பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், நவம்பர் 07, 2016

வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?



ஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.
ங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.
தில் –
கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….
யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!
டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.
செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.
முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.
கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.
ங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.
தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.
குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.
ற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!
ரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!
ரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!
றந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!
றந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!
றந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!
வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.
தீர்ப்பு என்ன தெரியுமா?
முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!
ன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!
ரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!
44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.
தைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.
தற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.
ந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’
க, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.
ந்த வரலாற்றுக் களங்கம்…
நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…
மிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?
வேரா சொல்கிறார்:-
‘‘ந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’
மிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!
து எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
த்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?
ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?
வேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.
‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’
கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!
கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.
ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.
பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

தொடர்புள்ள பிற பதிவுகள் :

2 கருத்துகள்:

  1. தவறு கீழ்வெண்மனியின் நிகழ்வுக்கு பின் நடந்த தீர்ப்பில் இருந்து அவர்கள் விடுவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு காரணம் அப்படி இவர்களை போன்றோரை விடுவிக்கபட்டால்தான் சாதியம் என்ற தீ இன்னும் கலவரட்த்தினை அதிகரிக்கும் அதனை கொண்டு தாம்நினைக்கும் மனுவின் ஆட்சியினை நிகழ்த்த முடியும் என்று அன்றைய தினம் இருந்த உச்சிகுடுமி நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றனர். ஒரே நேரம் இரண்டு விதமான வழக்குகள் ஒன்று தாழ்த்தபட்டோர்க்கான வழக்கும், அதர்க்கு எதிரான வழக்குக்கு உச்சிகுடிமி நீதிமன்றம் எதிரானவழக்கில் ஆதிக்க உணர்வுக்கு ஆதரவாகவும் , ஆதிக்க உணர்வுக்கு எதிரான வழக்கில் தாழ்த்த பட்டோர்க்கு எதிராகவும் தீர்ப்பு சொல்லி எரியும் விளக்கில் தீயினை எண்ணை ஊற்றியது அதே நேரம் ஈவேராவின் விளக்கம் அப்போதே விடுதலையில் வந்து விட்டது , மேலும் அந்த நேரத்தில் நாமும் ஏற்றிவிடுவோமே ஆனால் பதிப்பு யார் விடுதலைகு பாடுபட்டாரோ அவர்களுக்கு எதிராகவே இருக்கும் என்று தான் அன்றைய பொழுது எதிர்ப்பை வேறுவிதமாக அஹ்ரகா எதிர்ப்பினை அதிகரித்தார். எந்த ஆதிக்க வெறி கொண்டு தங்களை காக்க மனுவின் முறையினை கையாண்டார்களோ அந்த மனுவின் காவலர்களை கொண்டே அஹ்ரகார தெரு என்ற ஒன்றை பின்னாளில் அழித்தார் இந்த பெரியார் . அவரை இகழவே அன்றைய உச்சிகுடுமி பத்திரிக்கைகள் இந்த நிகழ்வில் பெரியார் தாழ்த்தப்பட்டோர்க்கு ஆதரவாக இல்லை சிண்டு முடிந்து விட்டனர் . அதே வேலைதான் பின் 40 ஆண்டுகள நடந்து தற்போது எந்த, நாடர்க்கு, எந்த கவுண்டனுக்கு வன்னியனுக்கு எந்த தாழ்த்தப்பட்டொர்க்கு இடையில் சண்டை வந்து விட கூடாது என்று போரடி வெற்றி வாகை குடுத்து இன்று சமூகத்தில் உயரவைத்தாரோ அவர்களே இன்று பெரியாரை இகழ வைத்து உள்ளது அதே பார்ப்பனிய மனு. இதை தெரியாமல் நாமும் இன்று அவர்கள் கூறும் பொய்யினை அவர்களோடு சேர்ந்து நாமும் பரப்பி வருகிறோம்.

    பதிலளிநீக்கு