பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

திமுகவினரின் அநாகரீக பேச்சு



கேள்வி: எது நாகரிகமான பேச்சு ?
பதில்: கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே...


சில சாம்பிள்கள்...

* வரவேற்றுப் பேசிய பொன்முடி, "திராவிட இயக்கத்தின் பரிணாம
வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு, மீண்டும் சனாதனத்தை-உயர்
ஜாதி ஆதிக்கத்தை-நிலை நாட்டிட ஜெயலலிதா துடிக்கிறார்" என்று
குறிப்பிட்டதோடு, சங்கர மடத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டும் நாற்காலி
தந்ததையும் விமர்சித்தார். பொன்முடி பேச்சில் மட்டுமில்லாமல், வேறு
பலரின் பேச்சிலும் "வர்ணாசிரம எதிரிப்பு " என்கிற பெயரோடு பிராமண
எதிர்ப்பு கடுமையாகக் காணப்பட்டது.

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே "தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்" என்றும் குறிப்பிட்டார்.

* கோவை மணியன், " தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட கேரளத்து
ஐயபப சாமிதான் காரணம். தமிழகத்திலிருந்து 5 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
தலா 4 கிலோ அரிசியோடு சபரிமலை போகிறார்கள். ஆக, வருடத்திற்கு
20 லட்சம் கிலோ அரிசி கேரளாவிற்குப் போய்விடுகிறது. அடுத்த முறை
முதல்வரானதும் தலைவர் இதைத் தடைசெய்யவேண்டும்" என்றார்.


* துரைமுருகன் ரேசன் கார்டு, அரசு ஊழியர் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு
"இது குரங்கு சேஷ்டை, பைத்தியக்கார அறிவிப்பு" என்று விமர்சித்தார். மேலும்
"சூத்திர ஜாதியில் பிறந்ததால் மாயாவதி வழக்கை 5 மாதத்தில் முடிக்க நீதிமன்றம்
உத்தரவிடுகிறது. ஆனால் இது "அவாளு"க்கு மட்டும் பொருந்தாது போலும்.
இமயம் முதல் குமரி வரைக்கும் இந்தப் பூணூல் தொடர்பு மிக அடர்த்தியாக
உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், " இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்... அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா "
என்றவர், " அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!" என்று குறிப்பிட்டார்.

* முக ஸ்டாலின் துவக்கத்தில் நீதிக்கட்சிக்கும் முந்தைய காலம் தொட்டு
கழக வரலாற்றை விவரித்து, தொண்டர்களைச் சலிப்படைய வைத்த
போதிலும், போகப் போக நடப்பு அரசியலின் விறுவிறுப்பைக் கூட்டிக்
கொண்டார். மிகக்கோர்வையாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்த
பேச்சின் இறுதியில், "நான் உங்களுக்குக் கட்டளையிடப் போவதில்லை;
உத்தரவிடப்போவதில்லை. உங்களோடு இணைந்து போராட்டக் களத்திற்கு
வருகிறேன்" என்று முடித்த போது, பெரும் ஆரவாரத்தோடு கைதட்டியது
தொண்டர் கூட்டம்.

* கருப்பசாமி பாண்டியன், "பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, "அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்" என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* ஆலடி அருணா "முந்நூறு எம்பிக்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தும்,
வைகோவைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால், ஜெயலலிதா மீது
16 வழக்குகள் அமலாக்கப் பிரிவில் பதிவான நிலையிலேயே கிடக்கின்றன.
இதற்குக் காரணம் தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதா,
பிரிட்டிஷ் இராஜ்யம் போய் பிராமின் இராஜ்யம் வந்துவிட்டது என்பதா?"
என்றார்.

* பரிதி இளம்வழுதி, " கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!" என்று விளக்கம் அளித்தார்.

* அன்பழகன், "வயதில் என்னைவிட இளையவரான கலைஞர், தனது
வயதை விட முதுமையாகத் தோற்றமளித்தாலும், மனதளவில் அவர்
இன்னமும் ஸ்டாலினுடன் போட்டி போடத் தயாராயிருக்கிறார்.
பிராமணரிடத்தில் பகையிருக்கத் தேவையில்லை. அதற்காக
பிராமணீயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஐயரும் அவரவர்
கொள்கையைப் பின்பற்ற உரிமையுண்டு. துக்ளக்காகவும்
இருக்கலாம். அது அவரவர் உரிமை " என்றார்.

* சரத்குமார், "இந்திராகாந்தியின் அடக்குமுறையையே சந்தித்தவர்
கலைஞர். இந்திரா காந்தியின் கால் செருப்பு வாரிலுள்ள தூசுக்குக்
கூட சமமாகாதவர் ஜெயலலிதா" என்று சாடினார்.

* நெப்போலியன், "சமத்துவபுரம் வேண்டுமா, சசிகலா வேண்டுமா;
உழவர் சந்தை வேண்டுமா, ஊழல் மந்தை வேண்டுமா" என்று
வரிசையாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பட்டியலிட...
பலத்த கரகோஷம் கிடைத்தது.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
"ஆண்டியும் போண்டியும்" என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்...

** "ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!"

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: " அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க"

** "ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?"

"யாரு? அந்த...... குச்சியிலே கோவணம் கட்டியவனா?"

** "நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்... அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க.."

(சுசி என்ற பெயருடைய அந்தச் 'சின்னம்மா' வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: "இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை."

சின்னம்மா (சுசி) கூறுவது:

"...கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே"

** ஒருவர்; " என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?"

மற்றொருவர்: " எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!"

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
"உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்"

ஆண்டி" உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : "லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது... கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது"

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: "எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? "

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா... புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா.....
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே... ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

" எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க"

( நன்றி: துக்ளக் 1.10.03 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக