பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

பாகற்காயின் மருத்துவ குணங்கள்


உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
Ref : http://www.pathivu.com/news/22837/57//d,article_full.aspx
பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

 

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

 

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

 

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

 

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

 

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

 

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

 

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

 

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

 

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

 

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

 

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
Ref : http://www.pathivu.com/news/22837/57//d,article_full.aspx

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

தள்ளுபடி -------------------ரூ .1,30,000 கோடிகள்(சிதம்பர ரகசியம் )


suran


சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் பொறுப்பிலி ருந்து ப.சிதம்பரத்தை நிதி அமைச்சர் பொறுப் புக்கு கொண்டு வரும்போதே நாட்டுமக்களுக்கு ஒரு விசயம் நன்கு தெரியும். ஏதோ பெரிய காரி யங்களை நடத்துவதற்குத்தான் என்று .
 இப் போது அவரின் திருவிளையாடல்  வெளியே வந்துவிட்டது.
 ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் வரு மான வரி பாக்கிகளை மத்திய அரசின் நிதி யமைச்சகம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப் பித்துள்ளது.
 இதில் நிதி மோசடிகள் ,வரி ஏய்ப்பு ,வங்கிகளில் கடனை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பணமுதலைகள் , பாதுகாப்பு ஊழல் நிதிகள் உட்பட பல விதி மீறல்களும் அடங்கு ம்.

நாடாளுமன்றத்தில்  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு விவகாரத்தில் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு -வாக்கெடுப்பில்   கேவலமான முறையில்  மன்மோகனுக்கு ஆ தரவாக வாக்களித்த ஊழல் வழக்குகளில் சிக்கி யுள்ள மாயாவதி, முலாயம் சிங், திமுக உள் ளிட்ட கட்சிகளால் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மன்மோகன்சிங் அரசு தப்பி யுள்ளது.
எனினும் அடுத்து வரும் நாடாளு மன்றத்தேர்தலில் காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பலத்த அடி தரு வதற்கு மக்கள் தயாராகி வருவதும் அவர்க ளுக்குத் தெரியும், அதற்குள் அடுத்துவரும் அரசு தங்கள் மீது பாய்ந்து விடாமல் எல்லாத் தப்பிக்கும் வழிகளையும் திட்டமிட்டு செயல் படுத்தி வருகிறார்கள்.
suran
பல லட்சம் மோசடி ரூபாய் ஊழல்களையும் மறைக்கப் பெரு முயற்சி செய்து வருகிறார்கள். மறுபுறம் மக் களுக்கு அரசு தரும் உணவு தானிய மானி யங்களை ரொக்கமாகக் கொடுத்து அதை ஓட்டு வாங்குவதற்கான பணமாகத் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த முயற்சிகள் செய்கி றார்கள். இதன்மூலம் ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் வாங்கிச் சாப்பிடும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற் றிலடிக்க களமிறங்கிவிட்டனர்.

நிதித்துறை குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு நிதியமைச்சகம் அளித்த பதிலில் ஹசன் அலிகான் ஸ்விஸ் வங்கியில் ஏராள மாய் பணம் போட்ட விசயத்தில் 92 ஆயிரம் கோடி வருமான வரியும், பாதுகாப்பு ஊழல் களான (போபர்ஸ் பீரங்கி ஊழல் உள்ளிட் டவை) பணங்களுக்கான வருமான வரிகளை வசூலிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள் ளது. அதேபோல் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா குரூப் கம்பெனி தர வேண்டிய 20 ஆயிரம் கோடி, கேதான் குரூப் பாக்கி 4 ஆயிரம் கோடி, தலால் குரூப் 14 ஆயி ரம் கோடிகளும்கூட வசூலிக்க முடியாதாம்.

இந்த வருமானவரி பாக்கிகளை வசூலிக்க அந்த சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்யவும், அவர்கள் ஈடு வைத்த சொத்துக்களையும் எடுத்தால் ஒன் றும் தேறாது என்றும் நிதிஅமைச்சகம் கூறி யுள்ளது. மொத்தமுள்ள 2.49 லட்சம் கோடி நிலுவையில் இப்படி 1.33 லட்சம் கோடி வசூ லிக்க முடியாத பாக்கியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு 60 ஆயிரம் கோடி பாக்கியும் ரெவின்யூ இலாகாவால் வசூலிக்க முடியாது என்று அறிவித்துள்ளனர். மேலும் 2.49 லட்சம் கோடி பாக்கியில் வெறும் 7 ஆயி ரம் கோடிதான் வசூலிக்கமுடியும் என்றும் கூறி விட்டனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு, அரசிடம் இந்த நஷ்டம் பற்றி விளக்கம் கேட்டுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகள் வரி பாக்கிகளை எப்படி வசூலிக்காமல் விட முடியும் என்றும் கேட்டுள்ளது. இவ்வளவு பாக்கிகளை வசூ லிப்பதில் அரசு மிகுந்த மெத்தனம் காட்டுவது குறித்து நிலைக்குழு மிகுந்த கவலை தெரி வித்துள்ளது. மேலும் பாக்கிகளை வசூலிப் பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத் திருக்க வேண்டுமென்றும் நிலைக்குழு கூறி யுள்ளது.

மத்திய அரசின் வருமானவரித்துறை ஏழை, நடுத்தர மக்களை மட்டும் கசக்கிப் பிழி கிறது. ஆண்டுக்கு இரண்டுலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோரிடம் அவர்களது ஊதியத்தி லேயே பிடித்தம் செய்து பறித்துக்கொள்கிறது. பணி ஓய்வுபெற்றவர்களும் வயதான காலத் தில் தங்கள் சேமிப்பை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் வட்டிபெற முதலீடு செய்கி றார்கள். அந்த வட்டியை வாங்கி வயதான காலத்தில் வாழ்வோரைக்கூட வருமானவரித் துறை வாட்டி வதைக்கிறது. நடுத்தர மக்கள், சிறுவணிகர்கள், சிறுதொழிலதிபர்கள் இவர் களிடம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.


ஆனால் ஊழல் பேர்வழிகளும், வரி ஏய்ப் பாளர்களும் லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கி ஏப்பம் விடுகிறார்கள். இதில் ஆளு வோரும் கவனிக்கப்பட்டுவிடுவதால் இந்திய சமூகத்தில் சர்வ சாதாரணப் பிரச்சனையாகி விடுகிறது.
சாதாரண மக்கள் வரிகளை பிழிந்து வாங்கிக்கொண்டு அரசு செய்ய வெண்டிய சேவைகளுக்கு கூட சேவை வரி போட்டு கல்லா நிரப்பும் மத்திய அரசு பண முதலைகளுக்கு மட்டும் கருணை பார்வை வீசுகிறது.அவர்கள் இந்த காங்கிரசுக் கட்சிக்கு மட்டுமல்ல யாருக்கும் ஆதரவாக வாக்களிக்க வாக்குச்சாவடி அருகே கூட வருவதில்லை. ஆனால் வரும் கட்சிகள் இவர்களுக்கு மட்டும்தான் சேவை புரிகிறது.இந்த அசிங்கமான நடமுறை மக்களுக்கு புரிந்தால் சரிதான்.நன்றி:-http://suransukumaran.blogspot.in/2012/12/130000.html

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

போராளி சுபா.முத்துக்குமார் வாழ்க்கை குறிப்பு.


யார் இந்த முத்துக்குமார்;
எதற்காக இந்த படுகொலை,
 கொலையாளிகள் யார்..?
 
ஸ்பெஷல் ரிப்போர்ட்


 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.


ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள் நடமாட்டத்தையும் கடந்து  மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

20 நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள் கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான் பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.    

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?  

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில் விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டைபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல் , டீசல் , ரத்தம் , உணவு , மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலைபுலிகளுக்கு கொடுத்து வந்தார்.


  1994 ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி  இருந்த 80 விடுதலைப்புலிகளை தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த  ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும் போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள். இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

 1995 ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொருப்பு முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொருப்பு சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர் கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளரா இருந்தார்.
ஆனால்  சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள் பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது.  மீண்டும் போலிசிடம் சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் ஏரியில் குதித்து இறந்தார்.

 இதனால் அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப் பகை கொண்டார் அந்த சென்னை நபர். இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார் முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

 1996 ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார்.  அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப்படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட் என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம்  கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.


அந்த குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர் நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த  இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி, மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள் சார்ந்திருந்த  இயக்கத்தை விட்டு  வெளியேறினார்கள். இதனால் முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து செயல்பட்ட போது அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது. முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார்.   இளவரசன் குரூப்பில் இருந்த வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார் சிறையில் இருந்தார்.

ஆனால் அறிவழகனை போட மூலையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப் நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர் நபர் ஆகியோரும்  இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

 1999 முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில் மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல் உருவாகி பெரிய சண்டை நடந்தது.

தலித் கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில் இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில் சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட் கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான் கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர். இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து செயல்பட்டு வந்தது. 


 இந்த நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு தீவிரமாக கட்சி பணி செய்தார். சுப. இளவரசன் குரூப்பில் இருந்து முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொருப்புக்கு வந்தனர். பொருப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன் தான் பார்த்தனர்.

 போன மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின் மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில் முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.

முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார் கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன் முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர். 

 இந்த துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

 துண்டுபிரசுரம் வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான்,  சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட முத்துகுமாரிடம்  மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

 இந்த நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள் கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள் கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

 மேலே நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின்  டீம் தான் போட வந்தது என்பது தெரியவருகிறது.

 இந்த நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

 முத்துக்குமாரின் கூட இருந்த தோழர்கள்  இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின் பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு தான் இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர் விடுதலைப்படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார். எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும் முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில் இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார். 

இப்ப நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம் வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும் முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க வில்லை தான்.

பெட்டி செய்தி:

 ஒரு மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட மறுநாள் இறங்கல் கூட்டத்தில் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

 ஆனால் அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த கருப்பு உருவத்தை பார்த்து  கேட்க நான் ஐ.பி சென்னை.

 முத்துக்குமாரை சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி தானா? என்பது  தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

       - செம்பருத்தி.