பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

பெரியாரி கேள்வி பதில் ?பீர்மேடு ,தேவிகுளம் பற்றி



தேவிகுளம், பீரிமேடு உள்ளிட்ட தமிழ் தாலுக்காக்கள் கேரளத்துடன் சேர்க்கப்படுவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று பெரியார் அளித்த பேட்டி 11.10.1955 நாளிட்ட தினத்தந்தி இதழில் வெளியானதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் சுட்டிக்காட்டி எழுதினார்.

முதலில், அவ்வாறு பெரியார் பேட்டியே கொடுக்கவில்லை என வாதிட்ட சில 'பெரியாரிய'வாதிகள், பின்னர், பெரியார் தனித்தமிழ்நாட்டுப் போராளி தான் எனவும், வெறும் எல்லை மீட்புப் போராட்டக்காரர் அல்ல அவர் என வாதிடத் தொடங்கினர்.

நாங்கள் முன்வைக்கும் விமர்சனமும் அது தானே! பெரியார் எல்லை மீட்புப் போராட்டங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று தானே நாங்களும் சுட்டிக்காட்டுகிறோம். இதற்கு தமது 'பகுத்தறிவை'க் கொண்டு ஞாயமான பதில் கூறமுடியாதவர்கள் தோழர் பெ.மணியரசன் அவதூறு செய்து விட்டதாக புலம்புகின்றனர்.

பெரியாரின் தினத்தந்தி பேட்டிக்கு ஞாயமான பதிலை மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம்! இப்பேட்டியை இங்கும் வெளியிடுகிறோம்! தோழர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக