பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

ஐ.பி.எல். போட்டி:கோலி ரூ.32 கோடிக்கு இன்சூரன்ஸ்


image
பெங்களூர், ஏப். 15-
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை இன்சூரன்ஸ் செய்து உள்ளன. இதில் இந்திய அணியின் சொத்தான வீராட் கோலியே அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திர வீரரான கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடுகிறார். இந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.32 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக தான் டோனி, தெண்டுல்கர் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான மகேந்திர சிங் டோனி ரூ.30 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் வீரர் தெண்டுல்கர் ரூ.14 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வீரர்களில் பீட்டர்சன் அதிகமாக தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி டேர்டெவில்ஸ் வீரரான அவர் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக