பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், மே 24, 2012

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்!!




குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.

சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை

அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன்
வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும்.

இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

By:தமிழ்ச் சமுதாயம்

வியாழன், மே 10, 2012

கம்பன் கண்ட 99 பூக்கள்!!!

கம்பன் கண்ட 99 பூக்கள்... 1.காந்தள் 2. ஆம்பல் 3.அனிச்சம் 4.குவளை 5. குறிஞ்சி 6. வெட்சி 7. செங்கொடுவேரி 8.தேமா (தேமாம்பூ) 9. மணிச்சிகை 10.உந்தூழ் 11.கூவிளம் 12. எறுழ் ( எறுழம்பூ) 13.சுள்ளி 14. கூவிரம்15. வடவனம் 16. வாகை 17. குடசம் 18. எருவை 19. செருவிளை 20. கருவிளம் 21. பயினி 22. வானி 23. குரவம் 24. பசும்பிடி:25. வகுளம் 26. காயா 27. ஆவிரை 28. வேரல்29. சூரல் 30. சிறுபூளை 31. குறுநறுங்கண்ணி 32. குருகிலை 33. மருதம் 34.கோங்கம் 35. போங்கம்36. திலகம் 37. பாதிரி 38. செருந்தி 39. அதிரல் 40. சண்பகம் 41. கரந்தை 42. குளவி 43. மாமரம் (மாம்பூ)44. தில்லை 45. பாலை 46. முல்லை47. கஞ்சங்குல்லை48. பிடவம் 49. செங்கருங்காலி 50. வாழை 51. வள்ளி 52. நெய்தல் 53. தாழை 54. தளவம்55. தாமரை 56. ஞாழல் 57. மௌவல் 58. கொகுடி 59. சேடல் 60. செம்மல் 61. சிறுசெங்குரலி 62. கோடல்63. கைதை 64. வழை 65. காஞ்சி 66. கருங்குவளை– (மணிக் குலை)67. பாங்கர் 68. மரவம் 69. தணக்கம் 70. ஈங்கை 71. இலவம் 72. கொன்றை 73. அடும்பு 74. ஆத்தி 75. அவரை 76. பகன்றை 77. பலாசம் 78. பிண்டி 79. வஞ்சி 80. பித்திகம் 81. சிந்துவாரம் 82. தும்பை 83. துழாய்84. தோன்றி 85. நந்தி 86. நறவம் 87. புன்னாகம் 88. பாரம் 89. பீரம் 90. குருக்கத்தி 91. ஆரம்92. காழ்வை 93. புன்னை 94. நரந்தம் 95. நாகப்பூ 96. நள்ளிருணாறி 97. குருந்தம்98. வேங்கை 99. புழகு

புதன், மே 09, 2012

டாஸ்மாக் விற்பனை 18 ஆயிரம் கோடியை தாண்டியது!!


*குடிக்கிறாங்கப்பா*


போதையில் தலை சுற்றி விழுபவர்களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.


நீங்கள் குடிக்கவே குடிக்காத"பரிசுத்தமான' நூற்றில்...இல்லை... இல்லை... ஆயிரத்தில் ஒருவரா? அப்படியானால் நீங்களும் தலை சுற்றி விழப் போகிற செய்தி ஒன்று உள்ளது.

எல்லாம் "சரக்கு' போடுகிற மேட்டர்தான்!

"தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' உங்களுக்கு நன்கு தெரிந்த பெயர்தான்!

அதுதான் தடுக்கி விழுந்தால் அதன் வாசலில்தானே உங்களால் விழ முடியும்? ரொம்பவும் விழிக்காதீர்கள்! டாஸ்மாக்கின் விரிவுதான் இந்தத் தமிழ்நாடு... ஸ்டேட்....!

தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரும் துறையாக இந்த டாஸ்மாக் இருக்கிறது.

இந்த 2011 -12 ஆண்டில் மட்டும் மது விற்பனை இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

18 ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. சென்ற ஆண்டு 14 ஆயிரத்து 965 கோடி. விற்பனை வளர்ச்சி விகிதம் 21 சதவீதம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

நல்ல வளர்ச்சி... நல்ல விகிதம்!

2003-04 இல் 3639.93 கோடி ரூபாய் விற்பனை. அடுத்த ஆண்டு சற்று எகிறி 4,872 கோடி ரூபாய்.

இப்படியே எகிறி எகிறி 2003 இல் இருந்ததைவிட இப்போது 4 மடங்கு விற்பனைத் தொகை அதிகரித்திருக்கிறது. இதிலே இன்னொரு கணக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடு என்றாலே நமக்குக் கொஞ்சம் போதை அதிகம்.

இந்தியாவில் தயாராகும்வெளிநாட்டு மதுவகைகளின் விற்பனை
அதை உறுதிப்படுத்துகிறது.

2010 - 11 இல் 4.8 கோடி பெட்டிகள் விற்பனையான இ.த.வெ. மதுவகைகள், 2011-2012 இல் 5.36 கோடியாகத் தாவி அதிக விற்பனையாகியிருக்கிறதாம்!

குடிக்கப் பழகுகிறவர்கள் முதலில் தொடுவது பீர். அதில்தான் போதைஇல்லை என்று ஆரம்பிப்பார்கள்.

"மதுவெல்லாம் குடிக்கமாட்டேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்' என்று ரொம்ப ஒழுக்கமாகப் பேசுகிறவர்கள் இரண்டாண்டுக்குப் பின்பு விஸ்கி, பிராந்தி, வோட்கா என்று மூழ்கிப் போயிருப்பார்கள்.

2010-11 இல் 2.7 கோடி பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனையாகின. இது 2011-12 இல் 2.84 கோடி பெட்டிகளாக உயர்ந்திருக்கிறது.

ஏதோ டாஸ்மாக் கடையில் அடித்துப் பிடித்து பாட்டிலை வாங்கினோம். பக்கத்துக் கடையில் வாட்டர் பாக்கெட் வாங்கி,
பிளாஸ்டிக் கப்பில் கலக்கிக் குடித்துவிட்டு, 4 ரூபாய்க்கு காராசேவு பாக்கெட் வாங்கிக் கொறித்துவிட்டு தள்ளாடி நடந்தோம் என்று இருந்த குடிமகன்களின் வசதிக்காக இப்போது பார் அட்டாச்மென்ட்டும்
பெருகியிருக்கிறதாம்.

மொத்தமுள்ள 6,798 சில்லறை விற்பனைக் கடைகளில், 4,730 கடைகளில் பார் அட்டாச் பண்ணியிருக்கிறார்களாம்.

பேரினவாதத்தின் போராயுதம்!!!



மூன்றாவது முறையாக
மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை


அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்.


அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.


எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொழுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது திறந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.

வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’


விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.


இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.



“போர்த் தந்திரோபாயங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு பிரயோகிக்கப்படுவது கொங்கோ, சூடான் போன்ற சில இடங்களில் எங்காவது எப்போதாவது நடக்கும் ஒரு விடயம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதனைக் காட்டிலும் மிக மோசமானது. பொஸ்னியா, பர்மா, சிறிலங்கா என பெரும்பாலான இடங்களிலும் பாலியல் வல்லுறவு போர்த் தந்திரங்களில் ஒன்றாகப் பிரயோகிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய கொடுமைகளை இழைப்பவர்கள் பல நாடுகளில், பல சம்பவங்களில் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அவர்களைத் தப்பிக்க விடுவதானது மேலும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனது மேற்கண்ட வாசகங்கள் இலங்கை அரச தரப்பைக் கொதித்தெழச் செய்தன. இலங்கை போன்ற, ஜனநாயகத்தை ‘கண்ணில் வைத்துப் போற்றும்’ ஒரு நாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கூற்றின் மூலம் இழிவுபடுத்திவிட்டதாக கடுஞ்சினத்தோடு குற்றஞ்சாட்டினார்கள். பின்னர் வழக்கம்போல, ‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிடும்போது தற்செயலாக இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம்’என்ற தற்சமாதானத்தின் மூலம் இலங்கை அரச தரப்பு தனது கொதிப்பை ஆற்ற முயன்றது. மேலும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின்போது, ‘2006-2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக அறியவில்லை’என்ற குளிர்ந்த வார்த்தைகளை அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றதனோடு அடங்கினார்கள்.

ஆனால், ‘இலங்கை அரச படைகள் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் எதையும் இழைக்கவில்லை; அமெரிக்காவும் ஐரோப்பாவின் சில ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புகளும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை போன்ற உன்னத தேசத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்’ என்ற வார்த்தைகளை, அதைச் சொல்லும் சிங்கள மேலாதிக்கமே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
விடுதலைப் புலிகளுடனான போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தகைய காடைத்தனத்தை இலங்கையின் அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. 1958, 1971, 1983 எனத் தொடர்ந்த இனக்கலவரங்களின்போது தமிழ்ப் பெண்களிடம் தனது ‘ஆண்மை’யை நிரூபித்து வந்திருக்கிறது சிங்கள மேலாதிக்கம்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற அனுமதிச்சீட்டின் மூலமாக எந்தவொரு அத்துமீறலுக்கும் அரசாங்கங்களால் துணிய முடிகிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும், பொஸ்னியாவிலும், ருவாண்டாவிலும் கெயிட்டியிலும் கிழக்குத் திமோரிலும் என எங்கெங்கும் இருக்கும் பெண்கள், அரச மற்றும் அமைதிப் படைகளின் வக்கிரங்களுக்குப் பலியானதும் தொடர்ந்து பலியாகி வருவதும் அந்த அனுமதிச் சீட்டின் மூலமாகவே. ருவாண்டாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. 1990இல் 5000 குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டனர்.  ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம் அதே சூறையாடலை ஈராக்கியப் பெண்கள் மீது நிகழ்த்தியது. பொஸ்னியப் பெண்களைச் சிறைப்பிடித்து அடைத்துவைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பந்தரிக்கச் செய்தபிற்பாடு சேர்பிய இராணுவம் சொன்னது: ‘இனக்கலப்பு செய்தாயிற்று. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்’.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையடுத்து, அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தில் கால்பதித்த இந்திய இராணுவம் ஏறத்தாழ எட்டாயிரம் தமிழ்ப்பெண்களை தனது பாலியல் வெறிக்குப் பலியாக்கியிருக்கிறது. உலகெங்கிலும் பெண்ணுடல்களில் களமாடித் தங்கள் கொடியை ஊன்றியவர்கள் விருதுகளாலும் பதக்கங்களாலும் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகளுக்கான- பாலியல் வதைகளுக்கெதிரான பெண்கள் அமைப்பு கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது.
“சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். உண்மையான எண்ணிக்கை அதனிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான வல்லுறவுகள் அச்சம் காரணமாக வெளியிடப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.”

1996ஆம் ஆண்டு மட்டும் 150 தமிழ்ப் பெண்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’என்ற பத்திரிகை ஜனவரி, 1997 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

‘இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்களே’என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவருகிறது இலங்கை அரசு. மேலும், தன்னுடைய இராணுவத்தின் கட்டுப்பாடு, கடமையுணர்வு, தேசாபிமானம் குறித்தெல்லாம் உலக அரங்கில் பெருந்தன்மை பொங்கிப் பிரவகிக்கப் பேசி வருகிறது. மனிதவுரிமை அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய எவருமோ முறைப்பாடு செய்யும் வேளைகளில், ‘இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பொய்ப்பிரச்சாரம்’என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிறது. அல்லது, விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. மறுக்கவியலாத ஆதாரங்களோடு முன்வைத்தால், ‘நீ மட்டும் ஒழுங்கோ…?’என்ற அடாவடித்தனமான கேள்விகளோடு குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளுகிறது. இலங்கையில் நிகழ்ந்தேறிய பல்லாயிரக் கணக்கான பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாமல் அதிகாரங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், அத்தகைய எத்தனங்களையும் மீறி வெளிவந்த சில கொடூர சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பனவாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 7, 1996 - கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

“வீண் அவதூறை அள்ளிச் சொரிகிறார்கள்”என்று கண்கசக்கும் பேரினவாதிகளும் கிருஷாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்தே இருக்கிறார்கள். இந்த வழக்கு அதிர்ச்சி தரும் வகையில் மனிதப் புதைகுழிகளுக்கு இட்டுச் சென்றதானது, தடயங்களை துடைத்தழித்து குற்றங்களிலிருந்து தப்பிக்கும் பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தது.
இறந்தகாலம் கற்பித்த, தடயம் அழிக்கும் உத்தியை, காவற்துறையினர் கோணேஸ்வரி படுகொலையில் பிரயோகித்தார்கள். 

கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை என்ற 35 வயதான, நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண், 1997 மே 17ஆம் திகதியன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘சென்றல் காம்ப் கொலனி’யிலிருந்த பொலிசாரால் இரவு பதினொரு மணியளவில் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டபின் கொல்லப்பட்டார். நான்கு வயதான மகள் மட்டுமே அந்தக் கொடூர நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தாள். அவரது ஏனைய மூன்று பிள்ளைகளும் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கோணேஸ்வரி கொலை செய்யப்பட்ட விதம் ‘கசாப்புக்கடைத்தனமானது’என்று மனிதவுரிமை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. கோணேஸ்வரியின் பிறப்புறுப்பினுள் கைக்குண்டு ஒன்றைத் திணித்து அதை வெடிக்கவைத்து வல்லுறவின் தடயங்களை அழித்திருந்தார்கள் இலங்கையின் காவற்துறையைச் சேர்ந்த அந்த நான்கு பேரும்.

28 டிசம்பர், 1999 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற 29 வயதான பெண் (ஒரு பெண் குழந்தைக்குத் தாய்)அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சாரதாம்பாளின் தந்தையையும் சகோதரரையும் கட்டிப் போட்டுவிட்டு அவரைத் தூக்கிச் சென்றவர்கள் புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரே. மறுநாட் காலை அந்தப் பெண்ணின் உயிரும் ஆடையுமற்ற உடல் புதர்களால் மூடியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணை நடத்த அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு ‘நீதி’நிலைநாட்டப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிவரஜனி, விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து பொலிசாராலும் அந்த விடுதியின் ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்றபோது அவர்கள் வேசிகளெனத் தூற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோலவே, குண்டு வைத்திருப்பதாகக் கூறி ஒரு பெண் நடுவீதியில் மக்கள் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்டார். (விசாரணையின் பிறகு அவர் ஒரு சிங்களப் பெண் என்பது தெரியவந்தது.) அவர் குண்டு வைத்திருக்கவில்லையென அறிந்தவுடன் அவரையும் வேசியாக்கிவிட்டனர். அதாவது, பாதுகாப்புப் படையினரை நிரபராதிகளாக்க வேண்டி சம்பந்தப்பட்ட பெண்களை வேசிகளாக்கினர். கவனிக்கவும்… அவர்கள் பாலியல் தொழிலாளர்களுமல்லர்; வேசிகள்! வேசிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற  பொதுப்புத்தியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கோணேஸ்வரி, ஐடா கமாலிற்றா, சிவமணி, விஜிகலா கூட குற்றவாளிகளால் மறைமுகமாக அவ்வாறு பழிசுமத்தப்பட்டவர்களே.

இலங்கை போன்றதொரு நாட்டின் நீதிமன்றங்களும் அரசுசார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடையனவாக இருக்கின்றன. காரணம், அவர்கள் அரச இயந்திரத்தின் சக்கரங்கள். அவர்கள் மீது முற்று முழுதான குற்றஞ்சாட்டுதல்களைச் சுமத்தும்போது அரசும் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்துவிடுகிறார்கள். அல்லது, வழக்குகளை இழுத்தடிப்பதன் வழியாக சம்பந்தப்பட்டவர்களை சலிப்படையவும் பின்வாங்கவும் செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் மௌனமாக இருக்கும்படி மிரட்டப்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியேறும்படியாக அதிகாரங்களால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது குற்றவாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறார்கள். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு புதிய இடம் அவர்களுக்கு அருளப்பட்டுவிடுகிறது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. தர்ஷினியின் கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வழக்கம்போலவே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் வங்காலை என்ற இடத்தில் நடந்தேறிய கொடூரம் மனிதநேயமுள்ள எவராலும் மறக்கப்படக் கூடியதன்று. அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் (மேரி மெற்றலின் - மூர்த்தி மார்ட்டின், அவர்களது 9 வயதான மகள் லக்ஷிகா, 7 வயதான மகன் டிலக்ஷன் ஆகியோர் கொடூரமான முறையில் உளியாலும் துப்பாக்கியின் பின்புறமுள்ள கூர்முனையாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தாயைத் தவிர ஏனைய மூவரும் வெட்டுக் காயங்களுடன் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தனர். மேரி மெற்றலின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் பெருகிய நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். 9 வயதான லக்ஷிகாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அன்று காலையில் தேடுதல் சோதனை நடத்த வந்த இராணுவத்தினரே அந்தக் குரூரமான கொலைகளைச் செய்தவர்களென அந்தக் கிராமத்தினர் சாட்சியமளித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சில உதாரணங்களே. வெளிவந்தவை சில ஆயிரம். வெளிவராதவை பல்லாயிரம்.
‘ஆயிரத்தில் ஒரு சம்பவம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அல்லது கவனத்திற்குக்  கொண்டுவரப்படுவதாக’மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பாதுகாப்புப் (?) படைகளால் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிருடன் விடப்படும் பெண்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ‘உனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்’என்று மிரட்டப்படுகிறார்கள். ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உள்ளுக்குள் வைத்து மறுகியபடி காலமெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுபவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புஷ்பமலர் (கச்சாய்), பாலேஸ்வரி (கெருடாவில்), வாசுகி (யாழ்ப்பாணம்), தனலட்சுமி (கிளிவெட்டி, மூதூர்), லெட்சுமிப்பிள்ளை (திருகோணமலை-மகன்களுக்கு முன்னால் வைத்து வதையும் வல்லுறவும்) சிறீறஞ்சனி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி (சரசாலை, தாய்-மகள்-சிறிய தாய் உறவு), சந்திரகலா கிருஷ்ணபிள்ளை (அளவை),  கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (கல்குடா), தேனுகா (10 வயது, பத்தமேனி, அச்சுவேலி), சிவசோதி (மண்டூர்), வனிதா (மயிலம்பாவெளி), நவமணி, ஜெயந்தி, மேகலா (ஜெயந்தியும் மேகலாவும் நவமணியின் மகள்கள் - தியாவெட்டுவான்), நூர் லெப்பை சித்தி உம்மா (ஓட்டமாவடி), அலி முஹம்மத் அதாபியா(ஏறாவூர்), காளிக்குட்டி ராகினி (பனிச்சங்கேணி), கிருபாதேவி (மட்டுவில் வடக்கு), விஜயராணி (அராலி), புவனேஸ்வரி (மந்துவில்-உறவினர் மூவர் கொலை செய்யப்பட்டபின்பு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்), நாகலிங்கம் பவானி (திருநெல்வேலி), சின்னப்பு பாக்கியம் (மாவடிவேம்பு), ரஜனி (வாழைச்சேனை), பாலந்தி (6 வயது, அச்சுவேலி), பிறேமினி தனுஷ்கோடி, ரஜனி வேலாயுதப்பிள்ளை (உரும்பிராய்), தங்கநாயகி (அம்பாறை), சந்திரகலா (அல்வாய்), யோகலிங்கம் விஜிதா(நீர்கொழும்பு), சியாமளா (பளை), அமுதா (விடத்தல்தீவு, மன்னார்), சவரி மெடலின் (சொறிக்கல்முனை), ஐடா கமாலிற்றா (பள்ளிமுனை, மன்னார்), செல்வராணி (மீசாலை), அஜந்தனா (அரியாலை), ரஜனி (பனிச்சங்கேணி), பவானி (திருநெல்வேலி), விஜயலட்சுமி (கல்மடு, வாழைச்சேனை), ஆனந்தி (செட்டிப்பாளையம்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை இலங்கை அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிலரது பெயர்கள். அவர்களுள் கொல்லப்பட்டவர்களும் ‘கருணை கூர்ந்து’தப்ப விடப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.


கொலைபடு களத்தில் வீழ்ந்தவர்கள் இலக்கங்களாக்கப்பட்டு விடுதல் போல, பாலியல் வெறிக்குப் பலியானவர்கள் காலவோட்டத்தில் வெறும் பெயர்களும் சம்பவங்களும் ஆக்கப்பட்டுவிட்டனர்.

மெல்லிய சோகம் கலந்த நீண்ட கண்களும் அழகான தமிழ் உச்சரிப்பும் கொண்ட இசைப்பிரியாவை விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இசை, நடனம், நடிப்புத்திறன் என பல்வகை படைப்பாளுமைகளும் கொண்ட பெண் எனவும் பின்னர் அறியக்கிடைத்தது. 2009 மே மாத பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தடயங்களோடு உயிரற்றுக் கிடந்த இசைப்பிரியாவின் உடலை உலகம் பார்த்தது. இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
“இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் நாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளது”என்று முதன்முறையாக அந்தக் காணொளியை வெளியிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி நிலையமாகிய ‘சானல் 4’அறிவித்தது.
ஆனால், வழக்கம்போல, தனது பழக்கப்பட்ட ‘கனவான்’ வார்த்தைகளால் இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இசைப்பிரியா அரசுக்கெதிரான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ‘அவ்வாறெனில், கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பது எதனால்?’என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த பேரனர்த்தத்தின் பிற்பாடு காயங்களோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக அங்கு அவ்வேளையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ‘விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’என்ற ஆரவாரத்தோடு, இலட்சக்கணக்கான மக்களை விலங்குகளைப் போன்று- சுகாதார, உணவு, குடிநீர், இடவசதி அற்ற தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்திருந்தது இலங்கை அரசாங்கம். அவை பெயருக்குத்தான் தடுப்புமுகாம்களாக இருந்தனவேயன்றி, உண்மையில் அவை எஞ்சிய விடுதலைப் புலிகளை வடிகட்டுவதற்கான வதைமுகாம்களாகவே அமைந்திருந்தன. இன்னமும்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள், மீள்குடியேற்றப்படாமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியாவின் தடுப்பு முகாமொன்றில் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம் இது:

“முகாமிலிருந்த பல பெண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் இருந்த முகாமில், குளிக்கும் இடத்திற்கு அருகில் நான்கு பேரின் சடலங்களை நாங்கள் பார்த்தோம். அவர்களில் மூவர் பெண்கள். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். அங்குள்ள அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகள் எதையும் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் மௌனமாக அந்தச் சடலங்களைக் கடந்து சென்றோம்.”

முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள்  தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தென்பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்று சொல்லப்பட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. அவர்களுட் சிலர் அரசாங்கத்தின் கருணையால் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்பட்டு மீள்குடியேற்றப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லை. இறந்தகாலத்தின் கொடுங்கனவுகளோடும் வறுமையோடும் ஏதிலிகளாக வாழ விதிக்கப்பட்டவர்களாயினர்.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. பெரும்பாலான ஆண்கள் போருக்குப் பலியாகிவிட்டார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமற் போய்விட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனியாக விடப்பட்ட பெண்கள் அரசபடைகளின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இன்னபிற சொற்கள் ஈழமண்ணைப் பொறுத்தமட்டில் தம்மளவில் பொருளுடையவை அன்று. அல்லது அபத்தமானவை. மேற்கண்டவர்களில் பலர் சித்தம் கலங்கிப் பேதலித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு விடப்பட்டவர்களின் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கொடூர சம்பவம் நிகழ்த்திப் பார்க்கப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லவே முடிவதில்லை என்றும் அந்த மனவுளைச்சலையும் மீறி உறங்க நேர்கையில் தாம் துன்புறுத்தப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட, மரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் துர்க்கனவுகளாகத் தோன்றி நடு இரவுகளில் விழித்தெழத் தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். பாலியல் வதையை எதிர்கொண்ட பலர் ஆழ்ந்த மௌனத்துக்குள் புதைந்து போய்விடுகிறார்கள். அவ்வாறு, சமூக மதிப்பில் தாழ்ந்துபோய்விடுவேனோ என்று அஞ்சி, தனக்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்லாது மௌனத்துள் ஆழ்ந்திருந்த பெண்களில் பலர் தற்கொலையில், புத்தி சுவாதீனமிழப்பில் முடிந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை ஈழத்திலும் காணலாம்.

“நான் எனது கணவருடன் வாழும் தகுதியிலிருந்து இறங்கிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்.”என்று, பாதிக்கப்பட்ட பல பெண்கள் உளவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பல பெண்களும் இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானியாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அலறுகிறார்கள். சிலரது பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருக்கின்றன. சிலர் எவரையும் (ஆண்களோ பெண்களோ) அருகில் நெருங்க விடுவதில்லை. அருகில் போனால் பயந்துபோய் உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள். துர்நினைவுகள் அவர்களைத் துரத்துகின்றன. என்னிடம் பேசிய ஒரு பெண், 18 மாதங்களாகத் தொடர்ந்து தன்னை இராணுவத்தினர் பாலியல் வதைகளுக்குட்படுத்தி வந்துள்ளதாகச் சொன்னார். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.”

போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சில அறங்கள், விதிமுறைகள் உள்ளன. போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டவர்களது மனிதாபிமான உரிமைகள் பற்றிய விளக்கப் பகுதியில், நான்காவது ஜெனிவா உடன்படிக்கையில் (27வது ஆவணம்) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

“போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள், அவர்களது கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவு, வலுக்கட்டாயமான விபச்சாரம் மற்றும் சுயமதிப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பெண் போராளி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்:
“உயிரற்ற சக பெண்போராளியின் உடலை எதிரி கையகப்படுத்த விட்டுச் செல்வது மிகவும் அபாயகரமானது. முடிந்தவரையில், எனது உயிரைப் பணயம் வைத்தேனும் நான் களத்திலிருந்து அந்த உடலைத் தூக்கிச் செல்லவே முயல்வேன். காரணம், அந்த உடல் எவ்விதம் இழிவுசெய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மேற்குறிப்பிடப்படும் வார்த்தைகளை இணையத்தில் காணக் கிடைக்கிற காணொளிகளோடு நாம் பொருத்திப் பார்க்கலாம். கோணேஸ்வரி போன்ற பெண்களது பிறப்புறுப்புகளே கைக்குண்டுகளால் சிதறடிக்கப்படும்போது, பெண் போராளிகள் எத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதும் கலங்கடிப்பதுமாகும். போரில் காயம்பட்ட காரணத்தால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போன பெண் போராளிகள் சிலரது தலைகள் மண்வெட்டிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிராகக் கிடந்த அவர்களை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் பிறப்புறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறது. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களில் மறைவிடங்கள் குதறப்பட்டிருக்கின்றன. உதடுகள் துண்டாடப்பட்டிருக்கின்றன. மார்புகள் கடிக்கப்பட்டும் அரியப்பட்டுமிருக்கின்றன. பாலுறுப்புகளுள் போத்தல்களும் கம்பிகளும் செலுத்தி குடையப்பட்டிருக்கின்றன. நிர்வாணமான உடல்களை இராணுவத்தினர் கால்களால் உதைத்துக் களிகூரும் காட்சிகளைக் காணும்போதில், போராளிகளின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைக் கேட்கும்போதில், இறந்துபோன மிருகங்களின் உடல்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட மறுக்கப்படும்போதில், ‘இக்கணமே இவ்வுலகம் வெடித்துச் சாம்பலாகி விடக்கூடாதா?’என்று சபிக்கவே தோன்றுகிறது.

சமூகத்தின் பாரபட்சமான கண்களில் பெண் என்பவள் ஏற்கெனவே இரண்டாவது பிரஜையாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஒப்பீட்டளவில் ஆணுக்குள்ள சமூக மதிப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மேலும் ஒரு படி சமூகத்தின் கண்களில் இறங்கிவிடுகிறாள். சமூகத்தின் கண்களில் அவள் ‘களங்கப்பட்டவள்’. ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறாள். சில விதிவிலக்குகள் தவிர்த்து குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறான வெளிப்படுத்தலை அவமானமாகவே கருதுகிறார்கள். காலகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து சரிந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஒரு இனத்தை இழிவுசெய்ய நினைக்கும் எதிரிகளுக்கு எளிய கருவியாக அமைந்துவிடுகிறது பெண்ணுடல். அதிலும், நிலத்தையும் பெண்ணையும் சொத்துடமையாகக் கருதும் சமூகத்தின் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவதன் வழியாக அந்த இனத்தையும் அதன் ஆண்களையும் வெற்றிகொண்டுவிடுவதாக நினைக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பொஸ்னியப் பெண்களது உடல்களுள் தங்கள் வக்கிரத்தை ஊற்றியபின் சேர்பியப் படைகள் சொன்ன வார்த்தைகள் அந்த அடிப்படையிலிருந்து எழுந்தவையே. காஷ்மீர் போராளிகளது விடுதலை உணர்வை அவர்தம் பெண்ணுடல்களுள் நுழைந்ததன் வழியாக இந்திய இராணுவம் சிதைக்க முயன்றது. வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் உள்ள பெண்கள் மீது களமாடிய அமெரிக்க இராணுவத்தை இயக்கியது பாலியல் வெறி மட்டுமன்று. ஒரு இனத்தின் உளவுறுதியைச் சிதைக்கும் ஆயுதமாகவும் வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் ஆன்மா பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேதலிப்பின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வதைகளின் மூலம் வாகை சூடுவதே பேரினவாதத்தின் நோக்கம். தங்களது வக்கிரத்தை, வெறியை பலவந்தமாக பெண்ணுடலுள் ஊற்றுவதன் வழியாக அவர்தம் சுயமதிப்பையும் விடுதலை வேட்கையையும் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் எதிர்காலம் குறித்த கனவுகளையும் அழித்துவிட வேண்டுமென்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலுள்ள மனிதர்கள் எவ்விதம் மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்களோ, அவ்விதமே பெண்களும் பாலியல் பண்டங்களாக ஆக்கிரமிப்பாளர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

பலியுயிர்களாக்கப்பட்ட பெண்கள் உன்னதமான உலகத்தை இழந்தவர்களாக, செய்யாத குற்றத்திற்கான குற்றவுணர்வோடு எஞ்சியுள்ள காலம் முழுவதும் வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். (நமது சமூகம் அப்படித்தான் கற்பித்திருக்கிறது.) இனி அவர்களது கனவுகளில் என்ன தோன்றக்கூடும்…? சீருடைகள், குண்டாந்தடிகள், வெறி வழியும் கண்களுடன் குனியும் பேய்கள், வாய்க்குள் திணிக்கப்பட்ட உள்ளாடைகள், காலிடுக்கில் வழிந்த குருதி…

இந்தியா, சீனா போன்ற வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பினால் மட்டுமன்றி, பேரினவாதிகளின் குறிகளாலும் வெல்லப்பட்டிருக்கிறது-இலங்கையின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ போர்!-நன்றி தமிழ் நதி

ஞாயிறு, மே 06, 2012

இரயில் சேவை நிலவரம் சில நொடிகளில் !!

 
 நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற விபரத்தை வழங்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரயில்வேத் துறை துவங்கியுள்ளது.

நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய ரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும்.

திருநள்ளாறு மகிமை


நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

“இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல்!

வெள்ளி, மே 04, 2012

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி




புகை பிடிப்பவரா....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்!!


வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

வெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா?
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.

வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா- பேதி/வயிற்றோட்டம் குணமாகும்!
பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

சிறந்த சத்துணவு இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

இரத்த அழுத்தம் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.


பருக்கள் மறைந்துவிடும்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடி நன்கு வளர எளிய வழி
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.

நெல்லிக்கனி..மருத்துவர் !!




நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!



வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.


புதன், மே 02, 2012

பூண்டின் மருத்துவம் !!!



இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!

உண்ணும் உணவில் நல்ல மணத்தையும், ருசியையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. மேலும் வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.

மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை எல்லாவகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கூறியுள்ளனர்.

பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைத்து இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றை சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும்.

ஆகவே பூண்டை சாப்பிடுவோம்! இதயத்தைப் பாதுகாப்போம்!

தூதுவளை (Solanum trilobatum)



பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.

சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.

காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.

நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

நன்றி: சித்தர் மூலிகைகள்