பன்றிக்காய்ச்சலை
ஏற்படுத்தும் வைரஸ் கிருமி, முன்பெல்லாம் மழை மற்றும் குளிர்
காலத்தில்தான் பரவியது. வெயிலில் வைரஸ் கிருமி உயிர் வாழாது; அழிந்து
விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், இப்போது, கடுமையான
வெயிலிலும் சுமார் 72 மணி நேரம் உயிர் வாழக் கூடியதாக வைரஸ் கிருமி
மாறியிருக்கிறது. இது, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இடையே குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில்
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய
பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற
மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியா
முழுவதும் இதுவரை 33 பேரும், மகாராஷ்டிராவில் மட்டும் 20 பேரும்
உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக
உள்ளது.
30க்கும் மேற்பட்டோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர்
உயிரிழந்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஏஎச்1 என்1 என்ற வைரஸ்
கிருமி (பன்றிக்காய்ச்சல்) மழை, குளிர் காலங்களில் தான் அதிக அளவில் பரவி
வந்தது. ஆனால், இந்த வைரஸ் கிருமி தற்போது கோடை காலங்களில் உலா வருகின்றன.
இதனால், மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். வெயில் காலத்திலும் உயிர்
வாழக்கூடிய அளவில் இந்த வைரஸ், தன்னை மாற்றி கொண்டு இருக்கலாம் என்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை
சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளில்
ஈடுப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து,
இந்திய பொது சுகாதாரத்துறை சங்கத்தின் தமிழக தலைவரும், தமிழக பொது
சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:
பன்றிக்காய்ச்சல்
எனப்படும் ஏஎச்1 என்1 என்ற வைரஸ் கிருமி, வெயில் காலத்திலும் உயிர்
வாழக்கூடிய அளவில் தன்னை மாற்றி கொண்டுள்ளது. அதேசமயம், வைரஸ் கிருமியின்
வீரியமும் குறையவில்லை.
மழை மற்றும் குளிர் காலங்களில்,
எந்த மாதிரியான வீரியத்தில் வைரஸ் கிருமி இருந்ததோ, அதேபோல தான் தற்போதும்
உள்ளது. இந்த வைரஸ் கிருமி 2009ல் பரவியபோது, இது வெயிலில் உயிர் வாழாது;
அழிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், தற்போது
கடுமையான வெயிலில் சுமார் 72 மணி நேரம் உயிர் வாழக் கூடியதாக வைரஸ் கிருமி
மாறியிருக்கிறது.
இதுதொடர்பான ஆராய்ச்சிகளில்,
அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அப்போது தான், நாட்டில்
பன்றிக்காய்ச்சல் பரவுவதை முழுமையாக் தடுக்க முடியும்.
பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 2009,2010ம் ஆண்டில், மத்திய
அரசு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோச்சி என்ற நிறுவனத்திடம் இருந்து சுமார்
30 லட்சம் டாமி புளூ என்கிற ஒசால்டாமாவீர் மாத்திரைகளை வாங்கியது. பின்னர்,
மத்திய அரசிடம் இருந்து 1.5 லட்சம் மாத்திரைகளை தமிழக அரசு பெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பன்றிக்காய்ச்சல் மாத்திரை
பக்கவிளைவு ஏற்படுத்துமா?
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள
ரோச்சி என்ற நிறுவனம் தான் பன்றிக்காய்ச்சலுக்கான டாமி புளூ என்கிற
ஒசால்டாமாவீர் என்ற மாத்திரையை தயாரிக்கிறது. இந்த மாத்திரையை
சாப்பிடுவதால் பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள்
வெளியாகி வருகிறது. இதையடுத்து, ஒசால்டாமாவீர் மாத்திரை ஏற்படுத்தும் பக்க
மற்றும் பின் விளைவுகள் குறித்தும், ஏஎச்1 என்1 என்ற வைரஸ் கிருமியை உடலில்
இருந்து எப்படி அழிக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சியை ரோச் நிறுவனமே
செய்து வருகிறது. ஒரு மாத்திரையை தயாரிக்கும் நிறுவனமே, அந்த மாத்திரையை
குறித்து எப்படி ஆராய்ச்சி செய்யலாம் என்று உலக அளவில் எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில், ஒசால்டாமாவீர்
பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை, ரோச்சி நிறுவனம் இன்னும் ஓரிரு மாதத்தில்
வெளியிட இருக்கிறது. ஏசி அறையில் வேகமாக பரவும்
பன்றிக்காய்ச்சல்
ஒரு தொற்று நோயாகும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல்
மூலம் எளிதாக பரவக்கூடியது. மற்ற இடங்களைவிட, குளிர்சாதன அறையில் வேகமாக
பரவும் தன்மை கொண்டது. அதனால், முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட
நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான சிறு
அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.நன்றி அலைசெய்திகள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக