பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

முட்டை இல்லாமல் குஞ்சுவருமா ? கேட்ப்பவன் கேணையன் என்றால் ...

இலங்கையின் மலையகப் பகுதி ஒன்றைச் சேர்ந்த ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று முட்டை எதுவும் இடாமல் நேரடியாகவே குஞ்சை ஈன்றது என்று பல ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செய்திகளைப் பிரசுரித்துள்ளன. அதுவும் இச் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிறுவயதில், முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா என்று பள்ளிக்கூடங்களில் விவாதம் நடுத்துவார்களே ! அதேபோல இதனையும் ஒரு பெரும்பொருட்டாக கருதி பல ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் ! பாலூட்டிகள், ஊர்வன, பறப்பவை என பலவிடையங்கள் விஞ்ஞானத்தில் உள்ளது.

முட்டை இல்லாமல் குஞ்சு வர சாத்தியமே இல்லை என்பதே உண்மையாகும். கடவுளே வந்தாலும் இதற்கு மாறுதல் கிடையாது. இங்கே நடந்திருக்கும் விடையம் என்னவென்றால், ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று 21 நாட்களாக முட்டைபோடவில்லை. அதாவது உண்டான முட்டை அப்படியே உடல் பகுதிக்குள் தங்கிவிட்டது. இதனால் மேற்கொண்டு அது வேறு முட்டையை போடவும் இல்லை. கோழி எவ்வாறு முட்டை இட்டு பின்னர் அடைகாக்குமோ, அதேபோல உடலில் தங்கியிருந்த முட்டை உடல் உஷ்ணம் காரணமாக பொரிக்க ஆரம்பித்தது. சரியாக 21 நாட்கள் கழித்து முட்டையை உடைத்துக்கொண்டு கோழிக்குஞ்சு வெளியே வந்துள்ளது.

அது கோழியின் முட்டையிடும் பகுதியூடாக வெளியே வந்துவிட்டது. முட்டையின் கோதுகள் தாய் கோழியின் உடலுக்குள்ளேயே தங்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட வலி மற்றும் ரத்தப்போக்கால் தாய் கோழி இறந்துவிட்டது. ஆனால் கோழிக்குஞ்சு நலமாக உள்ளது அவ்வளவுதான் மேட்டர் ! இதனைப் பெரிய பூதாகரமாக்கி , முட்டையில்லாமல் வந்தகோழி என்று ஊடகங்கள் எழுதித்தள்ளி தமிழர்களை மீண்டும் ஒரு முறை முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறார்கள் ! லண்டனில் 1 லட்சம் பேர் கையெழுத்து வைத்தால், பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்கள். இதுவரை 7,000 கையெழுத்துக்களே போடப்பட்டுள்ளது. 3 லட்சம் தமிழர்க இருக்கும் பிரித்தானியாவில் 7,000 பேர் தான் கையெழுத்துப் போட்டு உள்ளார்கள். இச் செய்தியைப் போட்டு மக்களை ஊக்குவித்து கையெழுத்துப் போட ஊடகங்கள் தயார் இல்லை !

ஆனால் எங்கோ இருக்கும் சிங்கள ரஞ்சித் ஏக்கநாயக்கவின் கோழி முட்டையில்லாமல் குஞ்சுபோட்ட செய்தியை மட்டும் கொட்டை எழுத்தில் எழுதுகிறார்கள் ! என்ன கொடுமை சரவணா ! என்ன கொடுமை !

பின் குறிப்பு: -கோழிக்கு நடந்த சம்பவதை நாம் தன்னிச்சையாக எழுதவில்லை. அக்கோழியை ஆராய்ந்த மருத்துவரின் குறிப்பில் இருந்து இவை பெறப்பட்டது ஐயா !-நன்றி முத்துமணி இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக