பனர்கள்தான். அவர்கள் தமது மன வக்கிரத்தை அடிப்படையாகக்
கொண்டு இரசித்து முன்வைத்த கீதையை, இன்று அதே கண்ணோட்டத்தில்
படிக்கின்றனர். அடுத்து இதில் ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து
முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தைப் போக்காது கிருஷ்ணன்
மறைந்தமையால், மரத்தைக் கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள்
கிருஷ்ணனின் பங்கைத் தாமேயெடுத்து, புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப்
புணர்ந்தனர். அந்தப்புரப் பெண்கள் மத்தியில் பெண்களின் ஓரினச் சேர்க்கை
உணர்வு எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாகக் கீதை
எடுத்துவைத்து நியாயப் படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை
ஆயிரக்கணக்கில் அடைத்து வைத்து, தமது இச்சையைத் தீர்த்தபின் விடப்படும்
ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ஓரினச்சேர்க்கை கொள்வது எதார்த்தமாகின்றது.
இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஓரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய
ஓரினச்சேர்க்கையின் தந்தையாகக் கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன.
இந்த இந்துமதத்தின் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.
''க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"23
- இதன் அர்த்தம் ''வீட்டிற்குள்ளேயே
தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், ~மகா| மாதத்தில்
பசுக்களின் தசையை உண்ணுவதைப்போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்."23
பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பிப் பிழைத்து தன்னைப் பாதுகாத்து வாழும்
பெண்ணின் இருப்பைக் கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியைத்
தின்பதோடு ஒப்பிட்டுக் கேவலப் படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர்
உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம்
பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணைக்
கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்கச் சமூக
உலகத்துக்கும், வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கும்
இடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பெண் கணவனின் தசையைத்
தின்பதாகக் காட்டி ஒப்பிட்டு இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப்
போதிக்கின்றது.
பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது
சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப்
பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை
செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்கப் பாலியல்
வக்கிரங்கள் பல கொண்டது, பலபிறப்பு வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப்
பார்ப்போம்.
1. சிவமகாபுராணத்தில், பார்வதியார்
குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப்
(அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச்
சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும்,
பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது.
உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத்
தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு
தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத்
துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.
எனவே, கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை
என்பதையும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததையும்
காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையைப் பாதுகாக்க ஆண் கடவுள்களுடன்
போராட வேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி
அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி
வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத்
தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய
வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில்
வைத்திருக்கும் ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும்
தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் இரசிக்கின்றன
அல்லவா? இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது. கற்பழிப்பு முதல்
கடவுள்களின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பலவற்றை இக்கட்டுரையில்
தொடர்ந்து பார்ப்போம்.
2. ஒருநாள் ஆண் யானையும், பெண்
யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அந்த நினைவில் அவர்கள்
புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு
கதையில் சுவரில் ஆண் யானை, பெண் யானையைப் புணர்வது போன்று கீறியிருந்த
காட்சியை பார்வதியும் கண்டு, அதுபோல் சிவனும் புணர்ந்ததால் பிள்ளையார்
பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன
என்பதைக் கூறும்போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம்
பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை இரசிக்கும் மனிதப் பண்புகள்
மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள்
(புள+பிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த
புணர்ச்சியையும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயகச் சந்தையில்
மூலதனமாக்கிக் கொடிகட்டி பறகின்றது.
3. பார்வதி கருவுற்று இருக்கையில்
சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்று
வடிவில் கர்ப்பப் பைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த
நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாகப்
பிள்ளையார் வரலாறு கூறுகிறது. முட்டாள்களே நம்புங்கள்! இந்தப் புளுகு
மூட்டையை! இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி
மனிதனுக்குத் தெரிந்தது?
4. தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன்
தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி
எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத்
தலை ஒன்றை வெட்டிப் பொருத்தியதால் பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை.
பிறப்புகள் வக்கிரம் பிடித்துக் கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம்
செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா? என்ன சிவனுக்கு மட்டுமா யாகம்
செய்யும் உரிமை உண்டு? இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது? யார்
இந்த உரிமையைக் கொடுத்தது? எங்கு எப்போது இந்தப் பிறப்புகள் எல்லாம்
நடந்தன?
5. ''பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"36
- என்ற திருஞானசம்பந்தர் தேவாரம்
சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து
உருவானவரே பிள்ளையார் என்று பிள்ளையார் பிறப்பை விளக்குகின்றது. இதையே
சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்தத்
திருஞானசம்பந்தர் உமாதேவியாரின் பெண் உறுப்புகளைத் தனது தேவாரத்தில் பாடிய
விதங்கள் பல வக்கிரத்தைக் கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது
குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்தத்
திருஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோரி ''பெண்ணகத்து
எழில்சாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று
ஆணாதிக்க இறைவனை வேண்டிப் பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க
வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப்
புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த
நிலையல்லவா? இதை இறைவன் செய்தான் என்பதும், அதைக் கற்பனை பண்ணிப் பாடுவதும்
கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்தத் தேவாரத்தைச் சொல்லி நாம்
பாடுவதும் எமது முட்டாள்த்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.
6. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி
அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள இராட்சஷி (அரக்கி) மாலினியைக்
குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த
குழந்தையே பிள்ளையார் என்று ஒரு கதை. எவ்வளவு அருவருப்பைத் தரும்
பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஓரினச்
சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்குப் புறம்பான தமது
வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்தப் பிறப்புகளின் வக்கிரம்
எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்க முடியாதவை.
7. ஒருநாள் பார்வதி தனது உடல்
அழுக்கைப் பிராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அந்த உடல்
அழுக்குக்கு அன்பு சொரிந்து உயிரூட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே
பிள்ளையார் ஆனதாக ஒரு கதை. எப்படி சிவபெருமான் அந்த ஊத்தைக்குத் தந்தையாக
முடியும்;? ஒருபால் உறவில் குழந்தை பிறக்கும் அதிசயம் உலகின் அதிசயங்களாகப்
பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை நோண்டி, இரசித்து
உண்ணும் பண்புபோல் அல்லவா இந்தப் பிறப்புகள் அசிங்கம் நிறைந்து
கிடக்கின்றன.
8. பிரம்மாவின் வர்த்தப் புராணத்தில்
கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்ததால்,
துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தைத் துடைக்க விஷ்ணு யானைத் தலையை வெட்டி
ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்குக் குழந்தை
பிறந்ததை அறிந்து, அவரைப் பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனி
தேவனும் ஒருவராம்;. சனி, தான் பார்த்தால் குழந்தைக்குத் தீது, உண்டாகும்
என்று எண்ணி பார்க்காது தவித்ததாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண,
அதைத் தவிர்க்க சனி பகவான் குழந்தையைப் பார்க்க, குழந்தையின் தலை எரிந்து
போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகன் போன்ற தேவர்கள்
சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தைப் பொருத்தியதால்
பிள்ளையாரானார். எப்படியிருக்கிறது இந்தப் பிறப்பின் பல்வேறு கற்பனைப்
பிதற்றல்கள்?
இந்தப் பிள்ளையார் இன்று மதத்தின்
ஆதிக்கச் சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும்
பலவிதமான கொண்டாட்டங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க
வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும்
ஊடகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்
கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம்
சடங்கு) என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக்
கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் இன்று, மதத்தின் பெயரில் நடக்கும்
கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பைப் போல் வக்கரித்N;த
நிகழ்கின்றது.
இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும்,
பிற ஊர்த் தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின்
பெண் உறுப்பினுள் விட்டு, தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின்
எழும் ஆணாதிக்க வக்கிரம், மனிதப் பண்பாட்டையே வக்கரித்துக் கேலி
செய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி, அசுரர்களை அழிக்க, அழிக்கத்
தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டுக்
கர்ப்பத்தை உறிஞ்சி எடுத்ததாகப் பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது.
இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்தபோது,
நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்துவதே இந்தக் கதை. இன்று உலகில்
வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக்
காரணம் காட்டித் திட்டமிட்டுக் கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இது
போன்ற கோட்பாட்டு அடிப்படையில்தான். பெண்ணின், பெண் உறுப்புக்குள் புகுவதே
ஆணாதிக்கத்தின் ஒரே நோக்கம் என்பதை, இந்தச் சிற்பங்கள் தனது சொந்த
வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.
லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான
வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம்
அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான்
குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம்.
இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர்
சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி
விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு
அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால்
ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை
ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை
வழிபடுகின்றனர், ஆணாதிக்கப் பக்திமான்கள்.
இதையே லிங்கப்புராணத்தில் ரிஷி ஒருவர்
வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக்
கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி
கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம்
இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி,
தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள்
இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள்,
அதிலும் மீண்டும் வக்கிர புணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டுக்
கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம் இந்து இராஜ்ஜியத்தின் பொதுவான
ஒழுக்கமாக, சட்டத் திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?
ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது.
இரண்டு ஆண் கடவுள்களுக்கிடையில் நடந்த ஓரினச் சேர்க்கையில் பிறந்த கடவுளே
ஐயப்பன் ஆனான். கடவுள்களின் ஓரினச் சேர்க்கைக் கூத்தை, இன்றைய ஓரினச்
சேர்க்கையாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாகக் கொண்டாடலாம். ஆனால்
அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.
பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கிக்
கடும் தவமிருந்ததால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக்
கேட்டாராம். அவன், நான் யார் தலையில் கைவைத்தாலும், அவர்கள் எரிந்து
சாம்பல் ஆகவேண்டும் என வேண்டினாராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை
வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று பார்க்க சிவனின் தலையில்
கைவைக்கப் போவதாகக் கூற, சிவன் ஓடத் தொடங்கினாராம். இதைத் தொடர்ந்து சிவன்
அழிந்து விடுவாரோ என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி
வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை
மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை,
குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்கத் தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர்
இல்லாத நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர்
உள்ளது, அதில் கையை நனைத்து உன் தலையில் வைத்துவிட்டு வா என்று
கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.
மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே
சிவனிடம் செல்ல, ஆணாதிக்கச் சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு, புணரத்
துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஓடத் தொடங்க, சிவன்
துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை
ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால்
கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஐயப்பன் ஆனான்.
இதையே வேறுவிதமாகக் கூறும் இந்துக்
கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன்.
இது கேரளத்தில் நடந்த அருவருப்பான ''அற்புதம்"
ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஓரினப்
புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும்
சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான
ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகளை ஈவிரக்கமற்ற வகையில் தோலுரித்து
போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இங்கு சிவனின் ஆணாதிக்க வெறியைக்
கேள்விக்கு இடமின்றி இந்து வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒரு பெண்ணைப்
புணர்வதற்;குப் பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே
அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்து வழிபாட்டுக் கோட்பாடு நிஜ
விளக்கத்தைக் கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக்
கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்கப்
பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக்
கொண்டு வாழமுடியுமா?
தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.
''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"37
அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண்
உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன்
தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம்
கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.
விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து
விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள்
கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த
கொடுங்கோலராவர்.
அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.
''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"37
அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப்
பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து)
தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும்
மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்.
பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது
என்பதற்கு இவைகளே சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத
மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க
ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.
சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?
''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"37
- என்று இந்துமத நூலான மஹோநதி
கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப்
புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான
தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும்
ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்து மத சிவன் பக்தர்கள் முதல்
அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது? இவை பெண்கள் மீதான
வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட
சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது
காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு
இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து
தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப்
புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு,
ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி
நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும். பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம்
மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி
கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு
ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா
விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து
இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப்
புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டைக்
கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம்
அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு
இந்துமதமே மூலமாகின்றது அல்லவா? ஆடை கொடுத்து, அதை விதவிதமாக
அவிழ்த்துவிட்டு, இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப்
போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள்,
புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும்
ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும்
தெரிவுகளும்.
குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை
இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி
யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன்
வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள்
அருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"37
- என்று கூற வேண்டும். இதன் அர்த்தம்,
''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும்,
பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக
இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ
குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில்
இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத்
துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள்
வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு
ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண்
குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய
வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி
செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும்
இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக்
கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும்
கணவனுக்குக் குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே
குழந்தையைப் பெற்றுப் போடமுடியும்.
குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன்
புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம்
செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம்
தீர்க்கும் மாற்று வழியாகும். இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன்
பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது
பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும்
சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்துபோன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும்
இந்து இராஜ்ஜியக் கனவை அடிப்படையாகக் கொண்டே, இன்று மீளவும் பாசிசச்
சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
தங்கமும் வெள்ளியும் உருவான
வக்கிரத்தைப் பார்ப்போம். மகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை
மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து
பார்வதியுடன் அவரைக் காணச் சென்றாராம்.
அவரிடம் மோகினி வேஷத்தைப் பார்க்க
வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை
வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.
சிவன் அவரைத் தேடியபோது, பெண்
வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம்.
சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது
காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில்,
சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒளிந்தாள்.
சிவன் அவளைப் பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாகத் தலைவிரி கோலமாக ஓட,
சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தைக் காம வெறியில் சிதறவிட்டபடி
துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்ணு மறைந்து போனாராம்.
சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம், வெள்ளியாகிப்
போனதாம். நம்புங்கள்; இந்த இந்து மத வக்கிரத்தை.
பெண்கள் நீராடி, அழகுபடுத்தி
தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்கச்
சிவன்கள் எல்லாம் இந்தக் கூத்தைத்தான் செய்கின்றனர். கும்பிடும் கோயில்
சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே
இந்துமதம் எமக்குப் போற்றித் தருகின்றது. ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத்
தாண்டி மற்றைய பெண்களைப் புணரும் தன்மையும், வக்கிரமும்
நியாயப்படுத்தும்போது உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும்
சாதிக்க முடியும் என்கின்றது. உலகத்தைக் கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள்
போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க
வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என
அழைப்பவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான்.
இன்று சினிமா முதல் ஆணாதிக்கப் பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப்
போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள்
வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயகச் சமுதாயம்
''காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும்,
துயரத்தை விரக்தியாகவும்" (ஏப்பிரல் மே 2000)48 மாற்றிவிடும் இன்றைய
பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம்
உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும்
தங்கம், வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்து மதம்
பெண்களுக்கு அறிவ+ட்டுகின்றது. இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற
ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள
மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து
மதத்தையே நொறுக்கவேண்டும்.
அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம்
ஆயிரம் பெண்களிடம் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது
உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றைப்
படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது?
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய
பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும், அசுரர்கள்
பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு
அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாகத் தேவருடன்
அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக்
கொடுக்க, மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை
வெட்டினராம். இந்த அசுரர்களில் ஒன்று அசுரப் பாம்பாம். மற்றது அசுர
மனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை
மாற்றிப் பொருத்திவிட்டதால், தலைமாறி ராகு கேதுவானார்கள்;. நம்புங்கள்.
மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பார்ப்பனிய இந்து மதம் செரித்தபோது,
இந்தமாதிரிப் புனைக் கதைகள் மூலமே பிறப்பு பற்றிக் கூறிச் சிறுவழிபாடுகளை
அழித்தனர்.
இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக
இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச
விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண்ணை ஒரு
மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்து மதம். அதைப் போற்றும்போதே
ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.
தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப்
பார்ப்போம். சந்திரனுக்கு இறைவன் அருளியதாகக் கூறும் கீதையில், மிகப் பெரிய
நட்சத்திரம் சந்திரன் என்று அறிவியலுக்குப் புறம்பாகக் கூறுகின்றது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார்
இருந்தும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம்.
மற்றவர்களை ஏறுஎடுத்தும் பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய
பெண்ணியவாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையைப் பற்றித் தெரியாததாலோ என்னவோ,
தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்குத் ''தேய்ந்து அழியக்
கடவது" எனச் சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய்
முறையிட, அந்த ஆணாதிக்கச் சிவன் தனது தலையில் அணிந்து, ''வளரக் கடவது"
என்று சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய
பெண்ணியவாதிகளின் ஆண் எதிர்ப்பு போல், சுடச்சுடத் தீர்வு கொடுத்த தக்கன்
இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளின் மேதையல்லவா?
முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.
''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,
கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும்,
அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும்,
கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர்
கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38 பிறந்தாக இந்;து புராணங்கள்
கூறுகின்றன. இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை
யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத
பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக
விளக்கியது. பரிசுத்த ஆவி இயேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால்
இயேசு பிறந்தார் என்ற ஆணாதிக்க விளக்கம்போல், இந்த விளக்கம் மிருகப்
புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது.
பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது
இன்றைய எதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
நடிகையிடம் கேட்ட கேள்வி, நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி
என்ன நினைக்கின்றீர்கள்? இதை நீங்கள் செய்கின்றீர்களா? இன்று பல்வேறு
வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி
மனித உருவத்தை ஒரு பகுதி கொண்டிருப்பதை அறிகின்றபோது, மனித - மிருகப்
புணர்ச்சி அம்பலமாகின்றது.
பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றிப்
பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீட்டுக்குச் சென்றாராம்;.
விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளைப் புணர அழைத்தாராம். அவள்
அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து
வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து
வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணர அழைத்தாளாம்.
அதற்குப் பட்டினத்தார் கோபத்தோடு ''உன்னை அழைத்தவன் தொன்னையிலே, என்னிடம்
வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"38 என்று கூறிவிட்டுச் சென்றாராம்.
அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து
விழுங்கினாளாம்;. இதனால் அப்பெண் கருத்தரித்து குழந்தையைப் பெற்று
எடுத்ததாக இந்துமத வரலாறு கூறுகிறது. நம்புங்கள்;. திருமணம் செய்யாது
கருத்தரிக்கும் பெண்களே, உங்கள் நிலையை இந்துப் பண்பாட்டு ஆணாதிக்கத்திடம்
சொல்லிப் பாருங்களேன் என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள்
பார்ப்பனச் சந்நியாசிகளுக்குப் பாய் விரித்துப் படுக்க வேண்டும் என்பதையே
இது கோருகின்றது. இன்று இந்து இராஜ்ஜியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை
ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்;றது. விபச்சாரம் செய்யும்
பட்டினத்தாரைப் போற்றுவதன் மூலம், சொந்தக் கணவனின் வைப்பாட்டித்தனத்தையும்,
விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு
விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.
குரங்கின் முகம் ஏன் இப்படி போனது
தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின்
வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை
ஒரு பழமாகக் கருதி, அதன் மீது பாய, அது முகத்தைச் சுட்டுப் பொசிக்கிவிட
குரங்கின் முகம் பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும்.
அனுமானை வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள்த் தனமல்லவா இங்கு சந்தி
சிரிக்கின்றது.
வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி
இந்துமதம் ''நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று ஒரு பிராமணன் தவம்
இருக்கின்றான். உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள்
அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை
பிறக்கும். வேறு ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து
வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை
எடுத்து சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால்
வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன், வெள்ளையாக
இருக்கின்றான்."28
எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்கப் பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.
நாடார் சாதி மக்களைப் பார்ப்பனியம்
இந்துமதத்துக்கு மாற்றியபோது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டுக்
கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின்
தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள்,
தாம் வழிபட்ட கடவுளுக்குப் பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர்.
இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி ''மகாவிஷ்ணு, வித்தியாதர
முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும்,
அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின்
வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்ட..."28 மக்கள்தான்
நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களைக் கேட்க வேண்டியுள்ளது. இந்துப்
பிறப்பில் பிறந்ததாகக் கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு
தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை
மறைப்பதற்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது
ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.
பதிவிரதையாவதற்;குப் பெண்கள்
செய்யவேண்டியது, கடவுள்களின் காமக் கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி
இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையைக் கற்பழித்ததை
நியாயப்படுத்தி, அகலிகையைப் பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின்
வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்குப் பெண்கள் இணங்கி பாய்
விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதைப் பார்ப்பனிய
ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள்?
எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?
மனைவியைக் கூட்டிக் கொடுப்பதும் பதிவிரதைக்கு உயர் பண்பாடாகும். இயற்பகை
நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 63 நாயன் மார்களில்
ஒருவரானார். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப்
போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டிக் கொடுக்கும்
ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்N;றாமா?
சிந்தியுங்கள் எதைச் செய்யப் போகின்றோம்?
பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர்
தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாகக் காட்டி,
அதற்குத் துணை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாகக் காட்டும்
பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தைத் தூண்டும் ஓர்
ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற
அடிப்படைக் காரணத்தைக் கொண்டே, அவை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது.
ஆண்கள் படுக்கையை நாடி வீடு வரும்போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ
கொடுக்கும் அதேநேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்கப்
பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லைப்
ப+ச்சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும்
காணப்படுகின்றது.
காமதகனம் காமத்தைத் தடுக்க இந்து
ஆணாதிக்க வழியாகக் கொண்டாடும் விழாதான் ~காமூட்டி கொளுத்துதல்| ஆகும்.
சிவனின் தவத்தைக் குலைக்க மன்மதன் காமத்தைச் சிவன் மீது ஏவியதாகவும், சிவன்
கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாகக்
கொண்டு, ~காமூட்டி கொளுத்துதல்| விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா
பெண்ணியவாதிகளும், ஓரினச் சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க
முன்வைக்கும் வழிகளைப் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.
தீபாவளியாகக் கொண்டாடும் நரகாசுரன்
வதையை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப்
பாயாகச் சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது
அவதாரமாகப் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத்
தளத்தில் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்தப்
பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல்,
மீட்பவர்கள் அப்பெண்ணைப் புணர்வது என்ற வடிவில் பூமியைப் புணர்வதாகக் கதை
உள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டப்படி, மீட்கப்படுவது எப்போதும் பெண். மீட்பவர்
எப்போது ஆண். மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஒரே
பொதுக் கண்ணோட்டத்தில் காணப்படுகின்றது. இந்த இயற்கை பற்றிய ஆணாதிக்க
இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.
விஷ்ணுவின் கற்பழிப்புக் கதையைப்
பார்ப்போம். பத்மப்புராணம் உத்தரக் காண்டம் 263 இல், ஞானி ஜலந்தரின் மனைவி
விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு அவள் கற்பைச் சூறையாடத் தீர்மானித்தார்.
அதன்படி அவளை ஏமாற்றிக் கற்பழித்தார். இதையடுத்து விராந்தா கோபத்துடன்
சபித்ததைப் பார்ப்போம்;. ''ஓ, விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது
உனக்கு வெட்கமாக இல்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; த்தூ, கடைகெட்ட
குற்றவாளி"27 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம்
நியாயப்படுத்தும்போது, பெண்கள் எப்படி இந்து இராஜ்ஜியத்தில் கற்புரிமையைப்
பாதுகாக்க முடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?
எதிரியைத் தோற்கடிக்க எதிரியின்
மனைவியைக் கற்பழிக்குமாறு சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த
கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம்.
சங்காசுரன் என்ற அசுரனைக் கடவுளால் கொல்ல முடியவில்லையாம். ஏன் என்று
ஆராய்ந்த சிவன் காரணத்தைக் கண்டறிந்தாராம். சங்காசுரனின் மனைவி கற்புடையவள்
என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன்
வேடம் போட்டுச் சென்று துளசியைக் கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம்.
இதன் பின் துளசி உண்மை அறிந்து ''ஓ, சிவனே, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என்
கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாகப் போ!"27 என்று சபித்தாள்.
மகாபாகவதப் புராணம் (9,24,25) இல், கீழ்ச் சாதிப் பெண் இகழ்ந்தாலும், மேல்
குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம்
அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப் பிரிவுக்குப் பெருமையைக் கொடுப்பதாகும்
என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ்ச் சாதிப் பெண்ணாக
இருப்பதால் அவளைக் கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது.
இதைப் புராணமாகக் கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரபில்
அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தைப் பெண்கள் எப்படிப் போற்றமுடியும்?
சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓட
வைக்கின்றது. சிவனுக்குக் காமம் ஏற்பட மோகினியைக் கட்டிப்பிடிக்க அவள்
தப்பி ஓடினாளாம். அதை மகா பாகவதப் புராணம் பெண் யானையைக் காமம் பிடித்த ஆண்
யானை விரட்டுவது போல், மோகினியைச் சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு
வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள்
படும்பாட்டை நாம் அறிவோம். ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான்
செய்தான் என்று தெரிகின்றபோதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதைச்
சகித்து வழிபடுவது கேவலமானது. இது பெண்களைக் கற்பழிக்க மறைமுகமாகவும்,
நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான
கேள்வியாகும்.
கடவுள்களின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்)
கூட்டுக் கற்பழிப்புகளுக்கு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது.
பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம்
கொண்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட்டாகச் சேர்ந்து கட்டிப்பிடித்து
கற்பழிக்க முயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரணப் பெண்கள் ஆணாதிக்கக்
கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது
என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்தக் கடவுள்களின் பெயரில்
கற்பழிப்புகள் மற்றைய மதப் பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும்
சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.
மகளுடன் உறவு கொண்ட பிரம்மன்.
பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது
காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள்
சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான
நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் -
பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய
சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு,
மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும்.
உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகளைப்
பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதைத் தனது புராண
இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.
கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின்
பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்கக் காமமே. இந்திரனுக்கு
ஆதரவாக நிரபராதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை
அடுத்து பராகு சபித்ததைப் பார்ப்போம். ''ஓ, விஷ்ணு! மாதர் குலத்தைக்
கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக்கேடு விளைவித்தப் பின்
கொன்று விட்டாயே. தமோ குணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து
வருகிறாயே!"27 என்று பார்ப்பன ஆணாதிக்கச் சதிராட்டத்தை
வெட்டவெளிச்சமாக்குகின்றான்.
முப்பத்து முக்கோடி தேவர்களின்
குருநாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9, அத்தியாயம் 20 இல்,
நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, முறைகேடாக உறவு
கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவார். இந்த மகன்
தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதைத் தேவி பாகவதப் புராணம்
விளக்குகின்றது. இந்தப் பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து
விந்து வெளியேறியபோது உருவானவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம்
ஆதிபர்வதம் அத்தியாயம் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கிறது இந்து
புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே
விசித்திரமான வக்கிரமாகும்.
தேவேந்திரனின் கள்ள உறவுகளும்
வைப்பாட்டித்தனமும் பற்றி வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல், கூறி
நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி
அகல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில்
தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை
மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு
இந்தியாவில் இந்து மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும்
ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.
பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்து
சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து
சந்திரன் இராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர்
பிரகஸ்பதியின் மனைவி தாராவைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்றான்;. இந்தக்
கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப்பெண்கடத்தல், தேவர்
அணியைப் பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்குப் பிரம்மன் புத்தி
கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக
உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவைக் கொடுக்க மறுத்துவிட்டான். இதன்
மூலம் இந்து மதம் ஆண்களுக்குக் கூறும் போதனை, பெண்களைக் கடத்திச் சென்று
ஆணாதிக்கச் சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.
சாதி கடந்த வசிட்டரின்
ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையைச் சூறையாடுவதாக இருந்தது.
விஷ்ணுவின் அவதாரப் புருஷன் இராமச்சந்திரபிரபுவின் குரு வசிட்டர், சாதி
குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த
வசிட்டரின் காம லீலைகளைப் போட்டிக்காரரான விசுவாமித்திரன் புட்டு
வைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத்தியாயம் 27 இல்.
விசுவாமித்திரனின் கட்டற்ற பாலியல்
நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விசுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி
காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்தச் சகுந்தலா
துஷ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி
தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாகக்
கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.
கண்ட இடத்தில் காமம் கொண்டு; உறவு
கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்தரக்காண்டம் சர்கா 55 இல்,
மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக்
கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த
புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிட்டரும்.
மானின் வயிற்றில் இருந்து பிறந்த
ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது,
வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிவருக்கு விந்து
வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட, அதை ஒரு பெண் மான் குடித்து
கருவுற்று ஸ்ரங்கி ரிஷியைப் பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால்
இருகொம்பைக் கொண்ட அவருக்கு ~ஸ்ரஸ்ய ஸரங்கி| என்ற பெயர் வந்ததாம். இந்து
மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.
விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிரத்
தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவதப் புராணம் (6,26,36) இல்,
தேவர்களின் ஆலோசகரும், திரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோசியருமான
நாரதர் சஞ்சய மன்னனைப் பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக்
கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாகப் பிறந்து இருக்கின்றாள் என்ற
திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று
சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்கத் தேவைகளைப் பிறப்பின்
தொடர்ச்சி, எனக்காகப் பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக
அனுபவித்ததையும், அதைக் கோரியதையும் இந்துமதப் புராணங்கள்
நியாயப்படுத்தல்கள் ஊடாக அம்பலப்படுத்துகின்றன.
குருவுக்குப் போதை ஊட்டிவிட்டு அவரின்
மனைவியுடன் கூடிக் குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி
பாகவதப் புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்குப்
போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு
கொண்டு வந்தான்.
வேத வியாசர் தனக்குத் தானே புணர்ச்சி
செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிப்பாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி
பாகவதப் புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்குத் தானே காமச் சுகம்
தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது
ஆணாதிக்க வக்கிரத்தினூடாகத் தனக்குத் தானே புணர்ச்சி செய்தார். இதனால்
வெளியேறிய விந்தில் இருந்து ~சுகா| என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர்
சந்திரவன்சாவை மனைவியாகக் கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற
விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை.
வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.
இலட்சுமியின் கற்புரிமையும், பெண்ணின்
ஆணாதிக்கச் சந்தேகங்களையும் தேவி பாகவதப் புராணம் தெளிவாக
நிர்வாணமாக்குகின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு
உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, இலட்சுமி விஷ்ணுவைத் திருமணம் செய்யும்
முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாகக்
கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனைப் பார்க்க
வந்தபோது, இந்திரன் ஆணாதிக்கக் காமத்தில் இலட்சுமியை வெறித்து பார்த்தபடி
இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஷ்ணு
தனக்குள் தானே சிரித்து கொள்ள, இலட்சுமி சந்தேகப்பட்டு, ~உமது சிரம்
துண்டிக்கப்படட்டும்|27 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள்
மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள்
கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான்
கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலக்கட்டச்
சமூகத்தைப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன.
சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள்
புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு
வருகின்றது. சமுத்திரத் தேவனின் செல்வப் புதல்வி இலட்சுமிதேவி. தன் சகோதரன்
அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு
''கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமுகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான்
சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும்
மூழ்கி விட்டாயா?"27 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்குப்
பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்து தன் சகோதரனுடன் பாலியல் உறவில்
ஈடுபட்டாள்.
விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார
மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்கத் தீர்வுகளும். கலைவாணி, சரஸ்வதி என்ற
கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.
இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாகத் தனித்து இருப்பது என்ற
சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, ''ஒரு மனிதன் ஒரு
மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை
வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"27 என்று கணவனைக் குற்றம்
சாட்டி, தீர்வாக, கலைவாணியைச் சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியைப்
பிரம்மாவிடம் படுக்கும் படியும் கூறி, சக்களத்தி சண்டைக்குத் தீர்வு
கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.
மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த
கதையைக் கந்தபுராணம் தக்கக் காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரசப்
பெண்ணைக் கற்பழித்ததால், அந்தப் பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக
பிறந்தானாம். இந்தக் கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது
முட்டாள்த்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.
கணவனைப் பிரிந்து வாழ இட்ட சாபம். சிவ
இரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒருநாள் தனது மனைவியுடன்
புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன்
அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க ~நீ யாரடா
கேட்பதற்கு, எனக் கேட்க இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணங்களின்
தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவைப் பூமியில் பிறக்க வைத்து, மனைவியைப்
பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடிகளைச்
சகித்து வாழவும், அடங்கிவாழவும் கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்கத்
தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.
இராமனின் குற்றப் பிறப்பும் சரி,
பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று
விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியைப் (சீதையைப்)
பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தும்
சமூகத்தின் இழிந்த தண்டனைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை
வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப ;படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற
மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.
மகளைக் (சரஸ்வதியைக்) கற்பழித்த
பிரம்மன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரம்மன் தன் சரீரத்தில் இருந்து
தனது மகளாகச் சரஸ்வதியைக் கல்விக்காகப் பெற்று எடுத்தாராம். பெத்த மகளின்
அழகைக் கண்டு பிரம்மன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான்
உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டுத்
துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரம்மனைக் கொல்ல, சரஸ்வதி
ஒப்பாரி வைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில்,
மகள் சரஸ்வதி பிரம்மனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி,
சரஸ்வதி பிரம்மனின் பேத்தியான நிலையில் பிரம்மனின் மனைவியானாள். ஒருநாள்
ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு
குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்தக் குடத்தில் இருந்து உருவான அகத்தியன்
சரஸ்வதியைப் பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல்
வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டுகின்றனர். இது மனைவி,
மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக
நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.
பெண்களை நிர்வாணமாக்கி இரசித்த
ஆணாதிக்கக் காமுகன் சிவன் இந்துக்களின் கடவுள். ''இராவணனின் மனைவி
மண்டோதரியை இச்சித்துப் புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து
நிர்வாணமாகப் பிச்சை போடும்படி கேட்டும், சிவன் சாபம் பெற்று சிசுவானது
ஆணாதிக்கக் காமமாகும்."34 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து
சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிரக் காமம் கொண்டு விந்து
வெளியேற்றிய நிகழ்ச்சியைப் போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?
இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன்
என்றால் தவறோ? உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில்,
மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட
வைக்கும் ஆணாதிக்கப் போக்குக்குச் சிவன் தந்தையல்லவா? இதனால் தான் இந்து
இராஜ்ஜியத்தை உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம்
போகின்றனரோ?
வள்ளியம்மையின் பிறப்பும்
மிருகப்புணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப்
பெற்றார். இந்தக் கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா?
இவை ஆணாதிக்க வக்கிரப் புத்தியல்லவா?
விபச்சாரியிடம் சுந்தரமூர்த்திக்காகத்
தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து
மதத்தைப் பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காகப் பொய்யும்
புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி
மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகு வேலை பார்த்து
(ஏகாதிபத்தியத்துக்குச் செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி
நாயனாரின் ஆணாதிக்கக் காமத்தைத் தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?
பல நூறு இந்து மதப் பிறப்புகள் இது
போன்று வக்கரித்த ஆணாதிக்கப் பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள்,
வைப்பாட்டித் தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச் சேர்க்கை, சுயப் புணர்ச்சி
என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சி வடிவங்களை இந்துப் புராண
இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி, ஆணாதிக்க வக்கிரமாகக்
காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும்
பின்நவீனத்துவச் சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய
ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து, நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி
வடிவங்களை மட்டுமே இந்துமதப் புராண, இதிகாசங்கள் சார்ந்து
தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும்
புரிந்து கொள்ள இந்த வக்கிரங்களே எமக்குப் போதுமானவை.