பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், பிப்ரவரி 16, 2012

ஃபேஸ்புக் பரண்


அப்பா இது எதுவும்
இதுவரை உன்னிடம் சொன்னதில்லை..
தொலைதூரத்தில்..
உனைவிட்டு பிரிந்து
கடல் தாண்டி இருக்கும் பொழுதில்
மனதார சில விடயங்கள்
உன்னைப் பற்றிச் சொல்கிறேன் கேள்..

அப்பா.,
மனம் திறந்து பேச
பொறுமையாய் யோசனை சொல்ல
சிரிக்க..
பயணிக்க ..
ஒன்றாய உணவருந்த.
சிநேகிக்க..
எந்தன் மகிழ்ச்சியின் சங்கீதத்திற்கு இசையமைக்க
உன்னையன்றி யாரால் இயலும் என் அப்பா..??
அம்மா உடலால் சுமந்தாள்..
நீ எங்களை மனதால் சுமந்தாய்..
அன்பு உனக்கு எப்பவும்
-தூரதேசத்தில் இருக்கும் ஒரு மகனின்
அப்பா குறித்த வருடும் வரிகள்..

-Abdul Vahab
16.february.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக