பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஜூலை 16, 2012

ஜனாதிபதியை தெரிவு செய்வது எப்படி?

தங்களுடைய எம்.பி(லோக்சபா,ராஜ்யசபா) எம்.எல்.ஏ(சட்டமன்ற உறுப்பினர்)க்களை கொண்டே ஜனாதிபதியை தெரிவு செய்யும். அதாவது ஜனாதிபதி தெரிவு இவர்களின் வாக்கு எண்ணிக்கையில் அமைந்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது.
ஒரு உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 6 கோடி, இதை தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற தொகுதியால் வகுக்க வேண்டும். வகுத்த விடையை 1000(ஆயிரம்)த்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே ஒரு எம்.எல்.ஏவின் மதிப்பாகும் அல்லது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
எ.கா. 6,00,0000 / 234 = 25641.025 / 1000 = 25.641.
இதுபோல் எம்.பி.க்களின் வாக்குகளுக்கும் தனிமதிப்பு உள்ளது. அதாவது ஏற்கனவே வகுத்து வந்த மதிப்பை மொத்த தொகுதிகளால் பெருக்கி அதில் கிடைக்கும் விடையை மாநிலத்தின் மொத்த எம்.பிக்களால்(மாநிலங்களவை+மக்களவை) வகுக்க வேண்டும்.
எ.கா. 25.641 * 234 = 6000 / 21(mp) = 285.7142.
இதுவே ஒரு எம்.பியின் மதிப்பாகும். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வாக்குகள் கணக்கெடுக்கப்படும்.
நம்நாட்டில் எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். எம்.பி.க்கள் டெல்லி நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டும்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் போது 2 முறை வாக்களிக்கலாம். இதில் ஒருவருக்கு முதல் வாக்கும், மற்றொருவருக்கு 2வது வாக்கும் போட வேண்டும். வாக்குச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2வது சுற்று வாக்குகள் எண்ணப்படும். முடிவில் அதிக வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக