பீர்பால் இறை மறுப்புச்சிந்தனை உடையவர் என்பது குறித்து அக்பருக்கு வருத்தம். ஒரு நாள் அவரிடமே.”நீங்கள் ஏன் கடவுளை-மதத்தை நம்ப மறுக்கிறீர்கள்?” என்று நேரடியாகக் கேட்டு விடுகிறார்.
பீர்பால் தன் வழக்கமான புன்னாகையை உதிர்த்து , ”உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருக்கின்றன” என்று பதிலுக்கு கேட்டார்.
”ஆயிரக்கணக்கில் இருக்கலாம்” என்று அக்பர் பதில் சொன்னார்.
“ஆயிரக்கணக்கான மதங்களில் எத்தனை தெய்வங்களை மக்கள்” வழிபடுகின்றனர் என்றார்.
ஒரு நிமிடம் யோசித்த அக்பர்.”பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம்” என்றார்.
” நீங்கள் அத்தனை தெய்வங்களையும் ஏற்றுக் கொண்டு , நம்பி , வழிபடுகிறீர்களா ? ”என்றார்.
“இல்லை நான் ஒரு தெய்வத்தை மட்டும் நம்புகிறேன். வழிபடுகிறேன்” என்றார்.
“நீங்கள் பல்லாயிரக்கணக்கான தெய்வங்களை நிராகரித்து ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள். நான் அந்த ஒன்றையும் சேர்த்தே நிராகரிக்கிறேன்” என்றாராம்.
- குழுமத்தில் பூபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக