பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

ஆரியம்,திராவிடம் தீதே!!

21 அக்டோபர் 2014 
 

காஞ்சி சங்கராச்சாரியார் காலடியில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் என்ற பச்சை பார்ப்பனிய (சிந்தனை) வெறி பிடித்தவன் அமர்ந்து இருக்கிறான். மற்றுமொரு, தலித் ஜனாதிபதி கேஆர் நாராயணன் அமர்ந்து இருக்கிறார். பார்ப்பன ஜெவும், தேவர் சாதி சசிகலாவும் அமர்ந்து இருக்கிறார்கள். பார்ப்பனியத்தின் முன்னே (தன்னை தானே தாழ்த்தி) விரும்பி தலித்தாகி கொள்ளும் இளையராஜா அமர்ந்து இருக்கிறார். அத்வானி, அசோக் சிங்கல் மற்றும் பலபாஜக தலைவர்களும் அமர்ந்து இருக்கிறார்கள்!

பார்ப்பன சோ, பார்ப்பன SV. சேகர், பார்ப்பன ரஜினி குடும்பம், ஏன் துர்க்கா ஸ்டாலின் உள்ளிட்ட மற்றும் பல சில்லறைகள் கூட பாத பூஜை செய்து இருக்கிறார்கள்! பொன்னார் அமர்ந்து இருப்பதில் என்ன ஆச்சர்யம்? சுப்பிரமணிய சாமி கூட வேறு ஒரு தருணத்தில் காலடியில் அமர்ந்து இருப்பான். அத்தகைய படங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருந்து இருக்கின்றன. அதையெல்லாம் இந்து பத்திரிக்கையின் Archieves 'இல் தான் தேடிப் பார்க்க வேண்டும்!

அண்ணன் திருமா ஒருமுறை காஞ்சி மடத்தில் மடாதிபதியை, அண்ணன் பாஷையில் 'பெரியவரை' சந்தித்து விட்டு வந்தாரே? திருமா சங்கராச்சாரியின் தலையிலா அமர்ந்து இருப்பார் என்று எண்ணுகிறீர்கள்? நாராயணனை, இளையராஜாவை கீழே அமர வைத்த போது, பொங்கல் கொண்டாடாமல், திடிரென்று இந்த தீபாவளி நேரத்தில், பொன்னாருக்காக பொங்கலை தூண்டியது எந்த திராவிடன்? செம்மறி ஆட்டுக் கூட்டம் நாமும் ஆளுக்கு ஒரு பொங்க பானையுடன் அலைகிறோமே?

அதுவும் பொன்னார் என்கிற இந்துத்வா வாதியை, மத வெறியனை எப்படி 'பெருந்தமிழர்' என்று மேடையில் அழைக்கலாம் என்று சல்லியடித்த அதே வடுக திராவிட கூட்டம், இன்று பொன்னார் என்கிற நாடாருக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் புரிகிறதா? அன்று மதவெறியன் பொன்னார், தேவைக்கேற்ப இன்று நாடார் என்கிற பிற்படுத்தப்பட்ட சாதியாகிறான்! பொன்னார் ராத்திரி பனிரெண்டு மணிக்கு சுடுக்காட்டுக்கு போனால் நமக்கென்ன? நீங்கள் என்ன விதமான புரட்சியை செய்ய வேண்டும், எந்த வித புரட்சிகர சிந்தனையை கொண்டு இருக்க வேண்டும் என்பதை உங்களை அடிமை படுத்தி இருப்பவன் முடிவு செய்கிறான்!

பாகிஸ்தான், சீனா, முஸ்லீம் தீவிரவாதிகள் என்று மிடில் கிளாஸ் மாதவன்களின் புரட்சியை மடை திருப்புவது பார்ப்பனிய சித்தாந்தம்; பார்ப்பான், சோ, சுப்பிரமணிய சாமி, இந்து ராம், காஞ்சி சங்கரன் என்று நமக்கு பூச்சாண்டி காட்டி கட்டுக்குள் வைத்து இருப்பது திராவிட நுண்ணரசியல். திராவிடம் இதை பல காலமாகவே செய்கிறது, அதை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு தற்போது தான் நமக்கு கிட்டி இருக்கிறது! மேற் சொன்ன இந்த பூச்சாண்டிகளில் எவனோடு திராவிடம் சல்லாபிக்கவில்லை?

இத்துணை ஆண்டு காலம் இங்கே பார்ப்பனியத்தை எதிர்த்து கோலோச்சிய திராவிடம் சங்கர மடத்தின் ஒரு செங்கலையாவது அசைத்து இருக்குமா? திராவிடம் மழுங்கடித்த நம் (திராவிட) மாநிலம் தவிர்த்து, வேறு எங்காவது, அந்த மண்ணுக்கு எதிரான செயல்களை செய்து கொண்டு, அந்த மண்ணில் மடம் நடத்தி இருக்க முடியுமா காஞ்சி சங்கரன்? ஒரு 'பூச்சாண்டியை' காட்டி தமிழனிடம் பறித்து தின்ன, திராவிடத்திற்கு சங்கர மடமும், சுப்பிரமணிய சாமியும் தேவைப்படுகிறார்கள்! ஈவெ ராமசாமியை விமர்சிக்கும் பல தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் வைக்கும் பலமான குற்றச்சாட்டு, சங்கர மடத்தையும், ராஜாஜியையும் (ராஜாஜி மீது வெறுப்பும், காதலும் ஒரு சேர) ஈவெரா ஏற்றுக் கொண்டதன் காரணம் அந்த தலைமைகள் எப்போதும் தெலுங்கு பின்னணி கொண்டவை என்பதால்தான். சங்கர மடத்துக்கு ஒரு தமிழ் பார்ப்பனன் ஒருபோதும் தலைவராகவே முடியாது!

அந்த வகையில், சங்கரனை களி திங்க வைத்த பார்ப்பன ஜெயாவையும், ''பெரியவாள், செத்த வாயை மூடுறேளா; நானும் வாயை திறந்தா நன்னா இருக்காது'' என்று காறி உமிழ்ந்த ரஞ்சிதாவையும் கொண்டாடலாம்! இந்த திராவிட பூச்சாண்டி வேலைக்கு தமிழ் தேசியம் பேசும் தோழர்களும் இரையாகி இருப்பது வேதனை. ஐந்தே ஆண்டில், நூற்றாண்டு கண்ட காங்கிரஸ்காரனை கரை வேட்டி கட்ட முடியாமல், விரட்டி அடித்த, தமிழ்த் தேசிய தோழர்கள் எங்கே? நூறாண்டுகாலமாக, சங்கர மடத்தை சுற்றி சுற்றி வந்து, நேரத்திற்கு தகுந்தார் போல குரைத்தும், வாலாட்டியும், மடத்தின் சுவற்றில் சிறு நீர் கழித்தும், காலம் தள்ளும் திராவிடம் எங்கே?

கூர்ந்து பார்த்தீர்கள் ஆயின், நாய் மடத்தை சுற்றி வருவது சங்கர மடத்தை பாதுகாக்க. நாயால் மடத்துக்கு பாதுகாப்பு; மடத்தால் நாய்க்கு பருப்போடு நெய் சோறு. இதுவே, தமிழக அரசியல்! பகுத்தறிவு பல்லை இளிக்கும் லட்சணத்தை கவனிக்க வேண்டும், ஒட்டுமொத்த மத சார்பற்ற இந்திய தேசத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு மத்திய அமைச்சர், எப்படி ஒரு மத வாதியின் காலடியில் அமரலாம்? மதவாதியின் காலடியில் கிடப்பவன் எப்படி தேசம் எதிர்நோக்கி இருக்கும் மத நல்லிணக்க சிக்கல்களுக்கு நடுநிலையான தீர்வை வைப்பான் என்று கேட்காமல், நாடார் சாதிக்காரன் பார்ப்பான் காலடியில் கிடக்கிறானாம். இன்றைய தேவைப்படி, திராவிடனுக்கு பொன்னார் என்கிற மதவாதியின் சாதி மட்டுமே தெரிகிறது!

திராவிடத்தின் பகுத்தறிவுக்கு அவ்வளவுதான் வீரியம். ஈவெ ராமசாமி பார்ப்பனியருக்கு சொன்னதுதான், 'திராவிடம் ஒரு போதும் தமிழர்க்கு நல்லது செய்யாது, நன்மை பயக்காது, திராவிட சொல்லாடல் அடிப்படையிலேயே ஆரியத்துக்கு எதிரான வடுக சுரண்டல். அது சூது, திராவிடம் மேற்கே போக சொன்னால் கிழக்கே போக வேண்டும்!' திராவிடம் தூண்டும் முனை மழுங்கடிக்கும், குழப்பவாத, திசை திருப்பும் புரட்சிகளுக்கு பலியாகி, தமிழ்த் தேசியத்தை வீழ்த்தி விடாதீர்கள் தோழர்களே!!!
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக