பக்கங்கள்

திருக்குறள்

சனி, பிப்ரவரி 11, 2012

பொங்கி எழுவர் இனி



அன்று,

பேரன் சாப்பிட பாட்டன் மரம் நட்டான்
ஏர்பின்னதே உலகம் என்று-உழவன்
உதிரத்தை நிலம்மீது வடித்தான்..

கவளம் உணவிணறி காய்ந்த வயிறோடு
துறவியும் பற்றறுத்து வாழார்-வள்ளுவன்
சொன்ன சொல் நினத்தான்

இன்று,

உழன்றும் உழவே தலையென்ற நிலை மறந்து
விளைநிலமெல்லாம் காங்கிரீட் காடாக்கி –தானும்
அழிந்து தலைமுறையும் அழித்தான்

நிலமென்னும் நல்லாள்நக உழவனை அழவிட்டு
உணவுக்கு கையேந்த சட்டமெனில்-பரந்து
கெடுக உலகியற்றி யான்.

இனி

உழுதுண்டு வாழ்வார் தற்கொலையில் சாவாரெனில்
அல்லற்பட்டு அழுது கண்ணீர் சிந்தாமல்-ஏர்பிடிப்போன்
போர்ப்பறை முழங்கி அணிவகுப்பான்

உழவரும் தொழிலாளரும் ஒன்றாய் கொடிபிடித்து
ஊரையே படைதிரட்டி தரணிவாழ-இனி
பொங்கியெழுவர் இது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக